search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trupti Desai"

    கேரளாவுக்கு மீண்டும் வந்து கொரில்லா பாணியில் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிப்பேன் என்று திருப்பி அனுப்பப்பட்ட திருப்திதேசாய் ஆவேசமாக கூறி உள்ளார். #TruptiDesai #Sabarimala
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு சபரிமலை கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கோர்ட்டு உத்தரவுப்படி சபரிமலை வரும் இளம்பெண்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியும் வருகிறார்கள்.

    இந்த நிலையில் மராட்டிய மாநிலம் புனேவில் செயல்பட்டு வரும் பூமாதா பிரிகேட் அமைப்பைச் சேர்ந்த பெண்ணீய ஆர்வலர் திருப்திதேசாய் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்கப்போவதாக அறிவித்தார்.

    அதன்படி, நேற்று திருப்திதேசாய் 6 இளம்பெண்களுடன் மும்பையில் இருந்து விமானம் மூலம் கொச்சி வந்தார். திருப்திதேசாய் வருவதை அறிந்த ஐயப்ப பக்தர்கள் நேற்று அதிகாலையிலேயே கொச்சி விமான நிலையம் முன்பு திரண்டனர்.

    திருப்திதேசாய் வந்த விமானம் அதிகாலை 4.40 மணிக்கு கொச்சி வந்ததும், அவரை விமான நிலையத்தில் இருந்து வெளியே வர விடாமல் சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.

    போராட்டக்காரர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியும், சுமூக நிலை ஏற்படவில்லை. திருப்திதேசாயை ஓட்டலுக்கு அழைத்துச்செல்ல கார் டிரைவர்களும் முன் வரவில்லை. இதனால் அதிகாலை 4.40 மணி முதல் இரவு 9.40 மணி வரை 17 மணி நேரம் விமான நிலையத்திலேயே தவித்த திருப்திதேசாயை திரும்பிச் செல்லும்படி போலீசார் கேட்டுக் கொண்டனர்.



    சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் அவர், திரும்பிச் செல்ல வேண்டும் என்ற போலீசாரின் வேண்டுகோளை ஏற்று திருப்திதேசாய் திரும்பிச் சென்றார். இது குறித்து திருப்திதேசாய் அளித்த பேட்டி வருமாறு:-

    சபரிமலை ஐயப்பனை தரிசிக்க நான் வருவதை முன்கூட்டியே அறிந்த போராட்டக்காரர்கள் பயந்து விட்டனர். எனவேதான் என்னை விமான நிலையத்தை விட்டு வெளியே வர விடாமல் போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டத்தை கண்டு நான் பின்வாங்க மாட்டேன். மீண்டும் கேரளா வருவேன். அப்போது கொரில்லா பாணியில் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிப்பேன். இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

    கேரள போலீசார் என்னிடம் கனிவாக நடந்து கொண்டனர். அவர்களின் பணி பாராட்டுக்குரியது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் எனவே நான், திரும்பிச் செல்ல வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

    எனது வருகையால் இங்கு சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படக்கூடாது. வன்முறைக்கு நான், காரணமாகி விடக் கூடாது. எனவேதான் போலீசாரின் வேண்டுகோளை ஏற்று இப்போது திரும்பிச் செல்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே விமான நிலையத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக ஐயப்ப பக்தர்கள் 250 பேர் மீது நெடும்பாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  #TruptiDesai #Sabarimala


    என்னை மீண்டும் புனேவுக்கு திரும்பி செல்லும்படி போலீசார் வலியுறுத்துகின்றனர் என கொச்சி விமான நிலையத்தில் காத்திருக்கும் திருப்தி தேசாய் தெரிவித்துள்ளார். #SabarimalaShrine #TruptiDesai
    சபரிமலை:

    மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. வழிபாட்டுக்காக 2 மாதங்கள் கோவில் நடை திறந்திருக்கும்.

    சபரிமலை கோவிலில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதி அளிப்பதற்கு எதிராக போராட்டம் தொடரும் நிலையில், பெண்ணியவாதியான திருப்தி தேசாய் சபரிமலை கோவிலுக்குள் செல்வேன் என்று அறிவித்தார். அதன்படி இன்று காலை 4:30 மணிக்கு கொச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.

    விமான நிலையத்தை விட்டு அவர் வெளியே வரமுடியாத வகையில் போராட்டக் குழுவினர் அங்கு குவிந்ததால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டனது. போராட்டக்காரர்கள் பெருமளவு திரண்டதால் திருப்தி தேசாயை வெளியே அனுமதிக்கவில்லை. 12 மணி நேரத்துக்கும் மேலாக தேசாய் அங்கிருந்து வெளியேற முடியாத நிலை உள்ளது.

    இந்நிலையில், கொச்சி விமான நிலையத்தில் திருப்தி தேசாய் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், போலீசார் என்னை சந்தித்தனர். அவர்கள் என்னை மீண்டும் புனேவுக்கு திரும்பி செல்லும்படி கேட்டுக் கொண்டனர் என தெரிவித்துள்ளார். #SabarimalaShrine #TruptiDesai
    எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சபரிமலை ஐயப்பனை தரிசிக்காமல் மராட்டியம் திரும்ப மாட்டேன் என்று புனேவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திருப்திதேசாய் கூறினார். #TruptiDesai #Sabarimala
    திருவனந்தபுரம்:

    மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திருப்திதேசாய், 6 இளம்பெண்களுடன் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிக்கப்போவதாக அறிவித்தார்.

    அதன்படி, திருப்திதேசாயும், 6 இளம்பெண்களும் புனேவில் இருந்து கொச்சிக்கு விமானம் மூலம் வந்தனர். இன்று அதிகாலை 4.50 மணிக்கு அவர்கள் விமான நிலையம் வந்திறங்கினர். இந்த தகவல் ஐயப்ப பக்தர்களுக்கு தெரிய வந்தது. உடனே அவர்கள் விமான நிலையம் முன்பு திரண்டனர். அவர்கள் விமான நிலையத்தின் அனைத்து வாசல்கள் முன்பும் திரண்டு நின்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்திதேசாயையும், அவருடன் வந்த பெண்களையும் ஊருக்குள் அனுமதிக்க மாட்டோம். அவர்கள் விமானநிலையத்தில் இருந்து அப்படியே திரும்பிச் செல்ல வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர்.

    கொச்சி போலீசார் விரைந்து சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். திருப்திதேசாயை அருகில் உள்ள ஓட்டலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

    சிறை பிடிக்கப்பட்ட திருப்திதேசாய் புனேவிற்கு திரும்பிச் செல்லும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று போராட்டக்காரர்கள் கோ‌ஷமிட்டனர்.

    விமான நிலையத்தில் சிறை வைக்கப்பட்ட திருப்தி தேசாய் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவுப்படியே சபரிமலை ஐயப்பனை தரிசிக்க நான், மராட்டிய மாநிலத்தில் இருந்து இங்கு வந்துள்ளேன்.

    என்ன எதிர்ப்புகள் வந்தாலும் ஐயப்பனை தரிசிக்காமல் மராட்டியம் திரும்ப மாட்டேன்.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு. அவர்கள் எனக்கும், என்னுடன் வந்த பெண்களுக்கும் போதிய பாதுகாப்பு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.

    போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிப்பேன். இதில் எந்த மாற்றமும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்திதேசாய் பேட்டி பற்றி அறிந்த பக்தர்கள், திருப்திதேசாய் ஐயப்பனை தரிசிக்க வரவில்லை. ஐயப்ப பக்தர்களின் அமைதியை குலைக்க வந்துள்ளார். மண்டல பூஜை, மகரவிளக்கு விழாக்களில் ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வந்துள்ளார்.

    அவரை சபரிமலைக்குள் அனுமதிக்க மாட்டோம். இங்கிருந்து அவர், திரும்பிச் செல்லும் வரை நாமஜெப போராட்டம் நடத்துவோம் என்றனர்.



    விமான நிலையத்தில் இருந்து ஓட்டலுக்கு திருப்தி தேசாயை அழைத்து செல்ல மாட்டோம் என்று விமான நிலைய டாக்சி டிரைவர்களும் கூறினர். இதனால் திருப்தி தேசாய் விமான நிலையத்திற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில் தன்னுடன் வந்த பெண்களுடன் திருப்திதேசாய் காலை சிற்றுண்டி உட்கொண்டார். #TruptiDesai #Sabarimala

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக வந்த பெண் சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் வெளியே வர முடியாதபடி கொச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டு ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #TruptiDesai #Sabarimala
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு சபரிமலை கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனுக்களும் தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்கள் மீது வருகிற ஜனவரி மாதம் 22-ந்தேதி விசாரணை நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. அதே நேரம் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு தொடரும் என்றும் கூறி விட்டது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வெளியான பின்பு 2 முறை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போது கோவிலுக்கு வந்த பெண்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். அவர்களை 18-ம் படி ஏற அனுமதிக்கவில்லை.

    இந்த நிலையில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். நாளை முதல் 41 நாட்கள் நடை திறந்திருக்கும். இந்த நாட்களில் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க சுமார் 800-க்கும் அதிகமான இளம்பெண்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தனர்.

    இளம்பெண்கள் யாரும் கோவிலுக்கு வர வேண்டாம், கோவிலின் ஆச்சாரத்தை மீற முயற்சிக்க வேண்டாம் என்று கோவில் தந்திரிகளும், ஐயப்ப பக்தர்களும் வேண்டுகோள் விடுத்தனர்.

    இதனை பெண்ணீய ஆர்வலர்கள் ஏற்க மறுத்தனர். மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திருப்திதேசாய், 6 இளம்பெண்களுடன் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிக்கப்போவதாக அறிவித்தார்.

    அதன்படி, திருப்திதேசாயும், 6 இளம்பெண்களும் புனேவில் இருந்து கொச்சிக்கு விமானம் மூலம் வந்தனர். இன்று அதிகாலை 4.50 மணிக்கு அவர்கள் விமான நிலையம் வந்திறங்கினர். இந்த தகவல் ஐயப்ப பக்தர்களுக்கு தெரிய வந்தது. உடனே அவர்கள் விமான நிலையம் முன்பு திரண்டனர். அவர்கள் விமான நிலையத்தின் அனைத்து வாசல்கள் முன்பும் திரண்டு நின்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.



    திருப்திதேசாயையும், அவருடன் வந்த பெண்களையும் ஊருக்குள் அனுமதிக்க மாட்டோம். அவர்கள் விமானநிலையத்தில் இருந்து அப்படியே திரும்பிச் செல்ல வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர்.

    கொச்சி போலீசார் விரைந்து சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். திருப்திதேசாயை அருகில் உள்ள ஓட்டலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

    ஆனால் போராட்டக்காரர்கள் திருப்திதேசாயை திருப்பி அனுப்புவதில் குறியாக இருந்தனர். காலை 9 மணியளவில் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை எதிர்க்கும் பெண்கள் அமைப்பினர் என ஆயிரக்க ணக்கானோர் திரண்டனர். சிறை பிடிக்கப்பட்ட திருப்திதேசாய் புனேவிற்கு திரும்பிச் செல்லும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று போராட்டக்காரர்கள் கோ‌ஷமிட்டனர்.

    இதனால் கொச்சி விமான நிலையம் முன்பு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.  #TruptiDesai #Sabarimala

    மண்டல பூஜையின்போது 6 இளம்பெண்களுடன் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்யப்போவதாக பூமாதா அமைப்பின் தலைவரும், பெண் உரிமைக்காக போராடி வருபவருமான திருப்திதேசாய் அறிவித்து உள்ளார். #Sabarimala #SabarimalaTemple #TruptiDesai
    திருவனந்தபுரம்:

    பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த கேரள அரசு தீவிரமாக உள்ளது.

    அதேசமயம் சபரிமலை ஐதீகத்தை மீறி இளம்பெண்களை சபரிமலையில் அனுமதிக்கமாட்டோம் என்று கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

    கடந்த ஐப்பசி மாத பூஜை மற்றும் திருவிதாங்கூர் மன்னர் சித்திரை ஆட்டத் திருநாள் பிறந்தநாளின் போது சபரிமலை கோவில் நடை திறந்தபோது சபரிமலை சன்னிதானத்திற்கு செல்ல முயன்ற இளம்பெண்களை தடுத்து நிறுத்தி பக்தர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

    ஐயப்ப பக்தர்கள் கடும் எதிர்ப்பு காரணமாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறிய பிறகும் இளம்பெண்கள் யாரும் சபரிமலையில் தரிசனம் செய்ய முடியாத நிலையே உள்ளது.



    இந்த நிலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜைக்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை நாளை (16-ந்தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து 41 நாட்கள் கோவில் நடை திறந்து இருக்கும். மண்டல பூஜை காலத்தில் இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு வர வாய்ப்பு உள்ளதால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மாநில அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது.

    இந்த நிலையில் புனேயை சேர்ந்த பூமாதா அமைப்பின் தலைவரும், பெண் உரிமைக்காக போராடி வருபவருமான திருப்திதேசாய் மண்டல பூஜையின்போது 6 இளம்பெண்களுடன் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளார். அவரது அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளதால் மீண்டும் சபரிமலை விவகாரத்தில் பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது.

    வடமாநிலங்களில் உள்ள சில கோவில்களில் பெண்கள் சாமி தரிசனம் செய்ய தடை உள்ளது. இந்த தடையை எதிர்த்து திருப்தி தேசாய் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தான் சபரிமலைக்கு செல்வேன் என்று அவர் அறிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக திருப்தி தேசாய் டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்து உள்ளார். அதில் சபரிமலை செல்லும் தனக்கு உரிய பாதுகாப்பு கேட்டு கேரள முதல்வர், போலீஸ் டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதி உள்ளதாக கூறி உள்ளார். இதுதொடர்பாக திருப்தி தேசாய் கூறியிருப்பதாவது:-

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் 6 இளம்பெண்களுடன் சென்று வருகிற 17-ந்தேதி காலை 7 மணிக்கு சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டு உள்ளேன். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி கோவிலுக்குள் நுழைவோம். இதற்காக 16-ந்தேதி (நாளை) விமானம் மூலம் நான் 6 இளம்பெண்களுடன் கேரளா செல்கிறேன். நாங்கள் விமானநிலையத்தில் இருந்து சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும் வரை உரிய பாதுகாப்பை கேரள அரசு எங்களுக்கு வழங்க வேண்டும்.

    நாங்கள் கோட்டயத்தில் பாதுகாப்பாக ஓட்டலிலோ, கேரள அரசு விருந்தினர் மாளிகையிலோ தங்க ஏற்பாடு செய்துதர வேண்டும். எனக்கு மிரட்டல்கள் அதிகம் இருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் நாங்கள் சாமி தரிசனம் செய்யாமல் திரும்பமாட்டோம். ஜனநாயக நாட்டில் ஒரு குடிமகனுக்கு இருக்கும் உரிமைக்காக போராடத்தான் நான் சபரிமலை செல்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    சபரிமலையில் இளம்பெண்களை தரிசனத்திற்கு அனுமதிக்கக்கூடாது என்று ஐயப்ப தர்மசேனா அமைப்பின் தலைவர் ராகுல் ஈஸ்வர் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார். திருப்திதேசாயின் சபரிமலை வருகை தொடர்பான அறிவிப்புக்கு ராகுல்ஈஸ்வர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    சபரிமலையில் ஐதீகத்தை மீறி இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ய ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். என்ன விலை கொடுத்தாவது அதை தடுப்போம். திருப்திதேசாய்யை சாமி தரிசனம் செய்யவிட மாட்டோம். எங்கள் பிணத்தை தாண்டிதான் இளம்பெண்கள் சபரிமலைக்கு செல்ல முடியும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இளம்பெண்களுடன் திருப்திதேசாய் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதால் மீண்டும் பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது.  #Sabarimala #SabarimalaTemple  #TruptiDesai


    ×