search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala CM"

    • கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    • வன்முறையை விரைவாக முடிவுக்குக் கொண்டு வருவோம்.

    அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கலவரத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு வருத்தம் தெரிவித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    அரியானாவில் விரிவடைந்து வரும் துன்பகரமான வகுப்புவாத மோதலால் மனவேதனை அடைகிறேன். உயிர் இழப்புகள் மற்றும் பரவலான ஆணவக் கொலைகள் மறுக்க முடியாத துயரமான ஒன்று. வன்முறையால் 6 பேர் உயிரிழந்தது மற்றும் வடமாநிலத்தில் ஏற்பட்டுள்ள கலவர முன்னேற்றங்கள் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக உள்ளது.

    மாநிலத்தில் உள்ள அனைவரும் இன நல்லிணக்கத்தை நிலைநிறுத்துவதில் ஒன்றிணைவோம். வன்முறையை விரைவாக முடிவுக்குக் கொண்டு வருவோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மதுபான கொள்ளை ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
    • எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த பாஜகவின் அதிகார துஷ்பிரயோகம், ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றார்.

    மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக, துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் நேற்று முன்தினம் மீண்டும் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.

    மதியம் 12 மணிக்கு தொடங்கி சுமார் 8 மணிநேரம் விசாரணை நீடித்தது. பெரும்பாலான கேள்விகளுக்கு மணீஷ் சிசோடியா பதில் அளிக்கவில்லை.

    அவர் 90 சதவீத கேள்விகளுக்கு தெரியாது என்று பதில் கூறினார். இதைத் தொடர்ந்து மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்

    இந்நிலையில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைதுக்கு கேரள முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது, எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்கு பாஜக ஆட்சியில் மத்திய அரசின் துறைகளை எப்படி தவறாக பயன்படுத்துகிறது என்பதற்கு இது மற்றொரு உதாரணம். இது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். இத்தகைய அடக்குமுறைகள் நமது தேசத்தின் அடித்தளத்தையே குலைத்துவிடும். அதை எதிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    கொரோனா தொற்று முடிவுக்கு வந்த பின் குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்திருந்தார்.
    புது தில்லி

    பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில்  மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளான, சிறுபான்மையினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

    அண்டை நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி மதத்தினர், கிறிஸ்தவர்கள் ஆகியோர், உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழி வகை செய்கிறது. இஸ்லாமியர்கள் இதில் சேர்க்கப்படவில்லை என்பதால் எதிர்க்கட்சிகள் இந்த சட்டத்தை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    கடந்த மாதம், மேற்கு வங்கத்தில் உள்ள சிலிகுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய  மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா,  கொரோனா தொற்று  முடிவுக்கு வந்த பின்  குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என்றார்.  

    இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டத்தை தனது அரசு அமல்படுத்தாது என்று உறுதிபட கூறினார்.  

    குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தனது அரசு தெளிவான நிலைப்பாட்டை கொண்டுள்ளது, அது தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  குடியுரிமை திருத்த சட்டம் நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்றும், மதத்தின் அடிப்படையில் குடியுரிமையை நிர்ணயிக்க இங்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

    அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் இந்த பிரச்சினையில் கேரள அரசு தனது நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்றும் பினராயி விஜயன் தெரிவித்தார்.


    கேரள தேர்தலில் சபரிமலை கோவில் விவகாரம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என முதல்-மந்திரி பினராய் விஜயன் கூறியுள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த 23-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சிக்கும் எதிர் கட்சியான காங்கிரசுக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கூட்டணியும் 3-வது அணியாக களம் கண்டது.

    தேர்தலுக்கு பிறகு நடத்தப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகளில் கேரளாவில் காங்கிரஸ் கூட்டணிக்கே அதிக பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்றும், ஆளும் கட்சியான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணிக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மத்தியில் பாரதிய ஜனதா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளிநாடுகளில் சுற்றுபயணம் மேற்கொண்டு விட்டு நேற்று திருவனந்தபுரம் திரும்பினார். கருத்து கணிப்புகள் பற்றி நிருபர்களுக்கு பேட்டி அளித்த பினராயி விஜயன் கூறியதாவது:-

    தேர்தலில் கருத்துக் கணிப்புகள் எல்லாம் வெற்றி பெறும் என்று கூற முடியாது. பலமுறை கருத்துக்கணிப்புகள் தோல்வி அடைந்துள்ளது. 2004-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதா கூட்டணியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் அதனை பொய்யாக்கும் வகையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தது. எனவே தேர்தல் முடிவுகள் பற்றி இப்போதும் யூகமாக எதையும் கூற முடியாது. 23-ந் தேதி வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    கேரளாவை பொறுத்தவரை நாங்கள் மிகப்பெரிய வெற்றி பெற போகிறோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. சபரிமலை கோவில் விவகாரம் இந்த தேர்தல் முடிவுகளை எந்த விதத்திலும் பாதிக்காது. சபரிமலையில் நடக்கக்கூடாதது நடந்ததன் பின்னணியில் யார் இருந்தார்கள்? என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது அவர்களுக்கு இடையே பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

    சபரிமலை ஆச்சாரங்களை பாதுகாப்பதற்காக அவர்கள் போராடவில்லை. சபரிமலை போராட்டங்களின் பின்னணியில் வேறு லட்சியங்கள் இருந்தன என்று ஒரு இந்து அமைப்பைச் சேர்ந்த பெண் கூறி உள்ளார். சபரிமலை கோவிலை பாதுகாக்கும் நடவடிக்கைகளை தான் கேரள அரசு செய்து வருகிறது.

    சபரிமலையில் தற்போது பல்வேறு சீரமைப்பு பணிகளும், மாநில அரசு சார்பில் நடந்து வருகிறது. அடுத்த சீசனுக்குள் சபரிமலையில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

    தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என்பதற்கான ஆதாரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே கேரள தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் சபரிமலை விவகாரம் பற்றி கருத்து கூறும்போது சபரிமலை பிரச்சினையில் மக்களை சிலர் திசைதிருப்பி விட்டார்கள். இது பாராளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என கூறி உள்ளார்.

    இவரது கருத்து முதல்-மந்திரி பினராயி விஜயனின் கருத்துக்கு நேர்மாறாக இருப்பதால் கேரள அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் பினராயி விஜயன் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். #LokSabhaElections2019 #PinarayiVijayan
    கண்ணூர்:

    பாராளுமன்ற மூன்றாவது கட்ட தேர்தல் இன்று தொடங்கியது. கேரளா, கர்நாடகா, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 116 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு மற்றும் அமித்ஷா போட்டியிடும் காந்தி நகர் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.

    பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர்.  அரசியல் கட்சிகளின் தலைவர்கள் காலையிலேயே தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்ணூர் மாவட்டம்  பினராயி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் சென்று மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.



    கர்நாடக மாநிலம் ஷிமோகா தொகுதி பாஜக வேட்பாளர் ராகவேந்திரா ஷிகாரிபுரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, வாக்களிப்பதற்காக இன்று தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு சென்றார். காந்தி நகரில் உள்ள தனது வீட்டிற்குச் சென்ற அவர், தன் தாயாரின் காலில் விழுந்து ஆசி பெற்றார். மேலும் தன்னை பார்ப்பதற்காக வீட்டின் வெளியே திரண்டிருந்த மக்களையும் மோடி சந்தித்து பேசினார்.  #LokSabhaElections2019 #PinarayiVijayan
    பிரதமர் மோடியை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் செய்வது நம் அனைவரின் கடமை என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறினார். #PMModi #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஆளும் கட்சியாக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலில் 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்டு 4 தொகுதியில் போட்டியிடுகிறது.

    திருவனந்தபுரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திவாகரன் போட்டியிடுகிறார். வேட்பாளர் திவாகரனை அறிமுகப்படுத்தும் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது.

    முதல்-மந்திரி பினராயி விஜயன், வேட்பாளர் திவாகரன் மற்றும் அந்த கட்சியின் முக்கிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பினராயி விஜயன் கூறியதாவது:-

    பிரதமர் மோடியின் 5 ஆண்டுகால ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளது. அதே போல பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். இதே போல மக்களுக்கு துன்பம் தரும் ஏராளமான நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்துள்ளது.

    எனவே மீண்டும் மோடியை ஆட்சிக்கு வர விடாமல் செய்வது நம் அனைவரின் கடமை ஆகும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கீழ், அதன் வழிகாட்டுதல்படி பா.ஜனதா அரசு செயல்பட்டு வருகிறது. அவர்கள் தங்கள் கட்சியை வளர்க்கத் தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நாட்டை விற்பது தான் அவர்கள் வேலையாக உள்ளது.

    மதம், மொழி ரீதியில் மக்களை மோடி பிரித்து செயல்படுகிறார். எனவே பா.ஜனதா ஆட்சியை வருகிற தேர்தலில் அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #PMModi #PinarayiVijayan


    சபரிமலை கோவிலுக்கு செல்ல பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை பெண்கள் அமைப்பு கேரள முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது. #Sabarimala
    சென்னை:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

    இதற்கு பா.ஜனதா, இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு, போராட்டம் நடத்தி வருகின்றன. ஆனால் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை நடைமுறைப்படுத்த கேரள அரசு தீவிரமாக உள்ளது.

    சபரிமலை கோவிலுக்கு சென்ற பெண்களை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். ஆனால் கோவிலுக்குள் பெண்கள் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.

    இதுவரை 16 பெண்கள் கோவிலுக்கு செல்ல முயன்றபோது போராட்டம் காரணமாக பாதி வழியிலேயே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த மணிதி பெண்கள் உரிமைகள் அமைப்பு சார்பில் 23-ந்தேதி 50 பெண்கள் சபரிமலை கோவிலுக்கு பயணம் மேற்கொள்கிறார்கள்.

    இது தொடர்பாக வக்கீலும், மணிதி அமைப்பைச் சேர்ந்தவருமான செல்வி கூறியதாவது:-

    சபரிமலை கோவிலுக்கு செல்லும் ஆண்களுக்கு வழிகாட்ட குருசாமி இருக்கிறார். ஆனால் அதுபோல் பெண்களுக்கு வழிகாட்ட யாரும் இல்லை. இதனால் நாங்கள் பெண்கள் உரிமைகளை நிலைநாட்ட அவர்களை ஒருங்கிணைத்து வருகிறோம்.

    தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா மாநிலங்களில் இருந்து பெண்கள் ஒன்றிணைந்து சபரிமலைக்கு செல்கிறோம்.

    அங்கு கேரளாவைச் சேர்ந்த ஆதிவாசி பெண்கள் அமைப்புகள் எங்களுக்கு தலைமை ஏற்று செல்கிறார்கள்.

    சபரிமலை கோவிலுக்கு செல்ல எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதினேன். இதில் சபரிமலை பயணத்தின்போது எங்களுக்கு உதவி செய்ய பத்தனம்திட்டா போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

    சபரிமலை கோவிலுக்கு செல்வது பெண்களின் உரிமை. அதை யாரும் தடுக்கக்கூடாது. கோவிலுக்கு செல்ல விரும்பும் பெண்களுக்கு ஆதரவு அளிப்போம்.

    சபரிமலை பயணம் குறித்து பேஸ்புக்கில் தகவல் தெரிவித்ததும் பல பெண்கள் தொடர்பு கொண்டு கோவிலுக்கு உதவ வேண்டும் என்று அணுகினர்.

    சபரிமலை செல்வது குறித்து பேஸ்புக்கில் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை சிலர் பதிவிட்டனர். ஆனால் நேரிடையாக யாரும் மிரட்டவில்லை. இதுபோன்ற எதிர்ப்புகளால் நாங்கள் பின்வாங்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Sabarimala
    சபரிமலை சென்ற பக்தர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கேரளாவில் இன்று பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். #SabarimalaDevotees #BJP #RSS
    சபரிமலை:

    சபரிமலையில் அனைத்து வயது  பெண்களையும் பாரபட்சமின்றி வழிபாடு நடத்த அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதில் இருந்து தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவோம் என்று மாநில அரசு உறுதிபட கூறியதுடன், சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளது.



    இந்நிலையில் சபரிமலை கோவிலில் நேற்றிரவு நடை சாத்தப்பட்ட பிறகு பக்தர்கள் சிலர் ஐயப்பா சரணம் என்ற பாடலை சத்தமாக பாடிக்கொண்டு நடைபந்தலிலேயே தங்கினர். அவர்களை வெளியேறும்படி போலீசார் அறிவுறுத்தினர். பக்தர்கள் வெளியேறாததால் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதுபற்றி தகவல் பரவியதும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் இன்று அதிகாலை முதலே திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் அலுவலகம் அருகே திரண்டு போராட்டம் நடத்தினர். அதேசமயம் அரன்முலா, கொச்சி, கொல்லம், ஆலப்புழா, ரன்னி,தொடுபுழா, கலாடி, மலப்புரம் மற்றும் இடுக்கி உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    கைது செய்யப்பட்ட பக்தர்கள் ஆயுதப்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் பரவியது. இதனால் அங்கும் சென்று போராட்டக்குழுவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கைது செய்யப்பட்ட ஐயப்ப பக்தர்களை உடனடியாக விடுவிக்கும்படி போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். கேரளாவில் நெருக்கடி நிலை போன்ற சூழ்நிலை நிலவுவதாகவும் குற்றம்சாட்டினர். #SabarimalaDevotees #BJP #RSS
    சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்போம். இதற்கு எதிரான நிலைப்பாட்டை கேரள அரசு எடுக்க முடியாது என பினராயி விஜயன் அறிவித்துள்ளார். #Sabarimala #SabarimalaTemple #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகள் மிகவும் பிரசித்திப் பெற்றவை.
     
    மண்டல பூஜை, மகர விளக்கு விழாக்களின்போது ஐயப்பனை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வருவது வழக்கம். இந்த ஆண்டு மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27-ந்தேதி நடக்கிறது.

    இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அப்போது புதிய மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி, மாளிகைபுரம் கோவில் மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி ஆகியோர் 18-ம் படி ஏறி பதவி ஏற்றுக் கொள்கிறார்கள். இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு கோவிலின் சாவி புதிய மேல்சாந்தியிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    நாளை மறுநாள் 17-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. நடை திறந்ததும் ஐயப்பனுக்கு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

    அதிலிருந்து ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 17-ந்தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக கோவில் நடை திறந்திருக்கும்.

    டிசம்பர் 27-ந்தேதி மண்டல பூஜை விழா முடிந்த பின்பு கோவில் நடை அடைக்கப்படும். 3 நாட்களுக்கு பிறகு டிசம்பர் 30-ந்தேதி மகரவிளக்கு பூஜைக்காக நடை மீண்டும் திறக்கப்படும். ஜனவரி 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை நடக்கிறது. அதுவரை கோவில் நடை திறந்திருக்கும்.

    மண்டல பூஜையை காட்டிலும் மகரவிளக்கு பூஜைக்கு அதிகமான பக்தர்கள் வருவார்கள்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால் சபரிமலைக்கு இளம்பெண்கள் மற்றும் பெண்ணீய ஆர்வலர்கள் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தரிசனத்துக்கும் பெண்கள் அதிகளவு வருவார்கள் என்று போலீசார் எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், போராட்டக்காரர்களை சமாளிக்கவும் இந்த முறை சபரிமலையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அதன்படி, சபரிமலை செல்லும் அனைத்து பாதைகளும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சபரிமலைக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் போலீசாரிடம் முன் அனுமதி பெற்றே சபரிமலை செல்ல வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதற்காக பத்தினம் திட்டா, நிலக்கல், எரிமேலி, பம்பை என அனைத்து பகுதிகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.



    இந்நிலையில், சபரிமலையில் பெண்கள் தரிசனம் தொடர்பாக கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் இன்று காலை அம்மாநிலத்தை சேர்ந்த அனைத்துக்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    சிலமணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பினராயி விஜயன், ‘செப்டம்பர் 28-ம் தேதி இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவுதான் இன்னும் நடைமுறையில் உள்ளது. அதாவது, தரிசனத்துக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவாகும். இந்த உத்தரவுக்கு எதிராக எந்த நிலைப்பாட்டையும் கேரள அரசு எடுக்க முடியாது.

    நாங்கள் பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம். ஆனால், கோர்ட்டின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தியே தீரவேண்டிய கட்டாயமும் அரசுக்கு உள்ளது’ என தெரிவித்தார். #Sabarimala #SabarimalaTemple  #PinarayiVijayan
    சபரிமலை காட்டில் ஐயப்ப பக்தர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர் போலீசார் நடத்திய தடியடியில் கொல்லப்பட்டதாக மாநில பாஜக குற்றம்சாட்டியுள்ளது. #SabarimalaProtests #PoliceLathicharge #AyyappaDevoteeBody #KeralaBJPChief
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு கேரளாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தின. கோவில் நடை திறந்தபோது, கோவிலுக்கு வந்த பெண்களை தடுத்து நிறுத்தினர். சில பகுதிகளில் வன்முறையும் வெடித்தது. இதனால் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

    இந்நிலையில், சபரிமலையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் இன்று ஐயப்ப பக்தர் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. விசாரணையில் அவர் பந்தளத்தைச் சேர்ந்த சிவதாசன் என்பது தெரியவந்தது. அவரது மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீஸ் நடத்திய தடியடியில் ஐயப்ப பக்தர் சிவதாசன் கொல்லப்பட்டதாகவும், இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் பினராயி விஜயன் உள்துறை பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்றும் கேரள பாஜக தலைவர் பிஎஸ் ஸ்ரீதரன் பிள்ளை வலியுறுத்தி உள்ளார்.

    ‘பந்தளத்தில் இருந்து ஐயப்ப பக்தர் சிவதாசன் சைக்கிளில் கோவிலுக்கு வந்தபோது பிலாப்பள்ளி வனப்பகுதியில் போலீசார் நடத்திய தடியடியில் சிக்கி பலத்த காயமடைந்துள்ளார். அவர் அக்டோபர் 17-ம் தேதி காணாமல் போனதாக உறவினர்கள் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் அதனை கிடப்பில் போட்டுள்ளனர். எனவே, இந்த கொடூர செயலுக்கு காரணமான போலீஸ்காரர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும். அக்டோபர் 17ம் தேதி நடத்தப்பட்ட தடியடி குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும் ஸ்ரீதரன் பிள்ளை கூறியுள்ளார். #SabarimalaProtests #PoliceLathicharge #AyyappaDevoteeBody #KeralaBJPChief
    சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தில், மாநிலத்தில் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிகள் நடப்பதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றம்சாட்டி உள்ளார். #SabarimalaTemple #KeralaCM #PinarayiVijayan #SabarimalaVerdict
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அங்குள்ள இடதுசாரி கூட்டணி அரசு மேற்கொண்டு வருகிறது.

    இதற்கு அந்த மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இந்து அமைப்புகள் கேரள அரசின் முடிவுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றன. பாரதீய ஜனதா சார்பிலும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.



    இந்த நிலையில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பல்வேறு மத நம்பிக்கைகளையும், நடைமுறைகளையும், வழிபாட்டு தலங்களையும் பாதுகாப்பதில் கேரள அரசு உறுதியாக இருக்கிறது. சமீபத்தில் மழை-வெள்ளத்தால் ஏற்பட்ட சவால்களை கேரள மக்கள் ஒற்றுமையுடன் எதிர்கொண்டனர். மக்களிடம் நிலவும் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசியல் நோக்கத்துடன் மாநிலத்தில் அமைதியை சீர்குலைத்து பதற்றத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பணிவது என்ற கேள்விக்கே இடம் இல்லை.

    சபரிமலை அய்யப்பன் கோவில் பிரச்சினையில் அரசின் நிலைப்பாடு குறித்து யாருக்காவது தவறான கருத்துகள் இருந்தால், அது தொடர்பாக யாருடனும் பேசுவதற்கு அரசு தயாராக உள்ளது.

    முன்பு சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்ற எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தலைவர் ரமேஷ் சென்னிதலா, அதன்பிறகு அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியது ஆச்சரியமாக உள்ளது. பாரதீய ஜனதா கட்சியும் இந்த பிரச்சினையில் இரட்டை வேடம் போடுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரமேஷ் சென்னிதலா கூறுகையில், “மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் நடவடிக்கைகளை யார் மேற்கொண்டாலும் அதை நாங்கள் ஆதரிக்கமாட்டோம்” என்றார்.

    முன்பு ஆட்சியில் இருந்த உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு, சபரிமலை கோவிலின் வழிபாட்டு முறைகளும், பக்தர்களின் நம்பிக்கையும் பாதுகாக்கப்படவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாகவும், ஆனால் அதற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த இடதுசாரி கூட்டணி அரசு அதற்கு மாறான நிலைப்பாட்டை எடுத்ததாகவும் அவர் கூறினார்.

    திருவிதாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த கவுரி லட்சுமி பாயி வெளியிட்டுள்ள அறிக்கையில், சபரிமலை கோவில் தொடர்பாக நடந்து வரும் சம்பவங்கள் மிகுந்த வேதனை அளிப்பதாகவும், பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் நடைமுறைகள் மீறப்படுவது வருந்தத்தக்கது என்றும் கூறி உள்ளார்.  #SabarimalaTemple #KeralaCM #PinarayiVijayan 
    கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மூன்று வார காலம் சிகிச்சை பெறுவதற்காக இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார். #pinarayivijayan
    திருவனந்தபுரம்:

    கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் உடல் பரிசோதனைக்கு வந்து சென்றார். அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத்தில் உள்ள மேயோ கிளினிக் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைக்காக சென்னை மருத்துவர்கள் பரிந்துரைத்திருந்தனர்.

    இதற்காக கடந்த மாதம் 19-ந்தேதி பினராயி விஜயன் அமெரிக்கா செல்ல இருந்தார். அப்போது கேரளாவில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டதால் பினராயி விஜயனின் அமெரிக்கா பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.

    தற்போது கேரளாவில் இயல்பு நிலை திரும்பி வருவதை தொடர்ந்து அவர், இம்மாதம் 3-ம் தேதி  அமெரிக்கா செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக கேரள கவர்னரை நேற்று சந்தித்த பினராயி விஜயன், மாநிலத்தில் நடைபெற்று வரும் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் தொடர்பாக அவருடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், அறிவிக்கப்பட்ட தேதிக்கு ஒருநாள் முன்னதாகவே இன்று அவர் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு 3 வாரங்கள் தங்கியிருந்து மருத்துவ சிகிச்சை பெறுகிறார். முதல்-மந்திரி பினராயி விஜயன் திரும்பி வரும்வரை அவரது இலாகா பொறுப்புகளை தொழிற்சாலைகள் துறை மந்திரி இ.பி. ஜெயராஜன் கவனித்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #PinarayiVijayan #KeralaCMUStreatment
    ×