என் மலர்
நீங்கள் தேடியது "மகிஷாசுர மர்த்தினி"
- மகிஷாசுரன், மகாமேரு என்ற மலையில் பத்தாயிரம் வருடம் கடும் தவம் செய்தான்.
- பெண்கள் மென்மையானவர்கள், அவர்களால் தனக்கு ஆபத்து இல்லை என்பதால், பெண்களை தவிர்த்து வரம் கேட்டான்.
விஜயதசமி என்பது வெற்றியை குறிக்கும் பண்டிகையாகும். நவராத்திரி விழா முடிந்த 10-வது நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்த விஜயதசமி கொண்டாடுவதற்கு பலவிதமான புராணக் கதைகள் சொல்லப்படுகின்றன. இருப்பினும் பெரும்பாலானோர், பராசக்தி மகிஷாசுரனுடன் போரிட்டு வெற்றி வாகை சூடிய நாளே, 'விஜயதசமி' என்று கொண்டாடி மகிழ்கிறார்கள்.
'விஜய்' என்றால் வெற்றி என்றும், 'தசம்' என்றால் பத்து என்றும் பொருள். அன்னை, மகிஷாசுரனுடன் 9 நாள் போரிட்டு, 10-வது நாள் பெற்ற வெற்றியே விஜயதசமி ஆகும்.
முன்பொரு காலத்தில் தனு என்ற அசுரன் இருந்தான். அவனுக்கு மிகவும் பலசாலியான ரம்பன், கரம்பன் என்ற இரு மகன்கள் இருந்தனர். அவர்கள் இருவரும், தங்களுக்கு மிக சக்தி வாய்ந்த புத்திரர்கள் வேண்டும் என்பதற்காக கடும் தவம் புரிந்தனர்.
கரம்பன் என்பவன் அன்ன ஆகாரம் இன்றி நீரில் நின்று தவம் செய்தான். அப்பொழுது இந்திரன், இவனுக்கு பிள்ளை பிறந்தால் தேவர்களுக்கு ஆபத்து என்று கருதி, முதலை உருவில் சென்று நீரில் நின்றிருந்த கரம்பனை கொன்றான்.
ரம்பன் என்பவன் யட்சபுரி என்ற ஊரில் ரசாலம் என்ற ஆலமரத்தின் அடியில் பஞ்சாங்கனி மத்தியில் தவம் செய்தான். சகோதரனாகிய கரம்பனுக்கு இந்திரனால் ஏற்பட்ட மரணத்தை அறிந்து, தேவர்களை அழிக்க சபதம் மேற்கொண்டான்.
தவத்தின் இறுதியில் தன் தலையை வெட்டி அக்னியில் செலுத்த முயன்றான்.
அவனின் தவத்தில் மகிழ்ந்த அக்னி தேவன், அவன் முன் தோன்றி, 'உனக்கு என்ன வரம் வேண்டும்' என்று கேட்டார்.
உடனே ரம்பன், 'எனக்கு யாராலும் ஜெயிக்க முடியாத மகன் வேண்டும்' என்றான். அதற்கு அக்னி தேவன், "நீ எந்தப் பெண்ணை முதலில் பார்க்கிறாயோ, அந்த பெண்ணிடம் உனக்கு புத்திரன் பிறப்பான்" என்று வரம் கொடுத்தார்.
இதையடுத்து ரம்பன் தவத்தில் இருந்து வெளியே வந்தான். அப்போது அவன் எருமை ஒன்றை கண்டான். அந்த எருமையைப் பார்த்த உடன், அதன் வாயிலாக அவனுக்கு ஒரு குழந்தைப் பிறந்தது.
எருமைத் தலையும், மனித உடலுமாக பிறந்த அந்தப் பிள்ளை 'மகிஷாசுரன்' என்று அழைக்கப்பட்டான். (இது மகிஷாசுரன் பிறப்பு பற்றி புராணங்கள் கூறும் பல கதைகளில் ஒன்று).
மகிஷாசுரன், மகாமேரு என்ற மலையில் பத்தாயிரம் வருடம் கடும் தவம் செய்தான். மரணம் இல்லாத வாழ்க்கையை அவன் பிரம்மாவிடம் கேட்டான். அதற்கு பிரம்மன், "மரணம் இல்லாத வாழ்க்கை யாருக்கும் கிடையாது. பிறப்பு ஒன்று இருந்தால் இறப்பு என்பது நிச்சயம். அதனால் வேறு வரம் கேள்" என்றார்.
அதற்கு அவன், "தேவர்களாலும், பூதங்களாலும், ஆண்களாலும், மிருகங்களாலும், எனக்கு மரணம் ஏற்படக்கூடாது" என்றான்.
பெண்கள் மென்மையானவர்கள், அவர்களால் தனக்கு ஆபத்து இல்லை என்பதால், பெண்களை தவிர்த்து வரம் கேட்டான். பிரம்மதேவனும் அவன் கேட்ட வரத்தை அளித்தார்.
மகிஷாசுரனுக்கு, சிட்சூரன் என்பவன் சேனாதிபதியாகவும், தாம்ரன் என்பவன் தனாதிபதியாகவும் இருந்தனர். அஸிலோமா, பிடாலன், பாஷ்களன், கால பந்தகன், உதர்க்கன், திரிநேத்ரன் போன்ற மந்திரிகளும் இருந்தனர். அவனுக்கு பயந்த ரிஷிகளும், முனிவர்களும் அவன் சொல்படி கேட்டு நடந்தனர். அவன் அஞ்சனம் என்ற மலையில் மாஹிஷம் என்ற மிக அழகிய பட்டினத்தை நிர்மாணித்தான். தேவர்களை மிரட்டி, தனக்கு உதவியாளர்களாக மாற்றிக் கொண்டான்.
மும்மூர்த்திகளும், தேவர்களும் ஒன்று கூடி, மகிஷனை எப்படி அழிப்பது என்று ஆலோசனை செய்தார்கள். தேவர்களின் சக்தியிலும், மும்மூர்த்திகளின் ஒளியிலும் இருந்து தெய்வீக சக்தி படைத்த தேவி தோன்றினாள்.
புரட்டாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதியில் பராசக்தி தேவர்களுக்கு காட்சி கொடுத்தாள்.
இந்த தேவி 18 கைகள் கொண்டு அஷ்டாதச மகாலட்சுமியாக காட்சி தந்தாள்.
தொடர்ந்து ஒன்பது இரவுகள் போர் புரிந்து, மகிஷாசுரனையும் அவனுடன் இருந்த அசுரர்களையும் அழித்தாள். இதனால் அந்த அன்னை, 'மகிஷாசுர மர்த்தினி' என்று அழைக்கப்பட்டாள்.
எந்த இடத்தில் மகிஷனை, தேவி வதம் செய்தாளோ அந்த இடம் 'தேவிப்பட்டினம்' என்று பெயர் பெற்றது. அன்னை போரிட்ட ஒன்பது நாட்களும் நவராத்திரியாகவும், வெற்றி பெற்ற 10-ம் நாள் விஜயதசமியாகவும் கொண்டாடப்படுகிறது.
- நவராத்திரி ஒன்பது நாளும் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு வரப்படுகிறது.
- மகாகாளி இச்சன்னதியில் சாந்தமாக, பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார்.
அருள்மிகு அணி அண்ணாமலையார் சன்னதியில் இடது புறம் மகிஷனை சம்ஹாரம் செய்த மகா காளி,
இத்திருத்தலத்தில் சாந்தஸ்வருபியாக தெற்கு முகமாக நின்ற கோலத்தில் காட்சியளித்து,
தன்னை வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அளித்து அருள்பாளித்து வருகிறார்.
பொதுவாக உக்கிரமான கோர ஸ்வருபத்தில் இருக்கும் மகாகாளி இச்சன்னதியில் சாந்தமாக,
மகிஷாசுரமர்த்தினியாக பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார்.
சென்னையில் வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத அளவிற்கு நம் அம்பாள் வீற்றிருந்து, அருளை அளித்து, சங்கடங்களை தீர்த்துவருகிறார்.
ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் அம்பாளுக்கு வெண்ணெய் சாற்றி, நெய்தீபம் ஏற்றி வழிபட்டால்,
தீராத வியாதியும் நீங்கி, மனநிறைவும் காரியத்தில் வெற்றியும், சுபச்செய்தியும் கிடைக்கும் என்பது
பக்தர்களின் ஏகோபித்த நம்பிக்கையாகும்.
நவராத்திரி ஒன்பது நாளும் சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் பக்தர்களால் செய்யப்பட்டு வரப்படுகிறது.
வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய் கிழமைகளில் பெருவாரியான பக்தர்கள் தரிசித்துச் செல்கின்றனர்.
- கரம்பன் நீரில் நின்று அன்ன ஆகாரம் இன்றி தவம் செய்தான்.
- பஞ்சாங்கனி மத்தியில் ரம்பன் தவம் செய்தான்.
தனு என்ற அசுரனுக்கு மிகவும் பராக்கிரமசாலியான ரம்பன், கரம்பன் என்ற இரு மகன்கள் இருந்தனர். அவர்கள் மிகவும் சக்திவாய்ந்த புத்திரர்களை பெற வேண்டும் என்று கடும் தவம் புரிந்தனர். கரம்பன் நீரில் நின்று அன்ன ஆகாரம் இன்றி தவம் செய்தான். அப்பொழுது இந்திரன், 'இவனுக்கு பிள்ளை பிறந்தால் தேவர்களுக்கு ஆபத்து' என்று கருதி, முதலை உருவில் சென்று நீரில் நின்றிருந்த கரம்பனை கொன்றான்.
யட்சபுரி என்ற ஊரில் ரசாலம் என்ற ஆலமரத்தின் அடியில் பஞ்சாங்கனி மத்தியில் ரம்பன் தவம் செய்தான். சகோதரனாகிய கரம்பனுக்கு இந்திரனால் ஏற்பட்ட மரணத்தை அறிந்து, தேவர்களை அழிக்க சபதம் மேற்கொண்டான். தவத்தின் இறுதியில் தன் தலையை வெட்டி அக்னியில் செலுத்த முயன்றான்.
அப்போது அக்னி தோன்றி, `உனக்கு வரம் தருகிறேன். இவ்வாறு செய்யாதே" என்றார். ரம்பன் மகிழ்ந்து, `எனக்கு யாராலும் ஜெயிக்க முடியாத மகன் வேண்டும்" என்றான். அதற்கு அக்னி தேவன், 'நீ முதலில் எந்த உயிரினத்தை பார்க்கிறாயோ, அதன் மூலம் உனக்கு புத்திரன் பிறப்பான்' என்று வரம் கொடுத்தார்.
இதையடுத்து ரம்பன் தவத்தில் இருந்து வெளியே வந்தான். அப்போது அவன் முதலில் எருமை ஒன்றை கண்டான். அந்த எருமையை பார்த்தவுடன் அதன் வாயிலாக அவனுக்கு ஒரு குழந்தை பிறந்தது. எருமைத்தலையும் மனித உடலுமாக பிறந்த அந்த பிள்ளை மக்ஷாகரன்' என்று அழைக்கப்பட் டான்.
மகிஷாசுரன் மகாமேரு என்ற மலையை அடைந்து அங்கு பத்தாயிரம் வருடம் கடும் தவம் செய்தான். மரணம் இல்லாத வாழ்க்கையை அவன் பிரம்மாவிடம் கேட்டான். அதற்கு பிரம்மன், மரணம் இல்லாத வாழ்க்கை யாருக்கும் கிடையாது. வேறு வரம் கேள்" என்றார். அதற்கு அவன். "தேவர்களாலும் பூதங்களாலும். ஆண்களாலும், மிருகங்களாலும், எனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்றான்.
பெண்கள் மென்மையானவர்கள். அவர்களால் தனக்கு ஆபத்து இல்லை என்பதால். பெண்களை தவிர்த்து வரம் கேட்டான். பிரம்மதேவனும் அவன் கேட்ட வரத்தை அளித்தார்.
மகிஷாசுரனுக்கு, சிட்சூரன் என்பவன் சேனாதிபதியாகவும். தாம்ரன் என்பவன் தளபதியாகவும் இருந்தனர். அசிலோமா, பிடாலன், பாஷ்களன், காலபந்தகன், உதர்க்கன், த்ரிநேத்ரன் போன்ற மந்திரிகளும் அவனுடன் இருந்தனர்.
அவனுக்கு பயந்த ரிஷிகளும், முனிவர்களும் அவன் சொல்படி கேட்டு நடந்தனர். அவன் மிக அழகிய மாஹிஷம் என்ற பட்டினத்தை அஞ்சனம் என்ற மலையில் நிர்மாணித்தான். தேவர்களை தனக்கு உதவியாளர்களாக மாற்றிக் கொண்டான்.
மும்மூர்த்திகளும். தேவர்களும் ஒன்று கூடி, மகிஷனை எப்படி அழிப்பது என்று ஆலோசனை செய்தார்கள். தேவர்களின் சக்தியிலும், மும்மூர்த்திகளின் ஒளியிலும் இருந்து தெய்வீக சக்தி படைத்த தேவி தோன்றினாள்.
புரட்டாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதியில் இந்த பராசக்தி தேவர்களுக்கு காட்சி கொடுத்தாள். இந்த தேவி 18 கைகள் கொண்டு அஷ்டாதச மகாலட்சுமியாக காட்சி தந்தாள். தொடர்ந்து ஒன்பது இரவுகள் போர் புரிந்து மகிஷாகரனையும் அவனுடன் இருந்த அசுரர்களையும் அழித்தாள். இதனால் அந்த இன்னை மகிஷாசுர மர்த்தினி என்று அழைக்கப்பட்டாள். எந்த இடத்தில் தேவர்களின் சத்ருவான மகிஷனை, தேவி வதம் செய்தாளோ அந்த இடம் `தேவிப்பட்டினம்' என்று பெயர் பெற்றது. அன்னை போரிட்ட ஒன்பது நாட்களும் நவராத்திரியாகவும், வெற்றிபெற்ற 10-ம் நாள் விஜயதசமியாகவும் கொண்டாடப்படுகிறது.
இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் மகிஷாசுர மர்த்தினிக்கு, "துர்க்கா தேவி" என்ற பெயர் எப்படி வந்தது என்று ஒரு சமயம் துர்கமன் என்ற அசுரன், தேவர்கள், மகரிஷி, முனிவர்கள், வேதியர்கள் போன்றவர்களிடம் இருந்த மந்திரங்களை தன் சக்தியால் கவர்ந்து சென்றான். இதனால் உலகில் ஜபம், யாகம் எதுவும் நடைபெறவில்லை.
இதனால் மழை பொழியாமல் பயிர்கள் வாடின. பசுமையான மரங்கள் கூட உதிர்ந்தன. கிணறு, குளம், நதி ஆகியவை வற்றியது. இவ்வாறு நூறு ஆண்டு காலம் மக்கள் பஞ்சத்தில் தவித்தனர். இதையடுத்து தேவர்கள், அன்னை பராசக்தியை துதித்து வழிபட்டனர். அப்போது தேவி அங்கு தோன்றினாள். இவர் பல கண்களைக் கொண்டிருந்ததால், 'சதாட்சி' என்று பெயர் பெற்றாள்.
புஷ்பம், தளிர் கீரை, காய்கறிகள், கிழங்குகளுடன் தோன்றியதால், இந்த தேவியை `சாகம்பரி' என்றும் பெயரிட்டு அழைத்தனர். இந்த அன்னை, துர்கமனுடன் சண்டையிட்டு அவனை வீழ்த்தினாள். அவன் இறந்த பிறகு அவனுடைய உடலில் இருந்து அவன் கவர்ந்து சென்ற மந்திரங்கள் பேரொளியோடு அன்னையை வந்து சரணடைந்தன. அதைக்கண்ட தேவர்கள் ஜெய ஜெய' என்று கோஷமிட்டனர்.
துர்கமன் என்னும் அசுரனை அழித்ததால் அன்னை `துர்க்கா' என்று அழைக்கப்பட்டாள். சூலினி துர்க்கா, வன துர்க்கா, சாந்தி துர்க்கா, சபரி துர்க்கா, ஜாதவேதோ துர்க்கா, தீப துர்க்கா, ஜ்வாலா துர்க்கா, ஆசுரி துர்க்கா என நவ துர்க்கைகளாகவும் இருந்து அன்னை அருள்புரிகிறாள்.
இந்த தேவியின் பெருமைகளை கூறும் தேவி மாகாத்மியத்தை, ஒன்பது நாளும் பாராயணம் செய்வது சிறப்பான பலனைத் தரும். அப்படி முடியாவிட்டால் துர்க்கைக்கு மிக- விசேஷமான துர்க்காஷ்டமி அன்றாவது பாராயணம் செய்வது நல்லது. தேவர்கள் மகிஷனை வதம் செய்த போது மகிஷாசுர மர்த்தினியை துதித்த துதிக்கு மகிஷாசுரமர்த்தினி சுலோகம் என்று பெயர் வந்தது.






