என் மலர்
நீங்கள் தேடியது "Navratri festival"
- காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது.
- பக்தர்க–ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
குமாரபாளையம்:
நவராத்திரி விழாவையொட்டி குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது.
இதே போல் அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், சேலம் சாலை மற்றும் ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆரா–தனைகள் நடத்தப்பட்டன. பக்தர்க–ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- திரைப்பட இயக்குனருக்கு ‘ஆத்மீக பால ரத்னா’ விருது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
நெமிலி ஸ்ரீ பாலா பீடத்தில் நடக்கும் நவராத்திரி விழாவில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமிக்கு, 'ஆத்மீக பால ரத்னா' விருதை கவிஞர் நெமிலி எழில்மணி வழங்கி பாராட்டினார்.
அவர் தயாரித்து வெளி யான மாமனிதன் எனும் திரைப்படத்தில், கிராமிய கலைகளை ஊக்குவிக்கும் வகையில் நல்ல கருத்துக்களை மக்களுக்கு எடுத்து - ரைத்தார். தனக்கு அளிக் கப்பட்ட பட்டம் மனித நேயத்துக்கு அளிக்கப்பட்ட மதிப்பு என இயக்குனர் சீனுராம்சாமி குறிப்பிட்டார்.
அப்போது, குருஜி நெமிலி பாபாஜி தாம் எழுதிய ஆத்மீக நுால்களை அவருக்கு பரிசாக வழங்கினார். விழா ஏற்பாடுகளை நெமிலி ஆத்மீக குடும்பத் தினர் செய்திருந்தனர்.
- அண்ணாமலையார் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்றது
- பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
திருச்சி:
முசிறி திருச்சி ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்றது.
நவராத்திரி ஏழாம் நாள் விழாவான நேற்று உண்ணாமலை அம்மன் உற்சவம் மலர் அலங்காரத்தில் லலிதாம்பிகை அம்மனாக பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் பூசாரி கமல் மற்றும் நிர்வாகிகள் மனோகரன் ரவிச்சந்திரன் காஞ்சனா ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.
- சிவலிங்க ஆலிங்கண பூஜை நடைபெற்றது
- மாணவிகளின் பரத நாட்டியம் நிகழ்ச்சி நடந்தது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் கடந்த 26-ம்தேதி நவராத்திரி விழா தொடங்கியது. இதை முன்னிட்டு கோவில் மகா மண்டபத்தில் உற்சவ அம்மனை கொலு வைத்து நேற்று முன்தினம் 27-ம்தேதி காமாட்சி அம்மன் அலங்காரம் நடைபெற்றது.
தினமும் காலை மாலை லட்சார்ச்சனை பூஜை நடக்கிறது. இதில் கலந்து கொண்டு வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் பிரசா தங்கள் வழங்கப்படுகிறது.
கடந்த 27-ம்தேதி மாலை ஸ்ரீ மீனாட்சி நாட்டியக் குழு மாணவிகளின் பரதநாட்டியம் நடைபெற்றது. நாட்டியக் குழுவினருக்கு கோவில் சார்பில் செயல் அலுவலர் சிவஞானம்,மேலாளர் மகாதேவன், கணக்கர் சீனிவாசன் ஆகியோர் சான்றிதழ்கள், பிரசாதங்கள் வழங்கினர்.
மேலும் நான்காம் நாளான நேற்று 28-ம்தேதி அம்மனுக்கு சிவலிங்க ஆலிங்கண பூஜை அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. மாலையில் வேலூர் ஸ்ரீகிருஷ்ணா மந்திர் மாணவிகளின் பரத நாட்டியம் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் க.பெ.அசோக்குமார் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் ஜோதிலட்சுமி செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் கோயில் அலுவலர்கள் செய்து இருந்தனர்.
- தினந்தோறும் மாலையில் கன்யா பூஜை சுமங்கலி பூஜை சண்டி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு விதமான பூஜைகள் நடைபெறுகிறது.
- 9 நாட்களுக்கும் அந்தந்த நாளுக்குரிய ராகங்களுடன் மங்கள வாத்திய நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு அம்மன் குளக் கரையில் அமைந்துள்ள மிகப் பழமையான பத்திர காளி அம்மன் என்ற ஸ்ரீ அழகு நாச்சியம்மன் திருக்கோவிலில் நவராத்திரி திருவிழா நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு கோவில் மகா மண்டபத்தில் பிரமாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது.
தினந்தோறும் மாலையில் கன்யா பூஜை சுமங்கலி பூஜை சண்டி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு விதமான பூஜைகள் நடைபெறுகிறது. 9 நாட்களுக்கும் அந்தந்த நாளுக்குரிய ராகங்களுடன் மங்கள வாத்திய நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஸ்ரீ பத்ரகாளி அம்ம னுக்கு தினம்தோறும் நண்பகல் வேளையில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, பல்வேறு மங்களப் பொருட்களைக் கொண்டு வித விதமான அலங்காரங்கள் செய்யப்படு கிறது நேற்று காய்கறிகளை கொண்டு அம்பாள் அலங்கரிக்கப்பட்டு சாகம்பிரியாள் சுவாமியாக காட்சி தந்தார்.இதனால் திருச்செங்கோடு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மாலை வேளையில் இந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.
இதுகுறித்து தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு கூறுகையில், இங்கு கடந்த 24 வருடங்க ளாக நவராத்திரி விழா கொலு வைக்கப்பட்டு சிறப்பாக நடந்து வரு கிறது. தினந்தோறும் பூஜைகள் நிறைவடைந்த பிறகு பக்தர்களுக்கு சுவையான அன்னதானம் வழங்கப்படுகிறது என்றார்.
- நவராத்திரி விழா தொடங்கியது.
- அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் விசாலாட்சி அம்மன் சமேத விஸ்வநாதர் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது. நவராத்திரியை முன்னிட்டு அமாவாசை தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று அம்மனை கோவிலுக்கு அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நவராத்திரி விழாவின் முதல் நாளான நேற்று விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கொலுமண்டபத்தில் எழுந்தருளிய விசாலாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மங்கள ஆரத்தி நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சோடச உபசாரங்கள் நடைபெற்றன. விசாலாட்சி அம்மனுக்கு அஷ்டோத்திர அர்ச்சனையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா இன்று தொடங்கியது.
- தினமும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா 9 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடுகள் நடைபெறும். கோவில் வளாகத்தில் சிறப்பு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. முதல் நாளான இன்று அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்யப்படுகிறது.
விழாவை முன்னிட்டு காலை திருமுறை இசை நிகழ்ச்சியும், பரதநாட்டி யமும் நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. 5.30 மணிக்கும், 6.30 மணிக்கும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு நவராத்திரியின் மகிமை என்ற ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது. 8.30 மணிக்கு பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கி றது.
நாளை (27-ந்தேதி) அம்மனுக்கு கோலாட்ட அலங்காரமும், 28-ந்தேதி மீனாட்சி பட்டாபிஷேக அலங்காரமும், 29-ந்தேதி தட்சிணாமூர்த்தி அலங்காரமும், 30-ந்தேதி ஊஞ்சல் அலங்காரமும், அக்டோபர் 1-ந்தேதி அர்த்த நாரீஸ்வரர் அலங்காரமும், 2-ந்தேதி தண்ணீர்பந்தல் வைத்தல் அலங்காரமும்,3-ந்தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், 4-ந்தேதி சிவபூஜை செய்யும் அலங்காரமும், 5-ந்தேதி விஜயதசமி சடையலம்புதல் அலங்காரமும் செய்யப்படுகிறது.
விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை சிறப்பு வழிபாடுகளும், இரவில் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை துணை ஆணையர் அரு ணாச்சலம், உதவி ஆணையர் யக்ஞநாராயணன் தக்கார் கருமுத்து கண்ணன் ஆகி யோர் செய்துள்ளனர்.
இதேபோல் இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடக்கிறது. மேலும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
மதுரையில் வீடுகளிலும் பெண்கள் கொலு அமைத்து சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர்.
- 26-ந் தேதி தொடங்குகிறது
- உண்ணாமலை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 26 -ந்தேதி தொடங்கி அக்டோபர் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
விழாவையொட்டி கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் மாலையில் பராசக்தி அம்மனுக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட உள்ளது.
வருகிற 26-ந் தேதி மாலை பராசக்தி அம்மன் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வான வேடிக்கையுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
இதைத்தொடர்ந்து 27-ந் தேதி ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரமும், 28-ந் தேதி கஜலட்சுமி அலங்காரமும், 29-ந் தேதி மனோன்மணி அலங்காரமும், 30-ந் தேதி ரிஷப வாகன அலங்காரமும் மற்றும் பஞ்ச மூர்த்தி களுக்கு அபிஷேகமும் செய்யப்பட உள்ளது.
தொடர்ந்து 1-ந் தேதி ஆண்டாள் அலங்காரமும் 2-ந் தேதி சரஸ்வதி அலங்காரமும், 3-ந் தேதி லிங்க பூஜை அலங்காரமும், 4-ந் தேதி மகிஷாசுர மர்தினி அலங்காரமும் நடைபெற உள்ளது.
மேலும் அன்று காலையில் திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.மாலை சரஸ்வதி பூஜை மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட உள்ளது.
விழாவிற்கான ஏற்பா டுகளை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
- ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா 26-ந் தேதி தொடங்கி 4ந் தேதி வரை நடக்கிறது.
- மாலை 5.30 மணிக்கு ஸ்ரீ தாயார் உள் புறப்பாடு மற்றும் 7.30 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
உடுமலை :
உடுமலை தளி ரோட்டில் பள்ளபாளையம்அருகில் உள்ள உடுமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 26-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 4ந்தேதி வரை நடக்கிறது.வரும் 27 ந்தேதி பிரம்மச்சாரிணி அலங்காரமும் மாலை 5:30 மணிக்கு உமா நந்தினி பக்தி இன்னிசையும் நடக்கிறது. 28 ந்தேதி சந்திரகாந்தா அலங்காரம் மாலை கமலாலயா நாட்டியப்பள்ளி பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. வியாழக்கிழமை குஷ்மந்தா அலங்காரம் மாலை உமா நந்தினியின் சூழலும் பாடலும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
5-ம் நாள் (வெள்ளிக்கிழமை) ஸ்கந்த மாதா அலங்காரமும் மாலை சொர்ணாலயா நாட்டியாஞ்சலி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது. 6-ந்தேதி கார்த்தியாயினி அலங்காரமும் மாலை ரிதம் இசைப்பள்ளி பாடல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
7-ந்தேதி கால் ராத்திரி அலங்காரமும் மாலை பரதநிகழ்ச்சியும் நடக்கிறது. 8ந்தேதி மகா கெளரி அலங்காரமும் மாலை பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. 8 ந்தேதி மகா கெளரி அலங்காரமும் மாலை பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. தினமும் காலை 10 மணிக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. மாலை 5.30 மணிக்கு ஸ்ரீ தாயார் உள் புறப்பாடு மற்றும் 7.30 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சேரிடபிள் டிரஸ்ட் மற்றும் இன்னர் வீல் கிளப்பினர் செய்து வருகின்றனர்.
- 26-ந் தேதி தொடங்குகிறது
- பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே படவேடு ரேணுகாம்பாள் கோவி லில் நவராத்திரி விழா வருகிற 26 - ந் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு அம்மனுக்கு 26 - ந் தேதி முதல் 5 - ந் தேதி வரை தினமும் காலை, மாலை இருவேளை லட்சார்ச்சனை பூஜை நடக்கிறது.
உற்சவ அம்மன் கோவில் மகா மண்டபத்தில் கொலு வைத்து, 25-ந் தேதி பார்வதி அலங்காரம், 26-ந் தேதி காமாட்சி அலங்காரம், 27-ந் தேதி மாவடி சேவை அலங்காரம், 29-ந் தேதி மீனாட்சி அலங்காரம், 30-ந் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரம், 1-ந் தேதி துர்க்கை அலங்காரம், 2-ந் தேதி அன்ன பூரணி அலங்காரம், 3-ந் தேதி தனலட்சுமி அலங்காரம், 4-ந் தேதி சரஸ்வதி அலங்காரம், 5-ந் தேதி திருஅவதார அலங்காரத்துடன் இரவு 8.30 மணி அளவில் பாரிவேட்டை உற்சவம், திருவீதி உலா நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை மண்டல இணை ஆணையர் க.பெ.அசோக்குமார் உத்தரவின்பேரில் உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, செயல் அலுவலர் சிவஞா னம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இதேபோல் கண்ணமங்க லம் புதுப்பேட்டை சிவசக்தி வள்ளி முத்து மாரியம்மன் கோவிலிலும் நவராத்திரி விழா 26-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நடக்கிறது.
இதைமுன்னிட்டு அம்மனுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் தினமும் அபிஷேகம், அலங்காரம் மற்றும் உற்சவ அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடக்கிறது.
இதைமுன்னிட்டு நேற்று கோவிலில் பந்தக்கால் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விழா குழுவினர் கே.டி.குமார் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- 10 நாட்கள் நடைபெறும் இவ்விழா வருகிற 26-ந்தேதி மலை க்கோவிலில் காப்பு கட்டு தலுடன் தொடங்கு கிறது.
- 5-ந்தேதி வழக்கம் போல் தங்கரத புறப்பாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பழனி:
பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் கொண்டா டப்படும் முக்கிய திருவிழா க்களில் ஒன்று நவராத்திரி விழாவாகும். 10 நாட்கள் நடைபெறும் இவ்விழா வருகிற 26-ந்தேதி மலை க்கோவிலில் காப்பு கட்டு தலுடன் தொடங்கு கிறது.
விழா நடைபெறும் 10 நாட்களும் பெரியநாயகி அம்மன் கோவிலில் பக்திசொற்பொழிவு, மங்கள இன்னிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
விழாவின் 9-ம் நாளான அக்டோபர் 4-ந்தேதி மலைக்கோவிலில் பகல் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். பின்னர் 2.45 மணிக்கு மலைக்கோவிலில் இருந்து பராசக்தி வேல் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வந்தடையும் நிகழ்ச்சி நடைபெறும்.
மாலை 5 மணிக்கு தங்ககுதிரை வாகனத்தில் முத்துக்குமாரசாமி கோதைமங்கலம் புறப்பட்டு அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணைஆணையர் நடராஜன், துணைஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு வருகிற 26-ந்தேதி முதல் அக்டோபர் 4-ந்தேதி 9 நாட்களுக்கு மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தம் செய்ய ப்படும். 5-ந்தேதி வழக்க ம்போல் தங்கரத புறப்பாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.