என் மலர்
நீங்கள் தேடியது "Petrol"
- 56 க்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்துள்ளனர்
- ஜெனரேட்டரைப் பயன்படுத்தி பெட்ரோலை மாற்ற முயன்றபோது வெடி விபத்து ஏற்பட்டது.
ஆப்பிரிக்காவின் வடக்கு நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து எரிபொருளைக் கொட்டி வெடித்துச் சிதறியதில் 70 பேர் உயிரிழந்தனர். 56 க்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்துள்ளனர்
நைஜர் மாநிலத்தின் சுலேஜா பகுதிக்கு அருகே நேற்று [சனிக்கிழமை] அதிகாலையில் டேங்கரில் இருந்து மற்றொரு டிரக்கிற்கு ஜெனரேட்டரைப் பயன்படுத்தி பெட்ரோலை மாற்ற முயன்றபோது வெடி விபத்து ஏற்பட்டது.
இது பெட்ரோலைக் கையாளுபவர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் மரணத்திற்கும் வழிவகுத்தது என தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனத்தின் (NEMA) பிரதிநிதி ஹுசைனி இசா தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று NEMA அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- கடந்த 2023-ம் ஆண்டு 43 ஆயிரத்து 134 இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி உள்ளது.
- கடந்த ஆண்டு 17 சதவீதம் இ-ஸ்கூட்டரின் விற்பனை அதிகரித்துள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி போக்குவரத்துத்துறையின் கீழ் பாகூர், காரைக்கால், மாகி, உழவர்கரை புதுச்சேரி, வில்லியனூர், ஏனாம் மற்றும் புதுச்சேரி செக்போஸ்ட் ஆகிய 8 இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் புதிய வாகனம் வாங்கும் போது, அதை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் வாகன பதிவு சான்றிதழ் வழங்கப்படும்.
இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளில் புதுச்சேரி மாநிலத்தில் இருசக்கர வாகனங்களின் தேவையும், விற்பனையும் அதிகரித்துள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு 43 ஆயிரத்து 134 இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி உள்ளது. அதாவது ஒருநாளைக்கு 18 இருசக்கர வாகனங்கள் புதுச்சேரி மாநிலத்தில் விற்பனையாகி உள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு இருசக்கர வாகனங்களின் விற்பனை 50 ஆயிரத்து 438 ஆக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 2023-ம் ஆண்டை விட 14 சதவீதம் இருசக்கர வாகன விற்பனை அதிகரித்துள்ளது.
சமீப காலமாக நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிறது. இதுஒருபுறம் இருக்க, புதுச்சேரி மாநிலத்தில் போக்குவரத்து நெருக்கடி, சுற்றுசூழல் மாசு அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு 2 ஆயிரத்து 638 ஆக இருந்த இ-ஸ்கூட்டர் விற்பனை, கடந்த ஆண்டு (2024) 3 ஆயிரத்து 195 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு 17 சதவீதம் இ-ஸ்கூட்டரின் விற்பனை அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை உயர்வால் பெரும் பாலான இரு சக்கர வாகன ஓட்டிகள் இ-ஸ்கூட்டருக்கு மாறியுள்ளனர்.
- ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் இல்லை என்ற கொள்கையை தீவிரமாக கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
- இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.
லக்னோ:
உத்தரபிரதேசத்தில் சாலை விபத்துகள் அதிகரித்து உள்ளன. விபத்துகளை குறைக்க சாலை விதிகளை கடுமையாக அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இதற்காக ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் போக்குவரத்து கமிஷனர் பிரஜேஷ் நராயண் சிங் கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சாலை பாதுகாப்பு தொடர்பாக இந்த மாத தொடக்கத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில், விபத்துகள் அதிகரித்து வருவதும், ஆண்டுக்கு 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதில் பெரும்பாலானவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் என்பதும், ஹெல்மெட் அணியாததால் இந்த உயிரிழப்புகள் நடைபெறுவதும் கண்டறியப்பட்டது.
எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.
அதற்காக ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் இல்லை என்ற கொள்கையை தீவிரமாக கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த கொள்கை ஏற்கனவே கவுதம் புத்த நகர் மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அவ்வப்போது கடைப்பிடிக்கப்பட்டு, பின்னர் கைவிடப்பட்டது. எனவே இந்த கொள்கையை அனைத்து மாவட்டங்களும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும். இதை மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும்.
இந்த விவகாரத்தில் மோட்டார் வாகன சட்டம் 1988-ன் கீழ் பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும் போலீஸ் மற்றும் ஆர்.டி.ஓ.க்கள் இணைந்து இந்த கொள்கை வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
இது தொடர்பாக சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் உள்ளிட்ட தளங்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
- ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த நூதன போட்டி நடத்தப்பட்டது.
- இந்த போட்டியில் வாகன ஓட்டிகள் ஆர்வமுடன் ஹெல்மெட் அணிந்து வந்து கலந்து கொண்டனர்.
சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில், தொலைக்காட்சி பொன் விழாவுடன் இந்தி மொழி மாதம் கொண்டாட்டத்தின் நிறைவு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். விழா தொடக்கத்தில் தேசிய கீதத்தை தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
அப்போது, "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரி விடுபட்டு பாடப்பட்டது.
'திராவிடம்' என்ற சொல்லை வேண்டும் என்றே கவர்னர் விழாவில் தவிர்த்து இருக்கிறார்கள் என்ற சர்ச்சை இதனால் எழுந்தது.
இந்நிலையில் தஞ்சாவூரில் தலைக்கவசம் அணிந்து வரும் வாகன ஓட்டிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பிழையின்றி முழுமையாக பாடினால், 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று ஜோதி தனியார் தொண்டு நிறுவனம் ஒரு நூதன போட்டியை அறிவித்தது.
ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த நூதன போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் மாணவ, மாணவிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள் ஆர்வமுடன் ஹெல்மெட் அணிந்து வந்து கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் 25 நபர்கள் சரியாக தமிழ்த்தாய் வாழ்த்தை சரியாக பாடி தலா 2 லிட்டர் பெட்ரோலை இலவசமாக பெற்று சென்றனர்.
- கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
- இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்பட வில்லை.
புதுடெல்லி:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
கச்சா எண்ணெய்க்காக ரஷ்யா, ஈராக், அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் ஆகியவற்றை இந்தியா நம்பி உள்ளது. 40 சதவீதம் அளவுக்கு ரஷ்யாவில் இருந்துதான் கச்சா எண்ணெய் வாங்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் மட்டும் 46 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் வாங்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலை மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விலையைவிட மிக குறைவு.
ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை தற்காலிகமாக நிறுத்திவைத்து இருக்கின்றன.
இப்போது கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும், இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்பட வில்லை.
ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை அதிகபட்சமாக 2008-ம் ஆண்டு 147 அமெரிக்க டாலராக இருந்த நேரத்தில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.55 ஆக இருந்தது. டீசல் விலை ரூ.35 ஆக இருந்தது.
இப்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 68.56 டாலர் என்ற அளவில்தான் இருக்கிறது. ஆனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.34 ஆகவும் உள்ளது.
கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி முதல் பெட்ரோல்-டீசல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்பட வில்லை. மார்ச் 28-ந்தேதி கச்சா எண்ணெய் விலை 83.69 டாலராக இருந்தது.
இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சக செயலாளர் பங்கஜ் ஜெயின் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து பங்கஜ் ஜெயின் கூறியதாவது:-
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்திருப்பதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை சரிவு நீடித்தால் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கர்நாடகத்தில் பெட்ரோல், டீசலுக்கான விலை உயர்த்தப்பட்டுள்ளது.
- பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை உயர்த்தி அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை வரியை முறையே 29.84 சதவீதம் மற்றும் 18.44 சதவீதம் என அரசாங்கம் திருத்தியுள்ளது. இந்த வரி உயர்வால் பெட்ரோல் விலை ரூ.3, டீசல் விலை ரூ.3.50 அதிகரித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தப்பட்டது குறித்து முதல் மந்திரி சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சித்தராமையா கூறியதாவது:
குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற இடங்களைவிட தற்போது கர்நாடகாவின் திருத்தப்பட்ட எரிவாயு கட்டணங்கள் குறைந்த விலையில் தான் உள்ளது.
வாட் வரி உயர்த்தப்பட்டாலும் மற்ற மாநிலங்களை விட கர்நாடகாவில் டீசல் விலை குறைவாகவே உள்ளது.
கர்நாடகாவின் வளங்களை மற்ற மாநிலங்களுக்கு பா.ஜ.க. அரசு கொடுத்துள்ளது.
பெட்ரோல் மீதான கலால் வரியை ரூ.9.21ல் இருந்து ரூ.32.98 ஆகவும், டீசல் மீதான கலால் வரியை ரூ.3.45ல் இருந்து ரூ.31.84 ஆகவும் மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் உயர்த்தி உள்ளது.
இந்த வரி உயர்வு மக்களுக்கு சுமையாக உள்ளது. மக்களின் நலன் கருதி இந்த வரிகளை மத்திய அரசு குறைக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
- கர்நாடகாவில் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை அம்மாநில அரசு உயர்த்தியுள்ளது.
- இந்த வரி உயர்வால் பெட்ரோல் விலை ரூ.3, டீசல் விலை ரூ.3.50 அதிகரித்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை உயர்த்தி அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை வரியை முறையே 29.84 சதவீதம் மற்றும் 18.44 சதவீதம் என அரசாங்கம் திருத்தியுள்ளது.
இந்த வரி உயர்வால் பெட்ரோல் விலை ரூ.3, டீசல் விலை ரூ.3.50 அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.க., மாநில அரசு கட்டண உயர்வை திரும்பப் பெறவேண்டும் என தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பா.ஜ.க. தலைவர் விஜயேந்திரா கூறுகையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை முதல் மந்திரி மற்றும் அரசு திரும்பப் பெறாவிட்டால் திங்கட்கிழமை மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட மையங்களிலும், பிற இடங்களிலும் போராட்டம் நடத்துவோம். எரிபொருள் விலை உயர்வு முடிவை திரும்பப் பெறவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
- பெட்ரோல் இன்றைய கால கட்டத்தில் அத்தியாவசிய தேவையாக உள்ளது.
- மோட்டார் வாகனங்களின் ஆதிக்கம் காரணமாக சைக்கிள் பயன்பாடு வெகுவாக குறைந்துவிட்டது.
மதுரை:
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்கில் நேற்று முன்தினம் இரவு சிலர் தங்களது இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப வந்தனர்.
அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் பெட்ரோல் நிரப்பும் போது அதில் முறைகேடு நடப்பதாகவும், ஒரு லிட்டர் பெட்ரோலில் 100 மில்லி அளவிற்கு பெட்ரோல் போடாமலே பெட்ரோல் போடப்பட்டதாக கணக்கு காட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனையடுத்து அந்த இளைஞர்கள் சிலர் மீண்டும் பெட்ரோல் பங்கிற்கு சென்று அங்கு குற்றச்சாட்டு வைத்தனர். இந்த நிலையில் அங்குள்ள அளவீடு மானி மூலமாக பெட்ரோலை நிரப்ப கூறி, அதன்படி நிரப்பிய போது ஒவ்வொரு லிட்டரிலும் 100 மில்லி அளவு குறைவாக எடுப்பது தெரியவந்தது.
இதனை அவர்கள் வீடியோவாக பதிவு செய்தபோதே பெட்ரோல் பங்க் ஊழியர் உடனடியாக எந்திரத்தில் மாற்றம் செய்தார். இதனையும் வீடியோ எடுத்த நபர்கள் அவரிடம் வாக்குவாதம் செய்து பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இந்த பெட்ரோல் பங்க் முறைகேடு குறித்து மதுரை தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் இளைஞர்கள் சிலர் புகார் அளித்த நிலையில் அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பான வீடியோ நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திரவ தங்கம் என அழைக்கப்படும் பெட்ரோல் இன்றைய கால கட்டத்தில் அத்தியாவசிய தேவையாக உள்ளது. வாகனங்களின் இயக்கத்துக்கு முக்கிய காரணியாக உள்ள பெட்ரோலை சாமானியர்கள் முதல் முதலாளிகள் வரை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர். மோட்டார் வாகனங்களின் ஆதிக்கம் காரணமாக சைக்கிள் பயன்பாடு வெகுவாக குறைந்துவிட்டது.
சாதாரண வியாபாரிகள், மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள் என பலதரப் பினரும் வெளியே செல்ல மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக அவரவர் வசதிக்கேற்ப ரூ.50 முதல் தங்கள் வாகனங்களில் பெட்ரோல் போட்டு வருகின்றனர். ஆனால் அதிலும் தற்போது முறைகேடு புகார் எழுந்துள்ளது. சாமானியர்கள் உழைத்து அதில் ஒரு குறிப்பிட்ட தொகை பெட்ரோலுக்கே செலவழித்து வரும் நிலையில் அதன் அளவையும் குறைத்து விநியோகிக்கப்படுவது பொதுமக்களிடையே மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது.
நுகர்வோர்களுக்கு சரியான அளவில் சரியான விலையில் பொருட்கள், சேவைகள் கிடைக்க வேண்டும் என பல்வேறு சட்டங்கள் உள்ளன. ஆனால் பெட்ரோல் அளவில் குறைத்து நடக்கும் இந்த நூதன முறைகேட்டை தடுக்க வேண்டும். பெட்ரோல் பங்கில் நுகர்வோர்களுக்கு சரியான பெட்ரோல் அளவை வழங்குவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- பெட்ரோல், டீசலைப் பயன்படுத்தும் விவசாயிகள் உள்ளிட்ட சாமானிய மக்கள் பணத்தைச் சேமிக்கவும் உதவும்.
- பெட்ரோல், டீசல் விலை குறைப்பானது நாட்டு மக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட நல்ல முடிவாகும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மத்திய அரசு, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 2 ரூபாயைக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது. பெட்ரோல், டீசல் விலை குறைப்பானது லிட்டருக்கு 2 ரூபாய் என்றாலும் அது சாதாரண மக்கள் மீதுள்ள பணச்சுமையைக் குறைக்க உதவும். அது மட்டுமல்ல வாகனங்களுக்கு பெட்ரோல், டீசலைப் பயன்படுத்தும் விவசாயிகள் உள்ளிட்ட சாமானிய மக்கள் பணத்தைச் சேமிக்கவும் உதவும். குறிப்பாக நாடு முழுவதும் எவ்வித பாகுபாடின்றி பெட்ரோல், டீசல் விலை குறைப்பானது நாட்டு மக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட நல்ல முடிவாகும். மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்ட அரசாக செயல்படுவதை நிரூபிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்திருப்பதால் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை பாராட்டி, வாழ்த்தி, நன்றி கூறுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 663 நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது.
- பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
இதற்கிடையே, தொடர்ந்து 663-வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்கப்படுகிறது.
இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது என பெட்ரோலியத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இன்று நள்ளிரவு 12 மணி முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வருகிறது.
- பேட்டரிகளில் இருந்து அதிக நச்சுக்கள் காற்றில் கலக்கிறது
- பெட்ரோல் காரை விட 400 மடங்கு அதிகம்
பெட்ரோல், டீசல், மின்சார கார்களின் காற்று மாசு குறித்து 'எமிஷன் அனலைடிக்ஸ்' (Emission Analytics)என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது. ஆய்வு முடிவில் மின்சார கார்களில் அதிக காற்று மாசு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல், கார்களை விட மின்சார வாகனங்கள் அதிக காற்று மாசு துகள்களை வெளியிடுகிறது. அதன் டயர்களில் பயன்படுத்தப்படும் ரப்பர் மற்றும் பேட்டரிகளில் இருந்து அதிக நச்சுக்கள் காற்றில் கலக்கிறது. அரை டன் பேட்டரி மின்சார வாகனத்தில் இருந்து வெளியாகும் மாசு, பெட்ரோல் காரை விட 400 மடங்கு அதிகம் என்கிறது ஆய்வு.
மின்சார வாகனங்கள் காற்றுமாசை குறைக்கும் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால், பெட்ரோல், டீசல் வாகனங்களிலிருந்து வெளியேறும் காற்று மாசை விட, எலெக்ட்ரிக் வாகனங்களில் இருந்து தான் அதிக காற்று மாசு வெளியேறுகிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலக வெப்பமயமாதல் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது.
எனவே, கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும், காற்று மாசை கட்டுப்படுத்தவும் உலக நாடுகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்கள் தற்போது உபயோகப்படுத்தப்படுகின்றன.
பெட்ரோல், டீசல் வாகனங்கள் அதிக மாசை வெளியேற்றுவதாக கூறி மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், தற்போது வெளியான இந்த ஆய்வு முடிவால் வாகன ஓட்டிகள், நுகர்வோர்கள் கடும் குழப்பம் அடைந்து உள்ளனர்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரி காஞ்சிபுரம் வந்தார்.
- அதிகாரிகளுடன் அதிகார பத்திரம் தாமதம் குறித்து கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
திருத்தணி:
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ராமேஸ்வரி. இவர் மலேசியாவில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் விவசாய நிலம் திருத்தணி அடுத்த பொன்பாடி பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை நிர்வகிக்க உரிமை கோரும் அதிகாரத்தை திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவருக்கு வழங்க ராமேஸ்வரி முடிவு செய்தார்.
இதற்காக திருத்தணி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து இருந்தார். இதற்காக அனைத்து சான்றுகளும் பதிவேற்றப்பட்ட நிலையில், காயத்ரிக்கு வழங்கும் அதிகாரம் கோரும் பத்திரத்தை அதிகாரிகள் வழங்காமல் தொடர்ந்து தாமதப்படுத்தி வந்ததாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரி காஞ்சிபுரம் வந்தார். அதிகார பத்திரம் குறித்து கேட்டபோது பத்திரப்பதிவு அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் சரிவர பதில் கூறவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ராமேஸ்வரி திருத்தணி பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள் பெட்ரோல் பாட்டிலுடன் வந்தார். அவர் அங்கிருந்த அதிகாரிகளுடன் அதிகார பத்திரம் தாமதம் குறித்து கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, சர்வர் பழுது காரணமாக அவருக்கு உரிய அதிகார பத்திரம் வழங்க முடியவில்லை என்றனர்.