search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ethanol"

    • பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும்.
    • ஊட்டச்சத்து அடிப்படையில் உரங்களை மானிய விலையில் வழங்க ஒப்புதல்.

    டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில், எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் எத்தனால் கொள்முதல் செய்யும் முறைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    டிசம்பர் 1, 2022 முதல், 31 அக்டோபர் 2023 வரையிலான பருவத்தில் எத்தனால் கலந்த பெட்ரோல் விநியோக திட்டத்தின் கீழ், பல்வேறு கரும்புகளின் மூலப் பொருட்களிலிருந்து எத்தனால் பெறப்படுகிறது. இந்த எத்தனாலுக்கான கொள்முதல் மற்றும் அதிகபட்ச விலைக்கு அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 


    அதன்படி, சி வகையிலான எத்தனால் லிட்டர் ரூ.46.66 லிருந்து ரூ.49.41 ஆகவும், பி வகையிலான எத்தனாலுக்கான விலை லிட்டர் ரூ.59.08 லிருந்து ரூ.60.73-ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கரும்புச் சாறு, சர்க்கரைப்பாகு மூலம் தயாரிக்கப்படும் எத்தனால் விலை லிட்டர் ரூ.63.45-லிருந்து ரூ.65.61ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இதேபோல் 2022-23 ரபி பருவத்தில் அக்டோபர் 1, 2022 முதல் மார்ச் 31, 2023 ஆம் ஆண்டு வரை ஊட்டச்சத்து அடிப்படையிலால் பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ அளவில் நைட்ரஜனுக்கு ரூ.98.02-ம், பாஸ்பரசுக்கு ரூ.66.93-ம், பொட்டாஷூக்கு ரூ.23.65-ம், சல்ஃபருக்கு ரூ.6.12-வும், மானியமாக வழங்கப்படும் என்று மத்திய உரத்துறை மந்திரி மன்சுக் மாண்டிவியா தெரிவித்துள்ளார்.

    • இந்த சாதனை இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை அதிகப்படுத்தி உள்ளது.
    • எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் இலக்கு எட்டப்பட்டது.

    இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துதல், எரிபொருள் இறக்குமதியை குறைத்தல், அன்னியச் செலாவணியைச் சேமிப்பது, சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்ப்பது மற்றும் உள்நாட்டு விவசாயத் துறைக்கு ஊக்கமளிக்கும் நோக்கத்துடன், மத்திய அரசு, எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை திட்டத்தை ஊக்குவித்து வருகிறது.

    2018 ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட உயிரி எரிபொருள் மீதான தேசியக் கொள்கை 2030 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதை குறிக்கும் இலக்காகக் கருதப்பட்டது எனினும் மத்திய அரசின் நடவடிக்கையால் 20 % எத்தனால் கலப்பு இலக்கு முன்கூட்டியே 2025-26 ஆண்டு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அதற்கு முன்னதாக நடப்பாண்டு நவம்பர் மாதத்திற்குள் பெட்ரோலுடன் 10% எத்தனால் கலப்பு என்ற இலக்கு  5 மாதங்களுக்கு முன்பே  எட்டப்பட்டுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைந்த முயற்சி காரணமாக, காலக்கெடுவை விட முன்னதாகவே இலக்கு எட்டப்பட்டுள்ளது,

    இந்த சாதனை இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை அதிகப்படுத்தியது மட்டுமின்றி, ரூ.41,500 கோடிக்கு மேல் அந்நிய செலாவணி சேமிப்பை உயர்த்தி உள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எத்தனால் விலையை மத்திய அரசு உயர்த்தியது. இது, கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வைத்து உள்ள பாக்கியை வழங்க உதவும். #Ethanol #PriceHike
    புதுடெல்லி:

    கரும்புச்சாற்றில் இருந்து சர்க்கரை உற்பத்தி செய்த பின்னர் துணைப்பொருளாக ‘மொலாசஸ்’ கிடைக்கிறது. இந்த ‘மொலாசஸ்’ எத்தனால் உற்பத்தி செய்ய பயன்படுகிறது.இந்த எத்தனால், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத எரிபொருளாக பயன்படுத்த ஏற்றது ஆகும்.இந்த எத்தனாலை பெட்ரோலுடன் கலந்து வாகனங்களில் எரிபொருளாக பயன்படுத்தலாம். இந்த பெட்ரோல் விலை குறைவாக இருக்கும். அதே நேரத்தில் கரும்பு விவசாயிகளும் நல்ல பலன் அடைய முடியும்.

    இந்த நிலையில், தற்போது சி-மொலாசஸ் மூலம் உற்பத்தி செய்யப்படுகிற எத்தனால் ஒரு லிட்டர் விலை ரூ.40.85 ஆகும். இந்த எத்தனால் விலையை ரூ.2.85 அளவுக்கு மத்திய அரசு உயர்த்தியது. இதன் மூலம் எத்தனால் விலை ரூ.43.70 ஆக உயர்ந்தது. மேலும் முதல் முறையாக பி-மொலாசஸ் மூலம் உற்பத்தி செய்யப்படுகிற எத்தனாலுக்கும் மத்திய அரசு விலை நிர்ணயம் செய்து உள்ளது. இந்த வகை எத்தனால், 1 லிட்டருக்கு ரூ.47.49 என்ற விலைக்கு விற்கப்படும். இதுவரை சி-மொலாசஸ் மூலம் உற்பத்தி செய்யப்படுகிற எத்தனாலுக்கு மட்டுமே மத்திய அரசு விலை நிர்ணயம் செய்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த முடிவுகள், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டன. ஏற்றுமதி கடன் உத்தரவாத நிறுவனத்தை வலுப்படுத்துவதற்கு ரூ.2 ஆயிரம் கோடி மூலதன வகைக்கு வழங்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு ஒப்புதல் அளித்தது.

    மத்திய மந்திரிசபை கூட்டத்துக்கு பின்னர் நிதி மந்திரி பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் நிலுவையில் வைத்து உள்ள பாக்கித்தொகையை வழங்குவதற்கும், எத்தனால் தாராளமாக கிடைக்கச் செய்வதற்கும், கரும்புச்சாற்றில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது.இன்று (நேற்று) எடுக்கப்பட்ட முடிவுகள், பெட்ரோலுடன் கலப்பதற்கு தேவையான அளவு எத்தனால் கிடைக்க உதவியாக இருக்கும். பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதிக்கு ஆகிற செலவை குறைக்கும்.

    மேலும், சரக்கு மற்றும் சேவை வரிகள், போக்குவரத்து கட்டணங்கள் வழங்கப்படும். இறக்குமதி செய்யக்கூடிய பெட்ரோலிய பொருட்களின் விலையை விட இந்த விலை மலிவாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட பிற முக்கிய முடிவுகள் வருமாறு:-

    * நகர்ப்புற திட்டமிடல், வளர்ச்சித்துறையில் இந்தியா, சிங்கப்பூர் இடையே ஒத்துழைக்க செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு அனுமதி.

    * சுகாதார துறையில் ஒத்துழைப்பதற்கு இந்தியாவும், பஹ்ரைனும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அனுமதி.

    * சிவில் விமான போக்குவரத்து துறையில் ஒத்துழைப்பதற்கு இந்தியாவும், ஜெர்மனியும் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு அனுமதி. மேற்கண்ட முடிவுகள், மத்திய மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப் பட்டன.  #Ethanol #PriceHike  #tamilnews 
    ×