search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Actor ranjith"

    பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த நடிகர் ரஞ்சித் டிடிவி தினகரன் கட்சியில் இணைந்தார். #ActorRanjith #TTVDinakaran
    புதுச்சேரி:

    அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்ததால் கடும் அதிருப்தி அடைந்த நடிகர் ரஞ்சித் பாமகவில் இருந்து விலகினார்.

    கொள்கைக்கு எதிராக அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்ததாக புகார் கூறிய நடிகர் ரஞ்சித், கடந்த வாரம் வரை முதலமைச்சருக்கு எதிராக பேசிவிட்டு, தற்போது அவர்களோடு கூட்டணி வைப்பதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் கூறினார்.

    இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த நடிகர் ரஞ்சித் புதுச்சேரியில் டிடிவி தினகரனை இன்று சந்தித்து அமமுகவில் இணைந்தார்.



    இது குறித்து நடிகர் ரஞ்சித் கூறுகையில், இளைஞர்கள் எதிர்ப்பார்க்கும் தலைவர், நல்ல தலைமை தேவை என்பதால் தினகரன் கட்சியில் இணைந்ததாக தெரிவித்தார். சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட தலைவரை தேர்வு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

    நடிகர் ரஞ்சித் அமமுகவில் இணைந்தது இன்ப அதிர்ச்சியாக உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். #ActorRanjith #TTVDinakaran
    பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகர் ரஞ்சித் அறிவித்தார். #PMK #ActorRanjith

    கோவை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பல கட்சிகளிடம் தொகுதி பங்கீடு பேசப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகர் ரஞ்சித் அறிவித்தார்.

    கோவையில் நடிகர் ரஞ்சித் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கடந்த வாரம் வரை முதலமைச்சருக்கு எதிராக பேசிவிட்டு, தற்போது அவர்களோடு கூட்டணி வைப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    கூட்டணி தொடர்பாக பா.ம.க. தலைமை தொண்டர்களிடம் எந்த கருத்தும் கேட்கவில்லை, ஆனால் தொண்டர்களிடம் கருத்து கேட்கப்படும் என பொதுக்குழுவில் அறிவித்தார்கள்.

    மதுவுக்கு எதிராகப் போராடிவிட்டு மதுக்கடை நடத்துவோர் உடன் கூட்டணி வைப்பது ஏற்புடையதல்ல. இளைஞர்கள், பொதுமக்களை நொடிப்பொழுதில் பாமக ஏமாற்றிவிட்டது.

    நான்கு பேருக்கு கூஜா தூக்கிக்கொண்டு என்னால் வாழ முடியாது. நம்பிக்கையுடன் கட்சியில் இணைந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

    அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார்களை கூறிவிட்டு எப்படி அதிமுகவோடு கூட்டணி வைக்கலாம்? அன்புமணி எப்படி மக்களிடம் சென்று வாக்குகள் சேகரிப்பார்? என கேள்வி எழுப்பியுள்ளார். #PMK #ActorRanjith
    திண்டிவனத்தில் ராமதாஸ் முன்னிலையில் நடிகர் ரஞ்சித் பா.ம.க.வில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து ரஞ்சித்துக்கு மாநில துணைத்தலைவர் பொறுப்பை ராமதாஸ் வழங்கினார். #PMK #Ramadoss #Ranjith
    திண்டிவனம்:

    நட்புக்காக, பாண்டவர் பூமி, நேசம்புதுசு உள்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நடிகர் ரஞ்சித். இவர் இன்று மதியம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்துக்கு சென்றார்.

    அங்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் பா.ம.க. கட்சியில் இணைந்தார். இதனைத்தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் நடிகர் ரஞ்சித்துக்கு பா.ம.க.வில் மாநில துணைத்தலைவராக பொறுப்பு வழங்கினார்.

    பா.ம.க.வில் இணைந்தது குறித்து நடிகர் ரஞ்சித் கூறியதாவது:-

    டாக்டர் ராமதாஸ் எனது தந்தையை போன்றவர். பா.ம.க.வில் அடிமட்ட தொண்டனாக இருந்து செயல்படுவேன். தமிழகத்தின் முதல்வராக அன்புமணி ராமதாஸ் வருவதற்கு பாடுபடுவேன்.

    வாழ்க்கையில் நிறைய வி‌ஷயங்கள் உள்ளது. தமிழகத்தில் ஆட்சியாளர்கள் கொள்ளையடித்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #PMK #Ramadoss #Ranjith
    ×