என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தைராய்டு பிரச்சனை"

    • தைராய்டு மாத்திரை மற்றும் அயோடின் எடுத்தாலே முன்கழுத்துகழலை நோய் வராமல் தடுக்கலாம்.
    • பிறந்த குழந்தையின் வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருப்பது தைராய்டு ஹார்மோன்.

    கர்ப்ப காலத்தில் கருக் குழந்தை வளர்ச்சிக்கு தைராய்டு ஹார்மோன் மிக மிக இன்றியமையாதது. முதல் மூன்று மாதங்கள் தாயின் தைராய்டு சுரப்பையே குழந்தை நம்பியுள்ளது. பிறகு சிறிது சிறிதாக கரு குழந்தையின் தைராய்டு சுரப்பி வேலை செய்யத்தொடங்கும்.

    கர்ப்பம் உறுதியான உடனேயே தைராய்டு பரிசோதனை செய்ய வேண்டும்.

    ராதா தன்னுடைய முதல் கர்ப்பத்தில் இருக்கிறார். மிகவும் சந்தோஷம் திருமணம் ஆகி முதல் வருடத்திலேயே குழந்தை உண்டானது. மருத்துவரிடம் சென்றதும் கர்ப்பத்தை ஸ்கேனில் உறுதி செய்த பின் ரத்த பரிசோதனை செய்தனர்.

    ரிப்போர்ட்ஸ் வந்த பிறகு டாக்டர் அவர்களை வரச் சொல்லி இருந்தார்.

    அடுத்த நாள் பரிசோதனை முடிவுகள் வாட்ஸ் அப்பில் வந்துவிட்டன. ராதாவும் அவர் கணவரும் பரிசோதனை முடிவுகளை அவர்களே ஒப்பிட்டு பார்த்து எல்லாமே சரியாக இருக்கிறது என்ற முடிவுக்கு வருகிறார்கள்.

    ராதாவும் கணவரும் அவர்களே பரிசோதனை முடிவுகளை பார்த்து விட்டதால், அடுத்த ஸ்கேன் இரண்டு வாரம் கழித்து தானே! அப்போது சென்று டாக்டரை பார்க்கலாம் என்று ஒத்திப்போட்டனர். இரண்டு வாரம் கழித்து மருத்துவரிடம் சென்றனர். ராதாவின் கணவர் " டாக்டர்! ரிசல்ட் எல்லாவற்றையும் நானே பார்த்து விட்டேன். எல்லாமே சரியாகத்தான் இருக்கிறது. நீங்களும் அதை ஒப்புக்கொள்வீர்கள் "என்று நம்புகிறேன்" என்று கூறினார்.

    டாக்டர் "மிகவும் வருத்தமாக இருக்கிறது படித்தவர்களே இவ்வாறு செய்கிறீர்கள்! கர்ப்ப காலத்தில் எடுக்கப்படும் ரத்த அளவுகள் முற்றிலும் மாறுபட்டிருக்கும். நீங்கள் பார்க்கும் போது எல்லாம் நார்மல் போல தெரிந்தாலும் இவருக்கு தைராய்டு குறைபாடு உள்ளது. கட்டாயம் தைராய்டு மாத்திரை எடுக்க வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை கட்டாயம் தைராய்டு பரிசோதனை செய்ய வேண்டும். பிரசவமான பிறகு மீண்டும் தைராய்டு டெஸ்ட் செய்துவிட்டு தேவைப்பட்டால் தொடரலாம். இல்லை என்றால் நிறுத்திக் கொள்ளலாம் என்று கூறினார்.

    ஜெயஸ்ரீ சர்மா


     

    டி.எஸ்.ஹெச் சாதாரண ஒருவருக்கு இருப்பதை விட பாதி அளவு தான் கர்ப்பிணிகளுக்கு இருக்க வேண்டும். அந்த அளவுக்கு கர்ப்ப காலத்தில் பரிசோதனை முடிவுகள் மாறுபடும்.

    எனவே கர்ப்பகாலத்தில் லேபில் கொடுக்கப்படும் ரிசல்டுகளை பார்த்துவிட்டு நீங்களாகவே முடிவு செய்ய வேண்டாம்.

    பிறந்த குழந்தைகளுக்கு வரும் தைராய்டு குறைபாடு

    பிறந்த குழந்தையின் வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருப்பது தைராய்டு ஹார்மோன். அதனால் தான் பிறந்த குழந்தைகளுக்கு தைராய்டு பரிசோதனை செய்யப்படுகிறது. பரம்பரை நோயாக ஒரு சில குழந்தைகளுக்கு பிறந்த உடனேயே தைராய்டு குறைபாடு ஏற்படலாம். இதனால் குழந்தையின் அடுத்தடுத்த வளர்ச்சி படிகளான, 'முகம் பார்த்து சிரிப்பது, குப்புற விழுவது, தவழுவது, உட்காருவது, நிற்பது, நடப்பது, வார்த்தைகளை பேசுவது, என்று எல்லாவற்றிலும் தாமதமாகலாம். எனவே பிறந்த குழந்தைகளுக்கு செய்யப்படக்கூடிய முக்கியமான பரிசோதனைகளில் தைராய்டும் ஒன்று.

    மெனோபாஸில் வரும் தைராய்டு நோய்

    மெனோபாஸ் (மாதவிலக்கு நின்று போகுதல்).அந்த நேரத்திலும் தைராய்டு சுரப்பில் மாற்றம் ஏற்படும். தைராய்டு குறைபாடு ஏற்படும். அதனால் மாதவிலக்கு நின்றவர்கள் ஒருமுறை மருத்துவரிடம் சென்று உடலை முழுமையாக பரிசோதித்து கொள்வது நல்லது. குறைவான சுரப்பு உள்ளவர்கள் தைராய்டு மாத்திரை எடுத்துக் கொண்டால் மனோபாஸ் காலத்தில் வரும் பல பிரச்சனைகளுக்கு அது தீர்வாக இருக்கலாம்.

    முன் கழுத்து கழலை கட்டி (காய்ட்டர்) எப்படி வருகிறது?

    அயோடின் சத்து குறைபாடு அல்லது தைராய்டு ஹார்மோன் குறைபாட்டால், தைராய்டு சுரப்பி அதிகமாக சுரக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறது. தொடர்ந்து தலைமை சுரப்பியிலிருந்து வரும் "தைராய்டு தூண்டி ஹார்மோன்" தைராய்டு சுரப்பியை மேலும் மேலும் வளரச் செய்து தேவையான அளவு தைராய்டு சுரக்கும்படி கட்டளை இடுகிறது. அதனால் கழுத்தில் தைராய்டு கட்டி காயிட்டர் உருவாகிறது. தைராய்டு மாத்திரை மற்றும் அயோடின் எடுத்தாலே முன்கழுத்துகழலை நோய் வராமல் தடுக்கலாம்.

    தைராய்டு இருப்பவர்கள்என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது? எது சாப்பிடலாம்?

    பொதுவாக எல்லோரும் நினைப்பது தைராய்டு வந்து விட்டாலே பெரிய பட்டியலிட்டு இந்த காயெல்லாம் சாப்பிடக்கூடாது என்று.ஆனால் உண்மையில் அப்படி அந்த பட்டியலில் எந்த காயும் இல்லை. ஒரு சில க்ரூஸிபிரஸ் என்று சொல்லக்கூடிய காய் வகைகளை பச்சையாக உண்ணுவது தைராய்டுக்கு ஏற்றதல்ல. எடுத்துக்காட்டாக காலிபிளவர் முட்டைக்கோஸ், புரோக்கலி மற்றும் சோயா உணவுகள். இவற்றை சமைத்து சாப்பிடலாம். இது தவிர எந்த விதமான கடினமான உணவு பத்தியமும் தைராய்டுக்கு தேவை இல்லை.

    கடல் சார்ந்த உணவுகளில் அயோடின் இருப்பதால் கடற்கரை பகுதிகளில் இருப்பவர்களுக்கு தைராய்டு நோய் வெகு அரிதாகவே வருகிறது. கடற்கரையை விட்டு விலகி இருப்பவர்களுக்கு முக்கியமாக பாலைவனப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தைராய்டு நோய் அதிகம் வரும். ஒரு சில பாறை உப்புகளில் அயோடின் சத்து இருந்தாலும் மலைப்பகுதியில் வசிப்பவர்களுக்கும் தைராய்டு நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

    அதனால்தான் அரசு தைராய்டு சத்தை உப்பில் ஏற்றி உண்ண வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தி உள்ளது. மேலும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் பகுதிகளில் நெற்றியில் வைக்க அயோடின் சத்து கலந்த பொட்டுகள் அரசால் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. அது நெடு நேரம் நெற்றியில் ஒட்டியிருக்கும்போது பெண்களுக்கு தைராய்டு நோய் வருவது தவிர்க்கப்படுகிறது.

    பெரும்பாலும் வெகு அரிதாகவே ஏற்படும். மீன் மற்றும் கடல்பாசிகளில் அயோடின் சத்து நிறைந்திருப்பதால் கடல் சார்ந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அயோடின் குறைபாட்டால் வரும் தைராய்டு வருவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு மற்றும் பால் பொருட்களிலும் அயோடின் சத்து நிறைந்துள்ளது.

    தைராய்டு மாத்திரையின் பக்க விளைவுகள் என்ன?

    தைராய்டு மாத்திரைக்கு பெரியதாக ஒன்றும் பக்கவிளைவுகள் இல்லை. ஆனால் 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது தைராய்டு ரத்த பரிசோதனை செய்து மருத்துவரிடம் காண்பித்து மாத்திரையின் அளவு சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

    வாட்ஸ்அப்: 8925764148

    • மனித உடலில் உள்ள முக்கியமான சுரப்பிகளில் ஒன்று தைராய்டு சுரப்பி.
    • ரத்தத்தில் டி3,டி4 ,டி.எஸ்.ஹெச் ஹார்மோன்கள் எவ்வளவு உள்ளது என்று பார்க்கலாம்.

    மனித உடலில் உள்ள முக்கியமான சுரப்பிகளில் ஒன்று தைராய்டு சுரப்பி. இது தைராக்ஸின் ஹார்மோனை தேவையான அளவு சுரக்காததைத் தான் குறை தைராய்டு நோய் என்கின்றோம். இதை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை:

    சப் கிளினிக்கல் ஹைபோ தைராய்டு நோய். கிளினிக்கல் ஹைபோ தைராய்டு நோய். ஹாசிமோட்டோஸ் குறை தைராய்டு நோய்.


    பரிசோதனைகள்

    தைராய்டு நோய்களைக் கண்டறியப் பயன்படும் பரிசோதனைகள் வருமாறு:

    1) ரத்தத்தில் டி3,டி4 ,டி.எஸ்.ஹெச் ஹார்மோன்கள் எவ்வளவு உள்ளது என்று பார்க்கலாம்

    2) தைரோபெராக்சிடோஸ் ஆன்டிபாடி (டி.பி.ஓ), தைரோகுளோபுலின் ஆன்டிபாடி (டி.ஜி.ஹெச்)

    3) நுண் ஊசி உறிஞ்சல் திசு பரிசோதனை (எப்.என்.ஏ.சி)

    4)அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் (தைராய்டு சுரப்பியில் உள்ள புற்றுநோய் சதை முடிச்சுகள், காய்டர், நீர்க்கட்டிகள், தைராய்டு சுரப்பியின் அழற்சி வீக்கம் இவைகளை கண்டறிய உதவுகிறது.)

    தைராய்டு நோய்களுக்குரிய உணவுப் பழக்க வழக்கங்கள்

    1) இரும்புச் சத்து குறைபாட்டிற்கும், தைராய்டு குறைபாட்டிற்கும் நிறைய தொடர்புகள் உள்ளன. தைராய்டு ஹார்மோன் டி4 லிருந்து டி3-க்கு மாறுவதற்கு இரும்புச் சத்து தேவை. ரத்தத்தில் 'பெரிட்டின்' அளவு சரியாக இருக்க வேண்டும். இரும்புச்சத்து உடலில் சேர்வதற்கு போலிக் அமிலம், வைட்டமின்கள் பி12 மற்றும் சி தேவை.


    இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்:

    முருங்கைக்கீரை, கறிவேப்பிலைக் கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, பேரீட்சை, சிவப்புக் கொண்டைக் கடலை, வேர்க்கடலை, சோயா பீன்ஸ், பீன்ஸ், அவரைக்காய், இறைச்சி வகைகள், பூசணி விதை, கோதுமை, தீட்டாத சிவப்பரிசி, அத்திப்பழம், ஆப்பிள், கொய்யா, பேரிக்காய், பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு மற்றும் அனைத்துக் கீரை வகைகளிலும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

    2) வைட்டமின் டி குறைவால் தைராய்டு சுரப்பியில் உள்ள தைரோ பெராக்சிடோஸ், தைரோகுளோபுலின் போன்றவை பாதிக்கப்படுகிறது. ஆகவே, விட்டமின் டி சத்துக் குறையாமல் பார்க்க வேண்டும்.

    நமது தோலில் எந்த அளவுக்கு சூரிய ஒளிபடுகிறதோ, அந்த அளவிற்கு வைட்டமின் டி உடலில் உருவாகும். உணவு வகைகளில் முட்டை மஞ்சள்கரு, மத்திச்சாளை மீன், சூரை, கானாங்கெளுத்தி, இந்தியன் சால்மன் போன்ற மீன்களிலும், சிப்பி, பால் பொருட்கள், பாதாம், பிஸ்தா, இறைச்சி வகைகள் இவற்றிலிருந்தும் வைட்டமின் டி கிடைக்கும்.

    3) அயோடின்: தைராய்டு சுரப்பி செயல்படுவதற்கு அயோடின் மிக முக்கியமானது. கடல் உப்பு, கடல் மீன்கள், நண்டு, இறால், கணவாய், பால் பொருட்கள், முட்டை, இறைச்சி வகைகள், கடல் பாசிகள், ஸ்ட்ராபெர்ரி, க்ரான் பெர்ரி, அன்னாசிப் பழம் இவைகளில் இச்சத்து காணப்படுகிறது.

    4) செலினியம்: தைராய்டு சுரப்பியின் டி3, டி4 ஹார்மோன்கள் சுரப்பதற்கு செலினியம் ஒரு முக்கியமான பொருள். உணவுப் பொருட்களில், பூசணி விதை, பாதாம், பிரேசில் நட், முட்டை, பால் பொருட்கள், மீன், இறைச்சி இவைகளில் செலினியம் அதிகமாகக் கிடைக்கிறது.

    5) மெக்னீசியம்: தைராய்டு சுரப்பி டி4 ஹார்மோன் சுரக்க மெக்னீசியம் தேவை. டி4 தேவையான அளவு சுரந்தால் தான் உடலுக்குத் தேவைப்படும் டி3 ஹார்மோனாக மாற்றப்படும். ஆகவே, உணவில் மெக்னீசியம் குறைவில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எலும்பில் கால்சியம் வலிமையாக சேர்வதற்கும் மெக்னீசியம் இன்றியமையாதது. இது உணவுகளில், பாதாம், வாழைப்பழம், பூசணி விதை, முந்திரிப் பருப்பு, வேர்க்கடலை, கருப்பு சாக்லேட், ரொட்டி, உருளைக்கிழங்கு, பால் பொருட்கள், இறைச்சி, மீன் வகைகளில் உள்ளது.

    6) துத்த நாகம்: மூளையின் ஹைப்போதலாமஸ் சுரக்கும் தைரோடிரோபின் ரிலீசிங் ஹார்மோன் சரியான அளவு சுரக்க துத்தநாகம் தேவை. கடல் சிப்பி, முந்திரிப்பருப்பு, பாதாம், வேர்க்கடலை, கொண்டக்கடலை, பூசணி விதை, கருப்பு சாக்லேட், இறைச்சி வகைகள், மீன் வகைகள், தயிர், பீன்ஸ், சோயாபீன்ஸ், மாதுளை பழம், கொய்யா, பெர்ரி வகைப் பழங்கள் இவைகளில் துத்தநாகம் அதிக அளவில் உள்ளது.

    7) தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் சிகிச்சை காலங்களில் முட்டைகோஸ், காலிப்ளவர், ப்ராக்கோலி, டர்னிப் போன்ற காய்கறிகளை தவிர்ப்பது நலம்.

    • தைராய்டு உணவுமுறையை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
    • தைராய்டு சுரப்பி வளர்சிதை மாற்றத்தை சீராக்க உதவுகிறது.

    தற்போதைய பெண்களிடத்தில் பரவலாக காணப்படும் நோய் தைராய்டு. 25 வயது முதல் 40 வயது பெண்கள் வரை தைராய்டு நோயால் அதிகம் பாதித்து வருகின்றனர் குறிப்பாக திருமணம் ஆன பின்னர் பல பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை வருகிறது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    குறிப்பாக தைராய்டு நோய் பிரச்சனையால் பத்து பெண்களில் ஒரு பெண்ணாவது கட்டாயம் பாதிக்கப்பட்டு இருப்பார். அந்த அளவிற்கு தைராய்டு பிரச்சனை வளர்ந்துள்ளது. மருத்துவ ஆய்வின் புள்ளி விவரப்படி இந்தியாவில் 4.2 கோடி பேர் தைராய்டு நோய் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் உள்ளது.

    இதில் முக்கிய பிரச்சனை என்னவென்றால் தைராய்டு நோய் நமக்கு உள்ளது என்பது பல பெண்களுக்கு தெரியாது அந்த அளவிற்கு இந்த நோய் உடலில் இருந்து பாதிக்கப்பட்ட நபருக்கு தெரியாமலேயே தாக்குதலை ஏற்படுத்தும். திருமணம் ஆகி கருவுற்ற பெண்கள், குழந்தை பெற்ற பெண்கள் என வளர்ச்சி ரீதியாக தைராய்டு நோய் பரவலாக காணப்பட்டு வருகிறது. இந்த தைராய்டு பிரச்சனையை சரி செய்ய பல பெண்கள் பல ஆயிரம் ரூபாய்களை செலவு செய்து மருத்துவர்களை அணுகி தினசரி மாத்திரைகளை போட்டு சலித்து போய் இருப்பார்கள்.

      தைராய்டு என்பது கழுத்தின் கீழ் பகுதியின் நடுவில் இருக்கும் ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி. இது ஒரு சிறிய உறுப்பு என்றாலும், அது நம் உடலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சுரப்பி தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்கிறது, இது வளர்சிதை மாற்றத்தை சீராக்க உதவுகிறது. ஆனால், அதில் தொந்தரவு ஏற்பட்டால், சோர்வு, முடி உதிர்தல், உடல் எடை அதிகரிப்பு, சளி போன்ற பல அறிகுறிகள் தோன்றத் தொடங்கும்.

    தைராய்டு நோயின் அறிகுறிகளை நிர்வகிப்பதில் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. சத்தான மற்றும் சமச்சீரான உணவு தைராய்டு பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவாது, ஆனால் சரியான மருந்தை எடுத்துக் கொண்டால், அறிகுறிகளை கண்டிப்பாக குறைக்கலாம். அயோடின், கால்சியம் மற்றும் வைட்டமின் டி போன்ற சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் இதன் அறிகுறிகளைக் குறைக்க உதவும். தைராய்டில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும் பானம் பற்றி தெரிந்து கொள்வோம்.

     வீட்டு வைத்தியம்

    தைராய்டு பிரச்சனையை சரி செய்ய எளிய வீட்டு வைத்தியங்கள் உள்ளது. இதை நீங்கள் சரியான அணுகு முறையில் செய்து வந்தால் தைராய்டு நோய் பிரச்சனைகளில் இருந்து சில காலங்களில் விடுபடலாம்.

    தேவையான பொருட்கள்:

    கொத்தமல்லி இலைகள்- ஒரு கைப்பிடி

    மாதுளை- 1

    கேரட்- 1

    பூசணி விதைகள்- 1 டீஸ்பூன்

    சூரியகாந்தி விதைகள்- 1 டீஸ்பூன்

    செய்முறை:

    200 மிலி தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும். விதைகளைத் தவிர அதாவது கொத்தமல்லி, கேரட், மாதுளை ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைக்க வேண்டும். இப்போது விதைகளை மேலே போட்டு அரைக்க வேண்டும். தைராய்டு ஜூஸ் தயார். இதை தைராய்டு பிரச்சனை உள்ள பெண்கள் தாராளமாக தினமும் குடிக்கலாம்.

      மற்றொரு ஜூஸ்

    தேவையான பொருட்கள்

    தண்ணீர்- 1 கிளாஸ்

    கொத்தமல்லி விதைகள்- 2 டீஸ்பூன்

    கறிவேப்பிலை- 8-10

    உலர்ந்த ரோஜா இதழ்கள்- ஒரு கைப்பிடி

    செய்முறை:

    முதலில் தண்ணீர், கொத்தமல்லி விதைகள், கறிவேப்பிலை மற்றும் உலர்ந்த ரோஜா இதழ்களை ஒரு பாத்திரத்தில் எடுத்து 5 முதல் 7 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். ஆறியதும் அல்லது வெதுவெதுப்பானதும் வடிகட்டி எடுத்து சாப்பிடலாம்.

    • பெண்ணுக்கு பலவிதமான வளர்ச்சிதை மாற்ற பிரச்சனைகள் வரலாம்.
    • தைராய்டு என்பதை சாதாரண பிரச்சனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

    குழந்தையின்மை சிகிச்சையில் தைராய்டு என்பது மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. தைராய்டை மிகப்பெரிய பிரச்சனை என்று நினைத்து கவலைப்படுகிறார்கள்.


    தைராய்டு பிரச்சனையால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

    குழந்தையின்மையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை இருக்கும் நிலையில், அதை முழுமையாக கட்டுப்படுத்தினால் அவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். அதனால் பின் விளைவுகள் எதுவும் ஏற்படாது.

    அதே நேரத்தில் தைராய்டு என்பதை சாதாரண பிரச்சனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனென்றால் தைராய்டு ஹார்மோன் நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்களின் வளர்சிதை மாற்றத்துக்கான அடிப்படையான பல விஷயங்களை கவனிக்கிறது.

    குறிப்பாக, குழந்தை பேறு என்று எடுத்துக் கொண்டால் கருமுட்டைகள், விந்தணுக்கள், கர்ப்பப்பை ஆகிய அனைத்தும் சீராக செயல்பட வேண்டும்.


    ஒரு பெண் கர்ப்பம் தரிக்கின்ற போது உருவாகிற நஞ்சு, குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான சில ஊட்டச்சத்துக்கள் ஆகிய அனைத்துமே சீராக இருக்க வேண்டும்.

    ஆனால் தைராய்டு பிரச்சனை இருந்தால் கர்ப்பம் மட்டுமல்ல, ஆரோக்கியமாக குழந்தை பேறு பெறுவது வரைக்கும் அந்த பெண்ணுக்கு பலவிதமான வளர்ச்சிதை மாற்ற பிரச்சனைகள் வரலாம்.

    எனவே கர்ப்ப காலகட்டத்தில் கண்டிப்பாக தைராய்டு என்பது ஒவ்வொரு செல்களின் வளர்சிதை மாற்றத்துக்கும் அத்தியாவசியமான ஒன்றாகும்.

    இந்த தைராய்டு குறைவதால் பல நேரங்களில் குழந்தையின்மை பிரச்சனையும் ஏற்படலாம். மேலும் தைராய்டு பாதிப்பால் குழந்தை பேறு ஏற்படும் போது கருச்சிதைவு, குறை பிரசவம், குறைபாடுள்ள குழந்தை பிறக்கலாம்.


    கர்ப்ப காலத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளான ரத்த சர்க்கரை அளவு குறைதல், வயிற்றில் குழந்தை இறப்பு, குழந்தையின் வளர்ச்சி குறைபாடுகள், பெண்களுக்கு உடல் எடை கூடுவதால் பிரச்சனை, ரத்த அழுத்தம், உப்பு சத்து ஆகிய அனைத்துமே தைராய்டு பிரச்சனை இருக்கிற பெண்களுக்கு அதிகம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

    • எந்த வயதிலும் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படலாம்.
    • ஹார்மோன் குறைபாடு, பரம்பரை நோயல்ல.

    பெண்களுக்கு எந்த வயதிலும் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படலாம். பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன்கள் சமநிலையின்மையின் அறிகுறிகள் பற்றியும், அவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

    * பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை பத்து வயது முதல் எந்த வயதிலும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஒருவருக்கு இந்த சமநிலையின்மை காரணமாக, மனச்சோர்வு, அதிக தூக்கம், உடல் எடை கூடுவது, மன உளைச்சல், தூக்கமின்மை, ஒழுங்கற்ற மாதவிடாய், தாம்பத்ய வாழ்க்கையில் ஆர்வமின்மை என பலவிதமான அறிகுறிகள் ஏற்படும்.


    * பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில், சீரான ரத்தப்போக்கு இருக்காது. முதல் இரண்டு நாட்களிலேயே ரத்தப்போக்கு நின்றுவிடுவது அல்லது மாதவிடாய் காலம் முடிந்தும் அதிகமான ரத்தப்போக்கு வெளியேறுவது போன்ற அறிகுறிகள் இருக்கும்.

    * ஹார்மோன் சமநிலையின்மை என்பது அவரவர் உடலுக்கு ஏற்றவாறு நிகழும். இதில், பொதுவான சில அறிகுறிகளை மட்டுமே கண்டறிந்து, தீர்வு காண இயலாது. எந்த சுரப்பில் சமநிலையின்மை ஏற்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கான தீர்வு காண்பதே சரியான வழிமுறை.

    * திருமணமான பெண்களுக்கு, ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம். கருத்தரிப்பதில் சிக்கல், கருவில் இருக்கும் சிசுவின் வளர்ச்சியில் குறைபாடு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

    முப்பது வயதைக் கடந்தவர்களுக்கு இதன் அறிகுறியாக உடல் பருமன் ஏற்படும். இதை, ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து, தகுந்த சிகிச்சை பெறுவது அவசியம்.

    * ஹார்மோன் குறைபாட்டால், பெண்களுக்கு பெரும்பாலும் ஏற்படும் நோய் தைராய்டு. இந்த நோயில், இரண்டு வகைகள் உண்டு. ஹைபர் தைராய்டு (Hyper thyroidism) மற்றும் ஹைபோ தைராய்டு (Hypothyroidism). ஆனால், பெண்களுக்கு பொதுவாக ஏற்படுவது தைராய்டு சுரப்பிக் குறைபாட்டால் ஏற்படும் ஹைபோதைராய்டு. ஆரம்பக் காலத்திலேயே, தகுந்த மாத்திரைகள் மூலம் இதை சரிசெய்துவிட முடியும்.

    * ஹார்மோன் குறைபாடு, பரம்பரை நோயல்ல. ஆனால், தைராய்டு போன்ற நோய், ஒருவரின் குடும்பத்தினருக்கு இருந்தால், அவர்களை சார்ந்தவர்களுக்கும் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

    * ஹார்மோன் குறைபாட்டால் பெண்களுக்கு ஏற்படும் மற்றொரு நோய் பிசிஓடி என்கிற பாலிசிஸ்டிக் ஓவரி நோய். இந்த நோயின் தாக்கத்தால், முகத்திலும் கைகளிலும் முடி வளர்வது, மனநிலை மாற்றங்கள், மன உளைச்சல், முடி உதிர்வது, எடை அதிகரிப்பு போன்ற அறிகுறிகள் இருக்கும்.


    * ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக நீரிழிவு நோயும் தாக்கலாம். நமது உடலில் தேவையான அளவில் இன்சுலின் சுரக்காதபோதுதான் இந்த நோய் ஏற்படுகிறது. ஹார்மோன் குறைபாடு காரணமாக, இந்த இன்சுலின் சுரப்பி சுரக்காமல் போகலாம். இதன் மூலம் நீரிழிவு நோய் ஏற்படலாம்.

    * பச்சைக் காய்கறிகளை அதிகமாக உண்பதும் பீட்சா, பர்கர் பதப்படுத்திய குளிர்பானங்கள், துரித உணவுகள் போன்ற உணவுகளைத் தவிர்ப்பதும் இன்றைய காலகட்டத்தில் ஹார்மோன் சமநிலையின்மையில் இருந்து ஓரளவு காக்கும்.

    ×