என் மலர்
நீங்கள் தேடியது "protesters"
- கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரியை சந்திக்க போராட்டக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
- அதன்படி வருகிற 21-ந் தேதி டெல்லி சென்று மத்திய மந்திரியிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் என்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து திருமங்கலம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள், வாகன ஓட்டிகள், பொது மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் 22-ந் தேதி திருமங்கலத்தில் கடைய டைப்பு போராட்டமும் நடைபெற்றது. சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்தநிலையில் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரியை சந்தித்து போராட்டக் குழுவினர் மனு கொடுக்க உள்ளனர். இதற்காக அவர்கள் வருகிற 21-ந் தேதி டெல்லி செல்ல உள்ளனர். இதற்கான ஆலோசனை கூட்டம் திருமங்கலத்தில் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஜெயராமன், அ.தி.மு.க. நகரச் செயலாளர் விஜயன், மேற்கு மாவட்ட பா.ஜனதாக கட்சி பொதுச் செயலாளர் சிவலிங்கம் மற்றும் வியாபாரிகள், நிர்வாகிகள், பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பின் போராட்டக்குழுவினர் கூறுகையில், கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் முயற்சி செய்து மத்திய மந்திரி நிதின் கட்காரியை சந்திக்க அனுமதி பெற்றுக் கொடுத்துள்ளார்.
அதன்படி வருகிற 21-ந் தேதி டெல்லி சென்று மத்திய மந்திரியிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் என்றனர்.

இவ்வாறு பாதுகாப்புடன் செல்லும் பெண்களுக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகின்றனர். இதனால் பல பெண்கள் தங்கள் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு திரும்ப நேர்ந்தது.
இந்நிலையில் கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ரேஷ்மா, ஷானிலா ஆகியோர் இன்று காலை பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த பக்தர்கள் அந்த பெண்களை முன்னேற விடாமல் நீலிமலையில் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். நேரம் செல்லச் செல்ல பக்தர்களின் கூட்டம் அதிகரித்து. இதனால், 2 பெண்களும் போலீஸ் பாதுகாப்புடன் பம்பை திரும்பினர். #SabarimalaProtest #WomenEntry
பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை அரசு உயர்த்தியது மஞ்சள் அங்கி போராட்டம் என்ற மக்கள் போராட்டத்துக்கு வித்திட்டது. கார் டிரைவர்கள் தான் முதலில் இந்த போராட்டத்தை தொடங்கினர்.
அதன்பிறகு மஞ்சள் அங்கி அணிந்த மக்கள் அவர்களுடன் கைகோர்த்ததும் போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. இந்த போராட்டத்தில் பயங்கர வன்முறை வெடித்தது. 10-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். ஒரு மாதத்துக்கு மேல் நடந்த இந்த போராட்டத்துக்கு அரசு பணிந்தது. வரி உயர்வை ரத்து செய்வதாக அறிவித்தது.
இந்த நிலையில் பிரான்சை தொடர்ந்து தைவானும் மஞ்சள் புரட்சியில் இறங்கியுள்ளது. குறைந்தபட்ச வரி விதிப்பு வேண்டும் என்றும், வரி விதிப்பில் பாரபட்சமின்றி செயல்பட கோரியும் ஆயிரக்கணக்கான தைவான் மக்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். மஞ்சள் நிற உடைகளை அணிந்து, வரிவிதிப்பு கொள்கைகள் சட்ட ரீதியாக இல்லை என்ற பதாகைகளை ஏந்தி நிதி அமைச்சகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். #Taiwan #YellowVest
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் சம்பிரதாயத்தை மாற்றி, அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் மற்றும் ஐயப்ப பக்தர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு வரும் இளம்பெண்களை தடுத்து நிறுத்துகின்றனர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் கேரள அரசு உறுதியாக உள்ளது.
கடந்த மாதம் 16-ந்தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டபோதும் இளம்பெண்கள் கோவிலுக்கு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள், அரசியல் கட்சியினர், இந்து அமைப்புகள் போராட்டம் நடத்துவதால் நடை திறந்த முதல் நாளிலேயே சபரிமலையில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. அதன்பின்னர் அங்கு தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் இந்த தடை உத்தரவு டிசம்பர் 27-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், காவல்துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அப்பச்சமேடு பகுதியில் உள்ள நிலவரத்தை அமைச்சரிடம் அதிகாரிகள் எடுத்துக் கூறினர். இதையடுத்து, பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், தடுத்து நிறுத்தப்பட்ட 2 பெண்களையும் திருப்பு அனுப்பும்படி அமைச்சர் அறிவுறுத்தினார். எனவே, 2 பெண்களும் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். #SabarimalaTemple #SabarimalaProtest #Section144
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு சபரிமலை கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனுக்களும் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீது வருகிற ஜனவரி மாதம் 22-ந்தேதி விசாரணை நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. அதே நேரம் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு தொடரும் என்றும் கூறி விட்டது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வெளியான பின்பு 2 முறை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போது கோவிலுக்கு வந்த பெண்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். அவர்களை 18-ம் படி ஏற அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். நாளை முதல் 41 நாட்கள் நடை திறந்திருக்கும். இந்த நாட்களில் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க சுமார் 800-க்கும் அதிகமான இளம்பெண்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தனர்.
இளம்பெண்கள் யாரும் கோவிலுக்கு வர வேண்டாம், கோவிலின் ஆச்சாரத்தை மீற முயற்சிக்க வேண்டாம் என்று கோவில் தந்திரிகளும், ஐயப்ப பக்தர்களும் வேண்டுகோள் விடுத்தனர்.
இதனை பெண்ணீய ஆர்வலர்கள் ஏற்க மறுத்தனர். மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திருப்திதேசாய், 6 இளம்பெண்களுடன் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிக்கப்போவதாக அறிவித்தார்.

திருப்திதேசாயையும், அவருடன் வந்த பெண்களையும் ஊருக்குள் அனுமதிக்க மாட்டோம். அவர்கள் விமானநிலையத்தில் இருந்து அப்படியே திரும்பிச் செல்ல வேண்டும் என்று கோஷமிட்டனர்.
கொச்சி போலீசார் விரைந்து சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். திருப்திதேசாயை அருகில் உள்ள ஓட்டலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
ஆனால் போராட்டக்காரர்கள் திருப்திதேசாயை திருப்பி அனுப்புவதில் குறியாக இருந்தனர். காலை 9 மணியளவில் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை எதிர்க்கும் பெண்கள் அமைப்பினர் என ஆயிரக்க ணக்கானோர் திரண்டனர். சிறை பிடிக்கப்பட்ட திருப்திதேசாய் புனேவிற்கு திரும்பிச் செல்லும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.
இதனால் கொச்சி விமான நிலையம் முன்பு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. #TruptiDesai #Sabarimala
சபரிமலைக்கு பெண்கள் வருவதை தடுக்க மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஐயப்ப பக்தர்கள் ஆவேசம் அடைந்தனர். சபரிமலை கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயிலான நிலக்கல்லில் குவிந்தனர். அங்கு சாலை மறியல், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நேற்று மாலை தொடங்கிய போராட்டம் விடிய விடிய நடந்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

நிலக்கல்லில் இருந்து சபரிமலை செல்லும் அனைத்து வாகனங்களையும் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 10 வயதுக்கு மேல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் இருந்தால் அவர்களை வலுக்கட்டாயமாக வாகனங்களில் இருந்து இறக்கி விட்டனர்.
இன்று மாலை 5 மணியளவில் கோவில் திறக்கப்படவுள்ள நிலையில், அங்குள்ள நிலவரம் குறித்து செய்தி சேகரிப்பதற்காக ஏராளமான பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் நிலக்கல், பம்பை மற்றும் சபரிமலை கோவில் பகுதியில் குவிந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று பிற்பகல் அவ்வழியாக ஒரு பெண் பத்திரிகையாளர் வந்த காரை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். அங்கிருந்து திரும்பிச் செல்லும்படி எச்சரித்ததுடன் அவர் வந்த காரின் மீதும் தாக்குதல் நடத்தினர்.

இதேபோல் சில இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்ததால் நிலமையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியதால் அங்கு பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது. #Sabarimalaverdict #SCverdict
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 28-ந்தேதி உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு சபரிமலை கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்றும், அந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யவேண்டும் என்றும் ஐயப்பப் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்க கேரள அரசு மறுத்து விட்டது.
மாறாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளாவில் ஆளும் கட்சியாக உள்ள கம்யூனிஸ்டு அரசு அறிவித்தது. மேலும் சபரிமலைக்கு கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்தார்.
கேரள அரசின் முடிவை கண்டித்து ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் குதித்தனர். சபரிமலை கோவில் தந்திரிகள், பந்தளம் ராஜகுடும்பம், ஐயப்ப சேவா சங்கம் உள்ளிட்டோர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
கேரள மாநிலம் முழுவதும் நடந்த இப்போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஏராளமான பெண்களும் போராட்டத்தில் பங்கேற்றதால் மாநிலமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகம் இப்பிரச்சினை குறித்து நேற்று சமரச பேச்சுவார்த்தை நடத்தியது.
பந்தளம் ராஜகுடும்ப பிரதிநிதிகள், தந்திரிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் அமைப்பினர் இதில் கலந்து கொண்டனர்.
அவர்கள் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து தேவசம் போர்டும், கேரள அரசும் மறு ஆய்வு மனுதாக்கல் செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினர். இதை ஏற்க தேவசம் போர்டு மறுத்தது. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
சபரிமலைக்கு பெண்கள் வருவதை தடுக்க மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஐயப்ப பக்தர்கள் ஆவேசம் அடைந்தனர். சபரிமலை கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயிலான நிலக்கல்லில் குவிந்தனர். அங்கு சாலை மறியல், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நேற்று மாலை தொடங்கிய போராட்டம் விடிய விடிய நடந்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.
சபரிமலை கோவில் நடை ஐப்பசி மாத பூஜைக்காக இன்று (புதன்கிழமை) மாலை திறக்கப்பட இருக்கிறது. அப்போது பெண் பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என்று கருதிய போராட்டக்காரர்கள், அவர்களை சபரிமலைக்குள் நுழைய விடாமல் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.
நிலக்கல்லில் இருந்து சபரிமலை செல்லும் அனைத்து வாகனங்களையும் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 10 வயதுக்கு மேல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் இருந்தால் அவர்களை வலுக்கட்டாயமாக வாகனங்களில் இருந்து இறக்கி விட்டனர்.
சென்னையில் இருந்து பஞ்சவர்ணம் (வயது 40), என்ற பெண் அவரது கணவர் பழனி (45)யுடன் சபரிமலை செல்லும் பஸ்சில் இருந்தார். அவரை போராட்டக்காரர்கள் பஸ்சில் இருந்து கீழே இறக்கி அடித்து உதைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் சென்னை தம்பதிகளை மீட்டு அழைத்து சென்றனர்.
சென்னை தம்பதியை போல் சில பெண்கள் கருப்பு உடை அணிந்து அந்த வழியாக சென்றனர். அவர்களும் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து கோட்டயம் எஸ்.பி. ஹரிசங்கர் தலைமையில் அதிரடிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் சபரிமலை செல்லும் பக்தர்களை தடுத்த போராட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைத்தனர். நேற்று நள்ளிரவும், இன்று அதிகாலையிலும் தடியடி நடத்தப்பட்டது.

அதன்படி, நிலக்கல்லில் போராட்டம் நடத்த போடப்பட்டிருந்த பந்தல் போலீசாரால் அகற்றப்பட் டது. மேலும் பெண் பக்தர்களை தடுத்த போராட்டக்காரர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கு 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். இதில், பெண் போலீசாரும் இருந்தனர்.
சபரிமலை விவகாரம் குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு நேற்று நடத்திய சமரச பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து, தேவசம் போர்டின் கமிட்டி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வருகிற 19-ந்தேதி இக்கூட்டம் நடக்க இருக்கிறது. அப்போது மீண்டும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் தெரிவித்தார். #Sabarimala #SabarimalaTemple
ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள கில்ஜித் -பல்டிஸ்தான் பிராந்தியத்தை பாகிஸ்தான் தனது ஐந்தாவது மாகாணமாக அறிவிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த பிராந்தியம் கடந்த 2009-ம் ஆண்டு தனி சுயாட்சி மற்றும் அதிகாரம் கொண்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பாகிஸ்தானின் பிற பகுதிகளைப் போன்று ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதிகளுக்கு கூடுதல் அதிகாரம், நிதி உதவி வழங்க பிரதமர் அப்பாஸி மே 21-ம் தேதி ஆணையிட்டார்.
இந்த பகுதியின் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களை பறிக்கும் வகையில் இந்த உத்தரவு இருப்பதாக அப்பகுதி மக்களும், அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், அப்பகுதி மக்களும், அரசியல் தலைவர்களும் சட்டமன்றத்தை நோக்கி நேற்று பேரணியாக சென்றனர். இந்த பேரணியை தடுக்கும் முயற்சியில் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தடியடியும் நடத்தப்பட்டது. மேலும், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூட்டிலும் ஈடுபட்டனர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பொதுமக்கள் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். பிரதமர் அறிவித்துள்ள புதிய உத்தரவை திரும்ப பெறும்வரை போராட்டம் நடத்த உள்ளதாக போராட்டக்குழுவினர் கூறியுள்ளனர். #GilgitBaltistan #protestagainstgovernment
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பாக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஊர்வலமாக செல்ல திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் அனைத்து பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் தடையை மீறி இன்று பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் போராட்டக்காரர்கள் ஒரு குழுவினர் பேரணியாகப் புறப்பட்டு கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் கற்களை வீசி தாக்கினர். வங்கி கட்டிடத்தின் கண்ணாடியையும் கற்கள் வீசி உடைத்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.

ஏராளமானோர் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்ததால் நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. எனவே, கூட்டத்தைக் கலைக்க, போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன், துப்பாக்கிசூடும் நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். இதில் பலர் காயமடைந்திருக்கலாம் என தெரிகிறது.
போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் மேலும் ஆத்திரமடைந்த போராட்டக்குழுவினர் சாலைகளில் மரங்களை வெட்டிப் போட்டு போக்குவரத்தை தடை செய்தனர்.
இதனால் அந்த பகுதியில் பதற்றமாக சூழல் காணப்படுகிறது. மதுரை, விருது நகர் மாவட்டங்களில் இருந்து கூடுதலாக 2000 போலீசார் தூத்துக்குடிக்கு விரைந்துள்ளனர். #sterliteprotest #BanSterlite #TalkAboutSterlite