search icon
என் மலர்tooltip icon

    மற்றவை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.
    • தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    முட்டை கோஸ் கீரை வகையைச் சேர்ந்தது. இதன் கொழுந்து உருண்டையாகக் காணப்படும். இதனையோ உணவாகப் பயன்படுத்துகிறோம்.

    இதில் உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு ஊட்டம் தரும் உணவாகும். உடல் வளர்ச்சிக்கு முட்டை கோஸ் மிகவும் சிறந்தது.

    முட்டைகோஸின் மேல் பகுதியில் மூடியிருக்கும் முற்றிய காய்ந்த இலைகளை நீக்கிவிட்டு சிறிதாக நறுக்கி பாசிப்பயறுடன் சேர்த்து கூட்டாகவோ அல்லது பொரியலாகவோ செய்து சாப்பிடலாம்.

    முட்டைகோஸ் உண்பதால் ஏற்படும் நன்மைகள்:

    கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும். இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது.

    மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும்.

    சரும வறட்சியை நீக்கும். சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.

    வியர்வைப் பெருக்கியாக செயல்படும். சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும்.

    எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.

    பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.

    நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.

    தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும்.

    உடல் சூட்டைத் தணிக்கும். நாள்பட்ட மலச்சிக்கலைப் போக்கும். குடல் சளியைப் போக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

    தலைமுடி உதிர்வதைக் குறைக்கும். மயிர்க்கால்களுக்கு பலம் கொடுக்கும்.

    முட்டைகோஸின் பயன்களை அறிந்து அதனை நம் உணவில் சேர்த்து நீண்ட வாழ்நாளைப் பெறுவோமாக..!

    - கூத்தன் செந்தமிழ்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒன்பது வயதுச் சிறுவன் அதை அப்படியே மனதுள் பதித்துக் கொண்டான்.
    • ரஷிய கம்யூனிஸ்ட். சர்வாதிகார அடக்குமுறையை மீறியும் அவன் உலகம் முழுதும் தெரிந்தான்.

    ரஷியாவைச் சேர்ந்த தத்துவ ஞானி ஜார்ஜ் குர்ட்ஜெஃப். அவருக்கு ஒன்பது வயது இருக்கும்போது அவரின் அப்பா மரணப் படுக்கையில் இருந்தார். தம் சிறு வயது குழந்தை மகனை அழைத்தார். நோயின் தீவிரம் அதன் வேதனை இரண்டையும் மீறி கண்ணீருடன் சொன்னார்.

    " மகனே...நான் இறக்கப் போகிறேன்.. தாய் இழந்து தவித்து இருக்கும் உன்னை மேலும் பெரும் கஷ்டத்தில் விட்டுப் போகிறேன்.... உனக்கு என்று பணம், சொத்து என எதுவும் விட்டு செல்லவில்லை....நீயே உன்னைப் பார்த்துக் கொள்ள வேண்டிய பரிதாபத்தில் நீ இப்பொழுது இருக்கிறாய்...

    ஆனால் ஒன்றை மட்டும் உனக்கு நான் மந்திர வாக்கியமாக சொல்லிச் செல்கிறேன்.... அதை மட்டும் உன் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். உன்னை எவர் எந்த இக்கட்டான சமயத்தில் கோபப் படுத்தினாலும் நீ பிரதிவினை ஆற்ற குறைந்தது 24 மணி நேரம் எடுத்துக்கொள்... இந்த மகா வாக்கியம் மட்டுமே உனக்கு நான் விட்டுச் செல்லும் ஒரே சொத்து...இதை உன் வாழ்நாளில் கைவிட்டு விடாதே... அந்த ஒன்பது வயதுச் சிறுவன் அதை அப்படியே மனதிள் பதித்துக் கொண்டான்.

    ரஷிய கம்யூனிஸ்ட். சர்வாதிகார அடக்குமுறையை மீறியும் அவன் உலகம் முழுதும் தெரிந்தான். அவன் சிகிச்சையால் , இசையால், போதனையால்.... எத்தனை எத்தனையோ மன நோயாளிகள் குணமானார்கள். 83 வயது வரை வாழ்ந்த அந்த தத்துவஞானி நமக்குச் சொன்ன முக்கிய செய்தி இதுதான். "உன்னை எவர் எந்த இக்கட்டான சமயத்தில் கோபப் படுத்தினாலும் நீ பிரதிவினை ஆற்ற குறைந்தது 24 மணி நேரம் எடுத்துக்கொள்... " இவ்வாறு நடந்துகொண்டால் யாருயை பேச்சும் நம்மை ஒன்றும் செய்யாது. அதனால் எந்த கெடுதியும் ஏற்படாது.

    -கி. காமராஜ்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆற்காடு நவாப் வெள்ளையர்களின் கைப்பாவையாக மாறியதுபோல் சியாங்கேஷேக் ஜப்பானின் கைப்பாவையாக ஆட்சி செய்தார்.
    • சீனா தயாரிப்புகள் இல்லாவிட்டால் உலகமே ஸ்தம்பித்து விடும் நிலைதான் உள்ளது.

    உலக அரங்கில் இந்தியாவை வேறு ஏதாவது ஒரு நாட்டுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டுமானால் சீனாவுடன்தான் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

    அளவுகடந்த மக்கட்தொகை.. பல்வேறு மொழிகள்.. இந்தியாவைவிட மிக மோசமான மூட நம்பிக்கைகளும் முட்டாள் தனமான பழக்க வழக்கங்களும் கடுமையான சாஸ்திர சம்பிரதாயங்களும் கொண்ட நாடாக இருந்தது சீனா!

    மன்னராட்சியை வீழ்த்தி சன்யாட்சென் ஆரம்பித்த கோமிண்டாங் கட்சி, அதனுடைய தலைவர் சியாங்கேஷேக் காலத்தில் ஒரு ராணுவ சர்வாதிகார நாடாக மாறி ஜப்பானியர்களால் கடுமையாக சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வந்தது.

    ஆற்காடு நவாப் வெள்ளையர்களின் கைப்பாவையாக மாறியதுபோல் சியாங்கேஷேக் ஜப்பானின் கைப்பாவையாக ஆட்சி செய்தார்.

    1912 லிருந்து கம்யூனிஸ்ட் கட்சியை ஏழுபேரோடு தொடங்கி கடுமையாக உழைத்து சீனாவின் கல்வியறிவற்ற மக்களை ஒருங்கிணைத்து சீனாவில் 1948 இல் கம்யூனிஸ்ட் ஆட்சியை நிறுவியவர் மாவோ.

    கிட்டத்தட்ட 36 ஆண்டுகள் போராட்டம் அது. பின்னர் 1955 இல் எடுத்த ஒரு அதிரடியான விவசாய புரட்சி தோல்வியடைந்ததால் பசியும் பட்டினியும் தாண்டவமாடின.

    ஆனால் அவர் இட்ட அடித்தளத்தில் பின்னர் உலகமயமாக்களுக்குப்பிறகு சீனாவின் வளர்ச்சி அபரிமிதமாக மாறியது.

    இன்று சீனப்பொருட்கள் இல்லாவிட்டால் அமெரிக்காவின் ஒரு நாள் கூட கழியாது. அமெரிக்கா மட்டுமல்ல உலகின் பெரும்பான்மையான நாடுகளுக்கு மருந்து வகைகளுக்கு தேவையான வேதியியல் பொருட்கள் சீனாவிலிருந்து செல்கின்றன.

    சீனாவில் சாஃப்ட் கோக் எனப்படும் கரி கிடையாது. இரும்பு தாதுகிடையாது. ஆனால் உலகத்திலேயே இரும்பு பொருட்கள் சீனாவில்தான் விலை குறைவு.

    ஒரு வகையில் உலகில் ஒரு தொழிற்புரட்சியையே உண்டாக்கியது சீனாதான். இந்தியாவுக்கே கூட பெரும் வளர்ச்சியையே அளித்தது சீனா இயந்திரங்கள்தான்.

    உதாரணமாக ஒரு நிட்டிங் மெஷின் ஜப்பான் தயாரிப்பு 25 லட்சத்திற்கு என்றிருந்த போது சீனா அதை ஐந்து லட்சத்திற்கு அளித்தது. ஒயர் கட்டிங் மெஷின் 30 ஆண்டுகளுக்கு முன்பு 20 லட்சம் ரூபாய். இப்போது 5 லட்சத்திற்கு சீன மெஷின்கள் கிடைக்கின்றன. இது ஒரு உதாரணம்தான். எல்லா இயந்திரங்களுக்கும் இதுதான் நிலை.

    கொரோனா நோய் பரவிய போது பத்தே நாட்களில் நான்கு அடுக்கு மருத்துவமனையை கட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.

    ஒரு சின்ன உதாரணம் அவர்களுடைய மருத்துவ கல்வி. சென்னையிலுள்ள மெட்ராஸ் மெடிக்கல் காலேஜைவிட பரப்பளவில் பெரியது பெய்ஜிங் மருத்துவ கல்லூரி லைப்ரரி.

    இப்போதைய நிலையில் சீனா தயாரிப்புகள் இல்லாவிட்டால் உலகமே ஸ்தம்பித்து விடும் நிலைதான் உள்ளது.

    அறுபது ஆண்டுகளுக்கு முன் உண்ண உணவு இல்லாமல் பட்டினியால் மக்கள் கொத்து கொத்தாக மடிந்து கிடந்த சீனா இன்று அமெரிக்காவுக்கு சவால் விடும் அளவுக்கு வளர்ந்ததற்கு காரணம் மாவோதான் என்பதை மறக்கவும் முடியாது .. யாராலும் மறுக்கவும் முடியாது.

    -எம.எஸ். ராஜகோபால்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எல்லாவிதமான அபத்தக் குப்பைகளையும் மூளையில் திணிப்பதற்கான மாபெரும் வாய்ப்பாக அதை அவர்கள் காண்கிறார்கள்.
    • மூளையை உங்களின் சொந்தக் கைகளில் விட்டுவிடாத படிக்கு மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.

    மூளை எனப்படுகிற நுட்பமான யந்திரம், உடம்பின் ஒரு பகுதியாக உள்ளது.

    "ஆனால் மூளைக்குள் உடன் பிறந்ததாக எவ்வித நிகழ்ச்சிநிரலும் இல்லை."

    இயற்கை மிகுந்த கருணை உடையதாயிருக்கிறது.எவ்விதமான நிகழ்ச்சிநிரலையும் உடன் இணைக்காமலேயே உங்கள் மூளையை விட்டுவைத்துள்ளது.

    இதன்மூலம் இயற்கை உங்களுக்கு சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறது. உங்கள் மூளையை என்னவாக வெல்லாம் ஆக்கிக்கொள்ள நீங்கள் விரும்பினாலும் அப்படியே நீங்கள் ஆக்கிக்கொள்ள முடியும்.

    ஆனால் இயற்கை கருணையுடன் விட்டுவைத்ததை, உங்கள் மதகுருமார்களும் உங்கள் அரசியல்வாதிகளும் உங்கள் சான்றோர்கள் எனப்படுபவர்களும் சுரண்டி வந்திருக்கிறார்கள்.

    எல்லாவிதமான அபத்தக் குப்பைகளையும் மூளையில் திணிப்பதற்கான மாபெரும் வாய்ப்பாக அதை அவர்கள் காண்கிறார்கள்.

    மூளை ஒரு எழுதப்படாத பலகை-மூளையில் நீங்கள் எழுதும் எதுவும் உங்கள் மதக்கோட்பாடாக உங்கள் அரசியல் சித்தாந்தமாக ஆகிறது.

    ஆனால் ஒவ்வொரு பெற்றோரும் ஒவ்வொரு சமுதாயமும் உங்கள் மூளையை உங்களின் சொந்தக் கைகளில் விட்டுவிடாத படிக்கு மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.

    மூளையானது முற்றிலும் சரியாகவே இருக்கிறது-அது இயற்கை உங்களுக்கு கொடுத்த சுதந்திரம்;நீங்கள் வளர்வதற்கு அளித்த வெளி. ஆனால் அந்த வெளியில் நீங்கள் வளர முடியும் முன்பாகவே சமுதாயம் அதில் எல்லாவிதமான அபத்தைத்தையும் போட்டு அடைத்து விடுகிறது.

    -ஓஷோ

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எப்போதுமே கோட் சூட் போட்டு வெள்ளைக்காரன் போலவே வலம் வருகிறீர்களே ஏன்..?
    • காந்தி அவர்கள் பல்வேறு வகையில் உளவியலாக பாதிக்கப்பட்ட எம் மக்களை மேலும் உளவியலாக தாக்குகிறார்.

    பெரிய தொழிலதிபராக இருந்த ஜி.டி.நாயுடு அவர்களுடைய வழக்கு ஒன்று நிலுவையில் இருந்தது. அதை டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞராக நின்று முடித்துக் கொடுத்தவர் டாக்டர் அம்பேத்கர்.

    அதற்கு கைமாறாக ஒரு பெரிய பெட்டி நிறையா பணத்தை கொண்டு போய் அம்பேத்கருக்கு கொடுத்திருக்கிறார் ஜி.டி.நாயுடு..

    அம்பேத்கர் சொன்னாராம் "இந்தப் பணம் எனக்கு வேண்டாம்; அதற்கு பதிலாக நான் எப்போதும் தமிழ்நாட்டிற்கு வந்தாலும் என் பயணச் செலவையும்; அங்கே நான் தங்குவதற்கான செலவையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றிருக்கிறார். ஜி.டி.நாயுடு-வும் மகிழ்ச்சியோடு சம்மதித்திருக்கிறார்..

    அம்பேத்கர் டெல்லியிலிருந்து வருவதாக இருந்தால் தமிழகத்தில் ஐந்து நட்சத்திர விடுதியில் தான் ரூம் புக் பண்ணுவாராம் ஜி.டி.நாயுடு.

    ஒரு முறை நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்தவரை ஒரு பத்திரிக்கை நிருபர் பேட்டி எடுக்க வந்திருக்கிறார். பேட்டி எடுக்கும் முன்னரே கேட்டிருக்கிறார்..

    "டாக்டர் அம்பேத்கர், காந்திஜி அவர்கள் மிகவும் ஏழ்மையாக வாழ்கிறார், கதர் ஆடை உடுத்துகிறார், மேல் ஆடையே உடுத்துவதில்லை. ஆனால் நீங்களோ ஏன் இவ்ளோ ஆடம்பரமான இடத்தில் தங்கியிருக்கிறீர்கள். அத்தோடு எப்போதுமே கோட் சூட் போட்டு வெள்ளைக்காரன் போலவே வலம் வருகிறீர்களே ஏன்..?

    அம்பேத்கர் சிரித்துக் கொண்டே பதிலளித்தாராம்..'காந்தி அவர்கள் பல்வேறு வகையில் உளவியலாக பாதிக்கப்பட்ட எம் மக்களை மேலும் உளவியலாக தாக்குகிறார்.

    காந்தியே சட்டை இல்லாமல் இருக்கிறார், நாம சட்டை போடாவிட்டால் என்ன என்று ஏற்கனவே சட்டை போடாத எம் மக்கள் அதைப் பற்றி யோசிக்கவே மாட்டார்கள். அப்புறம் எப்படி அவர்கள் அதிலிருந்து விடுதலை பெறுவார்கள்.

    நான் கோட் சூட் போடுகிறேன், விலையுயர்ந்த 'டை' மட்டும் 'சூ' போடுகிறேன். மிகவும் ஆடம்பரமான இடத்திலிருந்து கொண்டு எம்மக்களை இங்கே வரச்சொல்லி சந்திக்கிறேன். என்னை இந்த இடத்தில் பார்க்க வருகிறவன், நல்ல உடை உடுத்த முயல்வான், அதற்காக சம்பாதிக்க உளவியலாக அவனின் மனம் தயாராகும்; உழைப்பான்; சட்டையே போடாமல் திரிந்தவன் புத்தாடை உடுத்துவான் வெற்று உடம்பிலிருந்து நல்ல உடைக்கு மாறுவான் என்றிருக்கிறார். இடை கேட்டதும் வாயடைத்துப் போய் நின்றிருக்கிறார் அந்த நிருபர்.

    - அன்பு செல்வன் 

     

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பத்து தடவை கெட்டது கெட்டது என்று நினைத்தால் உள்ளத்தில் அவ்வளவும் கேடு என்ற முறையில் காந்த ஆற்றலைக் கெடுத்துவிடும்.
    • மனிதனுக்கு மனிதன் என்ன வித்தியாசம் என்றால் வினைப்பதிவினாலான அவன் தன்மைகள் தான்.

    "நாமெல்லாம் அது கெட்டது இது கெட்டது என்று நினைத்துக் கொண்டும் சொல்லிக் கொண்டும் இருக்கிறோம். சமுதாய மக்கள் உறவிலே, கணவன் மனைவி உறவிலே, நண்பர்கள் உறவிலே எந்தத் தொடர்பில் ஆகட்டும், கெட்டது ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு பத்து தடவை கெட்டது கெட்டது என்று நினைத்தால் உள்ளத்தில் அவ்வளவும் கேடு என்ற முறையில் காந்த ஆற்றலைக் கெடுத்துவிடும்.

    அதை விட்டுவிட்டு, அவருக்கும் எனக்கும் உறவு ஏற்பட்ட பிறகு அவர் எனக்கு எத்தனை நன்மைகளைச் செய்தார் என்று எண்ணி எண்ணி அதையே பல தடவை நினைந்து நினைந்து உள்ளத்தில் நிரப்பிக் கொண்டு வந்தால், ஒரு சிறு தவறு அல்லது எங்கேயோ ஒரு ஏமாற்றம் இருந்தால் கூட தெரியாது.

    கணவன் மனைவி உறவிலே கூட திருமணத்தில் இருந்து இன்றுவரை அந்த அம்மா செய்த நன்மைகள் என்ன? என்று கணவன் எண்ணிப் பார்க்க வேண்டும். அதைப் போல அவர் கணவன் அவளுக்குச் செய்த நன்மைகள் என்ன? என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

    ஜீவகாந்த சக்தி தெய்வீகமானது. அதனை வெறுப்புணர்ச்சியால் களங்கப்படுத்தினால் பழிச் செயல்கள் பலவும் உருவாக அது வழி செய்துவிடும். அதனைத் தூய்மையாக வைத்துக் கொள்வோம். நீங்கள் எப்படி நினைக்கிறீர்களோ என்ன செய்கிறீர்களோ அதே போன்ற தன்மை உடையதாக ஆகின்றது. வினைப்பதிவுகளின் கூட்டு மலர்ச்சியே மனிதன் என்ற தோற்றம். மனிதனுக்கு மனிதன் என்ன வித்தியாசம் என்றால் வினைப்பதிவினாலான அவன் தன்மைகள் தான்."

    - வேதாத்திரி மகரிஷி.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வேலையில் இருக்கும் காலகட்டத்தில் நியாயமாக நேர்மையாக இருங்கள்.
    • செய்ற தொழிலுக்கும், நம்மளோட வாடிக்கையாளருக்கும் அதிகபட்ச நேர்மையோட என்னைக்குமே இருக்கணும்.

    படிக்கிற வயது காலம் வரை கண்டிப்பா படிச்சிருங்க. எந்த படிப்பும் கெட்ட படிப்பில்லை. எதுமே படிக்காம இருக்கிறதுதான் தப்பு.

    படிச்சு முடிச்சிட்டு படிப்புக்கு தகுந்த மாதிரியோ இல்லை அந்த நேரத்துல உங்களின் நேரத்தை வீணடிக்காம இருக்குறதுக்காக ஒரு வேலையில சேருங்க.; வேலைக்கு முயற்சிக்காம போகாம இருக்கிறது தான் தப்பே தவிர ஏதாவது ஒரு வேலையில இருக்குறது தப்பேயில்லை., எல்லா வேலையும் ஏதோ ஒரு அனுபவத்தையும், சில பல நல்ல நண்பர்களையும் உருவாக்கித்தரும்.,

    கிடைத்த வேலையில் உங்க திறமையை காண்பிக்க முயலுங்கள். நிறுவனத்தில் கிடைக்கும் சம்பளம் சலுகைகளுக்காக வேலையை செய்யாமல், இந்த வேலையும், இதில் கிடைக்கும் அனுபவமும் நிச்சயம் ஒரு நாள் நம்ம வாழ்க்கையில ஒரு மாற்றத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கையில்ல அந்த வேலையை செய்யுங்க.

    வேலையில் இருக்கும் காலகட்டத்தில் நியாயமாக நேர்மையாக இருங்கள்,

    இப்படி இருந்தால் நிறைய நண்பர்கள் கான்டெக்ட் கிடைக்கும். இது உங்கள் வாழ்க்கைக்கான முதலீடா பிற்காலத்தில் எப்பவும் இருக்கும்.

    பருவத்தே பயிர் செய் என்பது மாதிரி நிச்சயம் கல்யாணம், குழந்தை போன்றவற்றை உருவாக்கிக்கொள்ளுங்கள். குடும்பத்தோட எப்பவும் அன்பா இருங்க. இது எப்பவுமே உங்களுக்கு ஒரு பாசிட்டிவிட்டியை உருவாக்கி தரும்.

    வேலை செய்து சம்பாரிக்கும் காலங்களில் அனாவசியமான செலவுகளை செய்யாமல் அவசியமான சேமிப்புகளை அவ்வப்போது சேர்த்து வைக்க தவறாதீர்கள்.

    உங்கள் உடல்நலத்தில் அதீத அக்கறை கொள்ளுங்கள். இதுதான் வாழ்க்கைக்கான சிறந்த முதலீடு. இதையெல்லாம் 35 முதல் 40 வயதுக்குள் முடித்து விடுங்க.

    படிப்பில், வேலையில், உங்க அனுபவத்துல, உங்களுக்கு இருக்குற ஆரவத்துல இருக்கிறதை எல்லாம் முதலீடா போட்டு கையில் இருக்குற சிறிய தொகையை வச்சு பெரிதாக எதையும் கடனா வாங்காம ஒரு தொழிலை தொடங்குங்க.

    திரும்பவும் ஒரு சுற்றுக்கு ஓட தயாராகுங்க. இந்த முறை நீங்க முதலாளியா ஓட போரீங்க. ஆனா எப்பவும் முதலாளி என்ற நினைப்புலையே இருந்திட கூடாது. தொழிலாளிகளை அரவணைச்சு போகனும். நெறைய பொறுப்போட இருக்கனும். திடீர்னு ஒருநாள் தொழிலாளி வரலைன்னா அந்த வேலையை நீங்க இறங்கி செஞ்சு தொழிலை காப்பாதிக்க தயாரா இருக்கணும். இந்த நிலைக்கு நீங்க தயாரா இருந்துட்டா உங்க தொழில் ஒரு நாளும் உங்களை விட்டுட்டு போகாது. செய்ற தொழிலுக்கும், நம்மளோட வாடிக்கையாளருக்கும் அதிகபட்ச நேர்மையோட என்னைக்குமே இருக்கணும். விமர்சனங்களை தாங்கிக்கணும். இப்போ இதுக்கெல்லாம் நெறைய இடங்கள்ல நீங்க வேலை பார்த்த அனுபவம் கைகொடுக்கும்.

    தொழிலோட வளர்ச்சியை பொறுத்து இன்வெஸ்ட்மென்ட் அதிகபடுத்துங்க. உங்க தொழிலோட வருங்காலத்தை பற்றி தெரிஞ்சுகிட்டே இருங்க. தொழில்ல வர்ற புது விஷயங்களை அப்டேட் பண்ணிக்கிட்ட இருங்க. அப்போதான் தொழில்ல நீடிச்சு இருக்க முடியும்.

    இறை நம்பிம்கை இருந்தால் அனுதினமும் இறைவனை தொழுது உங்க வேலையை தொடங்குங்க. நல்ல பாசிடிவ் வைப் தரும்., எல்லாம் கூடி வந்து ஒரு பத்து வருஷம் தாக்கு பிடிச்சிட்டா அதோட வளர்ச்சி உங்க தலைமுறையை தாண்டி நிக்கும்.

    இதுகுள்ள பிள்ளைங்க வளர்ந்துட்டா அவங்களையும் இதுல ஈடுபடுத்தி தொழிலை சொல்லி கொடுங்க. பொண்ணு, பையன் பேதம் பார்க்காம சொல்லிகொடுங்க.

    எப்பவும் நம்பிக்கையோட இருங்க. எல்லாம் ஒருநாள் நல்லதாவே கைகூடும்.

    ஓடினால் ஆறு. தேங்கினால் குட்டை.

    நீங்க எப்பவும் ஆறுபோல ஓடி சமுத்திரத்தில் கலந்து பரந்த உலகை உருவாக்கி அதில் எல்லாருக்கும் வாய்ப்பை கொடுங்கள்.

    -பரமகுரு போஸ்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒரு கால்பந்து சைஸ் நட்சத்திரம். இரண்டுக்கும் நடுவே வெறும் வெளி .
    • நமக்குள் ஏகப்பட்ட ஈகோ, போட்டி, பொறாமை. நான் பெரியவனா, நீ பெரியவனா என..

    பிரபஞ்சம் முழுக்க நட்சத்திரங்களும், கிரகங்களும் இருப்பதாக நினைத்தால் தவறு.

    பிரபஞ்சம் முழுக்க இருப்பது வெறும் வெளிதான். கற்பனைக்கெட்டாத அளவு வெறும் வெளி பிரபஞ்சமெங்கும் நிரம்பியுள்ளது.

    ஒரு விடியோவில் பார்த்தேன். சூரியனை கால்பந்து சைஸில் சுருக்கி கோவை நேரு ஸ்டேடியத்தில் வைத்தால், பிரபஞ்சத்தை அதே அளவு சுருக்கினால், வாயேஜர் - 1 விண்கலம் 1977ல் கிளம்பி இப்போது 2023ம் ஆண்டில் நேரு விளையாட்டு மைதானத்தின் வெளிப்புற கேட்டை தாண்டியுள்ளது.

    நமக்கு அருகே உள்ள நட்சத்திரமான ஆல்பா சென்டாரி சேலத்தில் உள்ள இன்னொரு கால்பந்து. அதை வாயேஜர் - 1 சென்றடைகையில் 75,000 ஆன்டுகள் ஆகிவிடும்.

    கோவையில் ஒரு கால்பந்து சைஸ் நட்சத்திரம், சேலத்தில் ஒரு கால்பந்து சைஸ் நட்சத்திரம். இரண்டுக்கும் நடுவே வெறும் வெளி .

    இந்த கால்பந்தை நம்பி பட்டாணி சைஸில் ஒரு உலகம்...அதனுள் அணுவளவு சைஸில் மனிதர்கள். நமக்குள் ஏகப்பட்ட ஈகோ, போட்டி, பொறாமை. நான் பெரியவனா, நீ பெரியவனா என..

    -நியாண்டர் செல்வன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தண்ணி குடிக்கிற விஷயத்துல கவனம் செலுத்தணும்.
    • விருந்து மட்டுமில்ல... மருந்தும்கூட மூணு நாளைக்கு மேல சாப்பிடுறது சரியில்லை.

    ஊரெங்கும் இருமல், சளி, காய்ச்சல்னு மக்கள் அவதிப்பட்டுட்டிருக்காங்க. `தனக்கு வந்தாத்தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்...' இந்தப் பழமொழி சிலபேருக்குத் தெரிஞ்சிருக்கும். மூக்கடைப்பு, சளித்தொல்லை, மூச்சிரைப்புன்னு பிரச்சினை அணிவகுத்து நிக்குது. இது ரெண்டு நாள் இருந்தா பரவாயில்ல... அது ரெயில் மாதிரி நீண்டுக்கிட்டே போனா என்னாகும்? நாம செய்யக்கூடிய வேலை எதுலயும் ஒரு ஈடுபாடு இல்லாம இருக்கும்.

    மழையும், பனியும் மாத்தி மாத்தி பாடாப்படுத்துது. அதனால இந்த நாட்கள்ல நிலவக்கூடிய குளிர்ச்சியான சூழல்ல சளியோட ஆதிக்கம் அதிகமா இருக்கும். காரணம் நம்மோட வாழ்வியல்முறைதான். எல்லா காலங்கள்லயும் நாம ஒரேமாதிரி சாப்பிடுவோம். ஆனா, தண்ணி குடிக்கிறதுல மட்டும் நம்மளையும் அறியாம பழக்கத்தை மாத்திடுவோம்.

    மழைக்காலத்துலயும் பனிக்காலத்துலயும் குளிர் அதிகமா இருக்கிறதால இயல்பாவே தண்ணி குடிக்கிறது குறைஞ்சிரும். அதனால தண்ணி குடிக்கிற விஷயத்துல கவனம் செலுத்தணும். பலபேர் வெந்நீர் குடிப்பாங்க. வழக்கமா குடிக்கிற பச்சத்தண்ணிய குடிச்சாலே போதும்.

    சிலபேருக்கு எல்லா நேரமும் ஃபேன், ஏ.சி இல்லாம சிலபேருக்கு முடியாது. ஹை மோட்ல வைக்கிறது பலபேரோட வழக்கம். இதனால சளித்தொல்லை மட்டுமில்லாம வேற சில பிரச்சினைகளும் வரிசைகட்டி நிக்கும். முதல்ல ஜலதோஷம் வரத்தொடங்கும்போது சூடா தண்ணி குடிச்சா சரியாயிரும். ஆனா, அதையே தொடர்ந்து குடிக்கக்கூடாது.

    மணத்தக்காளிக்கீரையை சூப் வச்சி குடிச்சா ஜலதோஷம் பிடிக்காது. ஆனா, சூப்பை சூடா குடிக்கணும். அதை ஆற வச்சி குடிச்சாலோ மணத்தக்காளி கீரையை கடைஞ்சி சாப்பிட்டாலோ சளி கட்டிரும்.

    இருமல், ஜலதோஷம் வந்தா தக்காளி சூப் வச்சி குடிக்கலாம். ஒரு தக்காளி, மூணு பல் பூண்டு எடுத்து நசுக்கி தண்ணி விட்டு கொதிக்க வச்சி வடிகட்டி உப்பு சேர்த்து சூடா குடிக்கணும். தொண்டை கட்டிட்டு இருந்தா ஒரு கிராம்பை தீயில சுட்டு ஒரு கல் உப்பு சேர்த்து அப்படியே கடிச்சி சாப்பிடணும். இதை ஒருநாளைக்கு ரெண்டு, மூணு தடவை செஞ்சாலே நல்ல நிவாரணம் கிடைக்கும்.

    துளசி, கற்பூரவள்ளி, தூதுவளையோட மிளகு, சீரகம் சேர்த்து கொதிக்க வச்சி குடிக்கலாம். மதிய உணவுல தூதுவளை துவையல் செஞ்சி சாப்பிடலாம். சாய்ங்கால நேரங்கள்ல கற்பூரவள்ளி இலையை பஜ்ஜி செஞ்சி சாப்பிடலாம். அதோட சுக்கு, மல்லி, மிளகு சேர்த்து கொதிக்க வச்சி தேநீர் செஞ்சி குடிச்சா இந்த பிரச்சினைகள் எல்லாம் சரியாயிரும்.

    சாய்ங்காலம் சுக்கு மல்லியை தட்டிப்போட்டு குடிக்கிறது தப்பில்லை. ஆனா, மேலே சொன்ன மத்த விஷயங்களை தினமும் தொடர்ந்து செய்யக்கூடாது. விருந்து மட்டுமில்ல... மருந்தும்கூட மூணு நாளைக்கு மேல சாப்பிடுறது சரியில்லை.

    நீண்டநாள் பிரச்சினையா இருந்தா மட்டும் அதுக்கு தகுந்தமாதிரி சாப்பிடணும். ஆனா, மழைக்காலங்கள்ல அப்பப்போ இந்த மாதிரி சாப்பிட்டு வந்தா போதும். ஜலதோஷம், சளி பிடிச்சா சிலபேர் நொச்சி இலையை கொதிக்க வச்சி ஆவி பிடிப்பாங்க. இதையும் ரெண்டு மூணு நாள் செஞ்சா போதும். சிலபேர் நாள்கணக்குல செய்வாங்க. அப்படி செய்றது அதுவே எதிரா வேலை செய்ய ஆரம்பிச்சிரும்.

    - எம்.மரிய பெல்சின், மூலிகை ஆராய்ச்சியாளர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நண்பர்கள் வீட்டில் தான் தங்கி இருந்ததாக தெரிகிறது.
    • பாடம் எடுக்கையில் மேலே மாடியில் இருந்து அவரை திட்டுகிறாள்.

    சாக்ரடிஸ் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். கிமு ஐந்தாம் நூற்றாண்டில் கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் வாழ்ந்தார். போர்வீரர், கல் தொழிலாளி இப்படிப்பட்ட பணிகளில் இருந்து தத்துவஞானியாக மாறியவர். ஜிம்னாசியம் வைத்து இருந்தார். பிளேட்டோ அவரது மாணவர். ஜிம்மில் தத்துவமும், கணிதமும் என பல விசயங்களை பேசுவார்கள்.

    அவருக்கு சொந்த வீடு கூட இல்லை. நண்பர்கள் வீட்டில் தான் தங்கி இருந்ததாக தெரிகிறது. மிக தாமதமாக தன் 40வது வயதில் தான் திருமணம் செய்துகொள்கிறார். மனைவி பெயர் சாந்திபி. அவரை விட 20 வயது இளையவள்.

    சாந்திபி மிகுந்த முன்கோபி. திட்ட ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டார். சாக்ரடிஸிடம் இது சொல்லபட்டபோதும் அவர் சாந்திபியை மாற்றிவிட முடியும் என நம்பினார். "என் அறிவுக்கு விடபட்ட சவால் இது" எனவும் சொன்னார். வருமானம் இல்லாத ஒரு தத்துவஞானிக்கு சாந்திபியை விட்டால் வேறு மணப்பெண் கிடைக்காததாலும் சமாதானத்துக்கு அவர் இதை சொல்லி இருக்கலாம்.

    இருவருக்கும் மூன்று மகன்கள் பிறக்கிறார்கள். சாந்திபி சாக்ரடிஸை மிக மோசமாக நடத்தியதாக தெரிகிறது. அவர் வீட்டுக்கு கீழே இருந்து பாடம் எடுக்கையில் மேலே மாடியில் இருந்து அவரை திட்டுகிறாள். அதன்பின் தலைக்கு மேல் தன்ணீரை ஊற்றுகிறார். சாக்ரடிஸ் "முன்பு இடி இடித்தது, இப்போது மழை பெய்தது" என்கிறார்.

    சாந்திபியின் இந்த கோபத்துக்கு காரணம் சாக்ரடிஸ் மாணவர்களிடம் கட்டணம் வாங்காமல் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்ததுதான்.

    ஒருமுறை மளிகை சாமான் வாங்க அனுப்பி, தப்பு, தப்பாக மளிகை பொருட்களை வாங்கி வந்துள்ளார் சாக்ரடிஸ். அதற்கு சாந்திபி அவரை திட்ட, சாக்ரடிஸ் எதுவும் பேசமுடியாமல் நிலைகுலைந்து தூணில் சாய்ந்து நின்றதாக சீடர்களின் குறிப்புகள் கூறுகின்றன.

    பிளேட்டோவின் குறிப்பில் சாந்திபியுடனான பிரச்சனையை தீர்க்கதான் சாக்ராயிடிக் முறை எனும் நிர்வாகவியல் முறையை சாக்ரடிஸ் உருவாக்கியதாகவும், அதை தன் மகனுக்கு கற்றுக்கொடுத்து அம்மாவுடன் எப்படி சமாதானமாக போவது என கற்றுக்கொடுத்ததாகவும் கூறுகிறார். இந்த முறை இன்னமும் பரவலாக நிர்வாகவியலில் பின்பற்றப்படுகிறது.

    - நியாண்டர் செல்வன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தோல் சுருக்கம் நீங்குவதுடன் நரம்புகள் பலப்