search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Toll plaza"

    • வழக்கமான கட்டணத்தில் பாதி அளவு வசூலிக்கப்பட்டதால் யாரும் வாய் திறக்கவில்லை.
    • சுமார் ஒன்றரை ஆண்டு தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வந்துள்ளது.

    விதவிதமான மோசடியை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் சினாமாவை மிஞ்சிய வகையில் குஜராத் மாநிலத்தில் போலி சுங்கச்சவாடி அமைத்து கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

    குஜராத் மாநிலம் மொர்பி மாவட்டத்தில் கட்ச் பகுதியை இணைக்கும் பாமன்போர்- கட்ச் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலையில் வகசியாக சுங்கச்சவாடி உள்ளது.

    இந்த வாக்குச்சாவடிக்கு அருகில் உள்ள வர்கசியா கிராமத்தில் பீங்கான் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று மூடிய நிலையில் உள்ளது. இந்த தொழிற்சாலையை போலி சுங்கச்சாவடியாக மாற்ற சில மோசடி பேர்வழிகள் முடிவு செய்தனர்.

    அதன்படி தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி போன்று போலியான சுங்கச்சாவடி அமைத்தனர். மேலும் நெடுஞ்சாலை அதிகாரிகள் கண்ணில் மண்ணைத்தூவி ஒரு துணைச்சாலை அமைத்தனர். இந்த சாலை வழியாக நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டு வரிவசூல் செய்யப்பட்டுள்ளது.

    வகசியா சுங்கச்சவாடியில் வசூல் செய்யும் பணத்தை விட 50 சதவீதம் குறைவாக வசூலித்துள்ளனர். இதனால் வாகனம் ஓட்டிகள், கனரக வாகன ஓட்டிகள் இதுகுறித்து அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை. தங்களுக்கு 50 சதவீதம் லாபம் கிடைப்பதால் அந்த வழியாக செல்ல ஆரம்பித்துள்ளனர்.

    சுமார் ஒன்றரை ஆண்டுகள் இந்த போலி சுங்கச்சாவடி செயல்பட்டு வந்துள்ளது. லட்சக்கணக்கானோரிடம் சுமார் 75 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. 110 ரூபாய் முதல் 595 ரூபாய் வரையிலான வரி வசூலுக்கு 20 ரூபாய் முதல் 200 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது.

    இறுதியாக இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரியவர, அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை செய்தபோது போலி சுங்கச்சாவடி செயல்பட்டது தெரியவந்தது.

    இது தொடர்பாக அந்த தொழிற்சாலையின் உரிமையாளரான அமர்ஷி பட்டேல், அவருடைய கூட்டாளிகள் வன்ராஜ் சிங் ஜாலா, ஹர்விஜய் சிங் ஜாலா, தர்மேந்திர சிங் ஜாலா, யுவ்ராஜ் சிங் ஜாலா உள்ளிட்ட பலமர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    குஜராத் மாநிலத்தில் கடந்த மாதம் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் ஆறு போலி அலுவலகங்களை நடத்தி வந்த மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நெல்லை மாவட்டம் பணகுடியில் பா.ஜனதா சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
    • நான்கு வழிச்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் 20 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் கட்டணம் செலுத்தாமல், இலவசமாக தங்களது வாகனங்களில் செல்லலாம் என்றார்.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் பணகுடியில் பா.ஜனதா சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மேலும் பாரத பிரதமரின் மன்கீபாத் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    அப்போது மத்திய அமைச்சர் வி.கே.சிங் நிருபர்களிடம் கூறுகையில், நான்கு வழிச்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் 20 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் கட்டணம் செலுத்தாமல், இலவசமாக தங்களது வாகனங்களில் செல்லலாம் என்றார்.

    இதில் பா.ஜனதா தெற்கு மாவட்ட தலைவர் தமிழ் செல்வன், பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் செல்வக்குமார் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • சுங்கச்சாவடிகளால் போக்குவரத்து நெரிசல் போன்ற பல பிரச்சனைகள் உருவாகின்றன.
    • நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளை மாற்றுவதற்கான புதிய தொழில்நுட்பங்களை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

    புதுடெல்லி:

    புதிய அமைப்பின் மூலம் நகர எல்லையில் இருக்கும் சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றப்படும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் அதிமுக எம்பி தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

    மேலும் கிருஷ்ணகிரி நகரில் 7 கிமீ தொலைவில் சுங்கச்சாவடிகள் இருப்பதை நியாயப்படுத்த முடியாதும், மக்கள் சுங்கக் கட்டணம் செலுத்த நேரிடுவது முற்றிலும் தவறானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

    'சுங்கச்சாவடிகளால் போக்குவரத்து நெரிசல் மற்றும் நீண்ட வரிசையில் காத்திருப்பது போன்ற பல பிரச்சனைகள் உருவாகின்றன. அவற்றை அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறது. நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளை மாற்றுவதற்கான புதிய தொழில்நுட்பங்களை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. அடுத்த ஆறு மாதங்களில் புதிய முறை அறிமுகப்படுத்தப்படும்' என்றும் நிதின் கட்காரி தெரிவித்தார்.

    • கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.
    • கட்டண சுங்கச்சாவடி கட்டமைப்பு அமைத்து சுற்றுலா வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்தல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய சந்திரிகா தலைமையில் நடைபெற்றது. கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் முத்துமாரி சுரேஷ் பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய கவுன்சிலர் கார்த்திக் பேசுகையில், பெருமாள்மலை முதல்அடுக்கம் பிரிவு வரை உள்ள பிரதான சாலைகளில் தேங்கியுள்ள குப்பைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும், மேலும் அந்தப் பகுதி சாலையோரங்களில் முறிந்து விழும் நிலையில் உள்ள பட்டுப்போன யூக்கலிப்டஸ் மரங்களை உடனடியாக அகற்ற வனத்துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

    இங்குள்ள கிராம பகுதியில் படிக்கும் மாணவிகள் 3 பேர் 470 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். மாணவிகளின் சிரமத்தை போக்க மாவட்டக் கல்வி அலுவலரிடம் அறிவுறுத்தி இப்பகுதியில் உள்ள பள்ளிகளை இன்னும் தரம் உயர்த்த வேண்டும் என்றார்.

    இதுபோல் ஒன்றிய கவுன்சிலர் பூங்கொடி சுரேஷ் பேசுகையில், தங்கள் பகுதியில் குப்பைகள் அதிகளவில் குவிந்துள்ளது. குடிநீர் வசதி முறையாக வழங்கப்படுவதில்லை. குழந்தைகள் படிக்கும் பள்ளி மற்றும் மக்கள் அதிகம் கூடும் ரேஷன் கடை அருகிலும் குப்பைகள் தேங்கி கிடப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. அதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கூறினார்.

    வில்பட்டி பகுதி ஒன்றிய குழு உறுப்பினர் முத்துகிருஷ்ணன் தங்கள் பகுதிகளில் மக்காத குப்பைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், தெருப்பகுதிகளில் உள்ள சாலைகளை சிமெண்ட் சாலையாக மாற்ற வேண்டும். வில்பட்டியில் இருந்து கோவில்பட்டி வரை செல்லும் சாலையையும் சிமெண்ட் சாலையாக மாற்ற வேண்டும் என்றார்.

    மேல் மலைப்பகுதி ஒன்றிய குழு உறுப்பினர் முருகன் பேசுகையில், 2 பஞ்சாயத்துகளுக்கு ஒரு டிராக்டர் வீதம் அமைத்து குப்பைகளை அகற்ற பயன்படுத்துவதற்கும், கிராம பகுதியில் முக்கியமாக தெரு விளக்குகள் முறையாக எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இதற்கு பதில் அளித்த ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரிகா மற்றும் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் ஆகியோர் தெரு விளக்கு, குடிநீர்வசதி, சுகாதாரம் அனைத்தையும் மேம்படுத நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    பேத்துப்பாறை ஆதி மனிதன் குகை, ஐந்தருவி செல்லும் பகுதி, பூம்பாறை குழந்தை வேலப்பர் முருகன் கோவில் காட்சி முனைகள் செல்லும் பகுதி, மன்னவனூர்சூழல் சுற்றுலா பூங்கா, ஏரிப் பகுதிக்குச் செல்லும் வழிகள், கூக்கால் ஏரி, நீர்வீழ்ச்சி காட்சி முனைகள் ஆகிய இடங்களில் ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் கட்டண சுங்கச்சாவடி கட்டமைப்பு அமைத்து வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்படும். அந்த தொகை அதன் தொடர்புடைய கிராம ஊராட்சியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட பயன்படுத்தப்படும் என்றனர். இது மன்றத்தில் தீர்மானமாக வைக்கப்பட்டது.

    ×