என் மலர்
நீங்கள் தேடியது "சுங்கச்சாவடி"
- தேசிய நெஞ்சாலை அமைப்பதன் நோக்கமே தடையற்ற பயணத்திற்காகத்தான்.
- ஆனால் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் சுங்க கட்டணம் செலுத்தி நகர்வதற்கு அரைமணி நேரமாகிறது.
மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் எல்லா மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதம், அரசியலமைப்பிற்கு எதிரானது. இதனால் சுங்கக் கட்டணம் வசூலிக்க தடைவிதித்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விசாரணையின்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை, "தேசிய நெஞ்சாலை அமைப்பதன் நோக்கமே தடையற்ற பயணத்திற்காகத்தான். ஆனால் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் சுங்க கட்டணம் செலுத்தி நகர்வதற்கு அரைமணி நேரமாகிறது. சுங்கச் சாவடிகளில் வீண் தாமதத்தை தடுக்க வேறு வழியில்லையா?" எனக் கேள்வி எழுப்பியது.
அத்துடன் இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை இயக்குனர் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டுள்ளது.
- மானம்பாடி சுங்கச்சாவடி 12-ந்தேதி செயல்பாட்டுக்கு வரும்நிலையில் கட்டண விவரத்தையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
- பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ரூ.560 ஆக கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்பட்ட சுங்கச்சாவடி 12-ந்தேதி செயல்பாட்டுக்கு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
தஞ்சை-விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் சேத்தியாத்தோப்பு-சோழபுரம் இடையே மானம்பாடியில் புதிய சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மானம்பாடி சுங்கச்சாவடி 12-ந்தேதி செயல்பாட்டுக்கு வரும்நிலையில் கட்டண விவரத்தையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
கார், வேன் உள்ளிட்டவற்றுக்கு ஒருமுறை செல்ல ரூ.105, இருமுறை அதே வழியில் பயணிக்க ரூ.160, வணிக வாகனங்களுக்கு ரூ.55 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இலகுரக வணிக வாகனம், சிறிய ரக சரக்கு வாகனம், மினி பஸ் ஒருமுறை செல்ல ரூ.170, இருமுறை பயணிக்க ரூ.255 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தனியார் பேருந்து, டிரக் - ரூ.360, பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ரூ.560 ஆக கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- கோர்ட்டு உத்தரவு தொடர்பான ஆணை சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது.
- கோர்ட்டு உத்தரவுக்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மதுரை:
மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் இருபுறமும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவில்லை, சாலை நடுவே செடிகள் வைக்கவில்லை, முறையாக சீரமைக்கவில்லை என்பதுடன் கட்டண வசூலை மட்டும் குறிக்கோளாக கொண்டு எலியார்பத்தி சுங்கச்சாவடி செயல்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து எலியார் பத்தி சுங்கச்சாவடி, தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியபுரம் சுங்கச்சாவடி நிர்வாகம் சாலையில் உரிய பராமரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் வரை கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டுமென தூத்துக்குடியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள் சம்பந்தப்பட்ட இரண்டு சங்கசாவடிகளுக்கும் கட்டண வசூலிக்க நேற்று முன்தினம் தடை விதித்தது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவு குறித்து தங்களுக்கு முறையான ஆணை வரவில்லை எனக் கூறி தொடர்ந்து எலியார்பத்தி சுங்கச்சாவடி கட்டண வசூலில் ஈடுபட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து கோர்ட்டு உத்தரவு தொடர்பான ஆணை நேற்றைய தினம் சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது. கட்டண வசூலுக்கு தடை வித்த ஆணை கிடைக்கப்பெற்றதால் நள்ளிரவு முதல் எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கட்டண வசூல் நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மதுரை-தூத்துக்குடி சாலையில் செல்லக்கூடிய வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்தாமல் செல்கின்றன. கோர்ட்டு உத்தரவுக்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
- புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பல வாகனங்கள் அருகில் உள்ள வேலாயுதபுரம் கிராமம் வழியாக மாற்று வழியில் சென்றது.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து பயன்பாட்டில் உள்ளது. இந்த நெடுஞ்சாலையின் இருபுறமும் மரங்கள் நடுவது, நெடுஞ்சாலையின் சென்டர் மீடியனில் செடிகள் நட்டு பராமரிப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. இதனால் 2023-ம் ஆண்டு தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் இந்த சாலையை பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
ஆனாலும் இந்த நெடுஞ்சாலையில் மாதந்தோறும் ரூ.11 கோடியை சுங்க கட்டணமாக வசூலிக்கின்றனர். ஆனால் பராமரிப்பு பணிக்காக வெறும் ரூ.30 லட்சம் மட்டுமே செலவு செய்கின்றனர். இதனால் தரமான சாலை மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமங்களை சந்திக்கின்றனர்.
எனவே மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களும் மரங்கள் நட்டு பராமரித்து, வாகன ஓட்டிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யும் வரை சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எலியார்பத்தி மற்றும் புதூர் பாண்டியாபுரம் ஆகிய 2 சுங்கச்சாவடிகளிலும் அந்த வழியாக செல்லும் வாகனங்களிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட்டு உள்ள பணிகள் குறித்து உரிய அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்நிலையில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவுபடி சுங்கக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் இன்று ஒட்டப்பிடாரம் அருகே உள்ள புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சுங்கச்சாவடியில் 6 வாசல்கள் மூலம் வாகனங்கள் நிறுத்தப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு பின்னர் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை முதல் 6 வாசல்களிலும் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தொடர்ந்து வாகனங்கள் வந்ததால் அணிவகுத்து நின்றன. இதைத்தொடர்ந்து பல வாகனங்கள் அருகில் உள்ள வேலாயுதபுரம் கிராமம் வழியாக மாற்று வழியில் சென்றது. தொடர்ந்து அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- சென்னையில் 3 இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
- வானகரம் சுங்கச்சாவடியில் கட்டணம் ரூ.5 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் 78 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 1992-ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
இந்த நிலையில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.
அதன்படி தமிழகத்தில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில், முதற்கட்டமாக 40 சுங்கச்சாவடிகளுக்கு இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. சென்னையில் பரனூர், வானகரம், சூரப்பட்டு ஆகிய 3 இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் ரூ.5 முதல் ரூ.25 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இங்கு கார், ஜீப், வேன், இலகுரக மோட்டார் வாகனம் ஆகியவை ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.75 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.110 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
இலகுரக வர்த்தக வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.120 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.180 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
பஸ்கள், டிரக் ஆகியவை ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.255 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.380 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
வர்த்தக வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.275 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.415 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
கனரக கட்டுமான எந்திர வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.400 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.595 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
பெரிய வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.485 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.725 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
வானகரம் சுங்கச்சாவடியில் கட்டணம் ரூ.5 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இங்கு கார், ஜீப், வேன், இலகுரக மோட்டார் வாகனம் ஆகியவை ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.55 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.80 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
இலகுரக வர்த்தக வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.90 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.130 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
பஸ்கள், டிரக் ஆகியவை ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.185 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.275 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
வர்த்தக வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.200 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.300 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
கனரக கட்டுமான எந்திர வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.290 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.435 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
பெரிய வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.350 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.525 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
சூரப்பட்டு சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன், இலகுரக மோட்டார் வாகனம் ஆகியவை ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.75 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.115 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
இலகுரக வர்த்தக வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.120 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.185 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
பஸ்கள், டிரக் ஆகியவை ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.255 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.385 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
வர்த்தக வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.280 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.420 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
கனரக கட்டுமான எந்திர வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.400 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.600 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
பெரிய வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.490 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.730 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
மேலும் சுங்கச்சாவடியில் இருந்து 20 கி.மீ. தொலைவுக்குள் உள்ள உள்ளூர் வணிகம் சாராத வாகனங்களுக்கான மாதாந்திர கட்டணம் ரூ.350 ஆகும்.
- புதிய சுங்கக் கட்டணம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் 2026 மார்ச் 31-ந்தேதி வரையிலான ஒரு வருட காலத்திற்கு என அறிவிக்கப்பட்டு உள்ளது.
- வண்டலூர்-பாடியநல்லூர் இடையே கார், ஜீப், வேன், ஆட்டோவிற்கு ரூ.115 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. வண்டலூர் முதல் திருவொற்றியூர் பஞ்செட்டி பொன்னேரி சாலையில் உள்ள மீஞ்சூர் வரையிலான தொலைவிற்கு சுங்கக்கட்டணம் புதிதாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த வெளிவட்டச் சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் ஒவ்வொரு வகையான வாகனங்களுக்கு கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சுங்கக் கட்டணம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் 2026 மார்ச் 31-ந்தேதி வரையிலான ஒரு வருட காலத்திற்கு என அறிவிக்கப்பட்டு உள்ளது.
வண்டலூர்-நசரேத்பேட்டை இடையே கார், ஜீப், வேன்களுக்கு ரூ.60, இலகுரக வணிக வாகனம், சரக்கு வாகனங்களுக்கு ரூ.95, லாரி மற்றும் பஸ்களுக்கு ரூ.200, இதர கனரக வாகனங்களுக்கு ரூ.220, ரூ.315, ரூ.385 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
வண்டலூர்- நெமிலிச்சேரி வரை கார், ஜீப், வேன்களுக்கு ரூ.85, இலகுரக வணிக வாகனம் ரூ.135, லாரி, பஸ்கள் ரூ.285, கனரக வாகனங்கள் ரூ.310, ரூ.445, ரூ.545.
வண்டலூர்-பாடிய நல்லூர் இடையே கார், ஜீப், வேன், ஆட்டோவிற்கு ரூ.115, இலகுரக வணிக வாகனம் ரூ.190, லாரி, பஸ்களுக்கு ரூ.395, கனரக வாகனங்களுக்கு ரூ.430, ரூ.615, ரூ.750 என்ற விகிதத்தில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
வண்டலூர்-மீஞ்சூர் வரை ரூ.140, ரூ.225, ரூ.470 மற்றும் கனரக வாகனங்களுக்கும் ரூ.510, ரூ.735, ரூ.895 வசூலிக்கப்பட உள்ளது.
நசரேத்பட்டை- நெமிலிஞ்சேரி வரை கார், ஜீப், வேன், ஆட்டோவிற்கு ரூ.20, இலகுரக வணிக வாகனம் ரூ.40, லாரி, பஸ்கள் ரூ.85. 3 வகையான கனரக வாகனங்களுக்கு ரூ.90, ரூ.130, ரூ.160 புதிய கட்டணம்.
நசரேத்பேட்டை- பாடியநல்லூர் இடையே கார், ஜீப் ஆட்டோவிற்கு ரூ.55, இலகுரக வணிக வாகனம், சரக்கு வாகனம் ரூ.90, லாரி, பஸ்கள் ரூ.195, 3 வகையான கனரக வாகனங்களுக்கு ரூ.210, ரூ.300, ரூ.370. நசரேத்பேட்டை - மீஞ்சூர் வரை கார், ஜீப், வேன் ரூ.80, இலகுரக வணிக வாகனம், சரக்கு வாகனம் ரூ.125, லாரி, பஸ்கள் ரூ.265, இதர கனரக வாகனங்கள் ரூ.290, ரூ.420, ரூ.510.
- ஒவ்வொரு வகை வாகனங்களை பொருத்து சுங்கச் சாவடி கட்டணம் ரூ.5 முதல் ரூ.25 வரை உயர்த்தப்பட உள்ளது.
- மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந்தேதி கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
சென்னை:
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் தமிழகத்தில் மொத்தம் 78 சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 12 சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டு உள்ளன. இதில் 40 சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1-ந்தேதியும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந்தேதியும் கட்டணம் மாற்றி அமைக்கப்படும்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள சுங்கச்சாவடிகள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் வருகிற 1-ந்தேதி கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஒவ்வொரு வகை வாகனங்களை பொருத்து சுங்கச் சாவடி கட்டணம் ரூ.5 முதல் ரூ.25 வரை உயர்த்தப்பட உள்ளது.
சென்னையில் உள்ள வானகரம் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி, சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர் சுங்கச்சாவடி, தாம்பரம்-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடி, பரனூர் சுங்கச்சாவடி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. மொத்தம் 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந்தேதி கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
சுங்கச்சாவடி கட்டண உயர்வு காரணமாக விலைவாசி அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
- 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது.
- ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்படவுள்ள சுங்கக்கட்டணத்தின் அளவு குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.75 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை, இரு கட்டங்களாக, சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில், வானகரம், செங்கல்பட்டு பரனூர், திண்டிவனம் ஆத்தூர், சூரப்பட்டு, பட்டறைப்பெரும்புதூர் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படும். ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்படவுள்ள சுங்கக்கட்டணத்தின் அளவு குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.75 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இது நியாயமற்றதாகும்.
டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குள் புதிய சுங்கக்கட்டணக் கொள்கை அறிவிக்கப்படும் என்றும், அதில் சாலைகளை பயன்படுத்துவோருக்கு சலுகைகள் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
புதிய சுங்கக் கட்டணக் கொள்கை அடுத்த ஒரு வாரத்தில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதில் இடம் பெற்றுள்ள அம்சங்களை அறிந்து கொண்டு சுங்கக்கட்டண மாற்றத்தை செயல்படுத்துவது தான் சரியாக இருக்கும். புதிய சுங்கக்கட்டண கொள்கையை மத்திய அரசு அறிவிக்கும் வரை சுங்கக்கட்டண உயர்வு அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பெயர் பலகை மற்றும் பணம் வசூலிக்கும் கவுண்டர்களை அடித்து நொறுக்கினர்.
- சுங்கச்சாவடி ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
வத்தலக்குண்டு:
திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் வத்தலக்குண்டு பைபாஸ் வழியே சேவுகம்பட்டியில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி கடந்த பல மாதங்களாக நடைபெற்று வந்தது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்து 4 வழிச்சாலையாக மாற்றி சுங்கச்சாவடி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே கொடைரோடு, நத்தம் பகுதியில் சுங்கச்சாவடி செயல்பட்டு வரும் நிலையில் மேலும் ஒரு சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் போராட்டமும் நடத்தி வந்தனர்.
ஆனால் 4 வழிச்சாலைகள் அமைக்காமல் இருவழிச்சாலை மட்டும் முடிந்த நிலையில் சுங்கச்சாவடி இன்று காலை 10 மணிமுதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக 7 இடங்களில் பணம் வசூலிப்பதற்கான கவுண்டர்கள் அமைக்கப்பட்டு ஊழியர்களுக்கான அறை மற்றும் கணினிகள் கொண்டு வரப்பட்டன.
ஆனால் சுங்கச்சாவடி திறக்கும் முன்பு காலை 9 மணிக்கு போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் அறிவித்தனர். இதனால் நள்ளிரவு 12 மணிக்கே சுங்கச்சாவடி திறக்கப்பட்டு வாகனங்களிடம் கட்டணம் வசூல் செய்யப்பட்டது.
அதிகாலையில் இத்தகவல் பரவியதால் பொதுமக்கள் மற்றும் தி.மு.க.வினர் ஒன்று சேர்ந்து சுங்கச்சாவடி நோக்கி வந்தனர். அவர்கள் அங்கிருந்த பெயர் பலகை மற்றும் பணம் வசூலிக்கும் கவுண்டர்களை அடித்து நொறுக்கினர்.
இதனை தடுக்க வந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருசிலருக்கு மண்டை உடைந்து படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் லேப்டாப்களையும் அடித்து நொறுக்கியதுடன், மேலும் பல லேப்டாப்களை தூக்கிச் சென்றனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது.
இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய் ஆய்வாளர் பரிமளா, கிராம நிர்வாக அலுவலர் சுமதி ஆகியோரும் அங்கு வந்து பார்வையிட்டனர்.
சுங்கச்சாவடி ஊழியர்களிடம் தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து கேட்டறிந்ததுடன் உள்ளூர் மக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் 4 வழிச்சாலை பணிகளை முழுமையாக நிறைவேற்றாமல் சுங்கச்சாவடியை திறக்க கூடாது. உள்ளூர் மக்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இருந்தபோதும் நள்ளிரவு 12 மணிக்கு திறக்கப்பட்ட சுங்கச்சாவடி முற்றிலும் அடித்து நொறுக்கப்பட்டதால் தற்போது வாகனங்கள் வழக்கம்போல் கட்டணமின்றி செல்ல அனுமதிக்கப்பட்டன.
இதனிடையே தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. காமிரா உதவியுடன் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
- கப்பலூர் சுங்கச்சாவடியை கண்டித்து கடையடைப்பு-ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
- திருமங்கலம் சர்வீஸ் சாலையை திருமங்கலம் வாகன ஓட்டிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி விதிமுறைப்படி திருமங்கலம் நகராட்சி எல்லையில் இருந்து 4 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்க வேண்டும். ஆனால் விதிகளை மீறி திருமங்கலம் நகராட்சி எல்லையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டதோடு திருமங்கலம் நகர் பகுதியில் இருந்து வரக்கூடிய வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யும் நடவடிக்கையிலும் இறங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக திருமங்கலம், கல்லுப்பட்டி ,பேரையூர், ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி வாகன ஓட்டிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புதிதாக ஒப்பந்தம் செய்துள்ள சுங்கச்சாவடி நிர்வாகம் கடந்த 1-ந்தேதி முதல் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க போவதாக கூறி மாதாந்திர கட்டணமாக 331 உள்ளூர் வாகனங்கள் செலுத்த வேண்டும் என அறிக்கை விடுத்து கட்டண வசூலில் இறங்கியது இதற்கு திருமங்கலம் வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுெதாடர்பாக கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் அல்லது திருமங்கலம் சர்வீஸ் சாலையை திருமங்கலம் வாகன ஓட்டிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
கப்பலூர் சுங்கச்சாவடி விதிமுறைக்கு புறம்பாக உள்ளதை கண்டித்தும், உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு கட்டணம் வசூல் செய்யும் நடவடிக்கையை கண்டித்தும் வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) திருமங்கலம் நகர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் அடைக்க முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் அன்றைய தினம் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தின் முன் சுங்கச்சாவடி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப் போவதாக சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதற்கும் மேலாக சுங்கச்சாவடி தரப்பில் உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் கட்டண வசூல் செய்ய முற்பட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
- கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரியை சந்திக்க போராட்டக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
- அதன்படி வருகிற 21-ந் தேதி டெல்லி சென்று மத்திய மந்திரியிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் என்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து திருமங்கலம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள், வாகன ஓட்டிகள், பொது மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் 22-ந் தேதி திருமங்கலத்தில் கடைய டைப்பு போராட்டமும் நடைபெற்றது. சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்தநிலையில் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரியை சந்தித்து போராட்டக் குழுவினர் மனு கொடுக்க உள்ளனர். இதற்காக அவர்கள் வருகிற 21-ந் தேதி டெல்லி செல்ல உள்ளனர். இதற்கான ஆலோசனை கூட்டம் திருமங்கலத்தில் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஜெயராமன், அ.தி.மு.க. நகரச் செயலாளர் விஜயன், மேற்கு மாவட்ட பா.ஜனதாக கட்சி பொதுச் செயலாளர் சிவலிங்கம் மற்றும் வியாபாரிகள், நிர்வாகிகள், பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பின் போராட்டக்குழுவினர் கூறுகையில், கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் முயற்சி செய்து மத்திய மந்திரி நிதின் கட்காரியை சந்திக்க அனுமதி பெற்றுக் கொடுத்துள்ளார்.
அதன்படி வருகிற 21-ந் தேதி டெல்லி சென்று மத்திய மந்திரியிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் என்றனர்.
- பரனூர் சுங்கச்சாவடி வழியாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
- இருசக்கர வாகனங்கள் செல்லும் சாலையில் இருபுறமும் தொடர்ந்து 3 வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி வழியாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. தென்மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வாகனங்கள் சென்னைக்கு வருகை தருகிறது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இங்கு சுங்ககட்டணம் வசூலிக்கும் நடைமேடைகள் தவிர சென்னை நோக்கி மற்றும் செங்கல்பட்டு நோக்கி என இருபுறமும் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ போன்ற 3 சக்கர வாகனங்கள் செல்ல சாலை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த சாலையில்தான் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இதற்கிடையே திடீரென இருசக்கர வாகனங்கள் செல்லும் சாலையில் இருபுறமும் தொடர்ந்து 3 வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வேகத்தடைகளை கடக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்லக்கூடியவர்கள் வேகத்தடையை கடக்க முடியாமல் தட்டுத்தடுமாறி கீழே விழுவதும் பதறுவதுமாகவும் இருந்து வருகின்றனர்.
வேகத்தடை என்ற பெயரில் விபத்துமேடை அமைத்திருப்பதாக அந்த வேகத்தடையை கடக்கும் ஒட்டுமொத்த வாகன ஓட்டிகளின் கருத்தாக உள்ளது. மேலும் அந்த வேகத்தடையை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.