என் மலர்tooltip icon

    கதம்பம்

    அதெல்லாம் கடவுள் பாத்துக்குவார்!
    X

    அதெல்லாம் கடவுள் பாத்துக்குவார்!

    • அடுத்த நாள் பொண்ணு ஒரு பையனை வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்தாள்.
    • “நான் கிட்டத்தட்ட கடவுளை கண்டுபுடிசிட்டேன் சார் ”ன்னு பெருமையா சொன்னான்.

    ஒரு அம்மா தன் கணவர் கிட்ட சொன்னங்க,

    " ஏங்க நம்ம பொண்ணுக்கு கல்யாண வயசாகுது , காலகாலத்துல கல்யாணம் பண்ணிவைக்க வேண்டாமா?" அதுக்கு ஏற்பாடு பண்ணுங்கன்னாங்க.

    "நானும் அது விசயமாத்தான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்னு சொன்னார் அவர். .

    பொண்ணும் இவங்க பேசுனத கேட்டுகிட்டு இருந்தாள் .

    அடுத்த நாள் பொண்ணு ஒரு பையனை வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்தாள்.

    அப்பா கேட்டார் " யாரும்மா இவர்! ...?"

    "அப்பா இவர் பேர் சுரேஷ் . இவர நான் விரும்பறேன், அதான் உங்க கிட்ட பேச அழைச்சிட்டு வந்தேன்". ன்னு சொன்னாள்.

    "அப்படியா! உக்காரப்பா" ன்னு சொல்லி சில கேள்விகளை கேட்டார்..

    "நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க ?" அப்படின்னார்.

    "சார்..... நான் கடவுளை பத்தி ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்" னு சொன்னான்.

    "உங்க ஆராய்ச்சி எல்லாம் எந்த அளவுக்கு போய்கிட்டு இருக்கு? "அப்படின்னு கேட்டார்.

    "நான் கிட்டத்தட்ட கடவுளை கண்டுபுடிசிட்டேன் சார் "ன்னு பெருமையா சொன்னான்.

    "உங்க வருமானத்துக்கு என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க"ன்னு இவர் கேட்டார் ..

    அவன் "அதெல்லாம் கடவுள் பாத்துக்குவார் சார்"ன்னு சொன்னான்

    "சரிப்பா, ரொம்ப சந்தோசம், போயிட்டு வா"ன்னு வழியனுப்பினார்...

    இப்போ அந்த அம்மா கேட்டாங்க,

    "ஏங்க.. பையன் எப்படிங்க?"

    அவர் சொன்னார் "பையனுக்கு எந்த வேலையும் இல்லை! வருமானத்துக்கும் வழியே இல்லை! வரப்போர மாமனாரைத்தான் கடவுளா நினைசுக்கிட்டு இருக்கான்" அப்படின்னார்.....

    -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்

    Next Story
    ×