என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Navratri Puja"

    • மகிஷாசுரன், மகாமேரு என்ற மலையில் பத்தாயிரம் வருடம் கடும் தவம் செய்தான்.
    • பெண்கள் மென்மையானவர்கள், அவர்களால் தனக்கு ஆபத்து இல்லை என்பதால், பெண்களை தவிர்த்து வரம் கேட்டான்.

    விஜயதசமி என்பது வெற்றியை குறிக்கும் பண்டிகையாகும். நவராத்திரி விழா முடிந்த 10-வது நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்த விஜயதசமி கொண்டாடுவதற்கு பலவிதமான புராணக் கதைகள் சொல்லப்படுகின்றன. இருப்பினும் பெரும்பாலானோர், பராசக்தி மகிஷாசுரனுடன் போரிட்டு வெற்றி வாகை சூடிய நாளே, 'விஜயதசமி' என்று கொண்டாடி மகிழ்கிறார்கள்.

    'விஜய்' என்றால் வெற்றி என்றும், 'தசம்' என்றால் பத்து என்றும் பொருள். அன்னை, மகிஷாசுரனுடன் 9 நாள் போரிட்டு, 10-வது நாள் பெற்ற வெற்றியே விஜயதசமி ஆகும்.

    முன்பொரு காலத்தில் தனு என்ற அசுரன் இருந்தான். அவனுக்கு மிகவும் பலசாலியான ரம்பன், கரம்பன் என்ற இரு மகன்கள் இருந்தனர். அவர்கள் இருவரும், தங்களுக்கு மிக சக்தி வாய்ந்த புத்திரர்கள் வேண்டும் என்பதற்காக கடும் தவம் புரிந்தனர்.

    கரம்பன் என்பவன் அன்ன ஆகாரம் இன்றி நீரில் நின்று தவம் செய்தான். அப்பொழுது இந்திரன், இவனுக்கு பிள்ளை பிறந்தால் தேவர்களுக்கு ஆபத்து என்று கருதி, முதலை உருவில் சென்று நீரில் நின்றிருந்த கரம்பனை கொன்றான்.

    ரம்பன் என்பவன் யட்சபுரி என்ற ஊரில் ரசாலம் என்ற ஆலமரத்தின் அடியில் பஞ்சாங்கனி மத்தியில் தவம் செய்தான். சகோதரனாகிய கரம்பனுக்கு இந்திரனால் ஏற்பட்ட மரணத்தை அறிந்து, தேவர்களை அழிக்க சபதம் மேற்கொண்டான்.

    தவத்தின் இறுதியில் தன் தலையை வெட்டி அக்னியில் செலுத்த முயன்றான்.

    அவனின் தவத்தில் மகிழ்ந்த அக்னி தேவன், அவன் முன் தோன்றி, 'உனக்கு என்ன வரம் வேண்டும்' என்று கேட்டார்.

    உடனே ரம்பன், 'எனக்கு யாராலும் ஜெயிக்க முடியாத மகன் வேண்டும்' என்றான். அதற்கு அக்னி தேவன், "நீ எந்தப் பெண்ணை முதலில் பார்க்கிறாயோ, அந்த பெண்ணிடம் உனக்கு புத்திரன் பிறப்பான்" என்று வரம் கொடுத்தார்.

    இதையடுத்து ரம்பன் தவத்தில் இருந்து வெளியே வந்தான். அப்போது அவன் எருமை ஒன்றை கண்டான். அந்த எருமையைப் பார்த்த உடன், அதன் வாயிலாக அவனுக்கு ஒரு குழந்தைப் பிறந்தது.

    எருமைத் தலையும், மனித உடலுமாக பிறந்த அந்தப் பிள்ளை 'மகிஷாசுரன்' என்று அழைக்கப்பட்டான். (இது மகிஷாசுரன் பிறப்பு பற்றி புராணங்கள் கூறும் பல கதைகளில் ஒன்று).

    மகிஷாசுரன், மகாமேரு என்ற மலையில் பத்தாயிரம் வருடம் கடும் தவம் செய்தான். மரணம் இல்லாத வாழ்க்கையை அவன் பிரம்மாவிடம் கேட்டான். அதற்கு பிரம்மன், "மரணம் இல்லாத வாழ்க்கை யாருக்கும் கிடையாது. பிறப்பு ஒன்று இருந்தால் இறப்பு என்பது நிச்சயம். அதனால் வேறு வரம் கேள்" என்றார்.

    அதற்கு அவன், "தேவர்களாலும், பூதங்களாலும், ஆண்களாலும், மிருகங்களாலும், எனக்கு மரணம் ஏற்படக்கூடாது" என்றான்.

    பெண்கள் மென்மையானவர்கள், அவர்களால் தனக்கு ஆபத்து இல்லை என்பதால், பெண்களை தவிர்த்து வரம் கேட்டான். பிரம்மதேவனும் அவன் கேட்ட வரத்தை அளித்தார்.

    மகிஷாசுரனுக்கு, சிட்சூரன் என்பவன் சேனாதிபதியாகவும், தாம்ரன் என்பவன் தனாதிபதியாகவும் இருந்தனர். அஸிலோமா, பிடாலன், பாஷ்களன், கால பந்தகன், உதர்க்கன், திரிநேத்ரன் போன்ற மந்திரிகளும் இருந்தனர். அவனுக்கு பயந்த ரிஷிகளும், முனிவர்களும் அவன் சொல்படி கேட்டு நடந்தனர். அவன் அஞ்சனம் என்ற மலையில் மாஹிஷம் என்ற மிக அழகிய பட்டினத்தை நிர்மாணித்தான். தேவர்களை மிரட்டி, தனக்கு உதவியாளர்களாக மாற்றிக் கொண்டான்.

    மும்மூர்த்திகளும், தேவர்களும் ஒன்று கூடி, மகிஷனை எப்படி அழிப்பது என்று ஆலோசனை செய்தார்கள். தேவர்களின் சக்தியிலும், மும்மூர்த்திகளின் ஒளியிலும் இருந்து தெய்வீக சக்தி படைத்த தேவி தோன்றினாள்.

    புரட்டாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதியில் பராசக்தி தேவர்களுக்கு காட்சி கொடுத்தாள்.

    இந்த தேவி 18 கைகள் கொண்டு அஷ்டாதச மகாலட்சுமியாக காட்சி தந்தாள்.

    தொடர்ந்து ஒன்பது இரவுகள் போர் புரிந்து, மகிஷாசுரனையும் அவனுடன் இருந்த அசுரர்களையும் அழித்தாள். இதனால் அந்த அன்னை, 'மகிஷாசுர மர்த்தினி' என்று அழைக்கப்பட்டாள்.

    எந்த இடத்தில் மகிஷனை, தேவி வதம் செய்தாளோ அந்த இடம் 'தேவிப்பட்டினம்' என்று பெயர் பெற்றது. அன்னை போரிட்ட ஒன்பது நாட்களும் நவராத்திரியாகவும், வெற்றி பெற்ற 10-ம் நாள் விஜயதசமியாகவும் கொண்டாடப்படுகிறது.

    • அக்கார வடிசல் நிவேதனம் செய்ய வேண்டும்.
    • சாமுண்டி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் கேது.

    நவராத்திரியின் ஒன்பதாம் நாளன்று அன்னை பராசக்தி சாமுண்டியாக வழிபாடு செய்யப்படுகிறாள். முண்டன் என்ற அசுரனை வதம் செய்ததால் சாமுண்டி என்று அழைக்கப்படுகிறாள். தர்மத்தை நிலைநாட்டுபவள். நம்மை காத்து அருளக்கூடியவள்.

    சாமுண்டியை வழிபட கலர் கோலமாவினால் ஆயுதம் கோலம் போட வேண்டும். 77 அகல் தீபங்கள் ஏற்ற வேண்டும். பஞ்சு திரி 56 போட்டு எள் எண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெய் தீபங்கள் ஏற்றலாம். அக்கார வடிசல் நிவேதனம் செய்ய வேண்டும். தாமரை மல்லிகை பூக்கள் மற்றும் மரிக்கொழுந்து கொண்டு பூஜிக்க வேண்டும்.

    "கௌரி அன்னை மேனியிலே கருவாகி மலர்ந்தவளே! நவராத்திரி ஒன்பதாம் நாள் நலம் கூட்டும் கலைமகளே தாயே நீ அன்பு வைத்தால் பார்முழுதும் எனைப்புகழும் ஏழிசையும் என்பாட்டும் என்றென்றும் நிலைத்திருக்கும்."

    என பாடி துதிக்க வேண்டும்.

    சாமுண்டி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் கேது. எனவே சாமுண்டியை வழிபடுவதன் மூலம் கேது தோஷம் நிவர்த்தியாகும். உள்ளுணர்வு மேம்படும், மன தைரியத்துடன் பணிகளை மேற்கொள்ளும் திறன் கிடைக்கும். பேச்சுக்கலை மேம்படும். எடுத்த காரியங்களை செய்து முடிக்கும் உறுதியான சக்தி தருவாள். மக்களை கவரும் ஆற்றலைத் தருவாள்.

    • சித்திதாத்ரி தேவி நவராத்திரியில் வழிபடப்படும் துர்கையின் ஓர் சக்தி வடிவமாகும்.
    • சித்திதாத்ரி என்பது பக்தர்களுக்கு அனைத்து சித்திகளையும் தருபவர் என்று பொருள்படும்.

    நவராத்திரி என்பது 9 நாட்கள் கொண்ட பண்டிகையாகும். நவராத்திரி பார்வதி/சக்தியின் ஒன்பது வடிவங்களை வழிபடும் புண்ணிய காலம். நவ - ஒன்பது, ராத்திரி - இரவு. ஒன்பது இரவுகள் - பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா.

    இந்தக்காலத்தில் துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகளின் வித்தியாசமான வடிவங்கள் வழிபடப்படுகின்றன. துர்கை அம்மன் அசுரர்களை வதம் செய்து உலகை காப்பாற்றிய வெற்றி நினைவாகக் கொண்டாடப்படுகிறது.

    அனைத்து வடிவங்களிலும் பெண் சக்தியின் அடையாளமாகவும் இருக்கிறார். நவராத்திரியில் தெய்வத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் தனித்தனி நாளில் கொண்டாடுகிறோம். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

    நவராத்திரியின் 9-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் 'சித்திதாத்ரி தேவி'. சித்திதாத்ரி தேவி நவராத்திரியில் வழிபடப்படும் துர்கையின் ஓர் சக்தி வடிவமாகும். சித்திதாத்ரி என்பவர் பார்வதி தேவியின் ஒன்பதாவது மற்றும் இறுதி வடிவமான நவதுர்க்கைகளில் ஒருவர்.

    "சித்தி" என்றால் சக்தி அல்லது படைப்பு, இருப்பின் இறுதி மூலத்தை உணரும் திறன், "தாத்ரி" என்றால் கொடுப்பவர் அல்லது தருபவர் எனப் பொருள்படும்.

    எனவே, சித்திதாத்ரி என்பது பக்தர்களுக்கு அனைத்து சித்திகளையும் தருபவர் என்று பொருள்படும். இவர் நவராத்திரியின் இறுதி நாளான நவமி அன்று வணங்கப்படுகிறார்.

    சித்திதாத்ரி தேவி பக்தர்களுக்கு அனைத்து தெய்வீக விருப்பங்களையும் பூர்த்தி செய்து, வாழ்வின் வெற்றியை அருள்பவள்.

    சித்திதாத்ரி தேவி கதை:

    பிரபஞ்சம் படைக்கப்படுவதற்கு முன்னர் எதுவுமே இல்லாமல் இருந்தது. இந்த நேரத்தில்தான் சித்திதாத்ரி, இந்து மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோரை உருவாக்கி, அவர்களுக்கு முறையே படைப்பு, காத்தல் மற்றும் அழித்தல் பணியை வழங்கினார்.

    அந்த தெய்வங்களுக்கு தத்தம் கடமைகள் கொடுக்கப்பட்டபோதும், பிரபஞ்ச படைப்பு நடைபெற வேண்டுமெனில் அஷ்டசித்திகள் (அனிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராக்யம், பிராகாம்யம், ஈஷித்துவம், வசித்துவம்) தேவைப்பட்டது. அந்த சித்திகளை தெய்வங்களுக்கு அருளியதே சித்திதாத்ரி தேவி.

    புராணக் கதையின்படி, சித்திதாத்ரி தேவியே சிவபெருமானுக்கே அஷ்டசித்திகளை அருளினாள்.

    மூன்று பிரபுக்களும், மகாதேவியின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, தங்கள் சக்திகளை அடைய ஆழ்ந்த தவம் செய்ய கடலை நோக்கிச் சென்றனர். அவர்களின் அர்ப்பணிப்பால் திருப்தியடைந்த சித்திதாத்ரி, அவர்கள் அனைவருக்கும் வெவ்வேறு சித்திகளை வழங்கினார். இப்படித்தான் பிரபஞ்சம் மும்மூர்த்தியால் வடிவமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டது.

    சிவபெருமான் மிகுந்த தவம் செய்து தேவியைத் தரிசித்தார். அப்போது சித்திதாத்ரி தேவியே அவருக்கு அஷ்டசித்திகளை அருளினாள். அந்த அருளால்தான் சிவன் அர்த்தநாரீசுவரன் (அரை ஆண் – அரை பெண்) வடிவில் வெளிப்பட்டார். இதனால் பிரபஞ்சத்தில் ஆண் – பெண் சமநிலை உருவானது. இந்த வடிவத்தில், சிவபெருமானின் உடலின் ஒரு பாதியும், சித்திதாத்ரியின் மறுபாதியும் ஒன்றிணைந்து, பிரபஞ்சத்தில் மிகவும் சக்திவாய்ந்த வடிவத்தை உருவாக்குகின்றன. அதனால் தான், சித்திதாத்ரி தேவியை சகல சித்திகளின் தாயான தேவி என்கிறார்கள்.

    சித்திதாத்ரி தேவி நான்கு கரங்கள் உடையவள். சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவற்றை தாங்கியவள். இவரது முகத்தில் எப்போதும் சாந்தமும் ஆனந்தமும் நிறைந்திருக்கும்.

    ஸ்லோகம்:

    "ஓம் தேவி சித்திதாத்ரியாயை நமஹ" என்று ஜபிக்க வேண்டும்.

    • நரசிம்மியை பன்னீர் ரோஜா, செவ்வரளி பூக்கள் மற்றும் பன்னீர் இலை கொண்டு பூஜிக்க வேண்டும்.
    • நரசிம்மி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் ராகு.

    நவராத்திரியின் எட்டாம் நாளன்று அன்னை பராசக்தி, நரசிம்மியாக வழிபாடு செய்யப்படுகிறாள். நரசிம்மரின் சக்தியாக விளங்கக்கூடியவள். நரசிம்மி மனித உடலும், சிங்க முகமும் கொண்டவள். சிங்க வாகனத்தில் அமர்ந்து இருப்பவள். எதிரிகளை அழித்து நம்மை காத்து அருளக்கூடியவள்.

    நரசிம்மியை வழிபட காசு கொண்டு தாமரை கோலம் போட வேண்டும். 18 அகல் தீபங்கள் ஏற்ற வேண்டும். எள் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் பயன்படுத்தலாம். பாயாசம் நிவேதனம் செய்ய வேண்டும். பன்னீர் ரோஜா, செவ்வரளி பூக்கள் மற்றும் பன்னீர் இலை கொண்டு பூஜிக்க வேண்டும்.

    "நாமகளே சரஸ்வதியே நான்முகனின் நாயகியே!

    நாடி வந்தோம் சந்நிதியே நம்பி வந்தோம் அம்பிகையே! அம்புடன் வில் சங்கு சக்கரம் மணிசூலம் உடையவளே சும்பன் வதம் புரிந்தவளே சுடர்விழியே மலர்மகளே."

    என பாடி துதித்தால் வேண்டும் வரம் தருவாள்.

    நரசிம்மி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் ராகு. எனவே நரசிம்மியை வழிபடுவதன் மூலம் ராகு தோஷம் நிவர்த்தியாகும். வெளிநாடு அல்லது வெளிநாட்டுத் துறைகளில் இருந்து தொழில் மற்றும் வியாபார வாய்ப்புகளை வழங்குவாள். மனதில் உற்சாகம் பிறக்கும், அரசு வழியில் ஆதரவு கிடைக்கும், எதிர்பாராத திடீர் செல்வத்தையும், புகழையும் தருவாள்.

    • மகாகௌரி நவதுர்க்கைகளில் எட்டாவது அவதாரமான துர்க்கையின் வடிவமாவார்.
    • மகாகௌரி வெண்மை நிற மேனியைக் கொண்டவர்.

    நவராத்திரி என்பது 9 நாட்கள் கொண்ட பண்டிகையாகும். நவராத்திரி பார்வதி/சக்தியின் ஒன்பது வடிவங்களை வழிபடும் புண்ணிய காலம். நவ - ஒன்பது, ராத்திரி - இரவு. ஒன்பது இரவுகள் - பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா.

    இந்தக்காலத்தில் துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகளின் வித்தியாசமான வடிவங்கள் வழிபடப்படுகின்றன. துர்கை அம்மன் அசுரர்களை வதம் செய்து உலகை காப்பாற்றிய வெற்றி நினைவாகக் கொண்டாடப்படுகிறது.

    அனைத்து வடிவங்களிலும் பெண் சக்தியின் அடையாளமாகவும் இருக்கிறார். நவராத்திரியில் தெய்வத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் தனித்தனி நாளில் கொண்டாடுகிறோம். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

    நவராத்திரியின் 8-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் 'மகாகௌரி'. மகாகௌரி நவராத்திரியில் வழிபடப்படும் துர்கையின் ஓர் சக்தி வடிவமாகும்.

    மகாகௌரி என்பவர் நவதுர்க்கைகளில் எட்டாவது அவதாரமான துர்க்கையின் வடிவமாவார். இவர் நவராத்திரியின் எட்டாம் நாளில் வழிபடப்படும் சக்தி வாய்ந்த தெய்வமாகும். மகாகௌரி தூய்மை, அமைதி, அழகு, கருணை ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறார்.

    நவராத்திரி பண்டிகையின் எட்டாம் நாளில் வழிபடப்படும் மகாகௌரி வெண்மை நிற மேனியைக் கொண்டவர். மகாகௌரி என்றால் "வெண்மை" என்று பொருள்படும். மகாகௌரி தனது பக்தர்களின் பாவங்களை நீக்கி, மனதில் அமைதியையும், விருப்பங்களையும் நிறைவேற்றுபவர்.

    "மகா" - பெரிய, "கௌரி" - பிரகாசம்.

    மிகச் சுத்தமான பளிங்கு போன்ற பொன்னிற-வெண்மையான உடல் கொண்டவள். மகாகௌரியின் வாகனம் வெள்ளை காளை (நந்தி). அவரது ஆடை வெண்மை நிறம்.

    சிவ மகாபுராணத்தில் மஹாகௌரி தேவி வரலாறு:

    பார்வதி தேவி சிறுவயதிலிருந்தே சிவபெருமானையே தனது கணவனாக அடைய விரும்பினாள். அவரது விருப்பத்தை கண்டு, நாரதர் அவருக்கு கடுமையான தவம் செய்ய அறிவுரை கூறினார்.

    இமயமலையின் காட்டில் பார்வதி தேவி பல வருடங்கள் கடுமையான தவம் செய்தாள். இதனால், அவளது உடல் மிகவும் வாடி, கருமையான நிறமடைந்தது.

    அப்போது, அவளது தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான் அவளை அருளால் ஏற்றுக்கொண்டார். அவரது கருமை நிறம் நீங்குவதற்காக சிவபெருமான், பார்வதியை கங்கை நதியில் நீராடச் செய்தார்.

    நீராடிய பின்னர் பார்வதியின் உடல் பளிங்கு போன்ற வெண்மையுடன் மிளிர்ந்தது. அவள் மிகச் சுத்தமான, ஒளிவீசும் வடிவில் தோன்றினாள். அந்த உருவமே மஹாகௌரி என்று அழைக்கப்பட்டது.

    வெள்ளை நிறம், அவளது முழுமையான சுத்தத்தின் அடையாளமாகக் கூறப்படுகிறது. சிவனின் சக்தியாக, அனைத்து பாவங்களையும் அழித்து, பக்தர்களுக்கு புதிய வாழ்வு, அமைதி, முக்தி தருகிறாள்.

    நல்லவர்களைப் பாதுகாப்பதும், தீய செயல்களைச் செய்பவர்களைத் தண்டிப்பதும் மகாகௌரியின் நோக்கம். மகாகௌரி தேவி தனது பக்தர்களின் வாழ்க்கையில் உள்ள அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றி, அனைத்து துன்பங்களையும் நீக்கும் சக்தி கொண்டவள்.

    ஸ்லோகம்:

    'ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் மஹாகௌர்யை நம' என்று ஜபிக்க வேண்டும்.

    மகாகௌரியை வழிபட்டால் பாவங்கள் நீங்கும். குடும்பத்தில் சாந்தி நிலைக்கும். திருமண வாழ்வில் நல்லிணக்கம் ஏற்படும்.

    • பிரம்ம தேவரின் அம்சமாகவும், சரஸ்வதி தேவியின் உருவமும் கொண்டவள் பிராம்மி.
    • தாழம்பூ, தும்பை மற்றும் மஞ்சள் நிற பூக்கள் கொண்டு பூஜிக்க வேண்டும்.

    நவராத்திரியின் ஏழாம் நாளன்று அன்னை பராசக்தி, பிராம்மியாக வழிபாடு செய்யப்படுகிறாள். பிரம்ம தேவரின் அம்சமாகவும், சரஸ்வதி தேவியின் உருவமும் கொண்டவள் பிராம்மி. நான்கு கரங்களை கொண்டு அன்னப்பறவையில் வீற்றிருப்பவள். வெண்ணிற ஆடை தரித்தவள். தர்ப்பை புல்லில் வாசம் செய்பவள்.

    பிராம்மியை வழிபட மலர் கொண்டு திட்டாணி கோலம் போட வேண்டும். நல்லெண்ணெய் கொண்டு 19 அகல் தீபங்கள் ஏற்ற வேண்டும். எலுமிச்சை சாதம் நிவேதனம் செய்ய வேண்டும். தாழம்பூ, தும்பை மற்றும் மஞ்சள் நிற பூக்கள் கொண்டு பூஜிக்க வேண்டும்.

    "பிராம்மி தாயே கலைமகள் நீயே! அருள் நவராத்திரி ஆண்டருள் வாயே ஏழாம் நாள் இன்று உன் திருக்காட்சி இன்னும் இருநாள் உனதருளாட்சியே" என பாடி துதித்தால் வேண்டும் வரம் தருவாள்.

    பிராம்மி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் சனி.எனவே பிராம்மியை வழிபடுவதன் மூலம் சனி தோஷம் நிவர்த்தியாகும். கர்ம வினைகள் தீரும், நிலையான தொழில் சிறக்கச் செய்வாள். தீர்க்க ஆயுசு வாழ அருள் புரிவாள்.

    • காலராத்திரி என்றால் இருளை அழிப்பவள் என்று பொருள்.
    • காலராத்திரி தேவியை வழிபடுவதால் துன்பங்கள், தடைகள் நீங்கி, பக்தர்களுக்கு தைரியமும், நன்மைகளும் கிடைக்கும்.

    நவராத்திரி என்பது 9 நாட்கள் கொண்ட பண்டிகையாகும். நவராத்திரி பார்வதி/சக்தியின் ஒன்பது வடிவங்களை வழிபடும் புண்ணிய காலம். நவ - ஒன்பது, ராத்திரி - இரவு. ஒன்பது இரவுகள் – பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா.

    இந்தக்காலத்தில் துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகளின் வித்தியாசமான வடிவங்கள் வழிபடப்படுகின்றன. துர்கை அம்மன் அசுரர்களை வதம் செய்து உலகை காப்பாற்றிய வெற்றி நினைவாகக் கொண்டாடப்படுகிறது.

    அனைத்து வடிவங்களிலும் பெண் சக்தியின் அடையாளமாகவும் இருக்கிறார். நவராத்திரியில் தெய்வத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் தனித்தனி நாளில் கொண்டாடுகிறோம். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

    நவராத்திரியின் 7-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் 'காலராத்திரி தேவி'. காலராத்திரி என்பவள் நவராத்திரியில் வழிபடப்படும் துர்கையின் ஓர் சக்தி வடிவமாகும்.

    காலராத்திரி தேவி

    காலராத்திரி என்பது துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களில் ஒன்றாகவும், துர்கைகளில் ஏழாவது உருவமாகவும் கருதப்படுகிறார். துர்கையில் 9 வடிவங்களிலும் மிகவும் உக்கிரமான வடிவமாக தேவி காலராத்திரி விளங்குகிறார். நவராத்திரி ஏழாம் நாளில் காலராத்திரி தேவியை வழிபட வேண்டும்.

    காலராத்திரி தேவியின் சிறப்பு அம்சங்கள்:

    காலராத்திரி என்பது "கால" என்றால் காலம் அல்லது இருள், "ராத்திரி" என்றால் இரவு என்று பொருள். எனவே காலராத்திரி என்றால் இருளை அழிப்பவள் என்று பொருள்.

    ஷும்பன் – நிஷும்பன் வதம்

    மார்கண்டேய புராணத்தின் தேவி மாஹாத்மியம் படி, அசுரர்களின் அரசனான ஷும்பன் - நிஷும்பன் இருவரும் உலகையும் தேவர்களையும் துன்புறுத்தினர்.

    அவர்களை அழிக்க அம்பிகை தேவியின் உடலிலிருந்து பல உக்கிர வடிவங்கள் தோன்றின. அதில் ஒன்றுதான் காலராத்திரி.

    காலராத்திரி தோன்றியதும், மஹாசுரர்களின் படைகள் அனைத்தும் இருளில் மூழ்கின. தேவியின் மூச்சில் இருந்து தீக்கதிர்கள் பீறிட்டன. யுத்தத்தில் காலராத்திரி தேவி பல அசுரர்களை அழித்து, ஷும்பன்–நிஷும்பன் படைகளை முறியடித்தார்.

    ரக்தபீஜன் வதம்

    மார்கண்டேய புராணத்தில் ஷும்பனுக்கு உதவியாக ரக்தபீஜன் என்ற அசுரன் இருந்தான். அவன் ரத்தத்தின் ஒரு துளி பூமியில் விழுந்தால், அதிலிருந்து மற்றொரு ரக்தபீஜன் உருவாகும் என்று வரத்தை பெற்று இருந்தான். இதனால் அவன் அசுரர்களின் பெரும் பலம் வாய்ந்தவனாக இருந்தான். அந்த அசுரனை யாராலும் அழிக்க முடியவில்லை.

    அப்போது காலராத்திரி தோன்றி, போர்க்களத்தில் அவன் ரத்தத்தை குடித்தார். அதன் மூலம் அவன் ரத்தம் தரையில் சிந்தாமல் தடுத்துவிட்டு, அவனை முழுமையாக அழித்தார்.

    இந்த தேவியை வழிபடுவதால் துன்பங்கள், தடைகள் நீங்கி, பக்தர்களுக்கு தைரியமும், நன்மைகளும் கிடைக்கும். தன் பக்தர்களுக்கு எல்லா விதமான மகிழ்ச்சியையும், செல்வத்தையும், இருளை நீக்கும் சக்தியையும் தருபவர்.

    ஸ்லோகம்:

    'ஓம் தேவி காலராத்ரியாயை நம' என்று ஜபிக்க வேண்டும். 

    • வஜ்ராயுதத்தை கொண்டு ஐராவதம் யானையில் வீற்றிருப்பவள் இந்திராணி.
    • இந்திராணியை வழிபடுவதன் மூலம் குரு தோஷம் நிவர்த்தியாகும்.

    நவராத்திரியின் ஆறாம் நாளன்று அன்னை பராசக்தி, இந்திராணியாக வழிபாடு செய்யப்படுகிறாள். இந்திரனின் சக்தி வடிவமாக திகழக்கூடியவள். மகேந்திரி என்றும் அழைக்கப்படுபவள். வஜ்ராயுதத்தை கொண்டு ஐராவதம் யானையில் வீற்றிருப்பவள். சத்ரு பயம் மற்றும் மரண பயத்தை அழிக்கக்கூடியவள். உயர் பதவிகளில் உள்ள இடையூறுகளை தகர்க்கக்கூடியவள்.

    இந்திராணியை வழிபட பருப்பு மாவால் தேவி நாமத்தை கோலம் போட வேண்டும். 16 அகல் தீபங்கள் ஏற்ற வேண்டும். வாழை நார் திரி போட்டு கிராம்பு எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் தீபங்கள் ஏற்றலாம். தேங்காய் சாதம் நிவேதனம் செய்ய வேண்டும். செம்பருத்தி மற்றும் சிவப்பு நிற பூக்கள் மற்றும் சந்தன இலை கொண்டு பூஜிக்க வேண்டும்.

    "பொன்னான அன்னை இந்திராணியே புகழ்பாடி வந்தேன் இந்திராணியே கல்லார்கள் என்ன கற்றோர் என்ன நல்லோர்கள் என்ன தீயோர் என்ன உள்ளாரைக் மேன்மையெல்லாம் உண்டாகுமே"

    என பாடி துதித்தால் வேண்டும் வரம் தருவாள்.

    இந்திராணி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் குரு. எனவே இந்திராணியை வழிபடுவதன் மூலம் குரு தோஷம் நிவர்த்தியாகும். கட்டுமஸ்தான உடல்வாகு, நிரந்தரமான வெற்றி, மற்றும் மரியாதை பெறும் நிலையை அருள்வாள். நல்ல உறவுகள் விசுவாசமான மனைவியையும் குழந்தைகளையும், உயிருக்கும் மேலான நண்பர்களையும் பெற்று வாழலாம். ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் நிலைக்கு மேன்மையைத் தருவாள்.

    • காத்யாயன முனிவர் அம்பாளை நோக்கித் தவம் இருந்து, தேவியை தன் மகளாகப் பெற்றார்.
    • கடுமையான போரில் மகிஷாசுரனை வதம் செய்து, உலகத்தை அசுரரிடமிருந்து காப்பாற்றினார்.

    நவராத்திரி என்பது 9 நாட்கள் கொண்ட பண்டிகையாகும். நவராத்திரி பார்வதி/சக்தியின் ஒன்பது வடிவங்களை வழிபடும் புண்ணிய காலம். நவ - ஒன்பது, ராத்திரி - இரவு. ஒன்பது இரவுகள் – பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா.

    இந்தக்காலத்தில் துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகளின் வித்தியாசமான வடிவங்கள் வழிபடப்படுகின்றன. துர்கை அம்மன் அசுரர்களை வதம் செய்து உலகை காப்பாற்றிய வெற்றி நினைவாகக் கொண்டாடப்படுகிறது.

    அனைத்து வடிவங்களிலும் பெண் சக்தியின் அடையாளமாகவும் இருக்கிறார். நவராத்திரியில் தெய்வத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் தனித்தனி நாளில் கொண்டாடுகிறோம். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

    நவராத்திரியின் 6-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் 'காத்யாயனி தேவி'. காத்யாயனி என்பவள் நவராத்திரியில் வழிபடப்படும் துர்கையின் ஓர் சக்தி வடிவமாகும்.

    காத்யாயன முனிவர் அம்பாளை நோக்கித் தவம் இருந்து, தேவியை தன் மகளாகப் பெற்றார். காத்யாயனரின் தவப் பலனாக தேவி காத்யாயனியின் வடிவம் பெற்றதால், அவளுக்கு 'காத்யாயனி' என்று அழைக்கப்படுகிறார்.

    மகிஷாசுரன் என்ற அசுரன் தேவகோட்டங்கள் அனைத்தையும் துன்புறுத்தியபோது, விஷ்ணு, சிவன், பிரம்மன் ஆகியோரின் சக்திகள் இணைந்து உருவானவள் துர்கை. அந்த சக்தியே காத்யாயனி. இவர் கடுமையான போரில் மகிஷாசுரனை வதம் செய்து, உலகத்தை அசுரரிடமிருந்து காப்பாற்றினார். காத்யாயனி தேவி சிங்க வாகனத்தில் அமர்ந்திருப்பார்.

    நவராத்திரி வழிபாடு:

    துர்கா வழிபாட்டில் நவராத்திரியின் ஆறாவது நாளில் காத்யாயனி வழிபாடு செய்யப்படுகிறாள். மகாசுரனை வதம் செய்ய துர்கா தேவி எடுத்த அவதாரங்களில் இதுவும் ஒன்று.

    பாகவத புராணத்தில், யமுனையின் கரையில் கோபிகைகள் 'காத்யாயனி விரதம்' இருந்து, "கிருஷ்ணனை எங்கள் வாழ்க்கைத்துணையாக வேண்டும்" என வேண்டினார்கள். அவர்களின் விருப்பம் நிறைவேறியது. அதனால் இவர் திருமண ஆசீர்வாதம் வழங்குபவள் என்றும் கருதப்படுகிறார்.

    திருமண வரம் அருளும் தேவியாக குன்றத்தூரில் காத்யாயனி அம்மன் கோவில் கொண்டுள்ளாள்.

    மார்கழி மாதத்தில் வடமாநிலங்களில் இளம்பெண்கள் நல்ல வாழ்க்கைத்துணையை வேண்டி "காத்யாயனி விரதம்" அனுசரிக்கின்றனர்.

    காத்யாயனி தேவியை வழிபடுவதால் துணிவு, திருமண சௌபாக்கியம், அசுர சக்திகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். பக்தர்களை பாபங்களிலிருந்து காப்பாற்றி, சௌபாக்கியமும் துணிவும் அருள்பவர்.

    ஸ்லோகம்:

    'ஓம் தேவி காத்யாயன்யை நமஹ' என்று ஜபிக்க வேண்டும்.

    • திருமாலின் அம்சமாக திகழக்கூடியவள் வைஷ்ணவி தேவி.
    • வைஷ்ணவி தேவியை மல்லிகை மற்றும் முல்லை பூக்கள் மற்றும் விபூதிபச்சைஇலை கொண்டு பூஜிக்க வேண்டும்.

    நவராத்திரியின் ஐந்தாம் நாளான இன்று அன்னை பராசக்தி, வைஷ்ணவியாக வழிபாடு செய்யப்படுகிறாள். கரங்களில் சங்கு சக்கரம், வில் ஆகியவற்றை கொண்டு திருமாலை போல் காட்சியளிப்பவள். திருமாலின் அம்சமாக திகழக்கூடியவள். கருட வாகனம் கொண்டவள். தீய சக்திகளை அழிக்க வல்லவள். செல்வம் மற்றும் செல்வாக்கை அருளக்கூடியவள்.

    வைஷ்ணவி தேவியை வழிபட கடலை மாவு கொண்டு பறவை கோலம் 66 போட வேண்டும். தீபம் ஏற்ற நல்லெண்ணெய் சிறந்தது. 17 அகல் தீபங்கள் ஏற்ற வேண்டும். தயிர் சாதம் நிவேதனம் செய்ய வேண்டும். மல்லிகை மற்றும் முல்லை பூக்கள் மற்றும் விபூதிபச்சைஇலை கொண்டு பூஜிக்க வேண்டும்.

    "வருவாய் வருவாய் வைஷ்ணவியே

    வந்தருள் புரிவாய் வைஷ்ணவியே அனுதினம் வருவாய் வைஷ்ணவியே

    அனுக்கிரகம் செய்வாய் வைஷ்ணவியே"

    என பாடி துதித்தால் வரம் தருவாள்.

    வைஷ்ணவி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் புதன். எனவே வைஷ்ணவியை வழிபடுவதன் மூலம் புதன் தோஷம் நிவர்த்தியாகும். கல்வியில் சிறந்து விளங்கவும், அறிவாற்றலைப் பெருக்கவும் உதவும். புத்திசாலித்தனம் பெருகும். புத்தியைக் கொண்டு வளர்ச்சியைக் காண்பதற்கும், வாழ்க்கையில் வெற்றிகளைப் பெறுவதற்கும் அருள் செய்வாள். அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் சிறந்து விளங்கி, நல்ல பெயரும் புகழும் கிடைக்கும்.

    • ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
    • ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.

    மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.

    அதுபோல், ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.

    அதன்படி, நவராத்திரியின் 5வது நாளான இன்று பச்சை பட்டாணி சுண்டல், தேங்காய் சாதம் மற்றும் கீர் செய்து ஸ்கந்தமாதா தேவிக்கு படைக்கலாம்.

    முதலில், பச்சை பட்டாணி சுண்டல் எப்படி செய்வது என்று பார்ப்போம்..

    பச்சை பட்டாணி சுண்டல்

    தேவையான பொருட்கள்:

    உலர்ந்த பச்சை பட்டாணி - 1 கப்

    தேங்காய் துருவல் - 1/4 கப்

    கடுகு - 1/2 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

    பச்சை மிளகாய் - 2

    கறிவேப்பிலை - 4-5 இலைகள்

    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    பெருங்காயம் - ஒரு சிட்டிகை

    உப்பு - தேவையான அளவு 

    செய்முறை:

    * உலர்ந்த பச்சை பட்டாணியை இரவு முழுவதும் அல்லது குறைந்தது 4 மணி நேரம் ஊறவைக்கவும்.

    * பின்னர், குக்கரில் பட்டாணியை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து 3-4 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.

    * பட்டாணி குழைந்துவிடாமல் மென்மையாக இருக்க வேண்டும்.

    * ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து வெடிக்க விடவும்.

    * பின்னர், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.

    * வதக்கிய தாளிப்புடன் வேகவைத்த பட்டாணியை சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

    * கடைசியாக, தேங்காய் துருவலை சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி அடுப்பை அணைக்கவும்.

    சுவையான நவராத்திரி பச்சை பட்டாணி சுண்டல் தயார். இதை சூடாகவோ அல்லது வெதுவெதுப்பாகவோ பரிமாறலாம்.

    தேங்காய் சாதம்

    தேவையான பொருட்கள்:

    வேகவைத்த சாதம் - 1 கப்

    துருவிய தேங்காய் - 1/4 முதல் 1/2 கப் (தேவைக்கேற்ப)

    நெய் அல்லது எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

    கடுகு - 1/2 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

    கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்

    காய்ந்த மிளகாய் - 2 (அல்லது பச்சை மிளகாய்)

    முந்திரி பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)

    இஞ்சி - 1/2 இன்ச் துண்டு, பொடியாக நறுக்கியது

    கறிவேப்பிலை - ஒரு கொத்து

    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

    உப்பு - தேவைக்கேற்ப 

    செய்முறை:

    * சாதத்தை வேகவைத்து, ஒரு தட்டில் பரப்பி ஆற வைக்கவும். ஆறின சாதத்தை கைகளால் உதிர்த்துக்கொள்ளவும், இதனால் சாதம் உதிரியாக இருக்கும்.

    * ஒரு கடாயில் நெய் அல்லது எண்ணெயை சூடாக்கி, கடுகு சேர்த்து வெடிக்க விடவும். பிறகு உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    * முந்திரி பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய் (பயன்படுத்தினால்), கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து, முந்திரி பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    * தீயைக் குறைத்து அல்லது அணைத்து, துருவிய தேங்காயைச் சேர்த்து, லேசாக வதக்கி மணம் வரும் வரை கிளறவும்.

    * துருவிய தேங்காயுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, பின் ஆற வைத்த சாதத்தை கடாயில் சேர்க்கவும். எல்லா பொருட்களையும் ஒன்றாக நன்கு கலக்கவும்.

    * சுவையான நவராத்திரி தேங்காய் சாதம் தயார்!

    நவராத்திரி கீர்

    நவராத்திரி கீர் என்பது, பொதுவாக நவராத்திரி காலத்தில் விரதம் இருப்பவர்கள் உண்ணும் ஒரு இனிப்புப் பண்டமாகும். இவை பால், சர்க்கரை, பழங்கள் மற்றும் நட்ஸ்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகின்றன.

    பிரபலமான நவராத்திரி கீர் வகைகள்:

    ஜவ்வரிசி கீர் : ஜவ்வரிசியைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த இனிப்பு, நவராத்திரி காலத்தில் பொதுவாக உண்ணப்படும் கீர்களில் ஒன்றாகும்.

    மக்கானா கீர் : இந்த கீர் மக்கானாவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது, மேலும் இது நவராத்திரியின் போது உண்ணப்படும் ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான இனிப்பு வகையாகும்.

    குட்டு கீர்: குட்டு மாவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த கீர், நவராத்திரி காலத்தில் விரதத்தின் போது உண்ணப்படும் ஒரு பாரம்பரிய இனிப்பு ஆகும்.

    இன்று நாம், நவராத்திரிக்கு மிகவும் பிரபலமான மக்கானா கீர் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.. 

    தேவையான பொருட்கள்

    மக்கானா (தாமரை விதைகள்) - 1 கப்

    பால் - 2½ கப்

    சர்க்கரை - 4 டீஸ்பூன்

    ஏலக்காய் தூள் - ½ டீஸ்பூன்

    முந்திரி, பாதாம், பிஸ்தா (நறுக்கியது) - தலா 1 டீஸ்பூன்

    குங்குமப்பூ - 10 கோடுகள்

    நெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை

    * ஒரு கடாயில் நெய் சேர்த்து, அதில் மக்கானாவை சேர்த்து மிருதுவாக வறுக்கவும்.

    * மக்கானாவை அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.

    * ஒரு கடாயில் பாலை சூடாக்கி, அதில் வறுத்த மக்கானாவையும், சர்க்கரையையும் சேர்த்து நன்கு கரைய விடவும்.

    * சர்க்கரை கரைந்ததும், ஏலக்காய் தூள், குங்குமப்பூ, நறுக்கிய உலர் பழங்கள் சேர்த்து, 10-15 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

    * சுவையான மக்கானா கீரை தயார்! இதை சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பரிமாறலாம்.

    • சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
    • நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள்.

    நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய 9 துர்கை தெய்வங்களின் மந்திரங்கள், ஸ்லோகங்கள் மற்றும் போற்றிகள் அந்தந்த தெய்வங்களின் அருளைப் பெற உதவும்.

    ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட துர்கை ரூபத்தை வழிபட்டு, அவர்களின் சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.

    நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள். நவராத்திரியில் மா துர்க்கையின் இந்த ஒன்பது வடிவங்களில் ஒன்று ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்யப்படுகிறது.

    அதன்படி, நவராத்திரியின் ஐந்தாம் நாளான இன்று, துர்கா தேவியின் ஸ்கந்தமாதா வடிவத்தை வழிபடும் நாளாகும்.

    சிறப்பு மந்திரங்கள்:

    ஓம் ஸ்கந்தமாதாயை நமஹ.

    ஹ்ரீம் க்லீம் ஸ்வாமினியை நம.

    இந்த மந்திரம், தாமரை மலர் ஏந்திய, சிம்மாசனத்தில் அமர்ந்த, மங்களகரமான ஸ்கந்த மாதா தேவியை போற்றி வணங்குவதாகும். இவரது பூஜை சக்தி, பாதுகாப்பு மற்றும் செழிப்பைக் கொண்டுவருவதாக நம்பப்படுகிறது.

    ×