என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கதம்பம்
X
உடலை குளிர்விக்கும் மருத்துவ குளியல்
Byமாலை மலர்25 May 2022 10:53 AM GMT (Updated: 25 May 2022 10:53 AM GMT)
மருதாணி போட்டுக் கொள்ள பிடிக்காத ஆளே இருக்க முடியாது, மருதாணியை இரு பாதங்கள் மற்றும் கைகளில் போட்டுக் கொள்வதால், உடல் குளிர்ச்சி அடைகிறது. உடலும் மனமும் இளமையடைகிறது.
பொதுவாக வெயில் காலத்தில், அம்மை நோய், மஞ்சள் காமாலை, தோல் நோய், வேர்க்குரு, கட்டி, முகப்பரு, பைல்ஸ், உறக்கத்தில் விந்தணுக்கள் வெளியேற்றம் போன்ற வெப்பம் சார்ந்த வியாதிகளும், மூட்டு வலி நரம்புத்தளர்ச்சி போன்ற வாதம் சார்ந்த வியாதிகளும், தட்பவெப்ப நிலை காரணமாக தூக்கமின்மை, மன அழுத்தம் சார்ந்த வியாதிகளும் ஏற்படுவது இயற்கையே.
வெயில் காலத்தில் நாம் செய்ய வேண்டியவை...
காலைக் கடன்களை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னரே கழித்து விட்டு, அரைமணி நேரம் வியர்வை வரும் வரை நடைபயிற்சி செய்திடல் வேண்டும். வியர்வையின் வழியாக, உடலில் உள்ள நச்சுத்தன்மை (கழிவுகள்) வெளியேறும் ஆகையால், தோல் சார்ந்த நோய்கள் குணமாகும்.
வியர்வையில் நனைந்த உடனே, தண்ணீர் அருந்தவோ, குளிக்கவோ கூடாது. ஏன் எனில், வியர்வை என்பதே உடலை குளிர்விக்கும் நிகழ்வு தான். அதற்கு பிறகு நீர் அல்லது மோர் அருந்தினாலோ குளித்தாலோ, உடல் மேலும் குளுமை அடைந்து சளி பிடிக்கவும் நீர் கோர்த்துக் கொண்டு தலைவலி வரவும் வாய்ப்புகள் அதிகம். ஆதலால் வியர்வை அடங்கும் வரை நிழலில் காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து வியர்வை நின்ற உடன் உங்களுக்கு வேண்டியதை பருகலாம்.
வெயில் காலத்தில் பொதுவாகவே பசியின் அளவு குறைந்தும் தாகத்தின் அளவு அதிகமாகவும் இருக்கும். அதனால் இயன்றவரை ஒருவேளை உணவாக பழைய சாதம், நீர் ஆகாரம், பழங்கள், பழச்சாறுகள், கம்பு, கேழ்வரகு கூழ், நீர் மோர், இளநீர், பதநீர் சாப்பிடுங்கள்.
இதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்துவிடும், வெயில் காலத்தில் நிகழும் நீர் பற்றாக்குறையில் இருந்தும், அஜீரண கோளாறுகளில் இருந்தும், உடல் உஷ்ணம் ஆவதில் இருந்தும், மலச்சிக்கலில் இருந்தும் பாதுகாக்கும்.
அதிசயம் செய்யும் குளியல் முறைகள்: -
வெந்தயக் குளியல்
ஒரு கைப்பிடி வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊற வைத்து மறுநாள் அதை நன்கு மை போல் அரைத்து, தலை முதல் கால்வரை பூசி அரைமணி நேரம் ஊற வைத்து பிறகு குளிக்க வேண்டும்.
கற்றாழைக் குளியல்:
கற்றாழையின் மேல் தோலை சீவி விட்டு, அதில் உள்ள சதைப் பகுதியை சுத்தமான தண்ணீரில் அலச வேண்டும். ஏழு அல்லது எட்டு முறை தண்ணீரை மாற்றி அலசும் போது தான், அதில் உள்ள பிசுபிசுப்பு தன்மை குறையும். பின்னர் அதை அரைத்து உடலில் தலைமுதல் கால்வரை பூசி 15 நிமிடங்கள் ஊற வைத்த பிறகு குளிக்க வேண்டும்.
நெல்லிக்காய் குளியல்:
தேவையான அளவு நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுத்து, தலைமுதல் கால்வரை பூசி 15 நிமிடங்கள் ஊற வைத்த பிறகு குளிக்க வேண்டும். நெல்லிக்காய் குளியல் மட்டும் மதியம் 11 முதல் 3 வரை அதாவது சூரிய ஒளி உச்சத்தில் இருக்கும் நேரத்தில் மட்டும் குளித்தல் வேண்டும்.
மேற்கூறிய குளியல் முறைகளால், உடல் சூடு குறைவதை கண்கூடாகக் காணலாம். தலைமுடி உதிர்வது குறையும், மன அழுத்தம் மனபாரம் குறையும். மேனி பளபளப்பாகவும் வசீகரமாகவும் மாறும். தொடர்ச்சியாக வாரம் ஒரு முறை என்று செய்து வந்தால், மேற்கூறிய உடல் உஷ்ணம் சார்ந்த வியாதிகள் வராமல் காக்கும். ஏற்கனவே உடல் சூடு சார்ந்த வியாதிகள் உள்ளவர்களுக்கு இந்த வியாதிகள் அதிகரிக்காமல் தடுக்கப்படுவதோடல்லாமல் நாளடைவில் வியாதியின் தாக்கம் குறையும்.
இந்த குளியல் முறைகளை, பதினைந்து வயது முதல் 70 வயது வரை உள்ள அனைத்து பாலினரும் செய்யலாம்.
வெயில் காலத்தில் கூடுமானவரை, தளர்வான ஆடைகளை மட்டுமே அணியுங்கள். பெண்களுக்கு ஏற்படும் கர்பப்பை நீர் கட்டி மற்றும் மாதவிடாய் கோளாறுகளுக்கும், ஆண்களுக்கு ஏற்படும் விந்தணுக்கள் சார்ந்த குறைபாடுகளுக்கும் அவர்கள் அணியும் இறுக்கமான ஆடைகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.
வெயில் காலத்தில் நாம் செய்ய வேண்டியவை...
காலைக் கடன்களை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னரே கழித்து விட்டு, அரைமணி நேரம் வியர்வை வரும் வரை நடைபயிற்சி செய்திடல் வேண்டும். வியர்வையின் வழியாக, உடலில் உள்ள நச்சுத்தன்மை (கழிவுகள்) வெளியேறும் ஆகையால், தோல் சார்ந்த நோய்கள் குணமாகும்.
வியர்வையில் நனைந்த உடனே, தண்ணீர் அருந்தவோ, குளிக்கவோ கூடாது. ஏன் எனில், வியர்வை என்பதே உடலை குளிர்விக்கும் நிகழ்வு தான். அதற்கு பிறகு நீர் அல்லது மோர் அருந்தினாலோ குளித்தாலோ, உடல் மேலும் குளுமை அடைந்து சளி பிடிக்கவும் நீர் கோர்த்துக் கொண்டு தலைவலி வரவும் வாய்ப்புகள் அதிகம். ஆதலால் வியர்வை அடங்கும் வரை நிழலில் காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து வியர்வை நின்ற உடன் உங்களுக்கு வேண்டியதை பருகலாம்.
வெயில் காலத்தில் பொதுவாகவே பசியின் அளவு குறைந்தும் தாகத்தின் அளவு அதிகமாகவும் இருக்கும். அதனால் இயன்றவரை ஒருவேளை உணவாக பழைய சாதம், நீர் ஆகாரம், பழங்கள், பழச்சாறுகள், கம்பு, கேழ்வரகு கூழ், நீர் மோர், இளநீர், பதநீர் சாப்பிடுங்கள்.
இதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்துவிடும், வெயில் காலத்தில் நிகழும் நீர் பற்றாக்குறையில் இருந்தும், அஜீரண கோளாறுகளில் இருந்தும், உடல் உஷ்ணம் ஆவதில் இருந்தும், மலச்சிக்கலில் இருந்தும் பாதுகாக்கும்.
அதிசயம் செய்யும் குளியல் முறைகள்: -
வெந்தயக் குளியல்
ஒரு கைப்பிடி வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊற வைத்து மறுநாள் அதை நன்கு மை போல் அரைத்து, தலை முதல் கால்வரை பூசி அரைமணி நேரம் ஊற வைத்து பிறகு குளிக்க வேண்டும்.
கற்றாழைக் குளியல்:
கற்றாழையின் மேல் தோலை சீவி விட்டு, அதில் உள்ள சதைப் பகுதியை சுத்தமான தண்ணீரில் அலச வேண்டும். ஏழு அல்லது எட்டு முறை தண்ணீரை மாற்றி அலசும் போது தான், அதில் உள்ள பிசுபிசுப்பு தன்மை குறையும். பின்னர் அதை அரைத்து உடலில் தலைமுதல் கால்வரை பூசி 15 நிமிடங்கள் ஊற வைத்த பிறகு குளிக்க வேண்டும்.
நெல்லிக்காய் குளியல்:
தேவையான அளவு நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுத்து, தலைமுதல் கால்வரை பூசி 15 நிமிடங்கள் ஊற வைத்த பிறகு குளிக்க வேண்டும். நெல்லிக்காய் குளியல் மட்டும் மதியம் 11 முதல் 3 வரை அதாவது சூரிய ஒளி உச்சத்தில் இருக்கும் நேரத்தில் மட்டும் குளித்தல் வேண்டும்.
மேற்கூறிய குளியல் முறைகளால், உடல் சூடு குறைவதை கண்கூடாகக் காணலாம். தலைமுடி உதிர்வது குறையும், மன அழுத்தம் மனபாரம் குறையும். மேனி பளபளப்பாகவும் வசீகரமாகவும் மாறும். தொடர்ச்சியாக வாரம் ஒரு முறை என்று செய்து வந்தால், மேற்கூறிய உடல் உஷ்ணம் சார்ந்த வியாதிகள் வராமல் காக்கும். ஏற்கனவே உடல் சூடு சார்ந்த வியாதிகள் உள்ளவர்களுக்கு இந்த வியாதிகள் அதிகரிக்காமல் தடுக்கப்படுவதோடல்லாமல் நாளடைவில் வியாதியின் தாக்கம் குறையும்.
இந்த குளியல் முறைகளை, பதினைந்து வயது முதல் 70 வயது வரை உள்ள அனைத்து பாலினரும் செய்யலாம்.
மருதாணி போட்டுக் கொள்ள பிடிக்காத ஆளே இருக்க முடியாது, மருதாணியை இரு பாதங்கள் மற்றும் கைகளில் போட்டுக் கொள்வதால், உடல் குளிர்ச்சி அடைகிறது. உடலும் மனமும் இளமையடைகிறது. கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும்.
-முனைவர் பா. ஜெயப்ரசாத்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X