search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nitin gadkari"

    • பாஜக 4-வது முறை ஆட்சிக்கு வந்தால் மந்திரி பதவி கிடைக்கும்- ராம்தாஸ் அத்வாலே.
    • நாங்கள் 4-வது முறை ஆட்சிக்கு வருவது உத்தரவாதம் கிடையாது.

    மத்திய மந்திரி நிதின் கட்கரி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர். பா.ஜ.க.-வை சேர்ந்த இவர் தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசச்கூடியவர். தேசிய ஜனநாயக கூட்டணியில் மத்திய மந்திரியாக இருக்கும் ராம்தாஸ் அத்வாலா, மூன்று முறை மந்திரியாக உள்ளேன். 4-வது முறையம் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நான் மந்திரியாவேன் என தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

    இதற்கு நிதின் கட்கரி, நீங்கள் மந்திரியாவீர்கள். ஆனால், பா.ஜ.க. 4-வது முறையாக ஆட்சி அமைப்பது உத்தரவாதம் என, மந்திரியை கிண்டல் செய்துள்ளார்.

    இந்திய குடியரசு கட்சி தலைவர் ராம்தாஸ் அத்வாலே கூறுகையில் "மூன்று முறை மந்திரியாக உள்ளேன். 4-வது முறையம் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நான் மந்திரியாவேன். என்னுடைய இந்திய குடியரசு கட்சி (ஏ) மகாராஷ்டிரா மாநிலத்தின் மஹாயுதி கூட்டணியில் உள்ளது. நாம் குறைந்தபட்சம் 10 முதல் 12 இடங்களை வரும் மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தலில் பெற வேண்டும். வடக்கு நாக்பூர் உள்பட விதர்பாவில் மூன்று முதல் நான்கு இடங்களை கேட்போம்" என்றார்.

    இதற்கு மத்திய மந்திரி நிதின் கட்சரி, "எங்களுடைய அரசு 4-வது முறையாக ஆட்சி செய்யுமா? என்பது உத்தரவாதம் கிடையாது. ஆனால், ராம்தாஸ் அத்வாலா உறுதியாக மந்திரி ஆவார்" என்றார்.

    ராம்தாஸ் அத்வாலேவால் பல அரசாங்கங்களில் அமைச்சரவையில் இடத்தைப் பிடிக்கும் திறன் குறித்து நிதின் கட்கரி கிண்டல் செய்தார்.

    மகாராஷ்டிரா மாநில மஹாயுதி அரசில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் இடம் பிடித்ததால், உறுதி அளித்தபோதிலும் இந்திய குடியரசு கட்சி (ஏ)யால் மந்திரி சபையில் இடம்பெற முடியவில்லை. எங்களுக்கு கேபினட் மந்திரி சபை, இரண்டு கார்ப்பரேசன் சேர்மன், கிராமம் அளிவிலான கமிட்டிகளில் பங்கு தருவதாக சொன்னார்கள். இதெல்லாம் நடக்கவில்லை. ஏனென்றால் பவார் இடம் பெற்றதால்.

    288 இடங்களை கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தில் நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் எனத் தெரிகிறது.

    பா.ஜ.க.-வுக்கு 103 எம்.எல்.ஏ.-க்களும், சிவ சேனாவுக்கு 40 எம்.எல்.ஏ.-க்களும், காங்கிஸ்க்கு 40 எம்.எல்.ஏ.-க்களும், சிவசேனாவுக்கு (உத்தவ் தாக்கரே) 15 எம்.எல்.ஏ.-க்களும், தேசியவாத காங்கிரஸ்க்கு (சரத் பவார்) 13 எம்.எல்.ஏ.-க்களும் உள்ளனர்.

    • கோப்புகள் மீது அதிக எடை (பணம்) இருந்தால்தான் அவை வேகமாக செல்கின்றன.
    • பொதுப் பணித்துறைகளில் பணிகளை விரைந்து முடிக்க காலக்கெடு அவசியம்.

    மகாராஷ்டிரா மாநிலம் lபுனே தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடந்த பொறியாளர் தின நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார்.

    அந்நிகழ்வில் பேசிய நிதின் கட்கரி, "சாலை விபத்துகள், விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு நெடுஞ்சாலை திட்டங்களுக்கான தவறான திட்ட அறிக்கைகள் காரணமாக உள்ளன. அரசு அதிகாரிகள் லஞ்சம் கொடுத்தால்தான் வேகமாக வேலை பார்க்கின்றனர். இல்லையென்றால் ஒன்றுமே நடக்காது. நமது கட்டமைப்பில் நியூட்டன்களுக்கே அப்பாக்கள் சிலர் உள்ளனர். கோப்புகள் மீது அதிக எடை (பணம்) இருந்தால்தான் அவை வேகமாக செல்கின்றன.

    நமது நாட்டில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும். பொதுப் பணித்துறைகளில் பணிகளை விரைந்து முடிக்க காலக்கெடு அவசியம். தற்போது நடப்பதில் இருந்து இளைஞர்கள் பாடம் கற்க வேண்டும்" என்று பேசியுள்ளார்.

    அரசு அதிகாரிகள் பற்றி நிதின் கட்கரி தெரிவித்துள்ள இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • நிதின் கட்கரி பிரதமர் ஆகும் வாய்ப்பு தனக்கு இருந்ததாகவும் ஆனால் அதற்கு தான் விரும்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
    • நிதின் கட்கரி தனது மனதில் இருக்கும் நாற்காலி ஆசையை எதிர்க்கட்சிகளைச் சாக்காக வைத்து மோடிஜியிடம் கூறியுள்ளார்.

    மகாராஷ்டிராவில் நேற்றைய தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பிரதமர் ஆகும் வாய்ப்பு தனக்கு இருந்ததாகவும் ஆனால் அதற்கு தான் விரும்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார். அவர் கூறியதாவது, எதிர்க்கட்சியைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர் ஒருவர் பிரதமர் வேட்பாளர் பதவிக்கு விரும்பினால் என்னை ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.

    அந்த வாய்ப்பை ஏற்க மறுத்து நிராகரித்துவிட்டேன். பிரதமர் பதவி எனது லட்சியம் அல்ல. நான் ஒரு சித்தாந்தத்தையும் நம்பிக்கையையும் பின்பற்றுபவன் என்று அந்த தலைவரிடம் கூறினேன். அவற்றில் நான் சமரசம் செய்ய மாட்டேன் என்று அவரிடம் உறுதியாகக் கூறினேன் என்று தெரிவித்திருந்தார்.

    இதன்மூலம் நிதின் கட்கரி தனது நாற்காலி ஆசையை சாமர்த்தியமாக மோடியிடம் வெளிப்படுத்தி உள்ளார் என்று இந்தியா கூட்டணியை சேர்ந்த தலைவர் விமர்சித்துள்ளார். இந்தியா கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரே சிவசேனா அணி தலைவர் பிரியங்கா சதுர்வேதி, இந்தியா கூட்டணியில் நாட்டை ஆளும் திறன் உடைய பல தலைவர்கள்  இருக்கின்றனர்.

     

    எனவே நிதின் கட்கரி தனது மனதில் இருக்கும் நாற்காலி ஆசையை எதிர்க்கட்சிகளைச் சாக்காக வைத்து மோடிஜியிடம் கூறியுள்ளார். எங்களிடமே பல தகுதி வாய்ந்த தலைவர்கள் இருக்கும்போது பாஜகவில் இருந்து கடன் வாங்க வேண்டிய அவசியம். Well played நிதின் ஜி என்று விமர்சித்துள்ளார்.

    • பிரதமர் பதவிக்காக நான் கனவு கண்டதில்லை.
    • நான் சமரசம் செய்ய மாட்டேன்.

    நாக்பூர்:

    மத்திய மந்திரி நிதின் கட்காரி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:-

    பிரதமர் பதவிக்காக நான் கனவு கண்டதில்லை. ஆசைப்பட்டதும் கிடையாது. ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு வந்தது எனக்கு நினைவிக்கிறது.

    எதிர்கட்சியை சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர் ஒருவர் பிரதமர் வேட்பாளர் பதவிக்கு விரும்பினால் என்னை ஆதரிப்பதாக தெரிவித்தார். அந்த வாய்ப்பை ஏற்க மறுத்து நிராகரித்துவிட்டேன். அந்த அரசியல் தலைவர் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை. பிரதமர் பதவி எனது லட்சியம் அல்ல.

    நான் ஒரு சித்தாந்தத் தையும் நம்பிக்கையையும் பின்பற்றுபவன் என்று அந்த தலைவரிடம் கூறி னேன். அவற்றில் நான் சமரசம் செய்ய மாட்டேன் என்று அவரிடம் உறுதியாகக் கூறினேன்.

    நான் கனவில் கூட நினைக்காத அனைத்தையும் கொடுத்த கட்சியில் இருக்கிறேன். எந்த சலுகையும் என்னை கவர்ந்து இழுக்க முடியாது. நான் சார்ந்துள்ள அமைப்புக்கு என்றும் நம்பிக்கையாக இருப்பேன்.

    இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.

    2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு பா.ஜனதாவுக்கு பெரும் பான்மை கிடைக்காது, மேலும் சில எதிர்கட்சிகளின் ஆதரவு தேவைப்படும் என்று கருதப்படும்போது, ஒரு குறிப்பிட்ட எதிர்க்கட்சியின் தலைவர் தன்னை அணுகியதாக நிதின் கட்காரி சுட்டிக்காட்டி உள்ளார்.

    • பிரதமர் ஆவது என் வாழ்வின் குறிக்கோள் அல்ல என்றார்.
    • நம்பிக்கைக்கும், எனது அமைப்புக்கும் விசுவாசமாக இருக்கிறேன் என தெரிவித்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய மந்திரி நிதின் கட்கரி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    பிரதமர் பதவிக்கான போட்டியில் ஒரு அரசியல் தலைவர் என்னை ஆதரிக்க முன்வந்தார். ஆனால் அவரது அந்த லட்சியத்திற்கு நான் செவி சாய்க்கவில்லை.

    எனக்கு ஒரு சம்பவம் நினைவிருக்கிறது. நான் யாரையும் பெயரிட மாட்டேன். நீங்கள் பிரதமராகப் போகிறீர்கள் என்றால் நாங்கள் ஆதரவு அளிப்போம் என அந்த நபர் கூறினார்.

    நீங்கள் ஏன் என்னை ஆதரிக்க வேண்டும், உங்கள் ஆதரவை நான் ஏன் எடுக்கவேண்டும் என்று கேட்டேன். பிரதமர் ஆவது என் வாழ்வின் குறிக்கோள் அல்ல. எனது நம்பிக்கைக்கும் எனது அமைப்புக்கும் நான் விசுவாசமாக இருக்கிறேன், அதற்காக நான் சமரசம் செய்யப் போவதில்லை என தெரிவித்தார்.

    இந்த உரையாடல் எப்போது நடந்தது என்பதை நிதின் கட்கரி குறிப்பிடவில்லை.

    • மத்திய மந்திரி நிதின்கட்கரி கும்பகோணம் ஜெகநாதப்பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
    • மத்திய மந்திரி வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    கும்பகோணம்:

    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின்கட்கரி நாக்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்து பின்னர் அங்கிருந்து ஹெலிபேட் மூலம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கலைக் கல்லூரி மைதானத்திற்கு வந்தார்.

    அவரை மாவட்ட கலெக்டர் பிரியங்காபங்கஜம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், சுதா, பா.ஜனதா நிர்வாகிகள் பொன்.ராதாகிருஷ்ணன், கருப்பு முருகானந்தம் ஆகியோரும் வரவேற்றனர்.

    இதையடுத்து மத்திய மந்திரி நிதின்கட்கரி கும்பகோணம் ஜெகநாதப்பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் விக்கிரவாண்டி 4 வழி சாலை பணிகள் முடிந்துள்ள விவரங்களை அறிய தஞ்சாவூரில் இருந்து சோழபுரம் வரையிலான சாலை பணிகளை ஆய்வு செய்தார். அப்போது சாலை பணிகள் முடிந்துள்ள விவரங்கள் உள்ளிட்ட பலவற்றை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் சோழபுரத்திலிருந்து சேத்தியாத்தோப்பு பகுதி வரை 4 வழி சாலை திட்டங்களின் நிலை குறித்து ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வுகளை முடித்து கொண்டு திருச்சி சென்று விமானம் மூலம் நாக்பூர் செல்கிறார்.

    மத்திய மந்திரி வருகையை முன்னிட்டு போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு பிரீமியங்கள் மீது மத்திய அரசு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது
    • நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் இந்த வரி விதிப்பை தளர்த்த கோரிக்கை விடுத்துள்ளார்

    ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு பிரீமியங்கள் மீது மத்திய அரசு விதித்துள்ள 18 சதவீத ஜிஎஸ்டி வாரியானது மக்கள் விரோத வரி என்று மேற்கு வங்க முதலவர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

     

    இதுகுறித்து மத்திய அரசுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இது முற்றிலும் மக்கள் விரோதமானது, உயிர்க் காப்பீடு திட்டங்களின் விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத வாரியானது சாமானிய மக்களுக்கு சுமையாக அமையும். மேலும் இது அவர்களிடையே அச்சத்தை விளைவிக்கும்.

    இது புதிதாக யாரும் ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டடத்தில் சேர முடியாத நிலையை ஏற்படுத்தும். அவர்களின் சமூக பாதுகாப்பு கட்டமைப்பை இந்த வரி விதிப்பானது தகர்க்கும். எனவே என்ன விலை கொடுத்தும் இந்த வரியை உடனே ரத்து செய்தாக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    முன்னதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த மூத்த அமைச்சரே இந்த வரி விதிப்புக்கு எதிராக கருத்து தெரிவித்தது பேசுபொருளானதையும் பார்க்க வேண்டி உள்ளது.  இதற்கிடையில் நேற்று  மக்களவையில் நடந்த பட்ஜெட் கூட்டத்தில் இருந்து  காப்பீடு மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பை எதிரித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

     

     

    • நிதின் கட்கரியின் இந்த கோரிக்கையை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வரவேற்றுள்ளார்.
    • நிதின் கட்கரியின் இந்த கோரிக்கைக்கு ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி ஆதரவு

    ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியங்கள் மீது விதிக்கப்பட்ட 18% ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெறுமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கோரிக்கை வைத்துள்ளார்.

    இது தொடர்பாக நிர்மலா சீதாராமனுக்கு நிதின் கட்கரி எழுதிய கடிதத்தில் "மூத்த குடிமக்களுக்குச் சிரமம்" ஏற்படுத்தும் வகையில் இருப்பதால், ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் பிரீமியங்களுக்கு விதிக்கப்படும் 18% ஜிஎஸ்டி வரியைத் திரும்பப் பெற வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.

    அதேபோல, மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பிரீமியத்தின் மீதான 18% வரி என்பது, சமூகரீதியாக அவசியமாகக் கருதப்படும் வணிகப் பிரிவினரின் வளர்ச்சியைத் தடுக்கும் விதமாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

    எதிர்பாராத சூழலில், மக்கள் தங்களது குடும்பத்தை பாதுகாப்பதற்கு உதவும் காப்பீட்டு திட்டங்கள் மீது வரி விதிப்பது நியாயமல்ல என்றும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். வரிவிதிப்பு தொடர்பான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள நிலையில், கட்கரி இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

    நாக்பூரின் ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பில் தொழில் துறையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையின் பேரில் மத்திய நிதியமைச்சருக்கு இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. நிதின் கட்கரி நாக்பூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    நிதின் கட்கரியின் இந்த கோரிக்கையை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வரவேற்றுள்ளார்.

    பட்ஜெட் விவாதத்தின்போது மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பிரீமியத்திற்கான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என்று அவர் பேசிய வீடியோவையும் தனது எக்ஸ் பக்கத்தில் கார்த்தி சிதம்பரம் பகிர்ந்துள்ளார்.

    "மருத்துவ காப்பீட்டு பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்பட வேண்டும் என்பது எங்களின் நீண்ட நாள் கோரிக்கை. நிதின் கட்கரியின் இந்த கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம்" என்று சமாஜ்வாதி கட்சி எம்.பி. ராஜீவ் குமார் ராய் தெரிவித்தார்.

    நிதின் கட்கரியின் இந்த கோரிக்கைக்கு எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளமும் ஆதரவு தெரிவித்துள்ளது.

    • மக்கள் தங்களது குடும்பத்தை பாதுகாப்பதற்கு உதவும் காப்பீட்டு திட்டங்கள் மீது வரி விதிப்பது நியாயமல்ல.
    • கோரிக்கையின் பேரில் மத்திய நிதியமைச்சருக்கு இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

    ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியங்கள் மீது விதிக்கப்பட்ட 18% ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெறுமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கோரிக்கை வைத்துள்ளார்.

    இது தொடர்பாக நிர்மலா சீதாராமனுக்கு நிதின் கட்கரி எழுதிய கடிதத்தில் "மூத்த குடிமக்களுக்கு சிரமம்" ஏற்படுத்தும் வகையில் இருப்பதால், ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் பிரீமியங்களுக்கு விதிக்கப்படும் 18% ஜிஎஸ்டி வரியைத் திரும்பப் பெற வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.

    அதேபோல, மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பிரீமியத்தின் மீதான 18% வரி என்பது, சமூகரீதியாக அவசியமாகக் கருதப்படும் வணிகப் பிரிவினரின் வளர்ச்சியைத் தடுக்கும் விதமாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

    எதிர்பாராத சூழலில், மக்கள் தங்களது குடும்பத்தை பாதுகாப்பதற்கு உதவும் காப்பீட்டு திட்டங்கள் மீது வரி விதிப்பது நியாயமல்ல என்றும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். வரிவிதிப்பு தொடர்பான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள நிலையில், கட்கரி இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

    நாக்பூரின் ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பில் தொழில் துறையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையின் பேரில் மத்திய நிதியமைச்சருக்கு இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. நிதின் கட்கரி நாக்பூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த விழாவில் இந்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார்
    • ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

    ஈரான் அதிபராக இருந்த இப்ராஹிம் ரசி கடந்த மே 17 ஆம் தேதி அஜர்பைஜான் எல்லையில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். எனவே அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஈரானில் கடந்த ஜூன் 28 நடந்தது.

    இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஜூலை 5 ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் சீர்திருத்தக் கட்சி வேட்பாளர் மசூத் பெசஸ்கியான் 54 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் ஈரான் அதிபராக மசூத் பெசஸ்கியான் பதவியேற்றுள்ளார்.

     

    பாலஸ்தீன போர், ஹெஸ்புல்லா -இஸ்ரேல் போர் பதற்றம் ஆகிய பிரச்சனைகளுக்கு மத்தியில் மசூத் பெசஸ்கியானின் இந்த பதவியேற்பு விழா முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த விழாவில் இந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, துருக்கி, சவுதி அரேபியா, எகிப்து, ஈராக் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

     

    இந்த பதவியேற்பு விழாவில் காசாவில் இஸ்ரேலின் போர்க் குற்றங்கள் குறித்து பாராளுமன்ற சபாநாயகர் பேசுகையில், அவையில் இருந்த 'பலர், இஸ்ரேல் அழியட்டும், அமெரிக்கா அழியட்டும்' [Death to Israel, Death to America] என்று முழக்கம் எழுப்பினர். இந்த முழக்கங்களுக்கு மத்தியில் மசூத், அதிபராக பதவியேற்றுக்கொண்டார்.

     பதவியேற்பின்போது 'புனித குரான் மற்றும் ஈரான் பிரஜைகளின் முன்னிலையில், இஸ்லாமிய குடியரசுக்கும், நாட்டின் அரசியலமைப்புக்கும் பதுகள்வளனாக இருப்பேன் என்று கடவுள் மீது ஆணையாக உறுதியேற்கிறேன்' என்று மசூத் தெரிவித்தார்.

     

    இதற்கிடையில், ஹிஸ்புல்லாவின் சமீபத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் விவாதமாக லெபனான் தலைநகர் பெய்ருட் மீது இஸ்ரேல் நேற்று வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஹிஸ்புல்லாவின் முக்கியத் தலைவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அறிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு முன்பிருந்தே, லெபனானை இஸ்ரேல் தகுமானால் தீவிரமான போரில் ஈரான் இறங்கும் என்று மசூத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • பா.ஜனதா கட்சி வித்தியாசமான கட்சியாக இருந்து வருகிறது.
    • சாதி அடிப்படையிலான அரசியலை பின்பற்ற வேண்டாம் என்று நான் முடிவு செய்துள்ளேன்.

    பனாஜி:

    கோவாவின் பனாஜி அருகே உள்ள தாலிகோவாவில் பா.ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி, கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த், பா.ஜ.க. மாநில தலைவர் சதானந்த் தனவாடே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேசிய தாவது:-

    பா.ஜனதா கட்சி வித்தியாசமான கட்சியாக இருந்து வருகிறது. அதனால் தான் வாக்காளர்களின் நம்பிக்கையை மீண்டும் மீண்டும் பெற்றுள்ளது. காங்கிரஸ் செய்த தவறுகளுக்காகவே மக்கள் பா.ஜனதா கட்சியை தேர்ந்தெடுத்துள்ளனர்.

    நாமும் அதே தவறுகளை செய்தால், காங்கிரஸ் வெளியேறுவதிலும், நாம் ஆட்சிக்கு வருவதிலும் எந்த பயனும் இருக்காது. மற்ற கட்சிகளில் இருந்து நாம் எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    வரும் நாட்களில் அரசியல் என்பது சமூகம் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கான கருவி என்பதை கட்சி தொண்டர்கள் அறிந்து கொள்ள வேண்டும். நாம் ஊழலற்ற நாட்டை உருவாக்க வேண்டும். அதற்காக நாம் ஒரு திட்டத்தை வைத்திருக்க வேண்டும்.

    சாதி அடிப்படையிலான அரசியலை பின்பற்ற வேண்டாம் என்று நான் முடிவு செய்துள்ளேன். நான் சாதி அடிப்படையிலான அரசியலில் ஈடுபட மாட்டேன் என்பதை மக்களுக்கு தெளிவுப்படுத்தி உள்ளேன். சாதியை பற்றி யார் பேசினாலும் அவர்களுக்கு வலுவான உதை கிடைக்கும்.

    இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

    மேலும் 2027-ம் ஆண்டு கோவா சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று கட்சியை வலுப்படுத்துமாறு கோவா மாநில பா.ஜ.க. தொண்டர்களை கட்கரி கேட்டுக்கொண்டுள்ளார்.

    • கோரிக்கைகளை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது.
    • சந்திரபாபு நாயுடு பா.ஜ.க கூட்டணியில் சக்தி வாய்ந்த தலைவராக உள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் அமராவதியை தலைநகராக்கும் திட்டத்தை சந்திரபாபு நாயுடு தொடங்கியுள்ளார். தற்போது ஆந்திர மாநிலம் நிதிச்சுமையால் திண்டாடி வருகிறது.

    இந்த நிலையில் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லி சென்றார். அவர் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடந்தது. ஆந்திரா தொடர்பான பல முக்கிய பிரச்சனைகள் குறித்து இருவரும் விவாதித்ததாக தெரிகிறது.

     போலாவரம், அமராவதி தலைநகர் கட்டமைப்பு பணி குறித்து சந்திரபாபு நாயுடு தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். மேலும் ஆந்திராவுக்கு வரிச் சலுகை கூடுதல் நிதி தேவை என சந்திரபாபு நாயுடு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    முன்னதாக, வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயலை சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார்.

    இதனைத் தொடர்ந்து மத்திய மந்திரிகள் நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான், அமித் ஷா ஆகியோரை இன்று சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசுகிறார்.

    நாளை நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசுகிறார்.

    ஆந்திர மாநிலத்தில் நிலுவையில் உள்ள போலவரம் உள்ளிட்ட நீர்ப்பாசன திட்டங்கள், அமராவதி தலைநகர் திட்டம், மாநில நெடுஞ்சாலைகள், சாலைகள் உள்ளிட்ட உள் கட்டமைப்புகளின் நிலை குறித்து டெல்லி செல்வதற்கு முன்பாக அதிகாரியுடன் கலந்து ஆலோசித்து அறிக்கை ஒன்றை சந்திரபாபு நாயுடு தயார் செய்தார்.

    மேலும் ஆந்திர மாநிலத்திற்கு தேவையான நிதி குறித்தும் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த நீண்ட பட்டியலுடன் அவர் டெல்லியில் சந்திரபாபு நாயுடு முகாமிட்டுள்ளார்.

    பிரதமர் மோடி மற்றும் மத்திய மத்திரிகளுடன் சந்திப்பின்போது ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ,ஆந்திர மாநிலத்திற்கு கூடுதல் நிதி சலுகைகள் மற்றும் வரி சலுகைகளை சந்திரபாபு நாயுடு கேட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

    அரசியல் அனுபவம் வாய்ந்த சந்திரபாபு நாயுடு தற்போது பா.ஜ.க கூட்டணியில் சக்தி வாய்ந்த தலைவராக உள்ளார்.

    இந்த சந்தர்ப்பத்தை அவர் ஒருபோதும் நழுவ விட மாட்டார். ஆந்திராவிற்கான அனைத்து திட்டங்களையும் கேட்டு பெறுவதில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.

    மேலும் பல தொழில் நிறுவனங்களையும் ஆந்திராவுக்கு கொண்டு செல்வதில் கில்லாடியாக செயல்படுவார்.

    அவருடைய கோரிக்கைகளை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

    சந்திரபாபு நாயுடு முகாமிட்டிருப்பது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    ×