என் மலர்
நீங்கள் தேடியது "Deepavali festival"
- ஸ்ரீலட்சுமி குபேர பூஜையின் போது குபேர யந்திரத்தை வைத்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.
- சிவப்பு நிற பட்டுத் துணியின் மீது யந்திரத்தை வைத்து வைத்துத் தாமரை மலரைக் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.
ஸ்ரீலட்சுமி குபேர பூஜையின் போது குபேர யந்திரத்தை வைத்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.
பெரும் செல்வத்தை அளிக்கும் இந்த குபேர யந்திரத்தை, தீபாவளித் திருநாளில் மட்டுமன்றி, வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் கூடிய நாளிலும் செய்யலாம். குபேர யந்திரம் வரைவது எப்படி என்பதை அறிவோம்.
புரசு இலையில் பலாச மலர்ச் சாறும் கோரோசனையும் சேர்த்து நாணல் தட்டையினால் எழுத வேண்டும். புரசு இலையும் பலாச மலரும் கிடைக்காதவர்கள் சந்தனம், பால் குங்குமம் கலந்த குழம்பால் எழுதலாம். அல்லது 3x3 அளவுள்ள தாமிரம், வெள்ளி அல்லது தங்கத் தகட்டில் யந்திரத்தை எழுதலாம்.
சிவப்பு நிற பட்டுத் துணியின் மீது யந்திரத்தை வைத்து தாமரை மலரைக் கொண்டு பூஜை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டின்போது, கட்டாயமாக 5 முகங்கள் கொண்ட குத்துவிளக்கில் நெய் தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த வழிபாட்டை தீபாவளியில் தொடங்கி தொடர்ந்து 72 நாட்கள் பூஜை செய்துவர கோடி நன்மை கிடைக்கும். ஒவ்வொரு நாளும் குபேர மந்திரத்தை 1008 முறை உச்சரிக்க வேண்டும். 72 நாட்கள் பூஜை செய்ய முடியாதவர்கள் குபேர யந்திரத்தையும், லட்சுமி குபேரர் படத்தையும் வைத்து 48 நாட்கள் பூஜை செய்யலாம். இப்படி செய்துவர செல்வப் பெருக்கம் அதிகரிக்கும். இந்த யந்திர பூஜைக்கு கைமேல் பலன் கிடைக்கும்.
வடக்கு முகம் நோக்கி அமரந்து பால் நைவேத்தியம் செய்ய வேண்டும். குபேர பூஜையுடன் தனலட்சுமி அல்லது சவுபாக்ய லட்சுமி படத்தையும் வைத்து பூஜிக்க வேண்டும்.
ஸ்ரீலட்சுமி குபேர பூஜையுடன் நவகிரக பூஜையையும் செய்யலாம். கோதுமையில் சூரியனையும், நெல்லில் சந்திரனையும், துவரையில் அங்காரகனையும், பச்சைப் பயறில் புதனையும், கொண்டைக் கடலையில் குரு பகவானையும், மொச்சையில் சுக்கிரனையும், கறுப்பு எள்ளில் சனீஸ்வர பகவானையும், கறுப்பு உளுந்தில் ராகுவையும், கொள்ளில் கேதுவையும் ஆவாகனம் செய்து, நவகிரக ஸ்தோத்திரங்கள் பாராயணம் செய்து பூஜிக்கலாம்.
- உடலுக்கு மட்டும் தண்ணீர் ஊற்றி குளித்துவிட்டு குளியல் என்று கூறக்கூடாது.
- தலைக்கு குளிர்ந்த தண்ணீர் அல்லது இளம்சூடான தண்ணீரை பயன்படுத்தலாம்.
தீபாவளி கொண்டாடப்படும் இந்த மகிழ்ச்சியான வேளையில் ஆரோக்கியமாக வாழ தினமும் காலை பொழுதில் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்து பார்த்து வருகிறோம். இத்தொடரில் குளியல் பற்றிய கட்டுரை தீபாவளி திருநாள் வரும் வேளையில் அமைந்து இருப்பது மிக்க மகிழ்ச்சி.
தீபாவளிக்கும் குளியலுக்கும் என்ன சம்பந்தம் என்றால், தீபாவளி பண்டிகை அன்று அனைத்து நீர்நிலைகளிலும் கங்கா வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். எனவே தீபாவளி திருநாளில் எண்ணெய் தேய்த்து குளிப்பதை கங்கா ஸ்நானம் என்பார்கள்.
தமிழ் மொழி நல்லொழுக்க நெறிமுறைகளை ஆரோக்கிய வாழ்விற்காக பலவற்றை நூல்கள் மூலமாகவும் பழமொழிகள் மூலமாகும் வழங்கியுள்ளது. அவற்றில் ஒன்று "கந்தையானாலும் கசக்கி கட்டு, கூழானாலும் குளித்துக் குடி என்பது ஆகும். அதாவது அழுக்கான கந்தை ஆடையாகயிருந்தாலும் அதனை துவைத்து தான் உடுத்த வேண்டும். அதேப்போல் கூழ் என்ற எளிமையான உணவாக இருந்தாலும் அதனை குளித்துப் பின்பு தான் உண்ணவேண்டும் என்பதே அதன் பொருள்.
ஒப்பற்ற மருத்துவ முறையான ஆயுர்வேதம் தினமும் குளிக்க வேண்டும் என்றும் மேலும் அதனை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்றும் மிக தெளிவாக விளக்கி கூறுகிறது. உடலை குளிர்விப்பதே குளியல் என்று மருவிற்று. குளியல் என்பது தலைக்கு சேர்த்து தான். உடலுக்கு மட்டும் தண்ணீர் ஊற்றி குளித்துவிட்டு குளியல் என்று கூறக்கூடாது. குளியலால் உடல் தூய்மை மட்டுமல்ல, உள்ளமும் தூய்மை அடைகிறது. ஆம் குளியலால் அகமும் புறமும் பசுமை அடைகிறது.
குளிப்பதால் தூக்கம் போகும், சிரமம் குறையும், உடல் எரிச்சல் போகும், வியர்வை, அரிப்பு, இவற்றை போக்க வல்லது. மனதில் ஒருவித உற்சாகம், புத்துணர்ச்சி பிறக்கும். மேலும் உடம்பில் உள்ள அழுக்குகளை போக்குகிறது. ஐம்புலன்களுக்கும் புத்துணர்ச்சியை கொடுக்குகிறது. சோம்பலை போக்குகிறது. ஆண்மையை அதிகரிக்கிறது. பசி தீயை அதிகரித்து நன்றாக ஜீரணம் செய்ய வழிவகைச்செய்கிறது. ரகத்தை சுத்தம் செய்ய உதவுகிறது.
இவ்வளவு நன்மைகளை கொண்ட குளியலை எவ்வாறு மேற்கொள்ளுவது. இது என்ன கேள்வி, கோடை காலம் என்றால் குளிர்ந்த தண்ணீர், குளிர் காலம் என்றால் வெந்நீர் கொண்டு குளிக்க வேண்டியது தானே என்று என்ன தோன்றுகிறதா... ஆனால் இது முற்றிலும் தவறு. ஆம் இதற்கு ஆயுர்வேதம் ஒரு வழிகாட்டுதலை வழங்குகிறது.
தற்போது மக்கள் என்ன செய்கிறார்கள் என்றால், தலைவலியோ அல்லது மூக்குஒழுகுதல் போன்ற பிரச்சனை இருந்தால் தலைக்கு சுட சுட தண்ணீர் ஊற்றுதல் நன்மை தரும் என கருதுகிறார்கள். ஆனால் இதனை தப்பான நடைமுறை என்று ஆயுர்வேதம் கண்டிக்கிறது. ஆம் தலைக்கு சுடுதண்ணீர் ஊற்றினால் தலைமுடிக்கும் கண்ணுக்கும் ஆபத்து. எனவே சுடுத்தண்ணீர் தலைக்கு கீழே மட்டும் பயன்படுத்த வேண்டும். தலைக்கு குளிர்ந்த தண்ணீர் அல்லது இளம்சூடான தண்ணீரை பயன்படுத்தலாம்.

Dr. ரா. பாலமுருகன், அரசு ஆயுர்வேத மருத்துவர், 9025744149
முக வாதம், கண் வலி, கண்ணில் நீர்வடிதல், காது வலி, காதில் நீர் வடிதல், சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள், காய்ச்சல், வயிற்றுப்போக்கு, அஜீரணம் உள்ளவர்கள் அந்த தொந்தரவுகள் சரியாகும் வரை தலைக்கு குளிப்பதை தவிர்க்கலாம். சரி எவ்வாறு குளிக்க வேண்டும் என்பதை காண்போம்.
இதுநாள் வரையிலும் குளியலறைக்கு சென்று இருக்கிற தண்ணீரில் குளித்து விட்டு அவசரமாக தலையை துவட்டி செல்லுவது வழக்கம். இதற்கும் வழிகாட்டுதலை வழங்குகிறது ஆயுர்வேதம். அதாவது முதலில் தலையை நனைக்காமல் உடலில் தண்ணீர் ஊற்றக்கூடாது. இது எதனால் கூறப்பட்டு இருக்கலாம் என்றால் முதலில் தண்ணீரை உடலுக்கு ஊற்றும்போது ஏற்கனவே சூடாகயிருக்கும் உடலில் தண்ணீர் பட்டவுடன் சூடு எழும்பி அது தலையை தாக்க வாய்ப்புள்ளது. எனவே முதலில் குளியலுக்கு சிறிதளவு தண்ணீரைக்கொண்டு தலையை நனைத்து குளியலுக்கு உடலை தயார் செய்ய வேண்டும்.
அடுத்தபடியாக மிகுந்த குளிர்ச்சியான நீரில் குளிக்கக்கூடாது. ஆடையில்லாமல் குளிக்கக்கூடாது. ஒற்றை ஆடையுடன் குளிக்க வேண்டும். குளித்தபின்பு வேகமாக உடலையும் தலைமுடியையும் துவட்டிக்கொள்ளக்கூடாது. அவசரமாக துவட்டினால் தோலின் வனப்பும், முடியின் உறுதி தன்மை கேள்விக் குறியாகிவிடும்.
ஒரு நாளைக்கு ஆண்கள் இரண்டு வேளையும், பெண்கள் ஒரு வேளையும் குளிக்க வேண்டும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. ஏன் இந்த பாலின வேறுபாடு என்று பார்ப்போமேயானால் அக்காலத்தில் ஆண்கள் பணி நிமித்தமாக வெளியே சென்று வீட்டுக்கு திரும்பினார்கள். அதனால் இரு வேளை குளிக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அக்கால பெண்கள் அவ்வாறு இல்லை. அதன் காரணமாக ஒரு வேளை குளிக்க சொல்லியிருக்கலாம். மேலும் ஆண்களை விட பெண்களுக்கு முடி அதிகம் என்பதினால், முடியை உலர்த்துவது கடினம் என்ற காரணத்தினால் கூட இருக்கலாம். ஆனால் இக்காலத்தில் அனைவரும் சமம் என்றாகிவிட்டது. எனவே அனைவரும் இருவேளை குளிக்க வேண்டும். இதில் விதியை சற்று தளர்த்தி தேவைப்படுவோர் மட்டும் ஒரு தடவை உடலுக்கும் தலைக்கும், மற்றொரு தடவை உடலுக்கு மட்டும் குளிக்கலாம்.
குளியலின் வகைகள் - ஒன்னு சுடுத் தண்ணீர் குளியல் மற்றொன்று குளிர்ச்சியான தண்ணீர் குளியல் என்று தான் அனைவரும் அறிந்தது. ஆனால் சாஸ்திரங்கள் பல குளியல்களை கூறுகின்றன. அவற்றில் ஒன்று தான் ஐவகை குளியல். 1. நிலம் சார்ந்த குளியல் உதாரணத்திற்கு மண் குளியல். 2. நீர் சாந்த குளியல் - இது தான் நடைமுறையில் உள்ள குளியல். 3. நெருப்பு சார்ந்த குளியல் - நீராவி குளியல், சூர்ய ஒளியில் இருந்துக்கொண்டு வியர்வை மூலமாக குளித்தல். 4. வாயு சார்ந்த குளியல் - வெளிக்காற்று உடலில் படும்படியிருத்தல் அல்லது மூலிகைக்கொண்டு புகை எழுப்பி அப்புகை உடலில் படும்படி செய்தல். 5. ஆகாயம் சார்ந்த குளியல் - வெட்ட வெளியில் உலாவுதல். இதற்கும் மேல் மற்றொரு குளியல் இருக்கிறது. அது தான் மானசீக குளியல். இவை தான் மனதளவில் உள்ள அழுக்குகளை போக்க வல்லது.
இவை இருக்கட்டும். நாம் தற்போது நடைமுறையில் நோயற்றவர்களுக்கு உள்ள குளியல், நோயுள்ளவர்களுக்கு உள்ள குளியல் என இரண்டாக பிரித்து பார்ப்போம். ஆம் இன்றைய காலகட்டத்தில் நீண்ட நாள் நோயினால் அவதியுறுபவர்கள் ஏராளம். அவர்களுக்கு மூலிகை குளியல் எவ்வாறு நன்மையளிக்கும் என்பதை வரும் தொடரில் காண்போம்.
- தீபாவளிக்கு முந்திய நாள் வீட்டில் லட்சுமி குபேர பூஜை செய்வதன் மூலம் செல்வ வளம் ஏற்படும்.
- பிரிந்த குடும்பங்கள், மனங்கள் ஒன்று சேர்வதற்கும் தீபாவளி பண்டிகை பெரும் உதவியாக அமைகிறது.
தீபாவளி என்றால் அதற்கு விளக்குகளின் வரிசை என்று பொருளாகும். தமிழகத்தில் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் வரும் அமாவாசை தினத்தன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. அந்த நாளன்று அதிகாலையில் பூஜை அறையில் 5, 9, 11 ஆகிய எண்ணிக்கைகளில் வரிசையாக தீபம் ஏற்றி வைத்து கடவுளை வழிபடுவது மரபாக கடைபிடிக்கப்படுகிறது.
அன்று மாலை வீட்டின் முன்னால் குறைந்தபட்சம் இரு அகல் விளக்குகளாவது ஏற்றி வைப்பதும் ஐதீகமாகும். மற்ற நாட்களை விட தீபாவளி நாளில் தான் செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமி, வைத்திய கடவுளான தன்வந்திரி, மனித ஆயுளுடன் தொடர்பு கொண்ட எமதர்மன் ஆகியோர் ஆசிகளை வழிபாட்டின் மூலம் பெற முன்னோர்கள் வழிகாட்டியுள்ளனர்.
மேலும், தீபாவளி அன்று எல்லா தேவதைகளும் பண்டிகை பொருட்களில் வாசம் செய்வதாகவும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. தலைக்கு தேய்த்துக் குளிக்கும் நல்லெண்ணையில் மகாலட்சுமியும், அரப்பு அல்லது சிகைக்காய் தூளில் சரஸ்வதி தேவியும், நெற்றியில் இடும் சந்தனத்தில் பூமாதேவியும், குங்குமத்தில் கௌரியும், பூக்களில் மோகினி, தண்ணீரில் கங்கையும், நாம் அணியும் புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்பு பலகாரங்களில் அமிர்தமும், தீபச்சுடரில் பரமாத்மாவும் இருப்பதாகவும் சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கமாக தீபாவளியன்று அதிகாலையில் தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிப்பது வழக்கம். அதன் மூலம் நம்மிடம் உள்ள தீமைகள் அழிந்து, நல்லவை வந்து சேரும் என்பது நம்பிக்கையாகும். அவ்வாறு குளிக்கும் தண்ணீரில் அன்று ஒரு நாள் காலையில் மட்டும் கங்கை இருப்பதாக ஐதீகம். எனவே, அதில் சிறிது பசும்பால் கலந்து குளிப்பதும் மகாலட்சுமியின் அருளை பெற்றுத் தரும்.

தீபாவளிக்கு முந்திய நாள் வீட்டில் லட்சுமி குபேர பூஜை செய்வதன் மூலம் செல்வ வளம் ஏற்படும். அந்த பூஜையில் ஐந்து விதமான பழ வகைகள் மற்றும் மூன்று விதமான பூக்களை படைப்பது விசேஷம். பழ வகைகளில் மாதுளை, செவ்வாழை, நெல்லிக்கனி ஆகியவை முக்கியம். பூ வகைகளில் தாமரை, மல்லிகை, செவ்வந்தி ஆகியவை சிறப்பிடம் பெறுகின்றன. அவ்வாறு லட்சுமி குபேர பூஜை செய்த பிறகு வீட்டில் உள்ள பெரியோர்களிடம் ஆசிர்வாதம் பெறுவதன் மூலம் சகல மங்களமும் நிலைக்கும் என்ற ஐதீகம் ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தீபாவளி நாளன்று வீட்டில் கரும்பு வைத்து மகாலட்சுமியை வழிபாடு செய்வதும் வட இந்திய மாநிலங்களில் வழக்கமாக இருந்து வருகிறது. அதன் மூலம் அவர்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுவதாக நம்புகிறார்கள். அத்துடன் வீட்டின் தலைவாசல், கதவு நிலைகள் ஆகியவற்றுக்கு சாமந்திப்பூக்களை கொண்டு வித விதமாக அலங்காரங்கள் செய்கிறார்கள்.
அத்துடன், அன்று மாலை நேரம் செல்வத்தின் கடவுளான மகாலட்சுமியை வரவேற்கும் விதமாக வீட்டு வாசலில் இருபுறமும் அகல் விளக்குகளை ஏற்றி வைக்கிறார்கள். தீபாவளி தினத்தன்று பட்டாசுகளை வெடித்து கொண்டாடும் முறையிலும் ஒரு உள்ளர்த்தம் இருக்கிறது. அதாவது இருள் விலகி ஒளி பெருகுவது, தீமை விலகி நன்மையின் வெளிச்சம் ஏற்படுவது என்ற அர்த்தத்தில் மக்கள் விளக்கேற்றுவதுடன், பட்டாசுகளை வெடித்து தீபாவளி கொண்டாடுகிறார்கள்.
அத்துடன் மகிழ்ச்சியை ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் தெரிவித்துக் கொள்ளும் வகையில் இனிப்புகளை வழங்கியும், புத்தாடைகளை அணிந்தும், அவற்றை பரிசுகளாக வழங்கியும் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள்.
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் தீபாவளி நன்னாள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றாலும், இன்னொரு முக்கியமான சடங்கும் அதன் கொண்டாட்டத்தில் அடங்கியிருக்கிறது. அதாவது, ஏதேனும் ஒரு காரணத்திற்காக குடும்பங்களில் ஒருவரோடு ஒருவர் பேசாமல், தொடர்பு கொள்ளாமல் இருந்தால் தீபாவளி நாளை முன்னிட்டு அவர்கள் ஒன்று சேர்வதற்கு உறவினர்கள் முயற்சிப்பார்கள்.
அந்த வகையில், பிரிந்த குடும்பங்கள், மனங்கள் ஒன்று சேர்வதற்கும் தீபாவளி பண்டிகை பெரும் உதவியாக அமைகிறது. அவ்வாறு இணைந்த குடும்பங்களில் இரவு முழுவதும் சுடர் விடும்படி மாணிக்க தீபம் என்ற அகண்ட தீபத்தை ஏற்றி வைப்பார்கள். அதன் மூலம் அவரவர் குலதெய்வம் மற்றும் மகாலட்சுமியின் அருள் கிடைப்பதாக பொதுமக்களிடையே ஒரு பாரம்பரியம் உள்ளது.
- அயோத்தியில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 8 ஆண்டுகளாக தீபோற்சவ திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
- சரயு நதியின் 56 படித்துறைகளில் அகல்விளக்குகளை பல்வேறு வடிவங்களில் வரிசைப்படுத்தும் பணி தொடங்கியது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 8 ஆண்டுகளாக தீபோற்சவ திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 9-ம் ஆண்டு தீபோற்சவத்துக்காக சரயு நதியின் 56 படித்துறைகளில் அகல்விளக்குகளை பல்வேறு வடிவங்களில் வரிசைப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது.
அயோத்தி மாவட்டத்தில் உள்ள ராம்மனோகர் லோஹியா அவாத் பல்கலைக்கழக மாணவர்கள், இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இம்முறை உலக சாதனை முயற்சியாக சுமார் 28 லட்சம் அகல்விளக்குகள் ஏற்றப்பட உள்ளதாகவும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஏற்பாடுகளை கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது
- சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்து, ரெயில், விமானம் போன்ற போக்குவரத்து வசதியை பயன்படுத்துவார்கள்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிப்பவர்கள் பெரும்பாலானோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதற்கு பேருந்து, ரெயில், விமானம் போன்ற போக்குவரத்து வசதியை பயன்படுத்துவார்கள்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், பலரும் சொந்த ஊருக்கு கிளம்ப தொடங்கி உள்ள நிலையில் வழக்கத்தை விட விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன.
* சென்னையில் இருந்து மதுரைக்கு சாதாரண நாட்களில் ரூ.3,129-ஆக இருக்கும் கட்டணம் தற்போது ரூ.17,683 வரை உயர்ந்துள்ளது.
* சென்னையில் இருந்து திருச்சிக்கு சாதாரண நாட்களில் ரூ.3,608-ஆக இருக்கும் கட்டணம் தற்போது ரூ.15,233 வரை உயர்ந்துள்ளது.
* சென்னையில் இருந்து கோவைக்கு சாதாரண நாட்களில் ரூ.4,351-ஆக இருக்கும் கட்டணம் தற்போது ரூ.17,158 வரை உயர்ந்துள்ளது.
* சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சாதாரண நாட்களில் ரூ.3,608-ஆக இருக்கும் கட்டணம் தற்போது ரூ.17,053 வரை உயர்ந்துள்ளது.
* சென்னையில் இருந்து டெல்லிக்கு சாதாரண நாட்களில் ரூ.5,933-ஆக இருக்கும் கட்டணம் தற்போது ரூ.30,414 வரை உயர்ந்துள்ளது.
* சென்னையில் இருந்து மும்பைக்கு சாதாரண நாட்களில் ரூ.3,356-ஆக இருக்கும் கட்டணம் தற்போது ரூ.21,960 வரை உயர்ந்துள்ளது.
* சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு சாதாரண நாட்களில் ரூ.5,293-ஆக இருக்கும் கட்டணம் தற்போது ரூ.22,169 வரை உயர்ந்துள்ளது.
* சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு சாதாரண நாட்களில் ரூ.2,926-ஆக இருக்கும் கட்டணம் தற்போது ரூ.15,309 வரை உயர்ந்துள்ளது.
* சென்னையில் இருந்து கவுகாத்திக்கு சாதாரண நாள் ரூ.6,499-ஆக இருக்கும் கட்டணம் தற்போது ரூ.21,639 வரை உயர்ந்துள்ளதால் மக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- மைசூர் பாக்கை வீட்டில் எப்படி செய்வது என பலருக்கும் தெரியாது.
- சர்க்கரை பாகும், கடலை மாவும் சேர்ந்து நல்ல பதத்திற்கு வந்தவுடன் நெய் சேர்த்தால் மைசூர் பாக் ரெடி!
தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடை வரிசையில் பலகாரத்திற்கும் முக்கிய இடம் உண்டு. தீபாவளி நோம்பு இருப்பவர்கள், அதிரசம், முறுக்கு போன்றவற்றை செய்து சாமிக்கு படைத்து கொண்டாடுவார்கள். நோம்பு இல்லாதவர்கள், பெரும்பாலும் குலாப் ஜாமுன் செய்வார்கள். சிலர் கடைகளில் இனிப்புகளை வாங்கி நண்பர்களுக்கு கொடுப்பார்கள். கடை இனிப்புகளில் முக்கியமானது மைசூர் பாக். அதிலும் வாயில் போட்டவுடன் கரையும் மைசூர் பாக்குக்கு நிறைய பேர் அடிமை என்றே சொல்லலாம். அந்த மைசூர் பாக்கை வீட்டில் எப்படி செய்வது என பலருக்கும் தெரியாது. ஆனால் மைசூர் பாக்கை வீட்டிலேயே ஈசியாக செய்யலாம். வாங்க...

மைசூர் பாக் செய்முறை
* மைசூர் பாக் செய்வதற்கு முதலில் கடலை மாவை நன்கு சலித்துக்கொள்ள வேண்டும்.
* நெய் மற்றும் எண்ணெய்யை ஒன்றாக சேர்த்து லேசாக காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
* ஒரு பாத்திரத்தில் கடலை மாவை கொட்டி, அதில் காய்ச்சிய நெய் கலவையை பாதி அளவு ஊற்றி, கெட்டி ஆகாமல் மாவை பிசைந்துக்கொள்ள வேண்டும். (மீதி நெய் கலவையை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்)
* அடுப்பை பற்றவைத்து, கனமான கடாயில் சர்க்கரையை போட்டு அதில் தண்ணீர் ஊற்றி கம்பி பதத்திற்கு பாகு எடுக்க வேண்டும். பாகு எடுக்க தெரியாது என்பவர்கள், தண்ணீர் நன்கு கொதித்து வெள்ளை நுரைபோல பொங்கும் பதத்தை, பாகு பதமாக எடுத்துக்கொள்ளலாம்.
* சர்க்கரை பாகில், கடலை மாவு கலவையைக் கொட்டி, கெட்டி இல்லாமல் கலக்கிவிட வேண்டும்.
* ஸ்டவ்வை, மீடியம் அல்லது லோ ஃப்ளேமில் மாறி மாறி வைத்துக்கொள்ளலாம். ஹை ஃப்ளேமில் வைக்கக்கூடாது.
* சர்க்கரை பாகுடன் கடலை மாவு கலவை நன்கு சேர்ந்தவுடன், மீதி உள்ள நெய் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக அதில் சேர்த்து கிளற வேண்டும்.
* கடாயில், மைசூர் பாக் கலவை நன்கு திரண்டு உருண்டு வரும்போது அடுப்பை ஆஃப் செய்துவிடலாம்.
* ட்ரே ஒன்றில் சுடான மைசூர் பாக் கலவையை ஊற்றி, 5 முதல் 6 மணி நேரங்களுக்கு அப்படியே விட்டுவிட வேண்டும்.
* மேலும் ட்ரேவில் ஊற்றிய மைசூர் பாக் கலவையை அதிகமாக அழுத்திவிடக் கூடாது.
* 6 மணி நேரங்களுக்கு பிறகு, கத்தி ஒன்றை எடுத்து, நமக்கு பிடித்த ஷேப்பில் மைசூர் பாக்கை வெட்டிக்கொள்ளலாம்.
* அந்த மைசூர் பாக்கை எடுத்து வாயில் வைத்தால் நிச்சயம் அப்படியே கரைந்து தொண்டைக் குழிக்குள் இறங்கும்.
- தீபாவளியை முன்னிட்டு பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு தீயணைப்புத் துறைக்கு 9,549 விண்ணப்பங்கள் வரப்பெற்றன.
- கடந்த ஆண்டைக்காட்டிலும், இந்த ஆண்டு அதிக அளவில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கக் கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளன.
சென்னை:
தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பட்டாசு, ஜவுளி வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. தற்காலிக பட்டாசுக் கடைகள் ஆங்காங்கு திறக்கப்பட்டு வருகின்றன.
பட்டாசு கடைகளில் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்கும் வகையில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைப்பதற்குரிய கடுமையான விதிமுறைகளை தீயணைப்புத் துறை அமல்படுத்தி உள்ளது.
பட்டாசு கடைகளை ஒழுங்குப்படுத்துவதற்காக தீயணைப்புத் துறை இயக்குநரும், டி.ஜி.பி.யுமான சீமா அகர்வால் மாநிலம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே சுற்றறிக்கை அனுப்பினார்.
அதில் பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு வெடிப்பொருள் சட்டத்தின்படி பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை நேரடியாக ஆய்வு செய்த பின்னர் தடையில்லாச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
தற்காலிக பட்டாசுக் கடை விற்பனை உரிமம் கேட்பவர்கள் தீயணைப்புத் துறை, உள்ளாட்சி நிர்வாகம், காவல் துறை ஆகியோரிடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
இந்த ஆண்டில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு தீயணைப்புத் துறைக்கு 9,549 விண்ணப்பங்கள் வரப்பெற்றன.
இதில் 6,630 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2,499 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. இந்த விண்ணப்பங்கள் அடிப்படையில் கள ஆய்வு செய்யப்பட்டு ஓரிரு நாட்களில் முடிவு எடுக்கப்படும் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
போதிய பாதுகாப்பு வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை என 681 விண்ணப்பங்களை தீயணைப்புத் துறை நிராகரித்துள்ளது.
கடந்த ஆண்டைக்காட்டிலும், இந்த ஆண்டு அதிக அளவில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கக் கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளன. இன்னும் விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதால் பட்டாசுக் கடைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தீயணைப்புத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.
கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் பட்டாசுக் கடைகள் வைக்க தடையில்லா சான்றிதழ் கேட்டு சுமார் 9,177 விண்ணப்பங்கள் தீயணைப்புத் துறைக்கு வந்தன.
அதில் தகுதியான சுமார் 7 ஆயிரம் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட்டன. மற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
- சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலுமே வணிக நிறுவனங்கள் மற்றும் ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.
- தமிழகத்தில் ஏ.பிளஸ், ஏ.பி.சி. என 4 வகைகளாக ரவுடிகள் பிரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
சென்னை:
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலுமே வணிக நிறுவனங்கள் மற்றும் ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.
இதுபோன்று பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரவுடிகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் வழிப்பறி திருடர்கள் கைவரிசை காட்டுவதை தடுப்பதற்கு போலீசார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி. வெங்கட்ராமன், கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
சென்னை உள்பட அனைத்து மாநகரங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஏ.பிளஸ், ஏ.பி.சி. என 4 வகைகளாக ரவுடிகள் பிரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
இவர்களில் ஏ.பிளஸ் ரவுடிகள் தங்களுக்கு கீழே அடியாட்களை வைத்துக்கொண்டு தாதாக்கள் போல செயல்பட்டு வருபவர்கள் ஆவர். இவர்கள்தான் இருந்த இடத்தில் இருந்த படியே போனில் பேசி மிரட்டி மாமூல் வசூலிப்பது உள்பட பல சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவார்கள்.
சென்னை, கோவை, திருச்சி, சேலம், மதுரை, நெல்லை உள்ளிட்ட பெரு நகரங்களில் இதுபோன்ற ஏ.பிளஸ் ரவுடிகளும், ஏ.வகை ரவுடிகளும் தீபாவளி நேரத்தில் வியாபாரிகள் மற்றும் தொழில் அதிபர்களை மிரட்டி மாமூல் வசூலில் ஈடுபடுவார்கள்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் யார்- யார் என்பதை கண்டறிந்து அவர்களை பிடித்து சிறையில் தள்ள வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
இதையடுத்து அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிறையில் இருந்து விடுதலையாகி சுற்றி திரியும் ரவுடிகள், பழைய குற்றவாளிகள் உள்ளிட்டோரை தேடி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
ரவுடிகளோடு கூட்ட நெரிசலை பயன்படுத்தி செயின் பறிப்பில் ஈடுபடும் குற்றவாளிகளையும், பிக்பாக்கெட் திருடர்களையும் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் சுமார் 6 ஆயிரம் ரவுடிகளை போலீசார் கண்காணித்து வருகிறார்கள். 4 இணை கமிஷனர்கள், 12 துணை கமிஷனர்கள் ஆகியோர் சென்னை மாநகர் முழுவதும் தங்களது பகுதியில் உள்ள ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை வேகப்படுத்தி உள்ளனர்.
இப்படி குற்ற செயல்களை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறும்போது, 'தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் அமைதியான முறையில் மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
இது போன்ற பண்டிகை காலங்களில் ரவுடிகள் மற்றும் குற்றவாளிகள் மூலமாக பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமுடன் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளை அறிவுறுத்தி உள்ளோம் என்றார்.
இதன்படி சென்னை முதல் குமரி வரையில் தலைமறைவு ரவுடிகள், பழைய குற்றவாளிகள் ஆகியோரை பிடிப்பதற்கு போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டு உள்ளனர்.
- தீபாவளி பண்டிகை அக்டோபர் 31-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
- தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் நிரம்பி விட்டன.
சென்னை:
அரசு விரைவு பஸ்களுக்கு 60 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் நடைமுறை உள்ளது. அரசு பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நீண்ட தூரம் செல்லக்கூடிய எஸ்.இ.டி.சி. பஸ்களில் படுக்கை வசதியுடன் குளிர்சாதன வசதி போன்றவை இருப்பதால் அதிகளவில் பயணிக்க தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகை அக்டோபர் 31-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லக் கூடியவர்கள் கடந்த 1, 2-ந் தேதிகளில் முன்பதிவு செய்தனர். அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளில் பயணம் செய்வதற்காக முன்பதிவு தொடங்கியது. தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் நிரம்பி விட்டன.
அதே போல பண்டிகை முடிந்து நவம்பர் 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்கு வருவதற்கும் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன. 1500 பஸ்களுக்கு முதல் கட்டமாக முன்பதிவு நடந்து வருகிறது. இது தவிர வழக்கம் போல சிறப்பு பஸ்களும் அறிவிக்கப்படும்.
- தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் வெளிமாநில வியாபாரிகள் திருப்பூர் நோக்கி வந்து ஆர்டர் கொடுப்பது அதிகரித்துள்ளது.
- மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி போன்ற பகுதிகளுக்கு உள்நாட்டு ஆடைகள் அதிகம் தயாரித்து வழங்கப்படுகிறது.
திருப்பூர்:
பின்னலாடை நகரான திருப்பூரில் உள்நாட்டு ஆடை தயாரிப்பு தொடங்கி வெளிநாடுகளுக்கு ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உயர்ந்த இடத்தை எட்டிப்பிடித்துள்ளது. அன்னிய செலாவணியை அதிகம் ஈட்டிக்கொடுத்து டாலர் சிட்டி என்ற பெருமையுடன் திகழ்கிறது. வெளிநாட்டு ஆடை ஏற்றுமதியால் உலகம் அறிய செய்தாலும் உள்நாட்டு ஆடை வர்த்தகமும் உயர்ந்த இடத்தை பிடித்துள்ளது. ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடிக்கு உள்நாட்டு ஆடை வர்த்தகம் நடக்கிறது.
பண்டிகை காலங்களில் உள்நாட்டு ஆடை உற்பத்தி அதிகம் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களுக்கு வெளிமாநிலங்களில் இருந்து திருப்பூர் நோக்கி வியாபாரிகள் வந்து ஆர்டர் கொடுத்து ஆடைகளை பெற்று செல்கிறார்கள்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் வெளிமாநில வியாபாரிகள் திருப்பூர் நோக்கி வந்து ஆர்டர் கொடுப்பது அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு பிறகு உள்நாட்டு வர்த்தகம் அந்தளவுக்கு இல்லாமல் இருந்த நிலையில் தற்போது ஆர்டர் வருகையை பார்க்கும்போது, கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் திருப்பூர் எப்படி பரபரப்பாக இருந்ததோ அந்த நிலையை எட்டி இருக்கிறது என்று உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி போன்ற பகுதிகளுக்கு உள்நாட்டு ஆடைகள் அதிகம் தயாரித்து வழங்கப்படுகிறது. குறிப்பாக உள்ளாடைகள், பேஷன் ஆடைகள், குழந்தைகளுக்கான ஆடைகள் அதிகம் உற்பத்தி செய்து அனுப்பி வைக்கப்படுகிறது. உள்ளாடை தயாரிப்பில் திருப்பூருக்கு தனி இடம் உண்டு. பருத்தி ஆடைகளை பெரும்பாலும் தயாரித்து வந்த திருப்பூர் உள்நாட்டு உற்பத்தியாளர்கள், மெல்ல மெல்ல செயற்கை நூலிழை ஆடை தயாரிப்பில் ஈடுபட்டு தீவிரம் காட்டி வருகிறார்கள். பாலியஸ்டர் துணிகளில் பல ரகங்கள் உள்ளன.
தற்போது துணிகளாகவே சந்தையில் விற்பனை செய்யப்படுவதால் துணிகளை வாங்கி ஆடைகளாக தயாரிப்பதற்கு சில நாட்களே ஆகும் நிலை உள்ளது. அந்தளவுக்கு நவீன எந்திரங்கள், கட்டமைப்பு வசதிகள் திருப்பூரில் இருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள். பருத்தி துணிகளை தயாரிக்க முன்பெல்லாம், வர்த்தகர்கள் கூறியபடி நூல் எடுத்து அதை நிட்டிங் செய்து, தகுந்த நிறத்துக்கு சாயமேற்றி துணியாக கிடைப்பதற்கு 10 முதல் 15 நாட்கள் ஆகிவிடும். அதன்பிறகு பிரிண்டிங், எம்ப்ராய்டரி, தையல் என ஆடை தயாரிப்பு நடக்கும்.
ஆனால் தற்போது பாலியெஸ்டர் மற்றும் பருத்தி துணிகளாகவே சந்தையில் எளிதில் கிடைப்பதால் பிரிண்டிங், எம்ப்ராய்டரிங், தையல் என 2 நாட்களுக்குள் ஆர்டர்களை முடிக்கும் அளவுக்கு தொழில்நுட்ப வசதி இருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகைக்கான ஆர்டர்கள் வருகை அதிகரித்துள்ளது. உள்நாட்டு ஆடை தயாரிப்புக்கு தகுந்த சூழல் நிலவி வருகிறது. பருத்தி ஆடை தயாரிப்பில் இருந்து செயற்கை நூலிழை ஆடை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். பாலியெஸ்டர் துணிகளாகவே விரும்பிய வண்ணங்களில் சந்தையில் கிடைக்கிறது. ஆர்டர் கொடுத்த 2 நாட்களில் ஆடைகளை தயாரித்து அனுப்பும் அளவுக்கு நவீன தொழில்நுட்ப எந்திரங்கள் திருப்பூரில் உள்ளன. அதுபோல் அனைத்து கட்டமைப்பு வசதிகளும் இங்கு இருக்கிறது. தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. தேவையான தொழிலாளர்கள் இருந்தால் இன்னும் ஆர்டர்களை தைரியமாக எடுத்து அனுப்பி வைக்க முடியும்.
சில நிறுவனங்களில் விடுதி அமைத்து தொழிலாளர்களை தங்க வைத்து வேலைக்கு அமர்த்தியுள்ளனர். அவர்களுக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை என்ற பிரச்சினை இல்லை. தீபாவளி ஆர்டர்களை ஆயுத பூஜையையொட்டி முடித்து அனுப்பி வைப்போம். தற்போது உள்நாட்டு ஆடை தயாரிப்பு பரபரப்பாக உள்ளது.
கொரோனாவுக்கு முன்பு திருப்பூர், உள்நாட்டு ஆடை உற்பத்தி எப்படி இருந்ததோ அதுபோன்ற சூழல் இந்த ஆண்டு தென்படுகிறது. தீபாவளி பண்டிகை தொழிலாளர்களுக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் உற்சாகமாக அமையும் என்று நம்புகிறோம். தமிழக அரசு பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்தால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க தயாராக உள்ளோம். அரசு எங்களுக்கு உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூரில் தீபாவளி பண்டிகை ஆர்டர் அதிகரித்து உள்நாட்டு ஆடை தயாரிப்பு வேகமெடுத்துள்ளதால் ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருப்பூர் பின்னலாடை தொழிலில் 21 மாநிலங்களை சேர்ந்த, 3 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் பீகார், ஒடிசா, மேற்குவங்கம், உத்தரப்பிரதேச மாநில தொழிலாளர்கள் அதிகம்.
பின்னலாடை நிறுவனங்களுக்கு, தீபாவளி கால ஆர்டர் என்பது மிகவும் முக்கியம். வடமாநிலங்களில் இருந்து ஆர்டர் பெறப்பட்டு, உற்பத்தி துவங்கியுள்ளது. 3 வாரங்களுக்குள், உள்ளாடைகள், பின்னலாடைகளை உற்பத்தி செய்து அனுப்பி வைக்க திருப்பூர் பரபரப்பாக மாறியுள்ளது.
இந்நிலையில் பீகார், ஒடிசா மாநிலங்களில் இருந்து தகவல் வந்ததாக கூறி, அம்மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் புறப்பட்டு சென்று கொண்டிருக்கின்றனர். நீண்ட இடைவெளிக்கு பின், பண்டிகைக்கால ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தொழிலாளர் சொந்த ஊர் செல்வதால் உற்பத்தியாளர்கள் செய்வதறியாது திகைக்கின்றனர்.
இதுகுறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:-
சொந்த மாநிலம் செல்லும் தொழிலாளரிடம் விசாரித்தபோது, ரேஷன் கார்டு பதிவுக்காக செல்வதாக கூறுகின்றனர். பீகார் மற்றும் ஒடிசாவில் விசாரித்தபோது, நிலம் சீரமைப்பு பணி நடக்கிறது என்றும், உரிமையாளர்கள் வரும் 30ந்தேதிக்குள் கையெழுத்திட வேண்டுமென, அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. உண்மை நிலையை ஆராய்ந்து வருகிறோம். உற்பத்தி பரபரப்பாக நடக்கும் நேரத்தில், தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வது எங்களுக்கு புதிய சவாலாக மாறியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெங்களூருவில் இருந்து வரும் 30-ந்தேதி, நவம்பர் 3-ந்தேதி காலை புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் மதியம் எழும்பூர் வந்தடையும்.
- சென்னை எழும்பூரில் இருந்து வரும் 30-ந்தேதி, நவம்பர் 3-ந்தேதி மாலை புறப்பட்டு பெங்களூரு செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில் இரவு பெங்களூரு சென்றடையும்.
சென்னை:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெங்களூருவில் இருந்து வரும் 30-ந்தேதி மற்றும் நவம்பர் 3-ந்தேதி காலை 8.05 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06209), அதேநாள் மதியம் 2.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து வரும் 30-ந்தேதி மற்றும் நவம்பர் 3-ந்தேதி மாலை 3.55 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06210), அதேநாள் இரவு 10.50 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நம் சிவகாசியின் ஒட்டுமொத்த பொருளாதாரம்.
- தீபாவளிப் பண்டிகை, அனைவரின் வாழ்விலும் ஒளி ஏற்றும் தீபாவளியாக அமையட்டும்.
சென்னை:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது:-
"பட்டாசு வெடிப்பது நம்ம கலாச்சாரம். நம் மக்களின் வாழ்வாதாரம். நம் சிவகாசியின் ஒட்டுமொத்த பொருளாதாரம்.
நம் மகிழ்ச்சிக்காகப் பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்காக, நாம் அனைவரும், நம்மால் முடிந்த அளவுக்குப் பட்டாசு வாங்கி வெடிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
மத்தாப்புக்களின் வெளிச்சம் போல, இந்த தீபாவளிப் பண்டிகை, அனைவரின் வாழ்விலும் ஒளி ஏற்றும் தீபாவளியாக அமையட்டும். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






