search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sabarimala devotees"

    • மாலை அணிந்து, இருமுடிகட்டி ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம்.
    • ஐயப்பன் கோவில் நடை நாளை மறுநாள் திறக்கப்படும்.

    கன்னியாகுமரி:

    கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதி அன்று மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டு கட்டி தலையில் சுமந்து சென்று ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம்.

    இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மறுநாள் திறக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து சபரிமலைக்கு இருமுடி கட்டி செல்லும் அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந்தேதியான வருகிற 17-ந்தேதி கோவில்களுக்கு சென்று மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள்.

    அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோவில், குமாரகோவில் வேளிமலை சுப்ரமணியசாமி கோவில், பார்வதிபுரம் ஐயப்பன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் வருகிற 17-ந்தேதி அதிகாலையில் இருந்தே சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள்.

    அதிலும் குறிப்பாக கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் ஐயப்ப பக்தர்கள் வருகிற 17-ந்தேதி அதிகாலையில் புனித நீராடிவிட்டு கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று துளசி மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள். இதில் மண்டல பூஜை தரிசனத்துக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் ௪௧ நாட்களும், மகரவிளக்கு தரிசனத்திற்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் 60 நாட்களும் விரதம் கடைபிடிப்பது வழக்கமாகும்.

    சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவதற்காக நேற்று முதலே கடைகளில் துளசி மாலைகளை வாங்குவதற்காக படையெடுத்துச் சென்ற வண்ணமாக உள்ளனர். இதனால் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் விரதம் தொடங்கும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்த கடைகளில் துளசி மாலை மற்றும் முத்து மணி மாலைகள் விற்பனை படுஜோராக நடந்து கொண்டிருக்கிறது.

    சபரிமலையில் போலீசாரின் கெடுபிடியை கண்டித்து பக்தர்கள் நடத்திய போராட்டம் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் 100 பேர் கைது செய்யப்பட்டனர். #SabarimalaDevotees
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பு இருமுறை கோவில் நடை திறக்கப்பட்டபோது சபரிமலையில் வன்முறையும், மறியல் போராட்டமும் நடந்தது.

    இந்த போராட்டங்கள் சபரிமலையில் மண்டல பூஜை விழாவின் போது தொடராமல் இருக்க போலீசார் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தனர்.

    அதன்படி சபரிமலை சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இரவு 10 மணிக்கு மேல் சன்னிதானத்தில் தங்க கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டனர்.

    அப்பம், அரவணை விற்கும் கடைகளும் இரவில் திறக்க அனுமதி மறுக்கப்பட்டது. இரவு நேரத்தில் சபரிமலை செல்ல நடைபந்தலில் காத்திருக்கவும் கூடாது என்று பக்தர்கள் தடுக்கப்பட்டனர்.

    சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்ட 16-ந்தேதி மாலை முதலே போலீசாரின் உத்தரவுகள் அமலுக்கு வந்தது. 17-ந்தேதி அதிகாலை முதல் பக்தர்களிடம் போலீசார் கெடுபிடி காட்டினர். இதனால் பக்தர்களுக்கும் போலீசாருக்கும் இடையே முதல் நாளில் இருந்தே வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வந்தனர். அவர்களை போலீசார் பலத்த சோதனைக்கு பிறகே சன்னிதானம் செல்ல அனுமதித்தனர்.

    நடைபந்தலிலும் பக்தர்களை காத்திருக்க அனுமதிக்கவில்லை. நேற்று மாலையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் இரவு 10 மணி ஆனதும் சன்னிதானத்தை விட்டு வெளியேறும்படி போலீசார் கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்த பக்தர்கள் நடை பந்தல் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதிஷ்குமார், போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்களை சமரசம் செய்தார். அசம்பாவிதங்களை தடுக்கவே போலீசார் கட்டுப்பாடுகளை விதித்திருப்பதாகவும், அதற்கு பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    அதற்கு பக்தர்கள், ஐயப்பனை தரிசிக்க கட்டுப்பாடு விதிப்பதை ஏற்க முடியாது என்று கூறி கோ‌ஷம் எழுப்பினர்.

    போராட்டம் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் கைது செய்யப்பட்டனர். 100 பேர் கைது செய்யப்பட்டு பம்பை போலீஸ் நிலையம் கொண்டுச் செல்லப்பட்டனர். அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர கூடிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதற்கு பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கண்டனம் தெரிவித்தது. ஐயப்ப பக்தர்கள் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்தது.

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்ட பின்பு வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். நடைபந்தலில் மட்டும் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சன்னிதானம் செல்ல காத்திருப்பார்கள். ஆனால் கடந்த 2 நாட்களாக போலீசார் காட்டும் கெடுபிடி, பா.ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் நடத்திய முழு அடைப்பு காரணமாக நேற்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது.

    நடைபந்தல் காலியாக இருந்ததோடு, 18-ம் படியிலும் பக்தர்கள் நெரிசல் இன்றி ஏறிச் சென்றனர். அப்பம், அரவணை விற்பனையும் கடந்த ஆண்டைக்காட்டிலும் பாதியாக குறைந்து விட்டது. நேற்று சபரிமலையில் கேரளா, தமிழ்நாடு பக்தர்களின் வருகை மிக மிக குறைவாக இருந்தது. ஆந்திரா, கர்நாடகாவைச் சேர்ந்த பக்தர்களே வந்திருந்தனர்.

    இதற்கிடையே சபரிமலையில் மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்கவும், பக்தர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்தவும் மத்திய போலீஸ் படையை அழைக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

    வழக்கமாக மண்டல பூஜை நெருங்கி வரும் போது கண்காணிப்பு பணிக்காக மத்திய கமாண்டோ படையினர் பாதுகாப்பு பணிக்கு வருவார்கள். அவர்களை இப்போதே அழைத்தால் பா.ஜனதா கட்சியினரின் போராட்டத்தை அவர்கள் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று கேரள அரசு கருதுவதாக கூறப்படுகிறது.  #SabarimalaDevotees
    சபரிமலை சென்ற பக்தர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கேரளாவில் இன்று பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். #SabarimalaDevotees #BJP #RSS
    சபரிமலை:

    சபரிமலையில் அனைத்து வயது  பெண்களையும் பாரபட்சமின்றி வழிபாடு நடத்த அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதில் இருந்து தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவோம் என்று மாநில அரசு உறுதிபட கூறியதுடன், சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளது.



    இந்நிலையில் சபரிமலை கோவிலில் நேற்றிரவு நடை சாத்தப்பட்ட பிறகு பக்தர்கள் சிலர் ஐயப்பா சரணம் என்ற பாடலை சத்தமாக பாடிக்கொண்டு நடைபந்தலிலேயே தங்கினர். அவர்களை வெளியேறும்படி போலீசார் அறிவுறுத்தினர். பக்தர்கள் வெளியேறாததால் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதுபற்றி தகவல் பரவியதும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் இன்று அதிகாலை முதலே திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் அலுவலகம் அருகே திரண்டு போராட்டம் நடத்தினர். அதேசமயம் அரன்முலா, கொச்சி, கொல்லம், ஆலப்புழா, ரன்னி,தொடுபுழா, கலாடி, மலப்புரம் மற்றும் இடுக்கி உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    கைது செய்யப்பட்ட பக்தர்கள் ஆயுதப்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் பரவியது. இதனால் அங்கும் சென்று போராட்டக்குழுவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கைது செய்யப்பட்ட ஐயப்ப பக்தர்களை உடனடியாக விடுவிக்கும்படி போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். கேரளாவில் நெருக்கடி நிலை போன்ற சூழ்நிலை நிலவுவதாகவும் குற்றம்சாட்டினர். #SabarimalaDevotees #BJP #RSS
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக வந்த பெண் சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் வெளியே வர முடியாதபடி கொச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டு ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #TruptiDesai #Sabarimala
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு சபரிமலை கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனுக்களும் தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்கள் மீது வருகிற ஜனவரி மாதம் 22-ந்தேதி விசாரணை நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. அதே நேரம் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு தொடரும் என்றும் கூறி விட்டது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வெளியான பின்பு 2 முறை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போது கோவிலுக்கு வந்த பெண்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். அவர்களை 18-ம் படி ஏற அனுமதிக்கவில்லை.

    இந்த நிலையில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். நாளை முதல் 41 நாட்கள் நடை திறந்திருக்கும். இந்த நாட்களில் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க சுமார் 800-க்கும் அதிகமான இளம்பெண்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தனர்.

    இளம்பெண்கள் யாரும் கோவிலுக்கு வர வேண்டாம், கோவிலின் ஆச்சாரத்தை மீற முயற்சிக்க வேண்டாம் என்று கோவில் தந்திரிகளும், ஐயப்ப பக்தர்களும் வேண்டுகோள் விடுத்தனர்.

    இதனை பெண்ணீய ஆர்வலர்கள் ஏற்க மறுத்தனர். மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திருப்திதேசாய், 6 இளம்பெண்களுடன் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிக்கப்போவதாக அறிவித்தார்.

    அதன்படி, திருப்திதேசாயும், 6 இளம்பெண்களும் புனேவில் இருந்து கொச்சிக்கு விமானம் மூலம் வந்தனர். இன்று அதிகாலை 4.50 மணிக்கு அவர்கள் விமான நிலையம் வந்திறங்கினர். இந்த தகவல் ஐயப்ப பக்தர்களுக்கு தெரிய வந்தது. உடனே அவர்கள் விமான நிலையம் முன்பு திரண்டனர். அவர்கள் விமான நிலையத்தின் அனைத்து வாசல்கள் முன்பும் திரண்டு நின்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.



    திருப்திதேசாயையும், அவருடன் வந்த பெண்களையும் ஊருக்குள் அனுமதிக்க மாட்டோம். அவர்கள் விமானநிலையத்தில் இருந்து அப்படியே திரும்பிச் செல்ல வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர்.

    கொச்சி போலீசார் விரைந்து சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். திருப்திதேசாயை அருகில் உள்ள ஓட்டலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

    ஆனால் போராட்டக்காரர்கள் திருப்திதேசாயை திருப்பி அனுப்புவதில் குறியாக இருந்தனர். காலை 9 மணியளவில் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை எதிர்க்கும் பெண்கள் அமைப்பினர் என ஆயிரக்க ணக்கானோர் திரண்டனர். சிறை பிடிக்கப்பட்ட திருப்திதேசாய் புனேவிற்கு திரும்பிச் செல்லும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று போராட்டக்காரர்கள் கோ‌ஷமிட்டனர்.

    இதனால் கொச்சி விமான நிலையம் முன்பு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.  #TruptiDesai #Sabarimala

    ×