என் மலர்
நீங்கள் தேடியது "தைராய்டு பாதிப்பு"
- தைராய்டு சுரப்பியை கழுத்து கவசம் என்று கூறலாம்.
- அயோடின் சத்து கலந்த பொட்டுகள் அரசால் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன
நோய்களில் மிகவும் பிரபலமானது சர்க்கரை நோய். இப்பொழுது அதற்கு போட்டியாக, சமமாக தைராய்டு நோயும் பரவலாகிவிட்டது.
தைராய்டு சுரப்பியை கழுத்து கவசம் என்று கூறலாம். தைராய்டு சுரப்பி கழுத்தில் இருந்தாலும் மூளையின் கீழே இருக்கும் ஹைப்போதெலாமஸ் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகள் தான் அதை கண்ட்ரோலில் வைத்திருக்கும். உச்சி முதல் பாதம் வரை, அதாவது தலைமுடியில் இருந்து கால் நகம் வரை எல்லா உறுப்புகளின் வளர்ச்சிதை மாற்றம் தைராய்டை நம்பியிருக்கிறது.
கடல் சார்ந்த உணவுகளில் அயோடின் இருப்பதால் கடற்கரை பகுதிகளில் இருப்பவர்களுக்கு தைராய்டு நோய் வெகு அரிதாகவே வருகிறது. கடற்கரையை விட்டு விலகி இருப்பவர்களுக்கு முக்கியமாக பாலைவனப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தைராய்டு நோய் அதிகம் வரும். ஒரு சில பாறை உப்புகளில் அயோடின் சத்து இருந்தாலும் மலைப்பகுதியில் வசிப்பவர்களுக்கும் தைராய்டு நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
அதனால்தான் அரசு தைராய்டு சத்தை உப்பில் ஏற்றி உண்ண வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தி உள்ளது. மேலும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் பகுதிகளில் நெற்றியில் வைக்க அயோடின் சத்து கலந்த பொட்டுகள் அரசால் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. அது நெடு நேரம் நெற்றியில் ஒட்டியிருக்கும்போது பெண்களுக்கு தைராய்டு நோய் வருவது தவிர்க்கப்படுகிறது.
- தைராய்டு மாத்திரை மற்றும் அயோடின் எடுத்தாலே முன்கழுத்துகழலை நோய் வராமல் தடுக்கலாம்.
- பிறந்த குழந்தையின் வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருப்பது தைராய்டு ஹார்மோன்.
கர்ப்ப காலத்தில் கருக் குழந்தை வளர்ச்சிக்கு தைராய்டு ஹார்மோன் மிக மிக இன்றியமையாதது. முதல் மூன்று மாதங்கள் தாயின் தைராய்டு சுரப்பையே குழந்தை நம்பியுள்ளது. பிறகு சிறிது சிறிதாக கரு குழந்தையின் தைராய்டு சுரப்பி வேலை செய்யத்தொடங்கும்.
கர்ப்பம் உறுதியான உடனேயே தைராய்டு பரிசோதனை செய்ய வேண்டும்.
ராதா தன்னுடைய முதல் கர்ப்பத்தில் இருக்கிறார். மிகவும் சந்தோஷம் திருமணம் ஆகி முதல் வருடத்திலேயே குழந்தை உண்டானது. மருத்துவரிடம் சென்றதும் கர்ப்பத்தை ஸ்கேனில் உறுதி செய்த பின் ரத்த பரிசோதனை செய்தனர்.
ரிப்போர்ட்ஸ் வந்த பிறகு டாக்டர் அவர்களை வரச் சொல்லி இருந்தார்.
அடுத்த நாள் பரிசோதனை முடிவுகள் வாட்ஸ் அப்பில் வந்துவிட்டன. ராதாவும் அவர் கணவரும் பரிசோதனை முடிவுகளை அவர்களே ஒப்பிட்டு பார்த்து எல்லாமே சரியாக இருக்கிறது என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
ராதாவும் கணவரும் அவர்களே பரிசோதனை முடிவுகளை பார்த்து விட்டதால், அடுத்த ஸ்கேன் இரண்டு வாரம் கழித்து தானே! அப்போது சென்று டாக்டரை பார்க்கலாம் என்று ஒத்திப்போட்டனர். இரண்டு வாரம் கழித்து மருத்துவரிடம் சென்றனர். ராதாவின் கணவர் " டாக்டர்! ரிசல்ட் எல்லாவற்றையும் நானே பார்த்து விட்டேன். எல்லாமே சரியாகத்தான் இருக்கிறது. நீங்களும் அதை ஒப்புக்கொள்வீர்கள் "என்று நம்புகிறேன்" என்று கூறினார்.
டாக்டர் "மிகவும் வருத்தமாக இருக்கிறது படித்தவர்களே இவ்வாறு செய்கிறீர்கள்! கர்ப்ப காலத்தில் எடுக்கப்படும் ரத்த அளவுகள் முற்றிலும் மாறுபட்டிருக்கும். நீங்கள் பார்க்கும் போது எல்லாம் நார்மல் போல தெரிந்தாலும் இவருக்கு தைராய்டு குறைபாடு உள்ளது. கட்டாயம் தைராய்டு மாத்திரை எடுக்க வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை கட்டாயம் தைராய்டு பரிசோதனை செய்ய வேண்டும். பிரசவமான பிறகு மீண்டும் தைராய்டு டெஸ்ட் செய்துவிட்டு தேவைப்பட்டால் தொடரலாம். இல்லை என்றால் நிறுத்திக் கொள்ளலாம் என்று கூறினார்.

ஜெயஸ்ரீ சர்மா
டி.எஸ்.ஹெச் சாதாரண ஒருவருக்கு இருப்பதை விட பாதி அளவு தான் கர்ப்பிணிகளுக்கு இருக்க வேண்டும். அந்த அளவுக்கு கர்ப்ப காலத்தில் பரிசோதனை முடிவுகள் மாறுபடும்.
எனவே கர்ப்பகாலத்தில் லேபில் கொடுக்கப்படும் ரிசல்டுகளை பார்த்துவிட்டு நீங்களாகவே முடிவு செய்ய வேண்டாம்.
பிறந்த குழந்தைகளுக்கு வரும் தைராய்டு குறைபாடு
பிறந்த குழந்தையின் வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருப்பது தைராய்டு ஹார்மோன். அதனால் தான் பிறந்த குழந்தைகளுக்கு தைராய்டு பரிசோதனை செய்யப்படுகிறது. பரம்பரை நோயாக ஒரு சில குழந்தைகளுக்கு பிறந்த உடனேயே தைராய்டு குறைபாடு ஏற்படலாம். இதனால் குழந்தையின் அடுத்தடுத்த வளர்ச்சி படிகளான, 'முகம் பார்த்து சிரிப்பது, குப்புற விழுவது, தவழுவது, உட்காருவது, நிற்பது, நடப்பது, வார்த்தைகளை பேசுவது, என்று எல்லாவற்றிலும் தாமதமாகலாம். எனவே பிறந்த குழந்தைகளுக்கு செய்யப்படக்கூடிய முக்கியமான பரிசோதனைகளில் தைராய்டும் ஒன்று.
மெனோபாஸில் வரும் தைராய்டு நோய்
மெனோபாஸ் (மாதவிலக்கு நின்று போகுதல்).அந்த நேரத்திலும் தைராய்டு சுரப்பில் மாற்றம் ஏற்படும். தைராய்டு குறைபாடு ஏற்படும். அதனால் மாதவிலக்கு நின்றவர்கள் ஒருமுறை மருத்துவரிடம் சென்று உடலை முழுமையாக பரிசோதித்து கொள்வது நல்லது. குறைவான சுரப்பு உள்ளவர்கள் தைராய்டு மாத்திரை எடுத்துக் கொண்டால் மனோபாஸ் காலத்தில் வரும் பல பிரச்சனைகளுக்கு அது தீர்வாக இருக்கலாம்.
முன் கழுத்து கழலை கட்டி (காய்ட்டர்) எப்படி வருகிறது?
அயோடின் சத்து குறைபாடு அல்லது தைராய்டு ஹார்மோன் குறைபாட்டால், தைராய்டு சுரப்பி அதிகமாக சுரக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறது. தொடர்ந்து தலைமை சுரப்பியிலிருந்து வரும் "தைராய்டு தூண்டி ஹார்மோன்" தைராய்டு சுரப்பியை மேலும் மேலும் வளரச் செய்து தேவையான அளவு தைராய்டு சுரக்கும்படி கட்டளை இடுகிறது. அதனால் கழுத்தில் தைராய்டு கட்டி காயிட்டர் உருவாகிறது. தைராய்டு மாத்திரை மற்றும் அயோடின் எடுத்தாலே முன்கழுத்துகழலை நோய் வராமல் தடுக்கலாம்.
தைராய்டு இருப்பவர்கள்என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது? எது சாப்பிடலாம்?
பொதுவாக எல்லோரும் நினைப்பது தைராய்டு வந்து விட்டாலே பெரிய பட்டியலிட்டு இந்த காயெல்லாம் சாப்பிடக்கூடாது என்று.ஆனால் உண்மையில் அப்படி அந்த பட்டியலில் எந்த காயும் இல்லை. ஒரு சில க்ரூஸிபிரஸ் என்று சொல்லக்கூடிய காய் வகைகளை பச்சையாக உண்ணுவது தைராய்டுக்கு ஏற்றதல்ல. எடுத்துக்காட்டாக காலிபிளவர் முட்டைக்கோஸ், புரோக்கலி மற்றும் சோயா உணவுகள். இவற்றை சமைத்து சாப்பிடலாம். இது தவிர எந்த விதமான கடினமான உணவு பத்தியமும் தைராய்டுக்கு தேவை இல்லை.
கடல் சார்ந்த உணவுகளில் அயோடின் இருப்பதால் கடற்கரை பகுதிகளில் இருப்பவர்களுக்கு தைராய்டு நோய் வெகு அரிதாகவே வருகிறது. கடற்கரையை விட்டு விலகி இருப்பவர்களுக்கு முக்கியமாக பாலைவனப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தைராய்டு நோய் அதிகம் வரும். ஒரு சில பாறை உப்புகளில் அயோடின் சத்து இருந்தாலும் மலைப்பகுதியில் வசிப்பவர்களுக்கும் தைராய்டு நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
அதனால்தான் அரசு தைராய்டு சத்தை உப்பில் ஏற்றி உண்ண வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தி உள்ளது. மேலும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் பகுதிகளில் நெற்றியில் வைக்க அயோடின் சத்து கலந்த பொட்டுகள் அரசால் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. அது நெடு நேரம் நெற்றியில் ஒட்டியிருக்கும்போது பெண்களுக்கு தைராய்டு நோய் வருவது தவிர்க்கப்படுகிறது.
பெரும்பாலும் வெகு அரிதாகவே ஏற்படும். மீன் மற்றும் கடல்பாசிகளில் அயோடின் சத்து நிறைந்திருப்பதால் கடல் சார்ந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அயோடின் குறைபாட்டால் வரும் தைராய்டு வருவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு மற்றும் பால் பொருட்களிலும் அயோடின் சத்து நிறைந்துள்ளது.
தைராய்டு மாத்திரையின் பக்க விளைவுகள் என்ன?
தைராய்டு மாத்திரைக்கு பெரியதாக ஒன்றும் பக்கவிளைவுகள் இல்லை. ஆனால் 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது தைராய்டு ரத்த பரிசோதனை செய்து மருத்துவரிடம் காண்பித்து மாத்திரையின் அளவு சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
வாட்ஸ்அப்: 8925764148
- தைராய்டு டெஸ்ட் எடுத்தால் மாத்திரைகளை, உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்று பிறகு முடிவு செய்யுங்கள்
- தைராய்டு குறைவாக சுரப்பது ஹைப்போ தைராய்டு எனப்படுகிறது.
நோய்களில் மிகவும் பிரபலமானது சர்க்கரை நோய். இப்பொழுது அதற்கு போட்டியாக, சமமாக தைராய்டு நோயும் பரவலாகிவிட்டது. தைராய்டு சுரப்பி எங்கே இருக்கிறது? தைராய்டு என்பது லத்தீன் சொல். அதனுடைய பொருள் கவசம் என்பதாகும்.
தைராய்டு சுரப்பியை கழுத்து கவசம் என்று கூறலாம். பெண்கள் சோக்கர் எனப்படும் நெக்லஸ் அணியுமிடமே தைராய்டு சுரப்பியின் இடம். மூச்சு குழலின் மேல் ஒரு பட்டாம்பூச்சி வடிவத்தில் ஒட்டி இருக்கும் கவசம் என்று சொல்லலாம்.
எப்படி வேலை செய்கிறது?
தைராய்டு சுரப்பி கழுத்தில் இருந்தாலும் மூளையின் கீழே இருக்கும் ஹைப்போதெலாமஸ் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகள் தான் அதை கண்ட்ரோலில் வைத்திருக்கும்.
உச்சி முதல் பாதம் வரை, அதாவது தலைமுடியில் இருந்து கால் நகம் வரை எல்லா உறுப்புகளின் வளர்ச்சிதை மாற்றம் தைராய்டை நம்பியிருக்கிறது.
தைராய்டு நோய் இவ்வளவு அதிகரிப்பதற்கு என்ன காரணம்?
நம்முடைய உணவு முறை, வாழ்க்கை முறை மாற்றமே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. எந்த சத்துமில்லாமல், வயிற்றை அடைக்கும் குப்பை உணவுகளால் அயோடின் சத்து குறைபாடு அதிகரித்து விட்டது. தைராய்டு எதிர்ப்பு நோய்களும் அதிகமாகிவிட்டன. இன்னொரு காரணம் விழிப்புணர்வு அதிகமாக இருப்பதால், கண்டுபிடிப்பதும் அதிகமாக உள்ளது.
தைராய்டு நோய் வகைகள் என்ன?
தைராய்டு குறைவாக சுரப்பது ஹைப்போ தைராய்டு எனப்படுகிறது. இதுதான் மிகவும் அதிகமாக காணப்படும் தைராய்டு நோய். தேவையை விட அதிகமாக சுரப்பது ஹைப்பர் தைராய்டு எனப்படுகிறது.
என்ன அறிகுறிகள் இருக்கும்?
ஹைப்போ தைராய்டு: மந்தநிலை, எதையும் சுறுசுறுப்பாக இவர்களால் சிந்தித்து செய்ய முடியாது. எப்போதும் ஒரு சோம்பேறித்தனம் இருக்கும். தலைமுடி கொட்டுதல், உடல் முழுவதும் நீர் அடித்தல் (வீக்கம்), குறிப்பாக கால்களில் வீக்கம், இதயத்துடிப்பு குறைவது, மூச்சு விடுவதில் சிரமம், ஜீரண மண்டலத்தில் மந்த தன்மை - பசி எடுக்காது. சில நாட்களுக்கு ஒரு முறையே மலம் கழிப்பது, பெண்களாக இருந்தால் அவர்களுக்கு மாதவிடாய் ஒழுங்கற்று இருப்பது பல மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே மாதவிடாய் உண்டாகும். குழந்தை கருத்தரிப்பது தடைபடும். தடைபடலாம் ஆண்களுக்கும் விந்தணுக்களை பாதிக்கும். எடை அதிகரிக்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும். பொதுவாக எதிர்ப்பு சக்தி குறையும்.
ஹைப்பர் தைராய்டு
தைராய்டு அதிகமாக சுரந்தால் அவர்கள் இளைத்துக் கொண்டே போவார்கள். கண்முழி துருத்திக் கொண்டிருக்கும். இதய துடிப்பு அதிகமாக இருக்கும். அடிக்கடி மலம் கழிக்கும் உணர்வு ஏற்படும். கரு தங்குவதில் சிக்கல் ஏற்படும்.

இதை எப்படி கண்டுபிடிப்பது?
தைராய்டு ரத்த பரிசோதனை செய்தாலே போதும். தேவைப்பட்டால் தைராய்டு ஸ்கேன் மற்றும் கட்டி எதுவும் இருந்தால் அதிலிருந்து சதை எடுத்து பயாப்ஸி செய்யப்படும்.
எப்படி சரி செய்வது?
அயோடின் சத்து குறைபாட்டால் வரும் தைராய்டுக்கு அயோடின் சத்து மாத்திரைகள் தரப்படும். தைராய்டு மாத்திரையும் தரப்படும். தைராய்டு மாத்திரை காலையில் சாப்பிடும் முன்பாக எடுக்க வேண்டும். அப்போதுதான் ரத்தத்தில் நன்றாக சேரும்.
ராதா 35 வயது பெண்மணி
ரத்தத்தில் ஹீமோகுளோபின், ஏறவே இல்லை. தலைமுடி வேறு, வேர் வேராக கொட்டிக் கொண்டிருந்தது. பிறகு அவருக்கு தைராய்டு குறைவாக சுரப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆறு மாதமாக மாத்திரை எடுக்கிறார்.
காலை எழுந்ததும் 50 மைக்ரோகிராம் தைராய்டு மாத்திரையை விழுங்கி விட்டு அரை மணி நேரம் கழித்து அவருடைய காபியை குடிப்பார்.
ஆறு மாதத்துக்கு ஒரு முறை மருத்துவர் தைராய்டு ரத்தப் பரிசோதனை செய்யும்படி கூறியிருக்கிறார். நேற்றுதான் டெஸ்ட் எடுத்திருந்தார். இன்று மொபைலில் அவருக்கு ரிப்போர்ட் வந்திருந்தது.
அவருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ஏனென்றால் வந்திருந்த மூன்று தைராய்டு எண்ணிக்கைகளும் ( டி3, டி4, டி.எஸ். ஹெச்)சரியான லெவலில் இருந்தன.
சரி! நமக்கு தைராய்டு சரியாகி விட்டது! இனி மாத்திரை வேண்டாம் என்று மாத்திரை டப்பாவை எடுத்து எங்கோ தூக்கி எறிந்தவர் தான்.
மொத்தமாக மறந்துவிட்டார். ஒரு மாதம் ஓடி விட்டது.
மெதுவாக பழைய பிரச்சினைகள் தலை தூக்க ஆரம்பித்தன. முடி மீண்டும் கொட்ட ஆரம்பித்தது.
இப்போது மருத்துவரிடம் சென்றார்.
"டாக்டர்! நீங்க கொடுத்த மருந்து கொஞ்ச நாளைக்கு தான் வேலை செஞ்சு இருக்கு. இப்ப எனக்கு எல்லா பிரச்சனையும் திரும்ப ஆரம்பிச்சிருச்சு. "
என்று வருத்தத்துடம் அங்கலாய்த்தார்.
மருத்துவர் விளக்கியதும் தான் அவருக்கு புரிந்தது. தைராய்டு சுரப்பி குறைவாக சுரப்பது என்பது பெரும்பாலானவர்களுக்கு முழுமையாக சரியாகாது. அவர்கள் தொடர்ந்து தைராய்டு மாத்திரைகள் எடுக்க வேண்டும். தைராய்டு பரிசோதனையில் எல்லாம் சரியாக வந்தால் அதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? நீங்கள் எடுக்கும் மாத்திரை போதுமான அளவு உள்ளது என்பதுதான். தைராய்டு சரியாகிவிட்டது என்று அல்ல.
எனவே, தைராய்டு டெஸ்ட் எடுத்தால் மாத்திரைகளை, உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்று பிறகு முடிவு செய்யுங்கள்!
தைராய்டு குறித்த உணவுகள், அடுத்த வாரம்!
- தைராய்டு அதிகம் பெண்களிடையே நிலவுகிறது.
- மனித உடலுக்கு தைராய்டு சுரப்பி ஒரு பேட்டரி போன்றது.
தைராய்டு நோய் உண்டானவர்களுக்கு இருக்கும் பிரச்சினை என்னவென்றால் அதனால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேருக்குத் தங்களுக்கு பாதிப்பு இருப்பதே தெரியாது. இது அதிகம் பெண்களிடையே நிலவுகிறது. கருவுற்றிருக்கும் பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற பெண்களுக்கு மகப்பேறுக்கு பிந்தைய முதல் மூன்று மாத காலத்தில் 44.3 சதவீதம் பேருக்கு தைராய்டு சுரப்பி குறைபாடு உண்டாகிறது.

தைராய்டு என்றால் என்ன?
தைராய்டு என்பது மனிதர்களின் கழுத்தில் இருக்கும் பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியாகும். மூளை, இதயம், தசைகள் மற்றும் பிற உறுப்புகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான ஹார்மோன்களை தைராய்டு சுரப்பி வெளியிடுகிறது. உடல் தனக்குக் கிடைக்கும் ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளவும் கதகதப்புடன் வைத்துக் கொள்ளவும் இது உதவுகிறது.
ஒரு வகையில் மனித உடலுக்கு தைராய்டு சுரப்பி ஒரு பேட்டரி போன்றது. ஒருவேளை இந்த சுரப்பி ஹார்மோன்களை குறைவாகவோ கூடுதலாகவோ சுரந்தால் தைராய்டு நோய்க்கான பிரச்னை உண்டாகிறது.
மனித உடலுக்குத் தேவையான அளவு ஹார்மோன் தைராய்டு சுரப்பியால் சுரக்கப்படாவிட்டால் இது ஹைப்போ-தைராய்டிசம் எனப்படுகிறது. சொல்லப்போனால் பொம்மையில் பேட்டரி தீர்ந்து போனது போலத்தான். ஹைபோ-தைராய்டிசம் வந்தால் மனித உடலில் எந்த அளவு ஆற்றலுடன் இயங்க முடியுமா அதை விடக் குறைவாகவே இயங்கும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் அயர்ச்சி அடைந்துவிடுவார்கள்.
ஒருவேளை தைராய்டு சுரப்பி அதிகமாக சுரந்தால் அது ஹைப்பர்-தைராய்டிசம் எனப்படுகிறது. இவர்கள் அதிகளவில் 'காஃபைன் ' எடுத்துக் கொண்டவர்களைப் போன்றவர்கள். அதாவது அதிக பசி, அதிக வியர்வை போன்றவை உண்டாகும்.
மூன்றாவது பாதிப்பு தைராய்டு சுரப்பி வீக்கமடைவது. 'கழுத்துக் கழலை' எனும் இந்த குறைபாடு 'Goiter' என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. மருந்துகளால் தீர்க்க முடியாவிட்டால் இதற்கு நிச்சயம் அறுவை சிகிச்சை தேவை.
ஹைப்போ-தைராய்டிசம் அறிகுறிகள்:
உடல் பருமன் அடைவது, முகம், கால்கள் ஆகியவை வீக்கமடைவது, சோர்வாகவும் சுறுசுறுப்பின்றியும் உணர்வது, பசி இல்லாமல் போவது, அதீத தூக்க உணர்வு, அதிகமாகக் குளிர்வது போன்ற உணர்வு, பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் மாற்றம், முடி உதிர்தல் பிரச்னை போன்றவை ஹைப்போ-தைராய்டிசம் நோய்க்கான அறிகுறிகள்.

ஹைப்பர்-தைராய்டிசம் அறிகுறிகள்:
போதுமான அளவு பசியிருந்தும் நல்ல உணவுகளை உட்கொண்டாலும் உடல் எடை குறைதல், கை - கால் நடுக்கம், திடீர் திடீரென மனநிலை மாறுவது, கொஞ்சம் வெயில் அடித்தாலும் தாங்கிக் கொள்ள முடியாமல் போவது, உறக்கத்தின்போது மூச்சு சீரற்று இருப்பது, இதயத்துடிப்பு சீரற்று இருப்பது, கண் பார்வை மங்குவது, மூளை மூட்டம் உள்ளிட்டவை ஹைப்பர்-தைராய்டிசம் குறைபாட்டின்
அறிகுறிகள். தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாமல் போனால் அதைக் கண்டுபிடிக்க, அதற்கென குறிப்பிட்ட அறிகுறிகள் என்று எதுவும் தனியாக இல்லை.
தைராய்டு குறைபாடு உள்ளவர்களில் 10 சதவீதம் பேருக்கு ஹைப்போ-தைராய்டிசம் இருக்கும். ஆனால் அவர்களில் பாதி பேருக்குத்தான் அப்படியொரு குறைபாடு இருப்பதே தெரியவருகிறது. ஆண்கள், பெண்கள் ஆகிய இருவருக்குமே இதற்கான அறிகுறிகள் ஒன்றாக இருந்தாலும் பெண்களுக்கே விரைவில் இந்த நோய் கண்டறியப்படுகிறது.
வழக்கமாக 80 முதல் 90 சதவீதம் தைராய்டு நோயாளிகள் சிகிச்சைக்குப் பின்பு குணமடைகிறார்கள். ஆனால், சிலருக்கு இது முற்றிலும் குணமாவதில்லை. தைராய்டு பிரச்னை ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம் உண்டாகிறது.

T3, T4, TSH ஹார்மோன்கள் - தைராய்டு நோயுடன் என்ன தொடர்பு?
ஹைபோ தைராய்டிசம் என்றால் T3 (ட்ரை-அயோடோதைரோனைன்), T4 (தைராக்சின்) ஆகிய ஹார்மோன்கள் குறையும் என்று பொருள். அதே சமயத்தில் TSH (தைரோட்ரோபின்) ஏனும் ஹார்மோனின் அளவு அதிகரிக்கும். பிற ஹார்மோன்கள் எவ்வாறு செயலாற்றுகின்றன என்பதை இந்த ஹார்மோன் கட்டுப்படுத்துகிறது என்பதால் இது தைராய்டு ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் (TSH) என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.
குடும்பத்தில் யாருக்கேனும் தைராய்டு குறைபாடு இருந்தால் அவர்கள் குழந்தைகளுக்கும் அந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், இதைத் தடுப்பதற்கு எந்த வழிமுறையும் இல்லை. பிரச்னை உண்டான பின்னரே சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும்.
ஹைப்போ-தைராடிசம் உண்டானால் தைராய்டு ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் தைராய்டு சுரப்பியால் அதிகம் சுரக்கப்படும் என்பதால் இதயத்துடிப்பு விகிதத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும். இதன் காரணமாக பல பிரச்னைகள் உண்டாகும்.
இதேபோல ஹைப்போ-தைராய்டிசம் சரியான நேரத்தில் கண்டறியப்படவில்லை என்றால் சில நேரங்களில் மூளையில்கூட பிரச்னை உண்டாகும். அது மட்டுமல்லாமல் உடலில் சோடியம் அளவு குறைந்து பாதிக்கப்பட்ட நபர் கோமா செல்வதற்கும் கூட வாய்ப்புண்டு.






