search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ranjith"

    • அயோத்தி ராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
    • ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நேரலையை திருப்பூரில் இந்து முன்னணி ஏற்பாடு செய்திருந்தது.

    உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்று வரும் இந்த விழா நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நேரலையை திருப்பூரில் இந்து முன்னணி ஏற்பாடு செய்திருந்தது. அதில் கலந்து கொண்ட நடிகர் ரஞ்சித் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-


    இன்றைய தினம் பெருமை வாய்ந்த தினம். அனைவரும் எதிர்பார்த்த அற்புதமான நாள். இதில் கலந்து கொண்டது பெருமையாக உள்ளது. இது நம் பூமி. அதை ஒத்துக்கொள்ள வேண்டும்.மின்சாரம் துண்டிப்பு பிரச்சனை எல்லாம் தேவையற்றது. கண்டிக்கத்தக்கது. இறக்குமதி செய்யப்பட்ட சாமி இல்லை. இது என் தாய் உணர்வு. கடவுளுக்கு எல்லை இல்லை. இதனை எதிர்க்கும் அன்னிய கைக்கூலிகள் இருக்கத்தானே செய்கின்றனர்.

    சுதந்திரத்திற்கு பல உயிர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட மதம் இந்து மதம். அனைத்து மதத்தையும் ஏற்கும் மதம் இந்து மதம். அடுத்த தலைமுறைக்கு இந்த பகுத்தறிவை ஊட்டியதே எதிர்ப்பவர்கள் தான். இவ்வாறு அவர் கூறினார்.


    இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பேசியதாவது, 500 ஆண்டு காலம் போராடி இன்று வெற்றி விழா நடைபெறுகிறது. உலகம் முழுவதும் ராமர் பிரதிஷ்டை நிகழ்ச்சியை கண்டு களிக்கிறார்கள். நிறைய மாநிலங்களில் அரசு விடுமுறை அளித்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் இந்து விரோத அரசு நடைபெறுகிறது. இந்த அரசு வன்முறையை விரும்புகிறது. ராமரின் விளையாட்டு துவங்கி உள்ளது. இந்த தேர்தலில் ராமர் பாடம் புகட்டுவார். இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னிமலைக்கு வரவேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது.
    • மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு, நடிகர் வடிவேல் நேரில் அஞ்சலி செலுத்தும் எண்ணம் இல்லாமல் இருந்தாலும், ஒரு அறிக்கை விட்டு இருக்கலாம்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நடிகர் ரஞ்சித் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

    அதில் அவர் கூறியதாவது:- 2024-ம் வருடம் அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும், இயற்கை பேரிடம் இல்லாத ஆண்டாக புதிய ஆண்டு இருக்க வேண்டும், கொங்கு மண்டலம் ஆன்மீக பூமி, விவசாயம் நிறைந்த பூமி. புகழ் பெற்ற சென்னிமலை முருகன் கோவிலில் வழிபட்டு இந்த புத்தாண்டினை தொடங்கி உள்ளோம்.

    சென்னிமலைக்கு வரவேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது. சென்னிமலை புண்ணிய பூமி, கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய தலம், வரும் ஆண்டில் விவசாயம் செழிக்க வேண்டும்.

    அரசியல் இல்லாமல் யாரும் இல்லை. நான் நல்ல வாக்காளர், நல்ல ஆட்சி அமைய பாடு பட வேண்டும். வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொண்டு நிறுவனங்கள் சிறப்பாக பணியாற்றினார்கள். நான் அரசியல்வாதி தான். நல்ல ஆட்சி ஆட்சி அமைய வாக்களிப்பேன்.

    இதுவரை எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை. மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு, நடிகர் வடிவேல் நேரில் அஞ்சலி செலுத்தும் எண்ணம் இல்லாமல் இருந்தாலும், ஒரு அறிக்கை விட்டு இருக்கலாம். அவர்களுக்குள் என்ன மன கசப்பு என தெரியவில்லை.

    விஜய் அரசியலுக்கு வருவது நல்லது தான். தவறு இல்லை. அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும். நல்லவர்கள் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன். இவ்வாறு அவர் கூறினார். 

    • மீட்பு பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விதுரா பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்.

    திருவனந்தபுரம்:

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப் பாதை அமைக்கும்பணியில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. சுரங்கப் பாதைக்குள் சிக்கிய 40 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மீட்பு பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த மீட்பு பணியில் ஈடுபட கேரளாவை சேர்ந்த வாலிபர் ஒருவர், தாமாகவே முன்வந்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விதுரா பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்.

    தேசிய பேரிடர் மீட்பு படையில் உறுப்பினராக உள்ள இவர், பல்வேறு இயற்கை பேரழிவு மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார். முக்கியமாக 2013-ல் உத்தரகாண்டில் ஏற்பட்ட மேகவெடிப்பு, 2018-ல் ஏற்பட்ட வெள்ள பேரழிவு, 2019-ல் காவலபாரா மற்றும் 2020-ல் பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவு, உத்தரகாண்ட் தபோவன் சுரங்கப்பாதை பேரழிவு போன்ற இயற்கை பேரிடர்களில் ரஞ்சித் பங்கேற்றிருக்கிறார்.

    இதனால் தற்போது உத்தரகாண்ட் உத்திர காசியில் சுரங்கத்துக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட தானாகவே முன்வந்திருக்கிறார். ரஞ்சித் இந்த துறையில் சம்பளம் வாங்காமல் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய இருப்பதாக நடிகர் ரஞ்சித் தெரிவித்தார். #ActorRanjith #TTVDinakaran
    சென்னை:

    சிந்துநதிபூ, மறுமலர்ச்சி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரஞ்சித். இவர் முதலில் அ.தி.மு.க.வில் இருந்து வந்தார்.

    கடந்த செப்டம்பர் மாதம் அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறி பா.ம.க.வில் இணைந்தார். இதற்கான காரணத்தை அவரிடம் கேட்டபோது, ‘நாட்டை மீட்டெடுத்து சீர்ப்படுத்தக்கூடிய தகுதி பாட்டாளி மக்கள் கட்சிக்குத்தான் உண்டு. அன்புமணி ராமதாஸ், தமிழகத்தை ஆளும் தலைமை பதவியை ஏற்றால்தான் முடியும். அவருக்கு உறுதுணையாகவே கட்சியில் சேர்ந்தேன்’ என்றார்.

    ரஞ்சித்துக்கு பா.ம.க.வில் மாநில துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து கட்சி கூட்டங்களிலும் பங்கேற்றார்.

    இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க, கூட்டணியில் பா.ம.க இணைந்தது. இதனால் ரஞ்சித் பா.ம.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்தார். நேற்று டி.டி.வி.தினகரன் முன்னிலையில் அ.ம.மு.க.வில் இணைந்தார்.

    தொடர்ந்து நிருபர்களை சந்தித்த ரஞ்சித், “மாற்றம் முன்னேற்றம் என்று சொல்லிக்கொண்டு தமிழக மக்களை சிலர் ஏமாற்றி வருகின்றனர். தற்போது அவர்கள் தன்மானத்தை விட்டு கூட்டணிக்காக விலை போய்விட்டனர். அதனால்தான் அந்தக்கட்சியிலிருந்து வெளியேறி அ.ம.மு.க.வில் இணைந்திருக்கிறேன்.

    என்னை தொடர்ந்து நிறைய பேர் அந்த கட்சியில் இருந்து வெளியேறுவார்கள். தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே அ.ம.மு.கவில் இணைந்து எனது பயணத்தைத் தொடங்கி இருக்கிறேன். டி.டி.வி.தினகரன் ஒரு நல்ல மக்கள் தலைவராக வலம் வருகிறார். வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய இருக்கிறேன்” என்றார்.  #ActorRanjith #TTVDinakaran
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பா.ரஞ்சித் சந்திப்பின் போது தமிழகத்தில் தலித் வாக்கு வங்கியை காங்கிரஸ் அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. #Congrees #Ranjith #RahulGandhi
    சென்னை:

    இயக்குனர் ரஞ்சித் ‘அட்டகத்தி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

    தொடர்ந்து கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தை இயக்கினார். அந்தப் படத்தின் வெற்றி அவருக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தது. அதன் பிறகு ரஜினிகாந்த்தின் ‘கபாலி’, ‘காலா’ படங்களை இயக்கினார்.

    மெட்ராஸ் படத்தில் வடசென்னையில் சிறு சிறு தாதாக்களின் அட்டகாசத்துடன் தலித் மக்களின் வாழ்க்கையையும் எடுத்துக் காட்டினார். இதன் மூலம் இயக்குனர் ரஞ்சித் தலித் போராளியாக உருவெடுத்தார். மெட்ராஸ் படத்தின் கதை திருட்டு பிரச்சினையில் கூட ரஞ்சித்தை தலித் அமைப்புகளை சேர்ந்தவர்கள் தான் காப்பாற்றினர்.

    தொடர்ந்து தலித் அரசியலை பேசிவரும் ரஞ்சித் சமீபகாலமாக தன்னை ஒரு அரசியல்வாதியாக அடையாளம் காட்டிக்கொள்ளவே விரும்புகிறார்.

    ஒரு பட விழாவில் அவருக்கும் இயக்குனர் அமீருக்கும் மேடையிலேயே கருத்து மோதல் ஏற்பட்டு பரபரப்பானது.

    நீட் தேர்வால் அனிதா மரணம் முதல் சமீபத்திய சாதிச்சுவர் விவகாரம் வரை தலித்களுக்காக குரல் கொடுத்துவருகிறார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ரஞ்சித் 2 நாட்களுக்கு முன் சந்தித்துப் பேசினார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. முக்கியமாக தமிழக காங்கிரஸ் தலைவர்களிடையே ரஞ்சித் சந்திப்பு பற்றிய குழப்பம் நீடித்துக்கொண்டிருக்கிறது.

    யார் மூலமாக ராகுலை ரஞ்சித் சந்தித்தார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்குள் விவாதமே ஏற்பட்டுள்ளது. அவர்கள் டெல்லியில் இதுபற்றி விசாரித்தபோது குஜராத் சட்டபேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானிதான் ராகுல் காந்தியை சந்திக்க ரஞ்சித்துக்கு நேரம் வாங்கிக் கொடுத்தார் என்று தெரிய வந்துள்ளது.

    இது குறித்து தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் பேசியபோது ’ஜிக்னேஷ் மேவானி கடந்த குஜராத் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவளித்தார். காங்கிரஸ் கூட்டணியில் அவரும் எம்.எல்.ஏ. ஆனார்.

    அவர் தேர்தலில் ஜெயித்த போதே அவருக்கு ரஞ்சித் வாழ்த்து தெரிவித்தார். பிறகு சென்னைக்கு ஜிக்னேஷ் மேவானியை அழைத்து சில நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் அதிகமானது.



    ஜிக்னேஷை சந்தித்த போதே தலித் வாக்குகள் பற்றியும் தமிழ்நாட்டில் தலித் வாக்கு வங்கி எப்படி திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வர பயன்பட்டது என்பது பற்றியும் ரஞ்சித் அவரிடம் விவாதித்து இருக்கிறார்.

    இந்த நிலையில்தான் ஜிக்னேஷ் மேவானி மூலமாக ராகுல் காந்தியைச் சந்தித்து தமிழகத்தில் தலித் வாக்கு வங்கியை காங்கிரஸ் இழந்தது ஏன் என்பது பற்றி விளக்கி இருக்கிறார் ரஞ்சித்.

    ஏற்கனவே திருமாவளவன் எம்.பி.யாக இருந்த போது ராகுல் காந்தி அவரிடம் தமிழகத்தில் தலித் ஓட்டு வங்கி காங்கிரசை விட்டுப் போனது ஏன் என்று சுமார் இரண்டு மணி நேரம் விரிவாக ஆலோசனை நடத்தினார். இதுபோல திருமாவளவனோடு பல முறை ராகுல்காந்தி ஆலோசித்து இருக்கிறார்.

    ஜிக்னேஷ் மேவானியோடும் இதுபற்றி ராகுல் பேசிக் கொண்டிருந்தபோதுதான் தமிழகத்தில் ரஞ்சித் என்பவர் இருக்கிறார். அவரிடம் இதுபற்றிப் பேசுங்கள் என்று யோசனை சொல்லியிருக்கிறார் மேவானி. இதையடுத்து ராகுல் காந்தி ‘அவரை வரச் சொல்லுங்கள்’ என்று மேவானியிடம் சொல்ல, அதன் பிறகே ரஞ்சித்திடம் தகவல் தெரிவித்து அவரை ராகுல் காந்தியிடம் அழைத்துச் சென்றுள்ளார் மேவானி’ என்கிறார்கள் தமிழக காங்கிரஸ் தலைவர்கள். #Congrees #Ranjith #RahulGandhi
    ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற கதிராமங்கலம் போராட்ட காட்சிகளை நினைவுப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. #Kaala #Rajini
    அரசியல் களத்தில் ரஜினி வேகம் எடுத்து இருக்கும் சூழ்நிலையில் அவரது படத்திலும் நடப்பு அரசியலை குறிக்கும் வசனம், காட்சிகள் அமைந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் காலா படம் வரும் ஜுன் 7-ந் தேதி வெளியாகிறது. ரஜினியின் மருமகனும் நடிகருமான தனுஷ் தயாரித்து உள்ளார்.

    ஒன்றரை நிமிடங்கள் ஓடும் இந்த படத்தின் டிரெய்லர் நேற்று இரவு 7.30 மணிக்கு வெளியிடப்பட்டது. இதில் ரஜினியின் உணர்ச்சி கரமான நடிப்பு, காமெடி, காதல், கோபம் என பன்முக நடிப்பை காட்டும் காட்சி களும் நானா படேகரின் வில்லத்தன காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

    ரஜினி கூடி இருக்கும் மக்களை பார்த்து ‘நம் உடல் தான் நமது ஆயுதம். எல்லோரும் போராட வாருங்கள்’ என்று அழைக்கும் காட்சியும் டிரெய்லர் இறுதியில் ’நிலம் உங்களுக்கு அதிகாரம். எங்களுக்கு வாழ்க்கை’ என்று அரசியல்வாதியை பார்த்து பேசும் வசனமும் இடம்பெற்று இருக்கிறது.

    ரஜினி மும்பை தாராவி பகுதியில் வாழும் மக்களின் நில உரிமைக்காக போராடும் தாதாவாக நடித்து இருக் கிறார் டிரெய்லர் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே 25லட்சம் பேர் பார்வையாளர்களை பெற்று வலைதள டிரெண்டிங்கில் முதல் இடத்தில் இருக்கிறது. 

    டிரெய்லரில் ஒரு காட்சியில் போராடும் மக்களை காவல்துறையினர் தாக்கும் காட்சி உள்ளது. அதில் ஒரு பெண்ணை பின்புறத்தில் இருந்து கடுமையாக தாக்குகிறார் காவல் அதிகாரி ஒருவர்.

    இது அப்படியே கதிராமங்கலம் போராட்டத்தில் பெண்களை காவல்துறையினர் தாக்கிய காட்சியை நினைவுபடுத்தியது என்கின்றனர் சினிமா விமர்சகர்கள்.

    கடந்த ஆண்டு கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எண்ணெய் குழாய்களால் தங்கள் நிலம் பாதிக்கப்படுவது என்று மக்கள் போராடினார்கள். அந்த போராட்டத்தில் ஒரு பெண்ணை காவலர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பானது. அந்த சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது இந்த காட்சி என்கிறார்கள்.
    ×