என் மலர்
இந்தியா

போனஸ் வழங்காததால் கோபம்: கட்டணம் வசூலிக்காமல் கேட்டை திறந்துவிட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள்
- தீபாவளியுடன் போனஸ் வழங்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
- வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படாததால் ஆத்திரம் அடைந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியானா மாநிலத்தில் ஆக்ரா- லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் பதேஹாபாத் சுங்கச் சாவடி உள்ளது. இந்த சுங்கச் சாவடியில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இதனால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கேட்டை மூடாமல் திறந்து விட்டனர். கேட்டை மூடினால், வாகனம் அதன்முன் வந்து நிற்கும். fastag மூலம் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும். அதன்பின் கேட் திறக்கப்படும்.
போனஸ் வழங்காத கோபத்தில் ஊழியர்கள் கேட்டை திறந்து விட்டனர். இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் காலை வரை ஆயிரக்கணக்கான வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல சென்றது. இதனால் மத்திய அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்ரீசாய் அண்டு தத்தார் நிறுவனத்திற்கான ஊழியர்கள் வேலைபார்த்து வருகிறார். நிறுவனம் தீபாவளியுடன் போனஸ் வழங்குவதாக தெரிவித்துள்ளது. ஆனால், அவர்களுக்கு வங்கி கணக்கில் போனஸ் வரவு வைக்கவில்லை என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்றொரு ஊழியர் "கடந்த ஒருவருடமாக நான் இங்கே வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், அவர்கள் எந்தவிதமான போனஸும் தரவில்லை. நாங்கள் கடுமையான வேலை செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், சம்பளம் கூட சரியான நேரத்தில் தரப்படுவதில்லை. நாங்கள் ஊழியர்களை மாற்றிவிடுவோம் என நிறுவனம் தெரவிக்கிறது. ஆனால், எந்த போனஸும் கொடுக்கப்படவில்லை" என தனது கவலையை தெரிவித்தார்.






