search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala Chief Minister"

    • கேரளா முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • 304 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அதில் 267 பேரின் பரிசோதனை முடிவுகள் கிடைத்துள்ளன.

    கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 2 பேர் உயிரிழந்த நிலையில் 6 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டு தனிமையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் கேரளா முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    தமிழக- கேரள எல்லையில் தேனி மாவட்டத்தில் 3 சோதனைச் சாவடிகள் உள்ளன. கம்பம் மெட்டு, போடிமெட்டு, குமுளி ஆகிய இடங்களில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு சோதனை செய்து வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.

    இந்நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா பரவல் கட்டுக்குள் உள்ளதாகவும், ஆனால் தொற்று நோயின் அச்சுறுத்தல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

    இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:-

    நிபா வைரஸ் தாக்குதலின் இரண்டாவது அலை உருவாகும் வாய்ப்பை நிராகரிக்க முடியாது. நிபாவின் அச்சுறுத்தல் முற்றிலுமாக முடிந்துவிட்டதாகக் கூற முடியாது. சுகாதார அமைப்பு எச்சரிக்கையுடன் செயல்படுகிறது. வைரஸை முன்கூட்டியே கண்டறிவது ஆபத்தான சூழ்நிலையைத் தடுக்கும்.

    தற்போது 994 பேர் கண்காணிப்பில் உள்ளனர். 304 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அதில் 267 பேரின் பரிசோதனை முடிவுகள் கிடைத்துள்ளன.

    கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் ஆறு பேருக்கு நிபா வைரஸ் உறுதியாகியுள்ளது. ஒன்பது பேர் கண்காணிப்பில் உள்ளனர். கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா பாதிப்பு ஏன் ஏற்படுகிறது என்பதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) கூட தெளிவான பதிலை அளிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியாவின் மோசமான முதல்வர் என பினராயி விஜயனின் பெயர் கூகுள் இணைய தளத்தில் வெளியாகி இருப்பது கேரள அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #KeralacM #PinarayiVijayan #Google
    புதுடெல்லி:

    சர்வதேச அளவில் பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள கூகுள் இணைய தளத்தைத்தான் அதிகம் பேர் பயன்படுத்துகிறார்கள்.

    இதற்காக கூகுள் இணைய தளம் புதுப்புது தகவல்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் மோசமான மாநில முதல்வர் யார்? என்று தேடினால் அதில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பெயர் வருகிறது.

    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதற்கு அய்யப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கேரளாவில் வன்முறை, கலவரங்கள் நடக்கிறது. இதனை சமூக ஆர்வலர்கள் உள்பட பலரும் விமர்சித்துள்ளனர்.

    இந்த நிலையில் இந்தியாவின் மோசமான முதல்வர் என பினராயி விஜயனின் பெயர் கூகுள் இணைய தளத்தில் வெளியாகி இருப்பது கேரள அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


    இதற்கு எதிர்கட்சிகளின் சதியே காரணம் என்றும், பினராயி விஜயனின் நற்பெயரை சீர் குலைக்க செய்யப்படும் திட்டமிட்ட செயல் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    கூகுள் இணையதளம் பினராயி விஜயனின் பெயரை மோசமான முதல்வர் என்று குறிப்பிட்டு இருப்பது இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    கூகுள் இணையதளம் சர்ச்சையில் சிக்குவது இதற்கு முன்பும் பல முறை நடந்து உள்ளது. கூகுளில் முட்டாள் யார்? என தேடினால் அதில் அமெரிக்க அதிபர் டிரம்பின் பெயர் வந்தது. இது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக கூகுளின் முதன்மை அதிகாரியை அமெரிக்க பாராளுமன்றம் நேரில் அழைத்து விசாரணை நடத்தியது.

    இது போல உலகின் டாப் 10 கிரிமினல்கள் யார்? என தேடினால் அதில் தாவூத்இப்ராகிம், கடாபி ஆகியோருடன் இந்திய பிரதமர் மோடியின் படமும் இடம் பெற்றது. இதுவும் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. #KeralacM #PinarayiVijayan #Google
    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தந்திரி ஏற்காவிட்டால் அவர் பதவி விலகியிருக்க வேண்டும் என முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார். #Sabarimala #KeralaChiefMinister #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் 50 வயதுக்கு உட்பட்ட 2 பெண்கள் நேற்று முன்தினம் சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து தந்திரி கண்டரரூ ராஜீவரூ, கோவிலின் நடையை அடைத்து பரிகார பூஜைகள் மேற்கொண்டார். இதற்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில், ‘சபரிமலையில் நேற்று (நேற்று முன்தினம்) வித்தியாசமான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. கோவிலின் நடையை அடைத்து பரிகார பூஜை செய்துள்ளார், தந்திரி. இது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானதாகும். இந்த வழக்கில் அவரும் ஒரு வாதி என்பதால், அவரது கருத்தையும் கேட்டே தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த தீர்ப்பை தந்திரி ஏற்காவிட்டால் அவர் பதவி விலகியிருக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

    மாநிலத்தில் நேற்று நடந்த வன்முறை குறித்து பினராயி விஜயன் கூறும்போது, ‘நேற்று முதல் (நேற்று முன்தினம்) மாநிலத்தில் ஏராளமான வன்முறை சம்பவங்கள் நடந்திருக்கின்றன. செய்தியாளர்கள், பெண்கள், போலீசார் என பலர் தாக்கப்பட்டு உள்ளனர். 31 போலீசார் காயமடைந்துள்ளனர். 79 அரசு பஸ்கள் நொறுக்கப்பட்டு உள்ளன. இது பா.ஜனதா மற்றும் சங்க பரிவார அமைப்புகள் திட்டமிட்டு நடத்திய தாக்குதல்’ என குற்றம் சாட்டினார்.
    கேரளாவில் பலத்த மழைக்கு 23 பேர் பலியாகி உள்ளனர். அனைத்து உதவிகளும் செய்ய புதுவை அரசு தயாராக உள்ளதாக கேரள முதல்-மந்திரியுடன் நாராயணசாமி டெலிபோனில் பேசியுள்ளார். #keralaheavyrain #narayanasamy

    புதுச்சேரி:

    கேரள மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை வெள்ளத்தில் இதுவரை 23 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலத்த மழையினால் ஏராளமான சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

    இந்த நிலையில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி, இன்று காலை கேரள முதல்-மந்திரி பிரனாயி விஜயனுடன் டெலிபோனில் பேசினார்.

    அப்போது கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த துயர சம்பவத்தில் புதுவையும் பங்கேற்பதாகவும், மேலும் வெள்ள சேதங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய புதுவை அரசு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். #keralaheavyrain #narayanasamy

    ×