search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "durga"

    • தீப ஒளி புற இருளை அகற்றுகிறது. தீப பூஜை உள்ளத்தின் இருளைப் போக்குகிறது.
    • பொது இடங்களில் பலரும் சேர்ந்து கூட்டாக தீப வழிபாடு செய்யலாம்.

    தீபத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய 3 சக்திகளும் உள்ளனர்.

    தீப ஒளி புற இருளை அகற்றுகிறது. தீப பூஜை உள்ளத்தின் இருளைப் போக்குகிறது.

    அதாவது தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது.

    மனதில் உள்ள கவலைகளைப் போக்குகிறது.

    தினமும் மாலையில் தீபம் வைத்து வணங்கி பூஜை செய்ய வேண்டும்.

    பொது இடங்களில் பலரும் சேர்ந்து கூட்டாக தீப வழிபாடு செய்யலாம்.

    வீட்டிலே சாமிக்கு முன்னால் சின்னதாக அகல் விளக்கு ஏற்றி, மணி நேரமாவது எரிவதற்கு எண்ணெய் விட்டு,

     தேவியை மனதில் தியானித்துப் பூஜை செய்ய வேண்டும்.

    அப்படி செய்பவர்களுக்கு வாழ்க்கையில் எல்லாக் கஷ்டங்களும் நீங்கி

    எல்லாவிதமான சந்தோஷங்களும், சவுபாக்கியங்களும் ஏற்படும்.

    வீட்டிலே நாம் இம்மாதிரி தீப பூஜை செய்யும்போது, பக்கத்திலேயே குழந்தைகளை வைத்துக் கொண்டு செய்ய வேண்டும்.

    அவர்களையும் நல்ல சுலோகங்களை பாடல்களைப் படிக்க வைத்து பூஜையில் ஈடுபடுத்த வேண்டும்.

    தினமும் காலையிலும், மாலையிலும், வீட்டிலும் வியாபார இடங்களிலும் விளக்கேற்றி வழிபட்டு வருபவர்களின் வறுமை அகலும்.

    லட்சுமியின் அருள் கிடைக்கும்.

    • அரசலாறு ஆற்றங்கரையில் சரஸ்வதிக்கு கோவில் உள்ளது.
    • தாமரை மலரில் பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

    திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட்டம் என்னும் ஊர் அருகே கூத்தனூர் என்னும் கிராமத்தில்

    அரசலாறு ஆற்றங்கரையில் சரஸ்வதிக்கு கோவில் உள்ளது.

    இந்த ஆலயத்தில் சரஸ்வதி தேவி நான்கு திருக்கரங்களுடனும், அருள் ஞானமுத்திரை ஆகியவற்றுடனும்

    தாமரை மலரில் பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

    இங்கு சரஸ்வதி பூஜை நாளில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.

    அந்நாளில் பூஜை செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    கூத்தனூரில் ஆரம்பித்து ருத்ர கங்கை வரையிலான சுமார் இரண்டரை கிலோ மீட்டர் வரை வியாபித்துள்ள

    அரசலாற்றுக் கரையில் தர்ப்பணம் மற்றும் பித்ரு காரியங்கள் செய்வது மிகச் சிறப்பானதாகும்.

    இங்கு தர்ப்பணம் செய்யவும், குழந்தைகள் கல்வி மேன்மைக்கு வழிபாடு செய்யவும்,

    அவரவர் பாப கர்ம வினையிலிருந்து விடுபடவும் திரிவேணி சங்கம நீராடலுக்கும்,

    கணவன் மனைவி பிரிவிலிருந்து மீளவும் இது மிகச்சிறந்த பிராத்தனைத்தலம் என்று தலபுராணம் கூறுகிறது.

    மேலும் கம்பர் காலத்தில் அவைப்புலவர்களில் ஒருவராக இருந்த ஒட்டக்கூத்தர் கட்டிய கோவில் இது எனவும்

    இக்காரணம் தொட்டே இது கூத்தனுர் என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுவதுண்டு.

    இங்கு குடியிருக்கும் சரஸ்வதி தேவி பேச முடியாதவரையும் பேச வைக்கும் அருள் உள்ளம் கொண்டவள்.

    வாக்கு வன்மை யும் காவியம் இயற்றும், புலமையும் தருபவள்.

    நவராத்திரியின் போது பக்தர்கள் அம்மனைத் தொட்டு மலர்களால் அர்ச்சனை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    • ஆதி பராசக்தியை துர்க்கையாக நினைத்து வழிபட்டால் பயம் நீங்கும்.
    • தேவியை நடுவில் வைத்து, இந்த உலகப் பொருட்களை எல்லாம் சுற்றிலும் வைக்கிறார்கள்.

    கல்வி, இசை, புகழ், செல்வம் தானியம், வெற்றி, பூமி, தண்ணீர் ஆகிய அனைத்தையும் சக்தியே தருகிறாள்.

    ஆதி பராசக்தியை துர்க்கையாக நினைத்து வழிபட்டால் பயம் நீங்கும்.

    லட்சுமி வடிவில் தரிசித்தால் செல்வம் பெருகும்.

    சரஸ்வதியாக எண்ணி வணங்கினால் கல்விச்செல்வம் சிறக்கும்.

    பார்வதியாக வழிபட்டால் ஞானப்பெருக்கு உண்டாகும்.

    எனவேதான் இந்நாட்களில் கொலுவும் வைக்கிறார்கள்.

    தேவியை நடுவில் வைத்து, இந்த உலகப் பொருட்களை எல்லாம் சுற்றிலும் வைக்கிறார்கள்.

    இதற்கு காரணம், தேவியால்தான் இந்த உலகம் இயங்குகிறது என்பதைக் காட்டுவதற்காக,

    பிரம்மா, விஷ்ணு, சிவன், ஆகிய மும்மூர்த்திகளும் உருத்திரன், சதாசிவன் ஆகிய சிவனின் மற்ற வடிவங்களும் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, மகேஸ்வரி, மனோன்மணி ஆகிய சக்திகளுக்குள் அடக்கமாக உள்ளனர்.

    எனவே, சக்தியை வழிபட்டாலே அனைத்து தெய்வங்களையும் வழிபட்டதாக அர்த்தம்.

    • மிக பிரமாண்டமாக நடைபெறும் விழாக்களில் ஒன்று நவராத்திரி.
    • சரஸ்வதி தேவிக்கு கூத்தனூரில் மட்டுமே தனிக்கோவில் உள்ளது.

    வட இந்தியாவில் விநாயகர் சதுர்த்தியை போலவே, மிக பிரமாண்டமாக நடைபெறும் விழாக்களில் ஒன்று, நவராத்திரி. இந்த விழாவில் துர்க்கையை முன்னிறுத்தி அப்பகுதி மக்கள் வழிபாட்டை நடத்துவார்கள். தமிழ்நாட்டிலும் நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும், வட மாநிலங்களில் உள்ள ஆர்ப்பாட்டம் இங்கே இருக்காது என்றாலும், தெய்வீகமான வழிபாட்டு முறையை தமிழ் மக்கள் கையாளுவார்கள்.

    புரட்டாசி மாத அமாவாசைக்குப் பின் வரும் பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரையான ஒன்பது நாட்கள், நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியர் என்று அழைக்கப்படும் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோரை வழிபாடு செய்ய வேண்டும்.

    முதல் மூன்று நாட்கள் பார்வதி (துர்க்கை) வழிபாடும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடும் முறையாக நடத்தப்படும்.

    துர்கா தேவி

    நெருப்பின் ஒளி பொருளிய அழகும், ஆவேசப்பார்வையும் கொண்டு வீரத்தின் அடையாளமாகத் திகழும் தெய்வம் இவர். இச்சா சக்தியாக போற்றப்படும் இந்த துர்க்கையை, 'கொற்றவை', 'காளி' என்ற பெயர்களிலும் வழிபாடு செய்வார்கள். போர் வீரர்களின் தொடக்கம் மற்றும் முடிவின் வழிபாட்டுக்குரிய இந்த அன்னை, சிவ பிரியை ஆவார். இந்த அன்னை, மகிஷாசூரன் என்ற அரக்கனுடன் ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக போரிட்டாள். இந்த ஒன்பது நாட்களையே நவராத்திரியாக கொண்டாடுகிறோம்.

    10-வது நாளில் அவளுக்கு வெற்றி கிடைத்தது. அந்த நாளை நாம் 'விஜயதசமி' என்று வழிபடுகிறோம். வன துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோ துர்க்கை, ஜூவாலா துர்க்கை, சாந்தி துர்க்கை, சபரி துர்க்கை. தீப துர்க்கை, சூரி துர்க்கை, லவண துர்க்கை ஆகியோர் துர்க்கையின் அம்சங்கள். இவர்களை "நவ துர்க்கை' என்று அழைப்பார்கள்.

    லட்சுமி தேவி

    செல்வத்தின் தெய்வமாக விளங்கும் லட்சுமி தேவி. மலரின் அழகும், அருள் பார்வையும் கொண்டு அருள்பாலிப்பவர், கிரியா சக்தியாக இருந்து செயல்படுபவர். விஷ்ணு பிரியையான இந்த தேவி, திருப்பாற்கடலை கடைந்தபோது, அமிர்தம் தோன்றுவதற்கு முன்பாக வெளிப்பட்டவள். இந்த அன்னையும் அமிர்தம் போன்றவள் தான். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருப்பார் இந்த தேவி.

    இந்த தேவியை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டிக் கொண்டிருக்கும். செல்வ வளம் தந்து. வறுமையை அகற்றும் சக்தி பெற்றவள். லட்சுமி தேவியின் அம்சமான ஆதி லட்சுமி, மகாலட்சுபி, தன லட்சுமி, தானிய லட்சுமி, சந்தான லட்சுமி, வீர லட்சுமி, விஜய லட்சுமி, கஜ லட்சுமி ஆகிய 8 பேரும் "அஷ்ட லட்சுமிகள்' என்று அழைக்கப்படுகின்றனர்.

    சரஸ்வதி தேவி

    கல்வியின் தெய்வமாக போற்றப்படும் சரஸ்வதி தேவி, அமைதியான பார்வையும், வைரத்தின் ஜொலிப்பும் கொண்டவர். ஞான சக்தியாக அருளும் இந்த தேவிக்கு, தஞ்சாவூர் மாவட்டம் கூத்தனூரில் மட்டுமே தனிக்கோவில் அமைந்திருக்கிறது. பிரம்ம பிரியையான இந்த தேவியை, நவராத்திரி விழாவின் போது, மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும் நேரத்தில் வழிபாடு செய்வது முறையாகும்.

    நவராத்திரி நாளில் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வழிபடும் நாளை, 'சரஸ்வதி பூஜை' என்கிறோம். குழந்தைகளுக்கு இந்த நாளில் கல்வியை தொடங்குவதை பலரும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த நாளில் தொடங்கும் நற்காரியங்கள் அனைத்தும் வெற்றியாக முடியும். வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்த ரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகிய 8 பேரும் "அஷ்ட சரஸ்வதிகள்" என்று போற்றப்படுகின்றனர்.

    • துர்க்கைக்கு என்று தனியாக கோயில் அமைந்த தலங்கள் மிக அபூர்வம்.
    • ஐந்நூறு ஆண்டுகளைக் கடந்த பழமையான ஆலயம்.

    துர்க்கைக்கு என்று தனியாக கோயில் அமைந்த தலங்கள் மிக அபூர்வம். அப்படி ஓர் அபூர்வக் கோயிலாக திருச்சியில் பாலகரை எனுமிடத்தில் துர்க்கைக்கு ஓர் ஆலயம் உள்ளது. ஐந்நூறு ஆண்டுகளைக் கடந்த பழமையான ஆலயம் இது.

    கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது ஆலயம். முகப்பில் மூன்றடுக்கு ராஜகோபுரம் வரவேற்க உள்ளே நுழைந்ததும் விசாலமான மகாமண்டபம் இறைநாமம் எதிரொலிக்க விசாலமாக இருக்கிறது.

    மகாமண்டபத்தின் மேல்புறம் பெரியண்ணசுவாமி, கருப்பண்ண சுவாமி திருமேனிகள் காட்சிதர, வடதிசையில் மதுரைவீரன், பொம்மி, வெள்ளையம்மான் திருமேனிகள் தனி மண்டபத்தில் உள்ளன.

    அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாயிலின் இருபுறமும் சுதை வடிவில் அமைந்துள்ளனர். துவார சக்திகள். அன்னைக்குக் காவலாக இருப்பதால் கம்பீரமும், அதே சமயம் பக்தர்களுக்குத் தடையில்லை எனும்விதமாக கருணையும் ஒரே சேர அமைந்துள்ளனர்.

    கருவறையில் இறைவி துர்க்கையம்மன், புன்னகை தவழும் முகத்துடன் அருள்பாலிக்கிறான். அன்னைக்கு நான்கு திருக்கரங்கள். இடது மேல் கரத்தில் சங்கையும், வலது மேல் கரத்தில் சக்கரத்தையும் தாங்கி கீழ் வலது கரதத்தில் சூலத்தை ஏந்தி கீழ் இடது கரத்தில் பாச முத்திரை காட்டி மகிஷனின் சிரசின்மேல் நின்ற கோலத்தில் இளநகை தவழ அருள்பாலிக்கும் அழகே அழகு. சிவ, விஷ்ணு சின்னங்கள் இவள் கரத்தில் ஒருசேர அமைந்து இருப்பது சிறப்பு.

    பொதுவாக ஒவ்வொரு கோயிலுக்கும் தலமரம் ஒன்றிருக்கும். சில கோயில்களில் இரண்டு மரங்களும் இருப்பதுண்டு. ஆனால், இக்கோயிலில் தலமரமாக ஐந்து மரங்கள் உள்ளன.

    பிராகாரத்தில் தெற்கே வினாயகர் திருமேனி மிகப் பெரிய அளவில் உள்ளது. வடக்குப் பிராகாரத்தில் விஷ்ணு துர்க்கையும் கிழக்கில் நாகர்கள், அய்யனார் திருமேனிகளும் அமைந்துள்ளன.

    இறைவியின் கருவறை விமானத்தைக் சுற்றி அஷ்டலட்சுமிகளின் திருமேனிகள் அலங்கரிப்பதுடன் நடுநாயகமாய் மூன்று திசைகளில் கிருஷ்ணனின் திருமேனியும் ஒருபுறம் வக்கிர காளியின் திருமேனியும் காணப்படுகின்றது.

    இந்த அமைப்பு தனது ஆலயத்தில் தன் சகோதரனான கிருஷ்ணருக்கும் துர்க்கையன்னை இடமளித்திருப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தி சிலிர்க்கச் செய்கிறது.

    பங்குனி மாத மூன்றாவது ஞாயிறு தொடங்கி மூன்று நாட்கள் துர்க்கை அன்னைக்கு மிகவும் சிறப்பாக திருவிழா நடைபெறும். தைமாதம் மிருகசீரிஷம், நட்சத்திரத்தின்போது அன்னை வீதியுலா வருவதுண்டு. அதற்கு முன்தினம் அன்னைக்கு ஏகதின லட்சார்ட்சனை நடத்துகின்றனர்.

    கன்னி பெண்களுக்கு இந்த துர்க்கை அம்மன் கண் கண்ட தெய்வமாக விளங்குவதாக சொல்கின்றனர்.

    ஏழு வாரங்கள் ராகு கால பூஜையில் கலந்து கொண்டு தேவியை வழிபடும் கன்னியர்க்கு அந்த ஏழு வாரங்களுக்குள்ளாவே திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிடுகிறதாம். அன்னையின் அருளுக்குப் பாத்திரமாகி மாங்கல்ய பாக்கியம் பெற்ற பக்தைகள் பலர் இதை சிலிர்ப்போடு கூறுகின்றனர்.

    • சரபர் வழிபாடு சத்ருக்களை அழித்திடும்.
    • சூரியன், சந்திரன் மற்றும் அக்னியே சரபரின் மூன்று கண்கள்.

    சரபேஸ்வரரை ஞாயிற்றுகிழமை ராகு கால வேளையில் (மாலை 4.30-6) வழிபடுவது விசேஷ பலனைத் தரும். சரபர் பைரவர் அம்சம்.11 நெய்தீபம் ஏற்றி வணங்குவது விஷேசம்.

    ராஜகோபுரத்தின் வாசலில் காற்று வலிமையாக வீசுவதை உணரமுடிந்தது...

    சரபேசர் : 1.சிவன் , 2. விஷ்ணு , 3. காளி(பிரத்யங்காரா தேவி), 4. துர்க்கை(சூலினி துர்க்கை) ஆகிய நான்கு மூர்த்திகளும் சேர்ந்த அம்சம்தான் சரபேசர்.

    எட்டு கால்கள், நீண்ட வால், இரண்டு சிங்க முகங்கள், இரண்டு இறக்கைகள் கொண்டு பெரும் கோபத்துடன், ஆராவாரத்துடனும் நரசிம்மத்தின் எதிரில் தோன்றி, அசுரனின் ரத்தம் குடித்து மிகச் செருக்குடன் வந்த நரசிம்மத்தின் ஆவி அடங்கும்படி செய்த, பகைவர் குலத்தை அழிக்கும் சரப மூர்த்தி.

    இரணியனது வரத்தின் படியே,அனைத்தும் கலந்த கலவையாய் நரசிம்மமாய் வந்து, இரணியனை வதம் செய்தார். அசுரனின் குருதி குடித்ததால் மதி மயங்கி ஆக்ரோஷமானார்.

    நரசிம்மத்தின் கோபம் தணிக்க வேண்டி தேவர்கள் அனைவரும் பரமனை நாட, பரமன் சரபப் பறவை உரு கொண்டு வந்து நரசிம்மத்தின் கோபம் தணித்தார்.

    பிரகலாதன் மற்றும் தேவர்களது நடுக்கத்தினை தீர்த்ததால் சிவன் நடுக்கந்தீர்த்த பெருமான் என்றானார்.

     சரபேஸ்வரர் என்ற சொல்லுக்கு எட்டு கால்களை கொண்ட பறவை, இரண்டு தலைகளை கொண்ட வடிவம் எனப் பொருள்.

    பட்சிகளின் அரசன். சிங்கத்தையே வெல்லும் ஆற்றல் கொண்டது சரபம். இத்திருவடிவம் "சிம்மக்ன மூர்த்தி", "சிம்ஹாரி", நரசிம்ம சம்ஹாரர்" என்றும் அழைக்கப்படுகின்றது.

    பறவை போன்ற பொன்னிறம், இரு இறக்கைகள், சிவப்பேறிய கண்கள் இரண்டு, கூரிய நகங்களுடன் கூடிய சிங்கத்தை போன்ற கால்கள் நான்கு. மனித உடல். கிரீடம் தரித்த சிங்க முகம். தந்தங்களை போன்ற கோரைப் பற்கள் என பயங்கர உருவமே சரபர்.

    சூரியன், சந்திரன் மற்றும் அக்னியே சரபரின் மூன்று கண்கள்.

    பிரத்யங்கரா எனும் காளியும், துர்க்கையுமே இறக்கைகள்.

    இந்திரனே நகங்கள். காலனே தொடைகள்.

    சரபர் வழிபாடு சத்ருக்களை அழித்திடும்.

    தீரா பிணிகள், குழந்தைப் பேறு, பில்லி சூனிய தொல்லைகள் போன்றவற்றிற்கு நிவர்த்தி. சரப மூல மந்திரத்தினை 100 அலது 1000 முறை ஜெபித்து, அபிஷேக ஆராதனைகள் செய்தால் வாதம், சூலை போன்ற கொடிய நோய்கள் தீரும். மலட்டுத் தன்மை நீங்கும்.

    சரப காயத்ரி மந்திரம் ஜெபிப்பது பாம்புகளிடமிருந்து காத்திடும்.

    மிக அகோரமாக எல்லா மிருகங்களும் இணைந்த உருவம் திடீரென தன் முன் தோன்றியவுடன் நரசிம்மருக்குகோபம் போய் பயம் வந்தது.

    அந்த பயத்தினால் சரபேஸ்வரை தாக்க முற்பட்டபோது, சரபோஸ்வரின் ஸ்பரிசத்தால் நரசிம்மர் நாராயணானார்.

    சுவாமி நடுக்கம் தீர்த்த பெருமான் என்ற பொருளில் கம்பகரேஸ்வரர் என்ற திருப்பெயருடனும், அம்பாள் அறம்வளர்த்தநாயகி, தர்மசம்வர்த்தினி என்ற திருப்பெயருடனும் அருள் வழங்கும் சிறப்புடையது.

    இரணியனுடைய குருதியைப் பருகிய நரசிம்மம் அறிவு திரிந்து உலகம் அனைத்தையும் அழிக்கத் தொடங்கியபோது இத்தலப் பெருமான் சரபப் பறவை உருக்கொண்டு அதன் கொடுமையை அடக்கியதால் சரபேஸ்வரர் என்ற பெயருடன் தனி மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.

    கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் திருபுவனத்தில் ஆலயம் அருமையான அமைப்புடன் அமைந்துள்ளது.

    • `து, உ, ரு, க, ஆ' என்ற எழுத்துக்களின் கூட்டு உச்சரிப்பில்தான் `துர்கா' என்ற திருநாமம் வெளிப்படுகிறது.
    • துர்க்கையை பூஜிக்க ராகு காலமே மிகச்சிறந்த நேரம் என்பது சித்தர்கள் கண்ட வழி.

    `து, உ, ரு, க, ஆ' என்ற எழுத்துக்களின் கூட்டு உச்சரிப்பில்தான் `துர்கா' என்ற திருநாமம் வெளிப்படுகிறது. துர்க்கா என்னும் திருநாமம் அசுரர்-தடங்கல் வியாதி- பாவம் மற்றும் பயத்தை போக்கிடும் சக்தி வாய்ந்த எழுத்துக் கோர்வையாகும்.

    ராகு காலம் என்பதும், எமகண்டம் என்பதும் எந்த காரியமும் செய்யக்கூடாத நேரமென்றும், அந்த நேரங்களில் மேற்கொள்ளப்படும் காரியம் வெற்றி பெறாது என்றும் நம்மிடையே ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது. எனவேதான், துர்க்கைக்கு ராகு கால பூஜை என்றதுமே பலருக்கு வியப்பாக இருக்கிறது. ஆனால் துர்க்கையை பூஜிக்க ராகு காலமே மிகச்சிறந்த நேரமென்பது சித்தர்கள் கண்ட வழி.

    மாபெரும் பிரபஞ்ச சக்தியே துர்க்கை வடிவில் விளங்குகிறது. ராகு என்பதும், கேது என்பதும்கூட மிகச்சக்தி வாய்ந்த அம்சங்கள்தான். கிரகண காலங்களில் சூரியனையும், சந்திரனையும் இவை பிடிப்பதை அறிவோம்.

    இவ்வாறு கிரகண சமயங்களில் மட்டுமின்றி, ஒவ்வொரு கிழமையும், அந்த கிழமைக்குரிய கிரகத்தை குறிப்பிட்ட சில காலம் ராகுவும், கேதுவும் பிடிக்கின்றன. இப்படி பிடிக்கும் காலங்களே தினந்தோறும் ராகு காலம் என்னும் எமகண்டம் என்றும் நிர்ணயிக்கப்படுகின்றன.

    சக்தி வாய்ந்த ராகு, மகாசக்தியான துர்க்கையைப் பூஜித்து பலன் அடைந்ததாக நமது புராணங்களில் சான்றுள்ளது. எனவே ராகு காலத்தில் நாமும் துர்க்கையை வழிபட அதற்கு கைமேல் பலன் கிட்டும்.

    சக்தியில் நல்ல சக்தி, தீயசக்தி என்ற பேதம் இல்லை. எப்படி பயன்படுத்தப்படுகிறதோ, அதைப் பொறுத்தே சக்தியானது நல்ல சக்தியாகவோ, தீய சக்தியாகவோ பரிணாமிக்கிறது.

    ஆகவேதான் ஒவ்வொரு நாளும் மகா சக்தியான துர்க்கையை அந்த நாளுக்குரிய கிரகத்தை ராகு பீடிக்கும் நேரமான ராகு காலத்தில் பூஜை செய்வோமானால் அந்த பூஜைக்கு மற்ற நேரங்களில் செய்யப்படும் பூஜையை விட, அதிக அளவு செயல்வேகம் இருக்கும்.

    மற்ற நாட்களை விட, செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் செய்யப்படும் துர்க்கை பூஜைக்கு உடனடி பலன் கிடைப்பதை சித்தர்களும் உபாசகர்களும் அனுபவப்பூர்வமாக கண்டறிந்து உள்ளனர். ஏனெனில், செவ்வாய்க்கிழமைக்குரிய அங்காரகன், துர்க்கையை மங்கள சண்டிகையாக வழிபட்டு பலன் அடைந்தவனாவான்.

    செவ்வாய்க்கிழமைக்கு மங்கள வாரம் என்பது ஒரு பெயராகும். மங்களகரமான மங்கள வாரத்தில் மஞ்சள் நிறப்பூக்களான தங்கஅரளி, சாமந்தி, நந்தியாவட்டை ஆகிய மலர்களை அர்ச்சனைக்கும், மஞ்சள் நிற வாழைப்பழம், பலாச்சுளை, மாம்பழம், மஞ்சள் வண்ண வெண்பொங்கல், எலுமிச்சை சாதம் ஆகியவற்றை நிவேதனத்துக்கும் பயன்படுத்தி துர்க்கையை பூஜிக்க வேண்டும்.

    பூஜையின்போது சொல்வதற்கு `ஸ்ரீதுர்க்கா சந்திர கலாஸ்துதி' என்ற தோத்திரமாலை அனைவருக்கும் உதவக்கூடியது.

    தமிழில் `துர்க்காஷ்டகம்' ராகு கால துர்க்காஷ்டகம், `துக்க நிவாரண அஷ்டகம்', ரோக நிவாரண அஷ்டகம் ஆகியவை ஏற்றவையாக இருக்கும். தீபத்திலோ, கடத்திலோ, சித்திரத்திலோ, யந்திரத்திலோ அல்லது இதயத்திலோ துர்க்கையை வைத்து பூஜிக்கலாம்.

    நவக்கிரகங்களில் மிக வலிமை பொருந்திய ராகு பகவான், மங்கள வார ராகு காலத்தில் துர்க்கையை பூஜித்து, மகிழ்ச்சியான முகத்துடனும், நிறைந்த தனத்துடனும் விளங்குவதால்தான் மங்கள வார ராகு காலத்தில் துர்க்கையைப் பூஜை செய்ய வேண்டுமென்று சித்தர்கள் சொல்கிறார்கள்.

    குறிப்பாக ராகு காலப் பிரீத்தி, செவ்வாய் தோஷ நிவர்த்தி, விவாகப் பிராப்தி, பீடைகள் விலகுதல், பகைகள் நீங்குதல், காரிய சித்தி ஆகிய நோக்கங்களுக்காக இப்பூஜை மேற்கொள்வது நல்லது.

    ராகு காலத்தில் திருக்கோயில்களுக்கு சென்று அங்குள்ள துர்க்காதேவியை வழிபடுவது சிறப்பு. நல்ல மஞ்சள் நிறத்துடன் கூடிய எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி இரு கிண்ணங்களாளகவும் எதிர்பபுறம் மடக்கி குழியாக்கி அவற்றை திரி விளக்குகளாக பயன்படுத்த வேண்டும்.

    சுத்தமான நல்லெண்ணை, நெய், தேங்காய் எண்ணை ஆகியவற்றைத்தான் தீபத்திற்கு பயன்படுத்த வேண்டும் ஆயுள் பலத்துக்காக செய்யப்படும் பூஜையின்போது வேண்டுமானால் இலுப்பை எண்ணையைப் பயன்படுத்தலாம்.

    ராகு காலத்தில் துர்க்கை சந்நிதியில் சுவாசினியை (முதிய சுமங்கலி பெண்களை) நமஸ்கரிக்கின்றவர்கள், எல்லா நலன்களையும் பெறுவார்கள். அங்கு சுவாசினிகளுக்கு தாம்பூலமம், தட்சிணையும் வழங்குகிறவர்கள் துர்க்கையின் அருளுக்குப் பாத்திரமாவார்கள்.

    துர்க்கை சந்நிதியில் கன்னிப் பெண்களுக்கு கால்களில் நலங்கிட்டு, கைகளில் வளையலிட்டு, பூச்சூட்டி, புத்தாடை வழங்கிய பூஜிப்பவர்கள் மற்றவர்களால் பூஜிக்க தகுந்த வாழ்க்கையை அடைவார்கள்.

    தில்லை அம்பலவாணர் (நடராஜர் சன்னதி)

    வடகிழக்கில் தெற்கு நோக்கி வெள்ளித்தேர் மற்றும் வாகன மண்டபம் அருகில் அறங்காவலர் அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது.

    அடுத்து, நடராஜர் சன்னதியில் ஆண்டுதோறும் நடராஜர் அபிஷேகம் திருவாதிரை உற்சவம்- மாணிக்கவாசகர் விழா சிறப்பு சொற்பொழிவுடன் திருவாசகம் ஓதப்பெற்று நடைபெற்று வருகிறது.

    • நவராத்திரி பூஜை தொடங்கும்போது முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும்.
    • ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.

    நவம் என்றால் ஒன்பது. ராத்ரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்கள் 10வது நாள் விஜயதசமி என்று கொண்டாட வேண்டும். இது பொதுவான விதியாக இருக்கிறது.

    நவராத்திரி பூஜை தொடங்கும்போது முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும். சில வீடுகளில் அமாவாசை அன்று மாலையே எடுத்து வைத்து விடுவார்கள். அடுத்ததாக, ஒரு பித்தளை சொம்பில் நூல் சுற்றி, மாவிலை தேங்காய் வைத்துக் கலசம் வைக்க வேண்டும்.

    நீர் ஊற்றும்போது அது புனிதத்துவம் அடைவதற்காக நதிகளை நினைத்து, கலசத்தில் உள்ள நீரில் கங்கையும் யமுனை தானும் கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்துவும் காவிரிதானும் எழுந்தருளி இறையருள் சேர்ப்பீர் என்று சொல்லிக் கொண்டே ஊற்ற வேண்டும்.

    அடுத்ததாக ஒரு தலைவாழை இலையில் அரிசியைப் பரப்பி மனைப்பலகைமேல் வைத்து அதன் மேல் கலசத்தை வைத்து தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அம்பிகை மேடையில் வைக்க வேண்டும். கொலுப்படிகளுக்கு வடக்குப் புறமாக அதாவது படிகளின் இடப்பாகம் வைத்தல் முறையாகும். இப்படி அம்மனை எழுந்தருளச் செய்து விட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.

    விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும். அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும். அதற்குரிய பொருட்களான மஞ்சள் பொடி, சந்தனம், உதிரிமலர், ஊதுவத்தி, பஞ்சுதிரி, கற்பூரம், வெல்லம், அரிசி, தயிர், தேன், குங்குமம், புஷ்பமாலை, வெற்றிலைப்பாக்கு, சாம்பிராணி, நல்லெண்ணெய், அரிசி, வாழைப்பழம், தேங்காய், பூஜைக்குரிய மணி, தாம்பாளம், கற்பூர தட்டு, பஞ்சபாத்ர உத்தரணி ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளைச் சொல்லவும்.

    ஓம் அகர முதல்வா போற்றி!

    ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!

    ஓம் ஆனை முகத்தோய் போற்றி!

    ஓம் இந்தின் இளம்பிறை போற்றி!

    ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!

    ஓம் உமையவள் மைந்தா போற்றி!

    ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!

    ஓம் எருக்கினில் இருப்பாய் போற்றி!

    ஓம் ஐங்கரனே போற்றி!

    ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி!

    ஓம் கற்பக் களிறே போற்றி!

    ஓம் பேழை வயிற்றோய் போற்றி!

    ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!

    ஓம் வெள்ளிக்கொம்பா விநாயகா போற்றி!

    ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!

    ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!

    ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

    9 நாட்களுக்குரிய போற்றி பாடல்கள் வருமாறு:

    முதல் நாளுக்குரிய போற்றி

    ஓம் பொன்னே போற்றி!

    ஓம் மெய்ப்பொருளே போற்றி!

    ஓம் போகமே போற்றி!

    ஓம் ஞானச் சுடரே போற்றி!

    ஓம் பேரின்பக் கடலே போன்றி!

    ஓம் குமாரியே போற்றி!

    ஓம் குற்றங்களைவாய் போற்றி!

    ஓம் முற்றறிவு ஒளியோய் போற்றி!

    ஓம் பேரருட்கடலே போற்றி!

    ஓம் ஆற்றல் உடையாய் போற்றி!

    ஓம் அருட்கடலே போற்றி!

    ஓம் ஆனந்த அறிவொளி போற்றி!

    ஓம் இருளகற்றுவாய் போற்றி

    ஓம் இன்பத்தின் உறைவிடமே போற்றி!

    ஓம் ஈயும் தயாபரி போற்றி!

    ஓம் மங்கள நாயகியே போற்றி!

    இப்படி அர்ச்சனை முடிக்கவும்.

    இரண்டாவது நாள் போற்றி

    ஓம் வளம் நல்குவாய் போற்றி

    ஓம் நலந்தரும் நாயகி போற்றி

    ஓம் முக்கண் மூர்த்தியே போற்றி

    ஓம் அறத்தின் வடிவோய் போற்றி

    ஓம் மின் ஒளி அம்மா போற்றி

    ஓம் எரி சுடராய் நின்ற தேவி போற்றி

    ஓம் ஏற்றத்துக்கரசி போற்றி

    ஓம் எரம்பன் தாயானவளே போற்றி

    ஓம் எங்களின் தெய்வமே போற்றி

    ஓம் ஒளிக்குள் ஒளிர்பவனே போற்றி

    ஓம் ஈரேழுலகிலிருப்பாய் போற்றி

    ஓம் சூளா மணியே போற்றி

    ஓம் சுந்தர வடிவே போற்றி

    ஓம் ஞானத்தின் வடிவே போற்றி

    ஓம் நட்புக்கரசியே போற்றி

    ஓம் திரிமூர்த்தி தேவியே போற்றி!-

    மூன்றாம் நாள் போற்றி

    ஓம் அறிவினுக்கறிவேபோற்றி

    ஓம் ஞானதீபமேபோற்றி

    ஓம் அருமறைப் பொருளேபோற்றி

    ஓம் ஆதிமூலமாய் நின்றவளேபோற்றி

    ஓம் புகழ்தரும் புண்ணியளேபோற்றி

    ஓம் நறும்பாகின் சுவையே போற்றி

    ஓம் நல்வினை நிகழ்த்துவோய் போற்றி

    ஓம் பரமனின் சக்தியேபோற்றி

    ஓம் பாபங்கள் களைவாய்போற்றி

    ஓம் அன்பெனும் முகத்தவளேபோற்றி

    ஓம் அகிலத்தின் காப்பே போற்றி

    ஓம் செம்மேனியளேபோற்றி

    ஓம் செபத்தின் விளக்கமேபோற்றி

    ஓம் தானியந் தருவாய் போற்றி

    ஓம் கல்யாணியம்மையேபோற்றி

    நான்காவது நாள் போற்றி

    ஓம் கருணை வடிவேபோற்றி

    ஓம் கற்பகத் தருவேபோற்றி

    ஓம் உள்ளத்திருள் ஒழிப்பாய்போற்றி

    ஓம் ஊழ்விணை தீர்ப்பவளேபோற்றி

    ஓம் கரும்பின் சுவையேபோற்றி

    ஓம் கார்முகில் மழையேபோற்றி

    ஓம் வீரத்திருமகளே போற்றி

    ஓம் வெற்றிக்கு வித்திடுவாய்போற்றி

    ஓம் பகைக்குப் பகையேபோற்றி

    ஓம் ஆவேசத் திருவேபோற்றி

    ஓம் தீமைக்குத் தீயேபோற்றி

    ஓம் நல்லன வளர்ப்பாய்போற்றி

    ஓம் நாரணன் தங்கையேபோற்றி

    ஓம் அற்புதக் கோலமேபோற்றி

    ஓம் ஆற்றலுள் அருளேபோற்றி

    ஓம் புகழின் காரணியேபோற்றி

    ஓம் காக்கும் கவசமேபோற்றி

    ஓம் ரோகிணி தேவியேபோற்றி

    ஐந்தாம் நாள் போற்றி

    ஓம் வீரசக்தியே போற்றி

    ஓம் திரிசூலியே போற்றி

    ஓம் கபாலியே போற்றி

    ஓம் தாளிசினியே போற்றி

    ஓம் கௌரி தேவியே போற்றி

    ஓம் உத்தமத் தாயே போற்றி

    ஓம் தர்மம் காப்பவளே போற்றி

    ஓம் உதிரத்தின் தலைவியே போற்றி

    ஓம் மெய்ஞான விதியே போற்றி

    ஓம் தாண்டவத் தாரகையே போற்றி

    ஓம் போற்றுவோர் துணையே போற்றி

    ஓம் பச்சைக் காளியே போற்றி

    ஓம் பவள நிறத்தினாய் போற்றி

    ஓம் ஆகாய ஒளியே போற்றி

    ஓம் பூதங்கள் உடையோய் போற்றி

    ஓம் காளிகாதேவி சக்தியே போற்றி

    ஆறாம் நாள் போற்றி

    ஓம் பொன்னரசியே போற்றி

    ஓம் நவமணி நாயகியே போற்றி

    ஓம் இன்னமுதாய் இருப்போய் போற்றி

    ஓம் சிங்கார நாயகியே போற்றி

    ஓம் செம்பொன் மேனியளே போற்றி

    ஓம் மங்காத ஒளியவளே போற்றி

    ஓம் சித்திகள் தருவாய் போற்றி

    ஓம் திக்கெட்டும் பரவினோய் போற்றி

    ஓம் சுத்த பரிபூரணியே போற்றி

    ஓம் மகாமந்திர உருவே போற்றி

    ஓம் மாமறையுள் பொருளே போற்றி

    ஓம் ஆநந்த முதலே போற்றி

    ஓம் ஐவர்க்கும் தலைவி போற்றி

    ஓம் செம்மேனியாய் மிளிர்வாய் போற்றி

    ஓம் மாகேஸ்வரியே போற்றி

    ஓம் மகா சண்டிகையே போற்றி

    ஏழாம் நாள் போற்றி

    ஓம் மெய்த் தவமே போற்றி

    ஓம் மூலாதாரத்து ஒளியே போற்றி

    ஓம் ஆதிமுதல் அம்பரமே போற்றி

    ஓம் அகண்ட பரிபூரணியே போற்றி

    ஓம் அகிலலோக நாயகி போற்றி

    ஓம் நல்வினை நிகழ்த்துவாய் போற்றி

    ஓம் அஞ்சலென்று அருள்வாய் போற்றி

    ஓம் ஆறுமுகன் வேல் தந்தோய் போற்றி

    ஓம் சொல்லுக்கு இனிய சுந்தரி போற்றி

    ஓம் வில்லோன் மாயை தந்தவளே போற்றி

    ஓம் ஐந்தெழுத்தோன் ஆரணங்கே போற்றி

    ஓம் எழுவரில் ஒன்றானவளே போற்றி

    ஓம் இல்லத்தொளி தரும் இறைவி போற்றி

    ஓம் ஏற்றம் தரும் ஏறே போற்றி

    ஓம் காட்சிக்கு இனியவளே போற்றி

    ஓம் சாம்பவி மாதே போற்றி

    எட்டாம் நாள் போற்றி

    ஓம் வேத மெய்பொருளே போற்றி

    ஓம் மேனிக் கருங்குயிலே போற்றி

    ஓம் அண்டர் போற்றும் அருட் பொருளே போற்றி

    ஓம் எண்திசை ஈஸ்வரியே போற்றி

    ஓம் எங்கும் நிறைந்தவளே போற்றி

    ஓம் மாயோனின் மனம் நிறைந்தவனே போற்றி

    ஓம் தூய ஒளியாய் தெரிபவளே போற்றி

    ஓம் சிங்க வாகினித் தேவியே போற்றி

    ஓம் அங்கமெலாம் காக்கும் ஆதரவே போற்றி

    ஓம் சூலத்தில் சத்தியம் காப்பாய் போற்றி

    ஓம் துன்பம் துடைக்கும் தூமணி போற்றி

    ஓம் எதிரிகள் விரட்டும் ஏந்தலாய் போற்றி

    ஓம் கடுவிஷம் இறக்கும் மருந்தே போற்றி

    ஓம் காப்பதில் நிகரிலாத் தெய்வமே போற்றி

    ஓம் கற்பகமாய் எம்முன் தோன்றுவாய் போற்றி

    ஓம் ஜம்தும் துர்க்கா தேவியே போற்றி! போற்றி!!

    ஒன்பதாம் நாள் போற்றி

    ஓம் ஓங்காரத்துப் பொருளே போற்றி

    ஓம் ஊனாகி நின்ற உத்தமியே போற்றி

    ஓம் படைத்தோன் பாகம் பிரியாய் போற்றி

    ஓம் அடியவர்க்கு மங்களம் அருள்வாய் போற்றி

    ஓம் முக்கோணத்துள் உள்ள மூர்த்தமே போற்றி

    ஓம் ரீங்காரம் தன்னில் இருப்பவளே போற்றி

    ஓம் நாற்பத்து முக்கோண நாயகியே போற்றி

    ஓம் சொற்பொருள் சுவைதனைத் தந்தாய் போற்றி

    ஓம் ஆறாது தத்துவம் அருளினாய் போற்றி

    ஓம் பளிங்கு ஒளியாய் நின்ற பரமே போற்றி

    ஓம் ஓசை விந்துநாத உட்பொருளாய் போற்றி

    ஓம் அகண்ட பூரணி அம்மா போற்றி

    ஓம் உண்ணும் சிவயோக உத்தமியே போற்றி

    ஓம் பண் மறைவேதப் பாசறையே போற்றி

    ஓம் மாகேஸ்வரியே மங்கள உருவே போற்றி

    ஓம் சாம்பவி சங்கரித் தேவியே போற்றி! போற்றி!!

    • சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள்வேண்டும்.
    • பெரிய பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்களுக்கு இவளின் அருட்பார்வை வேண்டும்.

    முதலாம் நாள்: சக்தித்தாயை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோபக்காரி. நீதியைக்காக்கவே இவள் கோபமாக உள்ளாள்.

    முதல்நாள் நெய்வேத்தியம் :-சர்க்கரைப் பொங்கல்.

    இரண்டாம் நாள்: இரண்டாம் நாளில் அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும். வராஹ(பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகும். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள். இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள்.

    இரண்டாம் நாள் நெய்வேத்தியம் :- தயிர்ச்சாதம்.

    மூன்றாம் நாள்: மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திராணியாக வழிபடவேண்டும். இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள். தேவலோகத்தை பரிபாலனம் செய்பவளும் இவளேயாகும். பெரிய பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்களுக்கு இவளின் அருட்பார்வை வேண்டும்.

    மூன்றாம் நாள் நெய்வேத்தியம்:- வெண்பொங்கல்.

    நான்காம் நாள்:-சக்தித்தாயை அன்று வைஷ்ணவி தேவியாக வழிபடவேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன். நான்காம் நாள் நெய்வேத்தியம்:- எலுமிச்சை சாதம்.

    ஐந்தாம் நாள்: ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும். அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள். திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள். அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.

    ஐந்தாம் நாள் நெய்வேத்தியம்:- புளியோதரை.

    ஆறாம் நாள்: அன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கிடுபவள். வீரத்தை தருபவள்.

    ஆறாம் நாள் நெய்வேத்தியம்:- தேங்காய்ச்சாதம்.

    ஏழாம் நாள்: ஏழாம்நாள் அன்னையை மகாலட்சுமியாக வழிபடவேண்டும். கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். வீஷ்ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள் அன்னையாகும்.

    ஏழாம் நாள் நெய்வேத்தியம்:- கற்கண்டுச் சாதம்.

    எட்டாம் நாள்: அன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள்வேண்டும்.

    எட்டாம் நாள் நெய்வேத்தியம்:- சர்க்கரைப் பொங்கல்.

    ஒன்பதாம் நாள்: அன்று அன்னையை ப்ராஹ்மி ஆக வழிபடவேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞானசொரூபமானவள். கல்விச்செல்வம் பெற அன்னையின் அருள் அவசியமாகும்.

    ஒன்பதாம் நாள் நெய்வேத்தியம்:- அக்கர வடசல், சுண்டல்

    இப்படி நாம் அனைவரும் மகிழ்வாக நவராத்திரிப் பண்டிகை கொண்டாடுவதற்கு பின்னணியில் ஒரு புராணக்கதை உள்ளது. அசுரர்களை அழிக்க அம்பிகை அவதரித்ததும், தேவர்கள் அனைவரும் தங்களுடைய ஆயுதங்களைத் தேவியிடம் ஒப்படைத்துவிட்டனர். அம்பாளான பராசக்தி அசுரர்களுடன் சண்டையிட்ட பொழுது தேவர்கள் பொம்மை மாதிரி நின்று கொண்டிருந்ததைக் காட்டத்தான் பொம்மை கொலு வைப்பதாக ஐதிகம்.

    அழகு, அன்பு, ஆற்றல், அருள், அறிவு ஆகியவற்றைப் பெண் வடிவமாகக் கருதுவது நமது மரபு. கல்லையும் பெண்ணுருவாக்கி வழிபடுவது நமது கலாசாரம். இவை இப்படி இருக்க பெண் என்றால் பலவீனம் என்று நினைத்து சுய அழிவைத் தேடிக் கொண்ட மகிஷாசுரனின் கதை தான் நவராத்திரி விழாவின் தொடக்கம்.

    மகிஷாசுரன் என்ற அசுரனுக்கு தேவர்களை அடிமை படுத்தும் விபரீத ஆசை ஏற்பட்டது. படைக்கும் கடவுளான பிரம்மாவை நோக்கி கடுந்தவம் செய்தான் மகிஷன். பிரம்மன், மனம் நெகிழ்ந்து அருள் பாலிக்க அசுரன் முன் தோன்றினார். சாகாவரம் வேண்டும் என்று அசுரன் கேட்டதும் "படைக்கும் தொழிலில் அது சாத்தியமல்ல; பிறப்பவன் இறப்பதும், இறப்பவன் பிறப்பதும்தான் காலச் சக்கரத்தின் சுழற்சி. கேட்கும் வரத்தை மாற்றிக்கொள்" என்று பிரம்மா கூற. அறிவிலி அசுரன் கர்வத்தால் தீர யோசிக்க மறந்தான்.

    "தேவர்களை வென்றுவிட்டால் எல்லோரும் தனக்கு அடிமையாகி விடுவார்கள்" என்ற மமதையில் தனது சாவு ஒரு பெண்ணால்தான் ஏற்பட வேண்டும் என்று வேண்டினான். பெண் என்றால் பலவீனத்தின் சின்னம் என நினைத்த மகிஷன் சக்தியின் மகிமையை அறிய வில்லை. வரம் கிடைத்தவுடன் மகிஷனின் அட்டகாசம் மூவுலகிலும் இடியென முழங்கியது. அராஜகம் தலை தூக்கியது. தர்மம் அழிந்தது. மக்கள் அவல நிலைக்கு ஆளாகி துன்புற்றனர். ஈசனை வேண்டினர். தனது நெற்றிக் கண்ணைத் திறந்து அதிலிருந்து வெளிப்பட்ட நெருப்புப் பொறியிலிருந்து சர்வ சக்தியாம் துர்க்கையைத் தோற்றுவித்தார் பரமேஸ்வரன்.

    சிம்ம வாகனத்தில் ஆயிரம் ஆயுதங்களை ஏந்தி சாமுண்டியாகப் புறப்பட்டாள் ஆதிசக்தி. ஒன்பது நாட்கள் அசுரனுடன் போரிட்டு பத்தாம் நாளில் எருமை வடிவிலிருந்த மகிஷனை துவம்சம் செய்தாள் பராசக்தி. அதர்மம் அழிந்ததைக் கண்டதேவர்கள் தேவிக்கு மலர் மாரி பொழிந்தனர். எல்லோருடைய பயங்களையும் போக்கி அபயம் தந்து அசுரர்களை அழித்து ஜெயத்தை அடைந்த அம்பிகை அவதரித்தது இந்த நவராத்திரி ஆரம்ப நாளில்தான். சக்தியாக தோன்றிய அம்பாள் அசுரர்களை அழித்துவிட்டு சிவனுடன் ஐக்கியமாகி சிவசக்தி சொரூபிணியாகக் காட்சி அளித்தது விஜயதசமி அன்றுதான்.

    • கும்பம் (கலசம்)வைத்து அதில் ஆதி பராசக்தியை ஆவாகணம் செய்து வழிபடுவது வழக்கம்.
    • வீடுகளிலும் பாடசாலைகளிலும் 9 நாட்கள் மட்டுமே இவ்விழா கொண்டாடப்பெறுகின்றது. சில இடங்களில் 10 நாளும் பூஜைகள் செய்வார்கள்.

    தனம் தரும் கல்விதரும் ஒரு நாளும் தளர்வறியா

    மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா

    இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே

    கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே

    அம்பிகையின் அருளை பெறுவதற்கு பல விரதங்கள் அனுஷ்டிக்கப்பெற்றாலும் அவற்றுள் நவராத்திரி விரதமே மிகவும் சிறப்பானது என ஆகம நூல்கள் கூறுகின்றன.

    முக்குணங்களுக்கும் மூலமான சர்வலோக நாயகி தமோ குண சஞ்சாரியாநன ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியாகவும், ராஜோ குண சொரூபியான ஸ்ரீ மகாலட்சுமியாகவும், சாத்வீகக் குண சொரூபியான ஸ்ரீ சரஸ்வதியாகவும், மூன்று அம்சமாக எமக்கு தோற்றமளிப்பதுடன் அந்த மூன்று அம்சங்களும் மேலும் பல அம்சங்களாக தோற்றமளிக்கின்றன.

    துர்க்கையின் அம்சங்களாக (நவதுர்க்கை): வன துர்க்கை, சூலினி துர்க்கை , ஜாதவே தோதுர்க்கை, ஜ்வாலா துர்க்கை, சாந்தி துர்க்கை சபரி துர்க்கை, தீப் துர்க்கை, சூரி துர்க்கை லவண துர்க்கை ஆகியனவும்;

    சரஸ்வதி அம்சங்களாகளாக (அஷ்ட சரஸ்வதி): வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகியனவும்;

    இலக்குமியின் அமசங்களாக (அஷ்ட இலட்சுமி): ஆதி லட்சுமி, மாக இலட்சுமி, தன இலட்சுமி, தானிய இலட்சுமி , சந்தான இலட்சுமி, வீர இலட்சுமி, விஜய இலட்சுமி , கஜ இலட்சுமி ஆகிய சக்தி அம்சங்களாக எமக்கு தோற்றமளிக்கின்றன.

    நவராத்திரி நோன்பு (விரதம்) புரட்டாதி மாதத்தில் நவக்கிரகங்களில் நாயகமாக உள்ள சூரியன், கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலம் தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். கன்னி ராசிக்கு அதிபதியானவன் புதன். வித்யாகாரகன் எனப்படுபவன். கல்வி, புத்தி, தொழில் ஸ்தானம் சரியாக அமைய புதனின் பார்வை முக்கியமானது என்பார். இந்தக் காலத்தில் நவராத்திரி கொண்டாடுவது சாலச்சிறந்தது என்று கருதி வந்துள்ளனர்.

    உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயன காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாதி மாதத்தில் நோற்கப்படும் (அனுஷ்டிக்கப்படும்) சாரதா நவராத்திரியையே நாம் எல்லோரும் கைக்கொள்ளுகின்றோம்.

    நவராத்திரி பூஜை புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்ய வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றது. ஆகவே புரட்டாதி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் கைக்கொள்ளப்படும் (அனுஷ்டிக்கப்படும் ) நோன்பு (விரதம்) சாரதா நவராத்திரி நோன்பாகும்.

    ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் 9 நாட்கள் அன்னை பராசக்தியை வீடுகளிலும், பாடசாலைகளிலும், ஆலயங்களிலும் பூஜை செய்து வழிபடும் சாரதா நவராத்திரி விழா இவ்வாண்டு ஒக்ரோபர் மாதம் திகதி சனிக்கிழமை (இலங்கை) தெற்காசிய நாடுகளிலும்; வெள்ளிக்கிழமை (கனடா) வட-அமெரிக்க நாடுகளிலும் ஆரம்பமாகின்றது.

    முக்குணங்களுக்கும் மூலமான சர்வ லோக நாயகியை ஒன்பது நாள்களும் பூஜிக்கும்போது, முதல் மூன்று நாள்கள் தமோ குண சஞ்சாரியான ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியை வீரத்தையும், தைரியத்தையும் (ஒருநாளும் தளர்வு அறியா மனம்) வேண்டியும், அடுத்த மூன்று நாள்கள் ராஜோ குண சொரூபியான ஸ்ரீ மகாலட்சுமியை சகல செல்வங்களையும் (தனம்) வேண்டியும், கடைசி மூன்று நாள்கள் சாத்வீகக் குண சொரூபியான ஸ்ரீ சரஸ்வதியை கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் (ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்) என்பவற்றை வேண்டியும் வணங்குகின்றோம்.

    இப் புண்ணியகாலமானது ஒன்பது தினங்களைக் கொண்டது. அதனாலேயே நவராத்திரி என்னும் நாமம் பெற்று விளங்குகின்றது, அந்த ஒன்பது நாட்களிலும் லோகமாதாவாகிய பராசக்தியை (அம்பிகையை) ஒன்பது வடிவங்களில் பூஜிக்கப்பெறுகின்றாள்.

    அலைமகள், மலைமகள், கலைமகள் என முப்பெரும் தேவியரையும் துதித்து வழிபட்டு. இவ்வுலக வாழ்கை சிறப்பாக அமைய முக்கியமான கல்வி, செல்வம், வெற்றி (வீரம்) எம்பவற்றை இறைவியிடம் வேண்டி இந்துக்கள் இப் புனித நவராத்திரி விழாவை விரதம் அனுஷ்டித்து கொண்டாடுகின்றனர். ஒரு மனிதனிற்கு உடல்வலிமை, பராக்கிரம், மனோதிடம், புத்திபலம், தீர்க்காயுள், ஞானம், தேவைகளுக்கு பணம் போன்ற அனைத்து அம்சமும் நிறைந்திருந்தால் தான் அவன் சிறந்த வெற்றியாளனாக திகழ முடியும்.

    அதாவது வீரம், செல்வம், கல்வி ஆகியவை அனைத்தும் நிறைந்திருக்க வேண்டுமாயின். அவற்றை அருளும் நவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என ஆகம நூல்கள் கூறுகின்றன. வாழ்க்கையின் எல்லா தேவைகளையும் அடைய பணம், பொருள் வேண்டும். இதற்காக மகாலட்சுமி தேவியை வணங்குகிறோம். பெற்ற பணத்தை பாதுகாக்க மன வலிமை வேண்டும் அதற்காக துர்க்கா தேவியை வழிபடுகிறோம். பெற்று பாதுகாக்கப்பட்ட பணத்தை நல்வழியில் பயனள்ள காரியங்களிற்கு பயன்படுத்த அறிவு அதாவது கல்வியறிவு வேண்டும். அதற்கு சரசுவதித் தாயை வணங்குகிறோம்.

    இந்நவராத்திரி விழாவின்போது ஆலயங்களிலும், பாடசாலைகளிலும், பணிபுரியும் அலுவகங்களிலும், தொழிற்சாலைகளிலும் இல்லங்களிலும் கும்பம் (கலசம்)வைத்து அதில் ஆதி பராசக்தியை ஆவாகணம் செய்து வழிபடுவது வழக்கம். அத்துடன் கும்பத்தை மையப்படுத்தி கொலுவைத்தும் வழிபடுவார்கள். கொலு வைக்கும் வழக்கம் இந்தியாவில் பிரபலமானது. இவ் வழக்கம் தற்பொழுது இலங்கையிலும் பின்பற்றப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

    இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய, முக்குணங்களுக்கும் மூலமான சர்வ லோக நாயகியாகிய அம்பிகையை ஒன்பது நாள்களும் பூஜிக்கும்போது, முதல் மூன்று நாள்கள் தமோ குண சஞ்சாரியான ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியாக வெற்றியையும் (வீரத்தையும், தைரியத்தையும் ஒருநாளும் தளர்வு அறியா மனம்) வேண்டியும், அடுத்த மூன்று நாள்கள் ராஜோ குண சொரூபியான ஸ்ரீ மகாலட்சுமியாக சகல செல்வங்களையும் (தனம்) வேண்டியும், கடைசி மூன்று நாள்கள் சாத்வீகக் குண சொரூபியான ஸ்ரீ சரஸ்வதிதேவியாக கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் (ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்) என்பவற்றை வேண்டியும் வணங்குகின்றோம்.

    வீடுகளிலும் பாடசாலைகளிலும் 9 நாட்கள் மட்டுமே இவ்விழா கொண்டாடப்பெறுகின்றது. சில இடங்களில் 10 நாளும் பூஜைகள் செய்வார்கள். ஒன்பது நாட்களும் வண்ணக் கோலங்கள் போட வேண்டும். இந்த ஒன்பது நாளும் அம்பாள் ஒன்பது வகையான கோலத்துடன் காட்சியளிக்கிறாள் என்பது ஐதிகம்.

    முதல் தினத்தில் தேவி மூன்று வயதுள்ள பாலையாகவும், இரண்டாவது தினத்தில் ஒன்பது வயதுள்ள குமாரிகை என்ற நவாக்ஷரீ ஸ்வரூபிணியாகவும், மூன்றாவது தினத்தில் பஞ்சதசாக்ஷரீ ஸ்வரூபிணியாகவும், நான்காவது தினத்தில் பதினாறு வயதுள்ள ஸ்திரீயாக ஷோடசாக்ஷரீ ஸ்வரூபிணியாகவும், ஐந்தாவது தினத்தில் சதாக்ஷீ என்ற பெயருடன் மாத்ருகா வர்ணஸ்வரூபிணியாகவும், ஆறாவது தினத்தில் சாகம்பரீ என்ற பெயருடன் ஸ்ரீவித்யாபீஜாக்ஷர ரூபிணியாகவும், ஏழாவது தினத்தில் துர்க்கமாஸ§ரனைக் கொன்ற மஹாதுர்க்கையாகவும், எட்டாவது தினத்தில் மஹிஷாசுரனைக் கொன்ற மஹாலக்ஷ்மி ஸ்வரூபிணியாகவும், ஒன்பதாவது தினத்தில் சும்பன் நிசும்பன் என்ற இரு அசுரர்களைக் கொன்று ஜகத்தை காத்த மகாசரஸ்வதியாகவும் அம்பாள் விளங்கி வருகிறாள் என்பது ஐதீகம்.

    கொலுவைத்து ஒன்பது நாள் பூஜை செய்து வீட்டுக்கு வரும் அனைவருக்கும் தாம்பூலம், தட்சணை, நைவேதியப் பொருள் கொடுக்க வேண்டும். ஒன்பது நாளும் பூஜை செய்ய இயலாதவர்கள் கடைசி மூன்று நாட்களான சப்தமி, அஷ்டமி, நவமி தினங்களில் பூஜை செய்யலாம். இதுவும் செய்ய முடியாதவர்கள் அஷ்டமி நவமியில் பூஜை செய்து விஜய தசமியில் முடிக்கலாம்.

    ஒன்பதாவது நாள் ஆயுத பூசை என அழைக்கப்பெறும் சிறப்புப் பூசை நிகழ்த்தப்பெறும். கல்விக்கான சரஸ்வதி பூஜையன்று புத்தகங்கள், இசை கருவிகள், தொழில் செய்யும் கருவிகள் எல்லாம் பூஜையில் வைக்க வேண்டும். மறுநாள் விஜய தசமியன்று பூஜை செய்து படிக்கவேண்டும். அவரவர் சங்கீதம் தொழில் குருவைக் கண்டு தொழுது குருதட்சணை கொடுத்து வணங்க வேண்டும்.

    புதிய தொழில் தொடங்க உகந்த நாள் விஜயதசமி நன்னாளாகும். இரவு பால் நிவேதனம் செய்து பொம்மைகளைப் படுக்க வைக்க வேண்டும். மறுநாள் பூஜையிலிருந்து கொலு பொம்மைகளை எடுத்து அடுத்த வருடத்துக்காக அம்பாளை வரவேற்க தயாராக வேண்டும். அன்றைய தினம் பாடசாலைகளில் பாலகர்களுக்கு வித்யாரம்பம் செய்து வைக்கப்பெறும்.

    10வது தினமான திகதி விஜயதசமி ஆலயங்களில் வெற்றித்தினமாக கொண்டாடப்பெறுகின்றது. விஜயதசமி தினம் என்பது அம்பிகை; தவ வலிமையினால் பிரமதேவனிடம் பெற்ற வரத்தினால் அகங்காரம் கொண்டு தேவர்களையும், முனிவர்களையும் சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தி வந்த மகிஷாசுரனை "சண்டிகா தேவியாக" (துர்க்கா தேவி, காளிதேவி எனக் கூறுவாரும் உளர்) அவதாரம் எடுத்து சங்காரம் செய்த வெற்றித் திருநாளாக கொண்டாடப்பெறுகின்றது. துன்பத்தை - அசுரர்களை துர்க்கையானவள் வீழ்த்தி வெற்றிபெறும் நாளே விஜயதசமி (விஜயம்-வெற்றி+தசம்- 10) என்று அழைக்கப்படுகிறது.

    வேறு விதமாக கூறுவதாயின் அம்பிகை உயிர்களிடத்தே காணப்படும் அசுரத்தன்மைகளை அழிக்க சண்டிகாதேவியாக, துர்க்காதேவியாக அல்லது காளி தேவியாகத் தோன்றி அவற்றை சங்காரம் செய்கின்றாள் எனலாம். இவ் வெற்றித் திருநாள் சைவ பெருமக்ககளால் அம்பிகை ஆலயங்களில் (தற்போது எல்லா ஆல்யங்களிலும்) "மானம்பூ விழா" அல்லது "வன்னிவாழை வெட்டு" விழாவாக கொண்டாடப் பெற்றுவருகின்றது. வன்னிமரக் கிளைகள் குத்தப் பெற்ற கன்னிவாழையை மகிஷாசுரன் ஆக ஆவாகணம் செய்து அதனை வெட்டி விழுத்துவதன் மூலம் மகிஷாசுரனைச் சங்கரித்தல் நிகழ்வு நடைபெற்று அதன் வெற்றியை வெற்றித் திருநாளாக கொண்டாடுதலே மானம்பு அல்லது கன்னிவாழை வெட்டுவிழாவாகும். பணிப்புலம் முத்துமாரி அம்பிகை, காலையடி ஞான வேலாயுதர் ஆலயம் சென்று அங்கு வன்னிவாழை வெட்டு விழா நடைபெறுகின்றது.

    இலங்கையிலும், தமிழகத்திலும் சரஸ்வதி பூஜை எனவும், இந்தியாவில் வட மாநிலங்களில் துர்கா பூஜை எனவும், கர்நாடகத்தில் தசரா பண்டிகையாகவும் இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்பெறுகின்றன.

    இந்தியாவில் கொல்கத்தா போன்ற வட மாநிலங்களில் முக்கிய நகரங்களில் இந்தப் பண்டிகை துர்கா பூஜையாகக் கொண்டாடப்படுகிறது. 9 நாட்கள் சாந்தரூபியாக தவம் மேற்கொண்டு வீற்றிருக்கும் தேவியானவள், 10ஆம் நாளின் (தசரா) விசுவரூபியாக அசுர பலத்துடன் ஆக்ரோஷமாக உருவெடுத்து, மகிஷாசுரனை வதம் செய்து மக்களுக்கு மகிழ்ச்சி நல்கும் ஆனந்த ரூபியாக காட்சியளிப்பதையே இந்த 10 நாட்கள் விழா குறிக்கிறது.

    வீடுகளில் பெண்கள் கொலுவைத்து தங்களின் விரதத்தைத் தொடங்குகின்றனர். உறவினர்களையும், அண்டை வீட்டில் உள்ள பெண்களையும் வரவழைத்து, தேவியர் பெருமைகளை உணர்த்தும் பாடல்களை பாடி சிறப்பு பூஜைகள் செய்து, பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு தாம்பூலம் வழங்கி இவ் விரதத்தை கொண்டாடுவது வழக்கமாகும்.

    தங்கள் வீடுகளில் கல்வி, செல்வம், வீரம் தழைக்க வேண்டியும், கணவன் உள்ளிட்ட குடும்பத்தில் உள்ள அனைவரின் நலம் போற்றியும் கொலு வைக்கும் பெண்கள், மற்றவர்களுக்கு தாம்பூலம், பிரசாதங்களை வழங்குகிறார்கள். நவராத்திரி விரதமிருப்போர் வீடுகளுக்குச் சென்று தாம்பூலம் வாங்குவோரின் இல்லங்களிலும் தேவி குடிகொண்டிருப்பாள் என்பது ஐதீகம் என்பதால், ஒருவருகொருவர் உறவினர், நண்பர்களின் வீடுகளுக்கு பரஸ்பரம் சென்று பூஜைகளில் பங்கேற்று தாம்பூலம் பெற்று வருவதே இவ் விரதத்தின் சிறப்பம்சமாகும்.

    நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும்.

    ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களிற்கு சகல நலங்களும் கிடைக்கும் என்பது சைவமக்களின் நம்பிக்கை.

    • 9 நாட்களிலும் இரவு நேரத்தில் துர்கையை வழிபடுகின்றனர்.
    • விரதம் மேற்கொள்ளும் போது மனிதர்களின் தீய குணங்களை மனதில் இருந்து நீக்கி விட வேண்டும்.

    பெண் கடவுள்களின் நவராத்திரி விரதம் பெண் தெய்வங்கள் 9 இரவுகள் கடுமையான விரதம் இருந்து அசுரர்களை வதம் செய்தனர். அனைத்து பெண் தெய்வங்களும் இணைந்து வதம் செய்வதற்காக உருவாக்கபட்டவரே பரலக்ஷ்மி. இந்த பரலக்ஷ்மியைதான் ராதா என்று அழைக்கிறார்கள்.

    பரலக்ஷ்மி என்பதில் பரா என்றால் சுப்பீரிம் என்று பொருள்படும். ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மற்றும் அக்டோம்பர் மாதங்களில் நமது தேவியர்களின் வம்சாவளியை போற்றும் விதமாக நவராத்திரிவிழா கொண்டாடபட்டு வருகிறது. இந்த 9 நாட்களிலும் இரவு நேரத்தில் துர்கையை வழிபடுகின்றனர்.

    இந்த வழிபாட்டில் அலைமகள், மலைமகள், கலைமகள் ஆகிய மூவரின் முன்னிலையில் தான் 9 நாட்களிலும் விரதம் மேற்கொள்கின்றனர். விரதம் மேற்கொள்ளும் போது மனிதர்களின் தீய குணங்களான வெறுப்பு, பொறாமை, அறியாமை, பேராசை, போன்ற அனைத்து குணங்களையும் மனதில் இருந்து நீக்கி விட வேண்டும்.

    9ம் நாள் தான் அசுரர்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது தெய்வங்களின் ஜோதிட முறைப்படி ஆண்டு தோறும் நடைபெறுகின்றது. நவராத்திரி பூஜை மாங்கல்யம் ஆனவர்களால் கொண்டாடபடுகிறது. அதன் பின்பு நிலா வளம் வருகிறது.

    • பகலில் உழைக்கும் உயிரினங்களை இரவில் அம்பாள் தன் மடியில் கிடத்தி தாலாட்டி உறங்க செய்கிறாள்.
    • கல்வி, இசை, புகழ்செல்வம்தானியம், வெற்றி, தண்ணீர் ஆகிய அனைத்தையும் சக்தியே தருகிறாள்.

    நவராத்திரி விரதம் பிறந்த கதைநவராத்திரி விழா ஆண்டு தோறும் புதுப்புது மாற்றங்களுடன் கொண்டாடப்படும் விழாக்களுள் ஒன்று. நவம் என்ற சொல்லுக்கு ஒன்பது என்றும் புதியது என்றும் பொருள். மகிஷாசூரனை அழிப்பதற்காக அம்மன் ஒன்பது நாள் போர் செய்து பத்தாம் நாள் வெற்றி பெறுகிறாள். மகிஷம் என்றால் எருமை.

    இது சோம்பல் மற்றும் அறியாமையின் சின்னமாகும். அறியாமையை அழித்த அம்பிகைக்கு புரட்டாசி மாதம் பிரதமை திதியிலிருந்து ஒன்பது நாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் நம்மை சூழ்ந்துள்ள அறியாமை என்னும் இருள் விலக அம்பிகையை இரவு நேரத்தில் பூஜை செய்கிறோம்.இருள் விலகி ஒளி பிறந்த பத்தாம் நாள் விஜயதசமி கொண்டாடுகிறோம்.

    ஒரு நாளில் பகல் என்பது சிவனின் அம்சமாகவும் இரவு என்பது அம்பிகையின் அம்சமாகவும் கருதப்படுகிறது.பகலும் இரவும் இல்லாவிட்டால் நாள் என்பது கிடையாது. பகலில் உழைக்கும் உயிரினங்களை இரவில் அம்பாள் தன் மடியில் கிடத்தி தாலாட்டி உறங்க செய்கிறாள்.

    இரவெல்லாம் விழித்திருந்து உலகை காக்கும் அம்பிகைக்காக ஒன்பது நாள் இரவு மட்டும் திருவிழா கொண்டாடப்படுகிறது என்பர். இதன் பின்னணியில் உள்ள கதை வருமாறு:-

    சும்பன், நிசும்பன் என்ற அசுரர்கள் பிரம்மனின் அருளால் சாகாவரம்பெற்றனர். இருந்தாலும் தங்களுக்கு சமமான பெண்ணால் மட்டுமே எங்களுக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரத்தை பெற்றிருந்தனர். எனவே தேவர்களை ஜெயித்தும் அதர்மங்களை விளைவித்தும் வந்தனர்.

    அவர்களது அழிவு காலத்தில் ஆதிபராசக்தியிடமிருந்து கவுசிகியும், காளிகா என்ற காலராத்திரியும் தோன்றினர். காளிகாவுக்கு துணையாக முப்பெரும்தேவியின் வடிவான அஷ்டமாதர்களும் அஷ்ராத்திரிகளாக தோன்றினர்.

    பிராம்மணி என்ற பிரம்ம சக்தி அன்ன வாகனத்தில் அட்சமாலை, கமண்டலத்துடனும் வைஷ்ணவி என்ற விஷ்ணுசக்தி கருட வாகனத்தில் சங்கு சக்கரம் கதை தாமரைப்பூவுடனும் மகேஸ்வரி என்ற சிவனின் சக்தி ரிஷப வாகனத்தில் திரிசூலம் மற்றும் வரமுத்திரையுடனும் கவுமாரி என்ற கார்த்திகேய சக்தி மநர வாகனத்தில் வேலாயுதத்துடனும் மாகேந்திரி என்ற இந்திரனின் சக்தி ஐராவதத்தில் வஜ்ராயதத்துவம் வாராஹி என்ற வாராஹிருடைய சக்தி எருமை வாகனத்தில் கலப்பையுடனும் சாமுண்டா என்ற பைரவரின் சக்தி எம வாகனத்தில் கத்தியை ஏந்தியவளாகவும் நரசிம்மஹி என்ற நரசிம்மரின் சக்தி கூரிய நகத்தை ஆயுதமாகவும் கொண்டு கமல பீடத்தில் தோன்றினார்கள்.

    இவர்கள் காளிகா என்ற சண்டிகா தேவியுடன் ஒன்பது ராத்திரிகளாயினர் இந்த நவராத்திரி தேவதைகள் சும்ப நிசும்பர்களை ஒழித்தனர். அசுரர்களின் கொடுமையில் இருந்து விடுபட்ட தேவர்கள் கவுசிகியான அம்பிகையையும், நவராத்திரி தேவதைகளையும் போற்றி துதித்தனர். இந்த வைபவம் நவராத்திரிஎனப்படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் அனைத்திற்கும் மூலமாக இருப்பவள் தேவியே.

    பரம சுகத்தையும், நீண்ட ஆயுளையும், சுபிட்சம் பெற வகை செய்யும் அனைத்துச் செல்வங்களையும் அருள் பவள் அவளே. முத்தொழில் புரியும் மும் மூர்த்திகளும் வணங்கும் பரம் பொருள் பராசக்தியே. தினமும் அம்பிகையை வணங்கினாலும் புரட்டாசியில் வரும் நவராத்திரியில் வணங்குவது மிகுந்த பலனை அளிக்கும். புரட்டாசி மாதப் பிரதமை முதல் நவமி வரை நவராத்திரி காலமாகும்.

    அதில் முக்குணங்களுக்கும் மூலமான சர்வ லோக நாயகியை ஒன்பது நாள்களும் பூஜிக்கும் போது, முதல் மூன்று நாள்கள் துர்கா பரமேஸ்வரியையும் அடுத்த மூன்று நாள்கள் மகாலட்சுமியையுஞம், கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதியையும் வணங்கவேண்டும். வணங்குவதால் எதையும் பெறலாம். கல்வி, இசை, புகழ்செல்வம்தானியம், வெற்றி, தண்ணீர் ஆகிய அனைத்தையும் சக்தியே தருகிறாள்.

    ஆதிபராசக்தியை துர்க்கையாக நினைத்து வழிபட்டால் பயம் நீங்கும்.லட்சுமி வடிவில் தரிசித்தால் செல்வம் பெருகும். சரஸ்வதியாக எண்ணி வணங்கினால் கல்விச்செல்வம் சிறக்கும். பார்வதியாக வழிபட்டால் ஞானப்பெருக்கு உண்டாகும். எனவே தான் இந்நாட்களில் கொலுவும் வைக்கிறார்கள். தேவியை நடுவில் வைத்து, இந்த உலகப்பொருட்களை எல்லாம் சுற்றிலும் வைக்கிறார்கள்.

    இதற்கு காரணம், தேவியால் தான் இந்த உலகம் இயங்குகிறது என்பதைக் காட்டுவதற்காக. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் ருத்திரன், சதாசிவன் ஆகிய சிவனின் மற்ற வடிவங்களும் சரஸ்வதி,லட்சுமி, பார்வதி, மகேஸ்வரி, மனோன்மனி ஆகிய சக்திகளுக்குள் அடக்கமாக உள்ளனர். எனவே சக்தியை வழிபட்டாலே அனைத்து தெய்வங்களையும் வழிபட்டதாக அர்த்தம்.

    ×