search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "quit"

    பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகர் ரஞ்சித் அறிவித்தார். #PMK #ActorRanjith

    கோவை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பல கட்சிகளிடம் தொகுதி பங்கீடு பேசப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகர் ரஞ்சித் அறிவித்தார்.

    கோவையில் நடிகர் ரஞ்சித் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கடந்த வாரம் வரை முதலமைச்சருக்கு எதிராக பேசிவிட்டு, தற்போது அவர்களோடு கூட்டணி வைப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    கூட்டணி தொடர்பாக பா.ம.க. தலைமை தொண்டர்களிடம் எந்த கருத்தும் கேட்கவில்லை, ஆனால் தொண்டர்களிடம் கருத்து கேட்கப்படும் என பொதுக்குழுவில் அறிவித்தார்கள்.

    மதுவுக்கு எதிராகப் போராடிவிட்டு மதுக்கடை நடத்துவோர் உடன் கூட்டணி வைப்பது ஏற்புடையதல்ல. இளைஞர்கள், பொதுமக்களை நொடிப்பொழுதில் பாமக ஏமாற்றிவிட்டது.

    நான்கு பேருக்கு கூஜா தூக்கிக்கொண்டு என்னால் வாழ முடியாது. நம்பிக்கையுடன் கட்சியில் இணைந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

    அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார்களை கூறிவிட்டு எப்படி அதிமுகவோடு கூட்டணி வைக்கலாம்? அன்புமணி எப்படி மக்களிடம் சென்று வாக்குகள் சேகரிப்பார்? என கேள்வி எழுப்பியுள்ளார். #PMK #ActorRanjith
    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தந்திரி ஏற்காவிட்டால் அவர் பதவி விலகியிருக்க வேண்டும் என முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார். #Sabarimala #KeralaChiefMinister #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் 50 வயதுக்கு உட்பட்ட 2 பெண்கள் நேற்று முன்தினம் சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து தந்திரி கண்டரரூ ராஜீவரூ, கோவிலின் நடையை அடைத்து பரிகார பூஜைகள் மேற்கொண்டார். இதற்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில், ‘சபரிமலையில் நேற்று (நேற்று முன்தினம்) வித்தியாசமான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. கோவிலின் நடையை அடைத்து பரிகார பூஜை செய்துள்ளார், தந்திரி. இது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானதாகும். இந்த வழக்கில் அவரும் ஒரு வாதி என்பதால், அவரது கருத்தையும் கேட்டே தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த தீர்ப்பை தந்திரி ஏற்காவிட்டால் அவர் பதவி விலகியிருக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

    மாநிலத்தில் நேற்று நடந்த வன்முறை குறித்து பினராயி விஜயன் கூறும்போது, ‘நேற்று முதல் (நேற்று முன்தினம்) மாநிலத்தில் ஏராளமான வன்முறை சம்பவங்கள் நடந்திருக்கின்றன. செய்தியாளர்கள், பெண்கள், போலீசார் என பலர் தாக்கப்பட்டு உள்ளனர். 31 போலீசார் காயமடைந்துள்ளனர். 79 அரசு பஸ்கள் நொறுக்கப்பட்டு உள்ளன. இது பா.ஜனதா மற்றும் சங்க பரிவார அமைப்புகள் திட்டமிட்டு நடத்திய தாக்குதல்’ என குற்றம் சாட்டினார்.
    மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் இணை மந்திரியாக இருக்கும் ராஷ்டரிய லோக் சமதா கட்சி தலைவர் உபேந்திரா குஷ்வாஹா ராஜினாமா செய்கிறார். #UpendraKhuswaha #NDAministry
    புதுடெல்லி:

    பீகார் மாநிலத்தில் செல்வாக்குபெற்ற ராஷ்டரிய லோக் சமதா கட்சியின் தலைவர்  உபேந்திரா குஷ்வாஹா. மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் மனிதவள மேம்பாட்டு துறை இணை மந்திரியாக இவர் பதவி வகிக்கிறார்.

    குஷ்வாஹாவையும் சேர்த்து, பாராளுமன்ற மக்களவையில் இந்த கட்சிக்கு மூன்று உறுப்பினர்கள் உள்ளனர்.

    எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் தொடர்பாக பா.ஜ.க.வுடன் உபேந்திரா குஷ்வாஹா நடத்திய பேச்சுவார்த்தையில் ராஷ்டரிய லோக் சமதா கட்சிக்கு அவர் எதிர்பார்த்த அளவுக்கு இடங்கள் ஒதுக்கப்படவில்லை என தெரியவருகிறது.

    இந்நிலையில், தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ள உபேந்திரா குஷ்வாஹா, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகப்போவதாக நம்பகமான தகவல் வெளியாகியுள்ளது.

    விரைவில் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் அலுவலகத்துக்கு குஷ்வாஹா அனுப்பி வைப்பார் அல்லது, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கடிதத்தை அளிப்பார் என எதிர்பார்க்கபடுகிறது. #UpendraKhuswaha #NDAministry

    சர்ஜிகல் ஸ்ட்ரைக் ஆபரேஷனின் போது எல்லை தாண்டி பாகிஸ்தானிடம் சிக்கிக்கொண்டு பின்னர் நாடு திரும்பிய ராணுவ வீரர், தன்னை ராணுவத்தில் இருந்து விடுவிக்க கோரி கடிதம் எழுதியுள்ளார்.
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இந்திய ராணுவம் அங்கு பயங்கரவாதிகளின் முகாமை அழித்தது. அப்போது, ராணுவ சிப்பாய் சந்து சவான் என்பவர் அங்கு மாயமானர்.

    பாகிஸ்தான் படையினரிடம் சந்து சவான் சிக்கிக் கொண்டதாக பின்னர் தெரியவந்தது. பின்னர், இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர், நான்கு மாதங்கள் கழித்து அவரை பாகிஸ்தான் விடுவித்தது. இந்தியா திரும்பிய பின்னர் அவர் மீது ராணுவ ரீதியிலான விசாரணை நடந்தது.

    உயரதிகாரிகளின் அனுமதி இல்லாமல் ஆயுதங்களுடன் முகாமை விட்டு எல்லை தாண்டி சென்றதாக சந்து மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதற்காக, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள ராணுவ பள்ளிக்கு மாற்றப்பட்டார்.


    மூன்று வாரங்களுக்கு முன்னதாக சந்து ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முறையற்று நடந்து கொள்வதால் சந்து சிறிது நாட்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மருத்துமனையில் சேர்க்கப்பட்டதாக ராணுவம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், “ 20 நாட்களாக இந்த மருத்துவமனையில் இருக்கிறேன். அந்த சம்பவத்திற்கு பிறகு (பாகிஸ்தானிடம் பிடிபட்ட நிகழ்வு) என்னை நடத்தும் விதம் மன ரீதியான அழுத்தத்தை கொடுக்கிறது. எனவே, ராணுவத்தில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும். சாதாரண வாழ்க்கையை வாழ விரும்புகிறேன்” என சந்து சவான் ராணுவ உயரதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
    ×