search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறை பிரசவம்"

    • ரமேஷ்(25) என்பவர் சத்யா(22) என்பவரை இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 3 நாளிலேயே காதலித்து திருமணம் செய்துள்ளார்
    • இவர்களுக்கு அண்மையில் 8 மாத குறை பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது

    திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த விஜயநல்லூர் அருகே வசித்து வரும் ரமேஷ்(25) என்பவர் சத்யா(22) என்பவரை இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 3 நாளிலேயே காதலித்து திருமணம் செய்துள்ளார்.

    இந்நிலையில், இவர்களுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. 8 மாதத்திலேயே குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை, மருத்துவமனையில் இருந்து சில நாட்களுக்கு முன்புதான் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, நேற்று தன்னுடைய குழந்தையை காணவில்லை தாய் சத்யா கூறியுள்ளார். அதனை தொடர்ந்து, உறவினர்கள் மற்றும் காவல்துறையினர் தேடியபோது அருகில் உள்ள கிணற்றில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

    இதனையடுத்து சோழவரம் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது, அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, தாய் சத்யாவே குழந்தையை மறைத்து எடுத்துச்சென்று கிணற்றில் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து சத்யாவிடம் சோழவரம் போலீசார் தீவிர விசாரணை செய்ததில், "குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை குறைந்த எடையில் இருக்கிறது.

    இதனையடுத்து சத்யாவை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், "வருங்காலத்தில் ஊனமாக மாறிவிடுமோ என்ற பயம் இருந்தது. மேலும், தாய்ப்பாலும் சுரக்கவில்லை. இவை அனைத்தையும் தாண்டி, கணவர் என்னை விட குழந்தையிடம் பாசத்தை காட்ட தொடங்கிவிட்டார். இதனால்தான் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்தேன்" என்று அதிர்ச்சிகர தகவலை அவர் கூறியுள்ளார்

    • சிறு நீரகங்களிலும் வீக்கத்துடனும், வலது கையில் உள்ள ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் இல்லாத நிலையும் இருந்து வந்தது.
    • குழந்தையின் உடல்நிலை தற்போது முற்றிலும் தேறியுள்ளது.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பொன்ராணி என்ற இளம் பெண்ணுக்கு சமீபத்தில் குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. இருப்பினும், அக்குழந்தை பிறக்கும் போதே அதன் இரு சிறு நீரகங்களிலும் வீக்கத்துடனும், வலது கையில் உள்ள ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் இல்லாத நிலையும் இருந்து வந்தது.

    மேலும், சுவாச கோளாறுடன் மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமமான நிலையில் செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் இருந்த அந்த குழந்தை நெல்லை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டது.

    உடனடியாக மருத்துவ கல்லூரி டீன் ரேவதி பாலன் அறிவுறுத்தலின் பேரில் அந்த குழந்தைக்கு சம்பந்தப்பட்ட துறை டாக்டர்கள் மேற்பார்வையில் ஸ்கேன் எடுக்கப்பட்ட நிலையில் அந்த சி.டி ஸ்கேனில் குழந்தையின் வலது கையின் ரத்தக்குழாய் 1.8 மில்லி மீட்டர் அளவிற்கு தடைப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

    இந்நிலையில் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்கள், பச்சிளம் குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர், ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர், நரம்பியல் மருத்துவர் ஆகியோர் கொண்ட சிறப்பு மருத்துவக்குழு அக்குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். 5 மணி நேர தொடர் அறுவை சிகிச்சைக்கு பிறகு வலது கையில் ரத்த ஓட்டம் சீராக்கப்பட்டது.

    அடுத்தடுத்த சிகிச்சைக்கு பின்னர் வென்டிலேட்டர் செயற்கை சுவாசத்தில் இருந்த குழந்தை ஆக்சிஜன் உதவியில்லாமல் இயற்கை சுவாச நிலையை அடைந்து உள்ளது. மேலும், அக்குழந்தையின் உடல்நிலை தற்போது முற்றிலும் தேறியுள்ளது.

    தென் தமிழகத்தில் சிறந்த சிகிச்சை அளிப்பதில் முக்கிய இடம் வகிப்பது நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. இதுபோன்ற பல அரிய அறுவை சிகிச்சைகள் செய்து தென் மாவட்ட மக்களின் நலம் பேணுவதில் கவனம் செலுத்தும் இந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மற்றொரு சாதனையாக இந்த அறுவை சிகிச்சை அமைந்துள்ளது என மருத்துவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

    இதே போல கோவில்பட்டியை சேர்ந்த மோகன செல்வி என்ற 9 வயது சிறுமி கடந்த 10-ந்தேதி அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் ஏறி விளையாடி கொண்டிருந்தார்.

    அப்போது ஆட்டோவின் முன் பகுதியில் இருந்த இரும்பிலான வேல் அவரது தொடையில் குத்தியது. இதனால் படுகாயம் அடைந்த சிறுமியை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

    • சீரான வெப்பநிலை இருக்க வேண்டியது அவசியமாகும்.
    • கதகதப்பாக இருக்குமாறு குழந்தைகளை படுக்க வைக்க வேண்டும்.

    பெண்களின் கர்ப்ப காலம் என்பது 37 வாரங்கள் கொண்டதாகும். இந்த காலம் முழுவதுமாக பூர்த்தியடைந்து பிரசவிக்கப்படும் குழந்தைகள், சீரான உடல் எடை மற்றும் ஆரோக்கியத்தோடு பிறக்கிறார்கள். ஆனால் பிரசவ தேதிக்கு சில மாதங்கள் முன்பாகவே பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு சில ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படும். அவற்றை தடுக்க அந்த குழந்தைகளுக்கு முறையான பராமரிப்பு வழங்குவது முக்கியமானதாகும்.

    குறைமாதத்தில் பிறந்த குழந்தையை மட்டுமில்லாமல், பிரசவித்த தாயின் ஆரோக்கியத்திலும் போதுமான கவனம் செலுத்த வேண்டும். குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மருத்துவமனையில் தகுந்த பாதுகாப்பும். உரிய சிகிச்சையும் வழங்கப்படும். வீட்டிற்கு வந்த பின்பு அந்த குழந்தைகளை முறையாக கவனித்துக்கொள்வதற்கான சில வழிகள்.

     சீரான வெப்பநிலை:

    குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள் இருக்கும் அறையில், சீரான வெப்பநிலை இருக்க வேண்டியது அவசியமாகும். இதன் காரணமாகவே மருத்துவமனைகளில் குழந்தைகளை இன்குபேட்டரில் வைத்து பராமரிக்கின்றனர். எனவே வீட்டிற்கு வந்த பின்னும், குழந்தைக்கு சீரான வெப்பநிலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம், குழந்தைகளின் வளர்ச்சியும், ஆரோக்கியமும் சீராக இருக்கும்.

    வீட்டில். துணிகளை அடுக்கடுக்காக விரித்து அதன்மேல் கதகதப்பாக இருக்குமாறு குழந்தைகளை படுக்க வைக்க வேண்டும். முடிந்தவரை, கனமான போர்வைகளை தவிர்த்து காட்டன் புடவைகளை தேர்வு செய்யுங்கள். தெர்மாமீட்டர் கொண்டு, குழந்தையின் உடல் வெப்பநிலையை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். குழந்தையின் உடல் வெப்பநிலை 36.5 முதல் 37.4 டிகிரி செல்சியஸ் வரையும், அறையின் வெப்பநிலை 20 முதல் 24 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்க வேண்டும்.

     சீரான தூக்கம்:

    பிறந்த குழந்தைகளுக்கு சீரான தூக்கம் அவசியமானது. அதிலும், குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு எவ்வித தொந்தரவும் இன்றி சீராக உறங்க தேவையான சூழலை ஏற்படுத்தி தர வேண்டும். அவர்களை படுக்க வைக்கும் அறையில், சீரான வெப்பநிலையும், மங்கலான வெளிச்சமும் இருக்க வேண்டும். மற்ற குழந்தைகளை விட இவர்களுக்கு இரவு நேரத்தில் பசி அதிகமாக இருக்கும். எனவே, அடிக்கடி பாலூட்ட வேண்டும்.

     குளியல்:

    குறைமாத குழந்தைகளை குளிக்க வைக்கும்போது உபயோகிக்கும் தண்ணீர், சோப்பு, லோஷன் ஆகிய அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும். தண்ணிரின் வெப்பநிலை குறைந்தபட்சம் 100 டிகிரி பாரன் ஹீட்டாக இருக்க வேண்டும். குழந்தையின் தலையை சுத்தம் செய்ய, தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு எந்த ரசாயனம் நிறைந்த பொருட்களையும் பயன்படுத்தக்கூடாது.

    குழந்தையின் எடை 2.5 கிலோ அளவுக்கு வரும் வரை கடற்பாசி கொண்டு குளிக்க வைக்கலாம். குழந்தை பிறந்த ஒரு மாதம் வரை கடைகளில் கிடைக்கும் லோஷன் பவுடர், எண்ணெய் உட்பட எந்த பொருளையும் பயன்படுத்தாமல் தவிர்ப்பது சிறந்தது.

    பயணத்தை தவிர்க்கவும்:

    குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சுற்றுச் சூழல் காரணமாக எளிதில் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்களின் நுரையீரல் வளர்ச்சி குறைவாக இருக்கும் என்பதால், காற்று மாசு காரணமாக எளிதில் மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்படலாம். எனவே, குறைந்தபட்சம் ஓராண்டு வரை பயணங்களை தவிர்ப்பது சிறந்தது.

    • திருமங்கலம் அருகே குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை திடீரென இறந்தது.
    • ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள அனுப்பப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது30). இவரது மனைவி ராணி(26). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. 2-வது குழந்தை பிறந்து இறந்துவிட்டது.

    இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்தில் 3-வதாக குறைபிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை உடல் நலக்குறைவுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக குழந்தையை செக்கானூரணி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்தபோது இறந்துவிட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து குழந்தையின் தாய் ராணி ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×