search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை திடீர் சாவு"

    • மாதேஷ். இவரது மனைவிக்கு கடந்த 1½ மாதத்திற்கு முன்பு 3-வதாக பெண் குழந்தை பிறந்தது.
    • நேற்றிரவு குழந்தைக்கு வயிற்றுப்போக்குடன் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த குழந்தையை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    சேலம்:

    சேலம் அன்னதானப்பட்டி சண்முகாநகர் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். இவரது மனைவிக்கு கடந்த 1½ மாதத்திற்கு முன்பு 3-வதாக பெண் குழந்தை பிறந்தது.

    இந்த நிலையில் நேற்றிரவு குழந்தைக்கு வயிற்றுப்போக்குடன் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த குழந்தையை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை நேற்றிரவு பரிதாபமாக இறந்தது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தாய்ப்பால் குடித்துக் கொண்டு இருந்த குழந்தை க்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.
    • ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மேட்டு ப்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அந்தோணிராஜ். கூலித்தொழிலாளி. இவரது மனைவி மரியபெர்லின் பிரின்சியா (வயது26). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் பிரின்சியா கர்ப்பம் அடைந்தார்.

    கடந்த 43 நாட்களுக்கு முன்பு இவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. பிறந்த அன்றே ஒரு குழந்தை உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தது.

    இந்நிலையில் இன்று காலை குழந்தைக்கு பிரின்சியா தாய்ப்பால் கொடுத்தார். குடித்துக் கொண்டு இருந்த குழந்தை க்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில் அவை அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நள்ளிரவு திடீரென தர்னேஷ்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
    • பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், இண்டூர் அடுத்துளள கொல்லஅள்ளி பகுதியை சேர்ந்தவர் முத்தழகன். இவருக்கு தர்னேஷ் என்கிற ஒரு மாத ஆண் குழந்தை உள்ளன.

    இந்த நிலையில் நள்ளிரவு திடீரென தர்னேஷ்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் பதறி போன பெற்றோர்கள் அந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தர்னேஷ் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

    இது குறித்து இண்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமங்கலம் அருகே குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை திடீரென இறந்தது.
    • ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள அனுப்பப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது30). இவரது மனைவி ராணி(26). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. 2-வது குழந்தை பிறந்து இறந்துவிட்டது.

    இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்தில் 3-வதாக குறைபிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை உடல் நலக்குறைவுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக குழந்தையை செக்கானூரணி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்தபோது இறந்துவிட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து குழந்தையின் தாய் ராணி ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஹபீப் தெருவை சேர்ந்தவர் ஜக்கிரியா. இவருக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது.
    • கடந்த ஒரு மாதமாக தோல் அலர்ஜி நோய் இருந்தது. அதற்காக அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தனர்.

    சேலம்:

    சேலம் கோட்டை பெருமாள் கோவில் அருகே உள்ள ஹபீப் தெருவை சேர்ந்தவர் ஜக்கிரியா. இவருக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது.

    இந்த குழந்தைக்கு கடந்த ஒரு மாதமாக தோல் அலர்ஜி நோய் இருந்தது. அதற்காக அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு குழந்தையை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்த போது இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கவியரசன் (வயது 25), கூலி வேலை செய்யும் இவருக்கு கல்பனா (23) என்ற மனைவி உள்ளார்.இந்த தம்பதிகளுக்கு 1 1/2 வயதில் பிரதீப் என்கிற மகன் உள்ளான்.
    • இந்த குழந்தை கடந்த சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்துள்ளது.

    சேலம்:

    சேலம் வாய்க்கால் பட்டறை ராமமூர்த்தி புதூர் பகுதி சேர்ந்தவர் கவியரசன் (வயது 25), கூலி வேலை செய்யும் இவருக்கு கல்பனா (23) என்ற மனைவி உள்ளார்.இந்த தம்பதிகளுக்கு 1 1/2 வயதில் பிரதீப் என்கிற மகன் உள்ளான்.இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமான கல்பனாவுக்கு கடந்த 6-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.இந்த குழந்தை கடந்த சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று குழந்தை திடீரென சோர்வாகி மயங்கவே உடனடியாக குழந்தை எடுத்துக்கொண்டு வந்து சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்த பிறகு தான் குழந்தை எவ்வாறு இருந்தது என்பது தெரிய வரும். குழந்தை திடீரென இறந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    ×