search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    பச்சிளம் குழந்தைகளுக்கு மஞ்சள் நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?
    X

    பச்சிளம் குழந்தைகளுக்கு மஞ்சள் நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

    • மஞ்சள் நோய் இரண்டு வகைப்படும்.
    • 95% சதவீதம் நோயின்றி வரக்கூடியது.

    1) பச்சிளம் குழந்தைகளுக்கான மஞ்சள் நோய் என்றால் என்ன?

    பிறந்த குழந்தையின் இரத்தத்தில் பிலிருபின் (bilirubin) அளவு அதிகமாவதால் ஏற்படுகிறது. குழந்தையின் தோல் மஞ்சளாகவும், கண்ணின் வெள்ளைப்பகுதி மஞ்சளாகவும் மாறிவிடும். இது 60 சதவீத நிறைமாத குழந்தை களுக்கும், 80 சதவீத குறைமாத குழந்தைகளுக்கும், குழந்தை பிறந்த முதல் வாரத்திலேயே வந்து விடுகிறது.

    இந்த மஞ்சள் நோய் இரண்டு வகைப்படும். 95% சதவீதம் நோயின்றி வரக்கூடியது. (Physiological Jaundice). 5 சதவீதம் நோயினால் வரக்கூடியது (Pathological Jaundice).

    நாம் நோயில்லாமல் சாதாரணமாக வரும் மஞ்சள் பற்றி (Physiological Jaundice) இங்கு பார்ப்போம்.

    2. மஞ்சள் நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

    குழந்தை பிறந்தவுடன் இரத்த சிவப்பணுக்கள் அழிக்கவும்படும், புதிதாக உற்பத்தியும் செய்யப்படும். சிவப்பணுக்கள் வேகமாக அழிக்கப்படும் போது அதிலிருந்து வெளியாகும் பிலிருபின் (bilirubin) இயல்பாக ஈரலுக்கு (liver) சென்று பின் மலத்தின் மூலம் வெளியேறுகிறது.

    பெரும்பாலான குழந்தைகளுக்கு ஈரல் (liver) முழு வளர்ச்சி அடையாமல் இருப்பதால் இரத்தத்தில் பிலிருபின் அளவு அதிகமாகி குழந்தையின் தோல், கண் வெண்ணிரப்பகுதி மஞ்சளாக மாறுகிறது.

    3. பிலிருபின் அளவு இரத்தத் தில் எவ்வளவு இருக்க வேண்டும்?

    சாதாரணமாக நிறைமாத குழந்தைகளுக்கு பிறந்த முதல் வாரத்தில் 2 mg / dlஐவிட அதிகமாக இருக்கும். பிறந்த 3 முதல் 5 நாட்களுக்குள் உச்சகட்ட அளவாக 6 to 8 mg / dl வரை சென்று பின் இரண்டு வாரங்களில் தானாக குறைந்துவிடும். குழந்தை பிறந்த முதல் வாரத்தில் பிலிரு பின் அளவு 12 mg/dlஐ தாண்டி விட்டால் இதை குறைக்க தேவையான மருத்துவத்தை ஆரம்பிக்க வேண்டும்.

    4) எப்போது மஞ்சள் வியாதிக்கு மருத்துவம் செய்ய வேண்டும்?

    மஞ்சள், குழந்தை பிறந்த 24 மணி நேரத்திற்குள் அதிகமாவது. பிலிருபின் 12 mg/dlஐவிட அதிகமாகுதல். இரத்தத்தில் பிலிருபின் குழந்தை பிறந்த 14 நாட்களுக் கம் மேலாக இருத்தல்.

    5) மஞ்சள் நோய் கேடு விளைவிக்குமா?

    பிலிருபின் அளவு இரத்தத்தில் அதிகமானால் குழந்தை மந்த நிலையில் இருக்கும். செவிப்புலன் பாதிக்கும். மூளை சேதத்திற்கு வழிவகுக்கும்.

    6) சிகிச்சை

    போட்டோதெரபி (Photo theraphy) தான் முதன்மையான சிகிச்சையாகும். பிலிருபின் மிகவும் அதிகமாகி மூளையை பாதித்தால் குழந்தையின் இரத்தத்தையே மாற்ற வேண்டி வரும். (Exchange transfusion)

    7) போட்டோதெரபி என்றால் என்ன?

    ஊதா நிற கதிரை உற்பத்தி செய்யும் (420nm to 480nm) ஒரு கருவியில் குழந்தையை படுக்க வைத்து அளிக்கும் சிகிச்சைக்கு போட்டோதெரபி என பெயர். இந்த போட்டோதெரபி இப்போது LEDயாலும் செய்யப்படுகிறது. இந்த ஊதா கதிர்கள் இரத்தத்தில் உள்ள பிலிருபினை லூமிரூபினாக (lumirubin) ஆக மாற்றி நீர் வழியாக வெளியேற்றி விடும்.

    Dr. இரா.இளங்கோ M.B.B.S., Dip. CH - Dr. க.ஆனந்தி M.B.B.S., DGO, ஸ்ரீராம் மருத்துவமனை, ஆலங்குளம்

    Next Story
    ×