என் மலர்
நீங்கள் தேடியது "flight fare hike"
- 'டிட்வா' புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
- சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இன்று மொத்தம் 54 விமானங்கள் ரத்து.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களை மிரட்டி வரும் 'டிட்வா' புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் 16 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் தூத்துக்குடி, திருச்சி, மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் 16 விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மேலும் மதுரை, திருச்சி, புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கான 22 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
புயல் மழை எச்சரிக்கை காரணமாக சென்னை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, புதுச்சேரி ஆகிய நகரங்களில் இன்று மொத்தம் 54 விமானங்கள் ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டிட்வா புயல் காரணமாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை- மதுரை இடையே விமான டிக்கெட் கட்டணம் ர ரூ.3,129-ல் இருந்து ரூ.20,599 வரை உயர்ந்துள்ளது.
இதேபோல், சென்னை- திருச்சி இடையே விமான டிக்கெட் கட்டணம் ரூ.3,129-ல் இருந்து ரூ.55,626 வரை உயர்ந்துள்ளது. சென்னை- கோவை இடையே விமான டிக்கெட் கட்டணம் ரூ.4,351-ல் இருந்து ரூ.24,134 வரை உயர்ந்துள்ளது.
- தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது
- சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்து, ரெயில், விமானம் போன்ற போக்குவரத்து வசதியை பயன்படுத்துவார்கள்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிப்பவர்கள் பெரும்பாலானோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதற்கு பேருந்து, ரெயில், விமானம் போன்ற போக்குவரத்து வசதியை பயன்படுத்துவார்கள்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், பலரும் சொந்த ஊருக்கு கிளம்ப தொடங்கி உள்ள நிலையில் வழக்கத்தை விட விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன.
* சென்னையில் இருந்து மதுரைக்கு சாதாரண நாட்களில் ரூ.3,129-ஆக இருக்கும் கட்டணம் தற்போது ரூ.17,683 வரை உயர்ந்துள்ளது.
* சென்னையில் இருந்து திருச்சிக்கு சாதாரண நாட்களில் ரூ.3,608-ஆக இருக்கும் கட்டணம் தற்போது ரூ.15,233 வரை உயர்ந்துள்ளது.
* சென்னையில் இருந்து கோவைக்கு சாதாரண நாட்களில் ரூ.4,351-ஆக இருக்கும் கட்டணம் தற்போது ரூ.17,158 வரை உயர்ந்துள்ளது.
* சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சாதாரண நாட்களில் ரூ.3,608-ஆக இருக்கும் கட்டணம் தற்போது ரூ.17,053 வரை உயர்ந்துள்ளது.
* சென்னையில் இருந்து டெல்லிக்கு சாதாரண நாட்களில் ரூ.5,933-ஆக இருக்கும் கட்டணம் தற்போது ரூ.30,414 வரை உயர்ந்துள்ளது.
* சென்னையில் இருந்து மும்பைக்கு சாதாரண நாட்களில் ரூ.3,356-ஆக இருக்கும் கட்டணம் தற்போது ரூ.21,960 வரை உயர்ந்துள்ளது.
* சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு சாதாரண நாட்களில் ரூ.5,293-ஆக இருக்கும் கட்டணம் தற்போது ரூ.22,169 வரை உயர்ந்துள்ளது.
* சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு சாதாரண நாட்களில் ரூ.2,926-ஆக இருக்கும் கட்டணம் தற்போது ரூ.15,309 வரை உயர்ந்துள்ளது.
* சென்னையில் இருந்து கவுகாத்திக்கு சாதாரண நாள் ரூ.6,499-ஆக இருக்கும் கட்டணம் தற்போது ரூ.21,639 வரை உயர்ந்துள்ளதால் மக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- விடுமுறை முடிந்த நிலையில் விமான கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
- பேருந்துகளிலும், ரெயில்களிலும் கூட்டம் அலைமோதுவதால் விமானத்தை தேர்வு செய்யும் மக்கள்.
பொங்கல் பண்டிகை முடிந்து மக்கள் சென்னை திரும்புவதால் விமான கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 9 நாட்கள் வரை தொடர் விடுமுறை கிடைத்ததால் சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் தென்மாவட்டங்களில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.
இந்நிலையில் விடுமுறை முடிந்து மக்கள் சென்னைக்கு திரும்பி வருகின்றனர். குறிப்பாக, பேருந்துகளிலும், ரெயில்களிலும் கூட்டம் அலைமோதுவதால், மக்கள் விமானத்தில் பயணிக்கவும் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதுபோன்ற சூழல்களில் விமான பயண கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதன்படி, மதுரை- சென்னைக்கு வழக்கமாக ரூ.3,999 ஆக கட்டணம் இருந்த நிலையில், இன்றைய தினம் விமானக் கட்டணம் ரூ.17,991 வரை அதிகரித்துள்ளது.
அதேபோல திருச்சி – சென்னை இடையே வழக்கமாக ரூ.2,199 கட்டணமாக இருந்த நிலையில் தற்போது ரூ.ரூ.11,089 ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி – சென்னை இடையே வழக்கமான கட்டணம் ரூ 4,199 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.17,365ஆக உயர்ந்துள்ளது.
சேலம் – சென்னை இடையே விமானக் கட்டணம் ரூ 2,799 ஆக இருந்த நிலையில் இன்று ரூ.10,441 வரை அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் விமானங்களில் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
- பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த 13-ந்தேதி தொடங்கி 45 நாட்கள் நடைபெறுகிறது.
- திரிவேணி சங்கமத்தில் நீராட உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
சென்னை:
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த 13-ந்தேதி தொடங்கி 45 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவில் 3 நதிகள் சேரும் திரிவேணி சங்கமத்தில் நீராட உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இதையடுத்து நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து பிரயாக்ராஜ் நகருக்கு செல்லும் விமானங்களில் கட்டணம் பலமடங்கு உயர்ந்து உள்ளது. இதேபோல் சென்னையில் இருந்து செல்லும் விமானங்களிலும் கட்டணம் எகிறி உள்ளது. அமாவாசை திதி நாளை வரும் நிலையில் இன்று முதல் 3 நாட்களுக்கு சென்னையில் இருந்து பிரயாக்ராஜ் செல்ல விமான கட்டணம் ரூ.59 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
பெட்ரோல் விலை தினமும் உயர்ந்து வருகிறது. அதை சமாளிக்க ‘இண்டிகோ’ விமான நிறுவனம் உள்ளூர் பயணிகள் விமான டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
அதன்படி 1000 கி.மீட்டர் தூரத்திற்குள் பயணம் செய்பவர்களுக்கான கட்டணம் ரூ.200 உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 1000 கி.மீட்டர் தூரத்திற்கு மேல் பயணம் செய்வோருக்கு ரூ.400 அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இது குறித்து இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எண்ணெய் விலை சீரடைந்ததும் டிக்கெட் கட்டண உயர்வு வாபஸ் பெறப்படும்” என அறிவித்துள்ளது.
இதே டிக்கெட் கட்டண உயர்வை பின்பற்ற மற்ற விமான நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன. எனவே அனைத்து விமானங்களிலும் டிக்கெட் கட்டணம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. #tamilnews






