search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "diesel prices"

    பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க முடியாது என்று மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது. #PetrolDieselPriceHike #FuelPriceHike #FederalGovernment
    புதுடெல்லி:

    மத்திய அரசு, பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.19.48 வீதம் உற்பத்தி வரியாக வசூலிக்கிறது. டீசல் மீது லிட்டருக்கு ரூ.15.33 வீதம் உற்பத்தி வரி வசூலிக்கிறது. இதுதவிர, மாநில அரசுகள் மதிப்பு கூட்டு வரி (வாட்) வசூலித்து வருகின்றன.

    பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும்வகையில், உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதை மத்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்து விட்டது. இதுகுறித்து மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-



    பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க முடியாது. ஒரு ரூபாய் குறைத்தால் கூட ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.

    உற்பத்தி வரியை குறைப்பதால், நிதி பற்றாக்குறை அதிகரிக்கும். நடப்பு கணக்கு பற்றாக்குறையிலும் தாக்கம் ஏற்படும். இதனால், வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி கிடைக்காமல் போய்விடும். இவையெல்லாம், வரி குறைப்பால் ஏற்படும் பாதகங்கள். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவதும் சரியான தீர்வு அல்ல.

    நிதி நிலைமை வலிமை அடைந்தால் மட்டுமே வரி குறைப்பு செய்ய முடியும். அதற்கு வருமான வரி, ஜி.எஸ்.டி. செலுத்துவோர் எண்ணிக்கை உயர வேண்டும். அதன்மூலம், வரி வருவாய் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான், உற்பத்தி வரியை குறைக்க முடியும். அதுவரை, பெட்ரோலிய பொருட்கள் மூலம் கிடைக்கும் வருவாயைத்தான் சார்ந்து இருக்க வேண்டி உள்ளது.

    மத்திய அரசு ஏற்கனவே ரூ.98 ஆயிரம் கோடிக்கு வருமான வரி சலுகையும், ரூ.80 ஆயிரம் கோடிக்கு ஜி.எஸ்.டி. குறைப்பும் அளித்துள்ளது அதனால்தான், பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்தபோதிலும், பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இதற்கு மேல், நிவாரணம் வழங்க முடியாது. மக்கள், தாங்கள் பயன்படுத்தும் பெட்ரோலுக்கு, உரிய விலையை கொடுத்துத்தான் ஆக வேண்டும்.

    பெட்ரோலிய பொருட்கள் மீது மாநில அரசுகள் ‘வாட்’ வரி விதிக்கின்றன. அத்துடன், மத்திய அரசின் வரி வருவாயில் 42 சதவீதம் பங்கைப் பெறுகின்றன. இருந்தாலும், மாநில அரசுகளும் ‘வாட்’ வரியை குறைக்கும் நிலைமையில் இல்லை.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இனிவரும் நாட்களில் குறையும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே, பெட்ரோல், டீசல் விலை நேற்றும் உயர்ந்தது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் உயர்ந்தது. அதனால் ரூ.83.91-க்கு பெட்ரோல் விற்கப்பட்டது. டீசல் விலை 23 காசுகள் உயர்ந்து, அதன் விலை ரூ.76.98 ஆனது. #PetrolDieselPriceHike #FuelPriceHike #FederalGovernment 
    பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. #Petrol #Diesel
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு தினந்தோறும் புதிய உச்சத்தை தொடும் வகையில் இதன் விலைகள் அமைகின்றன.

    அந்த வகையில் நேற்று முன்தினம் சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.82.24-க்கு விற்பனை ஆனது. நேற்று இது மேலும் 17 காசு உயர்ந்து ரூ.82.41 என்ற புதிய உச்சத்தை எட்டியது.

    இதே போன்று டீசலும் சென்னையில் நேற்று முன்தினம் லிட்டருக்கு ரூ.75.19-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று இது மேலும் 20 காசு உயர்ந்து ரூ.75.39 ஆக புதிய உச்சம் தொட்டது.



    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அவதியுற வைத்து உள்ளது.

    அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. அதுமட்டுமின்றி ஓட்டல் சாப்பாடு, உணவு பண்டங்களின் விலையும் உயர்கிற நிலை ஏற்பட்டு உள்ளது. இப்போதே ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் ஆங்காங்கே உயர்த்தப்பட்டு உள்ளது. கால்டாக்சி கட்டணமும் உயர்கிறது. இது சாமானிய மக்களுக்கு மிகுந்த வேதனையை அளித்து வருகிறது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது குறித்து முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்து உள்ளார்.

    இதுபற்றி அவர் கூறுகையில் “பெட்ரோல், டீசல் விலை இடைவிடாது உயர்ந்து வருகிறது. இது தவிர்க்க முடியாதது அல்ல. பெட்ரோல், டீசல் மீதான அதிகப்படியான வரி விதிப்பு, விலை நிர்ணயித்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது. வரிகளைக் குறைத்தால், விலைகள் குறையும்” என குறிப்பிட்டார்.

    ஆனால் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசு கை விரித்து விட்டது.

    இதுபற்றி மத்திய அரசின் நிதி அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “நடப்பு கணக்கில் பற்றாக்குறை ஏற்படும் என்பதை நாங்கள் ஏற்கனவே அறிந்து உள்ளோம். நடப்பு கணக்கில் பற்றாக்குறை ஏற்படுகிறபோது, நாங்கள் நிதிப்பற்றாக்குறையில் கை வைக்க முடியாது. அதுவும் உற்பத்தி வரியை குறைத்து, நிதிப்பற்றாக்குறையில் பிரச்சினை ஏற்படுத்த முடியாது” என கூறினார்.

    (அன்னியச்செலாவணி வரவை விட, அதன் செலவு அதிகரிப்பதால் ஏற்படுவது நடப்பு கணக்கு பற்றாக்குறை; வருமானத்தை விட செலவு அதிகரிப்பதால் ஏற்படுவது நிதிப்பற்றாக்குறை,)

    நிதி அமைச்சக அதிகாரி மேலும் கூறும்போது, “அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவை சந்தித்து உள்ளதால் இறக்குமதி செலவு அதிகரிக்கிறது. ஏற்கனவே நிர்ணயித்து உள்ள இலக்கை விட நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைத்து, நிதிப்பற்றாக்குறையில் கை வைக்க இயலாது” என்று குறிப்பிட்டார்.

    ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.19.48, ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.15.33 உற்பத்தி வரி விதிக்கப்படுகிறது.

    ஒவ்வொரு மாநில அரசும் பெட்ரோல், டீசல் மீது விதிக்கிற மதிப்பு கூட்டு வரி மாறுபடுகிறது. தமிழக அரசு பெட்ரோல் மீது 34 சதவீதமும், டீசல் மீது 25 சதவீதமும் மதிப்பு கூட்டு வரி (‘வாட்’ வரி) விதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  #Petrol #Diesel 
    வேலை நிறுத்த போராட்டம் எதிரொலி காரணமாக கரூரில் 2,600 லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டன. இதனால் ஜவுளி, கொசுவலை உள்ளிட்ட உற்பத்தி பொருட்கள் தேக்கம் அடைந்ததால் வர்த்தகர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    கரூர்:

    டீசல் விலை உயர்வு, சுங்கச் சாவடிகளில் அதிக கட்டணம் வசூல் உள்ளிட்டவற்றால் லாரித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பெட்ரோல்- டீசல் விலையை குறைத்து ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பிரிமியத்தொகை உயர்த்தப்பட்டுள்ளதை குறைக்க வேண்டும். சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை குறைத்து ஆண்டுக்கு ஒரு முறை செலுத்துவது போல் வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுடெல்லி ஆல் இந்தியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ், தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் உள்ளிட்ட சங்கங்கள் ஜூலை 20-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தன. அந்த வகையில் நேற்று நாடு முழுவதும் லாரிகள் ஓடாததால் வர்த்தகம் பாதிப்படைந்தது.

    இந்த போராட்டத்திற்கு கரூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்டவையும் ஆதரவு தெரிவித்து இருந்ததால் கரூரில் நேற்று 2,000 லாரிகள், 600 மினி லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவை இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் தொழில் நகரம் என பெயர் பெற்ற கரூரில் ஜவுளிகள், கைத்தறி துணிகள், கொசுவலை, பஸ்பாடி, சிமெண்டு, சர்க்கரை ஆலையிலிருந்து அனுப்பப்படும் சர்க்கரை மூட்டைகள் உள்ளிட்ட உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் பெருமளவில் தேக்கம் அடைந்தன. இதனால் கோடிக்கணக்கிலான வர்த்தகம் முடங்கியதால் வர்த்தகர்கள் உள்ளிட்டோர் பாதிப்படைந்தனர். மேலும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் உள்ளிட்டவற்றையும் வெளியிடங்களிலிருந்து லாரிகளில் கொண்டுவர முடியாததால் சில நிறுவனங்களில் பணி செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டது.

    எனினும் சிலர் கரூர் ரெயில் நிலைய பார்சல் சேவை, பஸ் உள்ளிட்டவை மூலம் உற்பத்தி பொருட்களை அனுப்பி வைத்ததையும் காண முடிந்தது. லாலாபேட்டை, குளித்தலை உள்ளிட்ட இடங்களில் வாழைத்தார் உள்ளிட்டவற்றை வெளியிடங்களுக்கு விற்பனைக்காக அனுப்ப முடியாமல் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளானார்கள். இது போல் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தேக்கம் அடையும் சூழல் ஏற்படுவதால் அதன் விலைவாசி உயர வாய்ப்புள்ளது என தெரிகிறது. கரூரில் பொதுமக்களுக்கு காய்கறி, பால், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்எச்சரிக்கை நடவடிக்கை செய்யப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் போலீசார் மாவட்டம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு லாரி வேலை நிறுத்தத்தை பயன்படுத்தி பொருளாதார ரீதியிலான சரிவை ஏற்படுத்தும் நோக்கில் பதுக்கல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் யாரும் ஈடுபடுகின்றனரா? என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக கரூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் வக்கீல் ராஜூவிடம் கேட்டபோது அவர் தெரிவித்ததாவது:-

    மத்திய- மாநில அரசுகள் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை ஏற்று கொண்டு நிறைவேற்றி தரும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்பதில் மாற்றம் இல்லை. கரூரில் வர்த்தகர்கள், வணிகர்கள் உள்ளிட்டோருக்கு ஏற்படும் சிரமங்களுக்காக வருந்துகிறோம். எனினும் வேலை நிறுத்த போராட்டத்தால் லாரி டிரைவர்கள், கிளனர்கள், உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கும் பாதிப்பு இருக்க தான் செய்கிறது என்று கூறினார்.

    லாரி ஓடாததன் காரணத்தால் ஏற்பட்டள்ள ஜவுளி தேக்கம் குறித்து கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் ஸ்டீபன்பாபு கூறுகையில், கரூரில் தயாராகும் போர்வை, திரைசீலை உள்ளிட்ட ஜவுளி பொருட்கள் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. அந்த வகையில் ஜவுளி உற்பத்தி பொருட்களை லாரி மூலம் சென்னை, தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு சென்று தான் ஏற்றுமதி செய்கிறோம். அந்த வகையில் கரூரில் லாரிகள் இயக்கப்படாததால் ரூ.10 கோடி முதல் ரூ.15 கோடி வரையிலான ஜவுளி தேக்கம் அடைந்திருக்கிறது. இதனால் குறித்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு அதனை டெலிவரி செய்ய முடியாததால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் ஜவுளி தயாரிப்புக்கு தேவையான உதிரி பொருட்களை வெளியிடங்களிலிருந்து லாரிகளில் கொண்டுவர முடியாததால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே லாரி வேலை நிறுத்தத்தில் மத்திய-மாநில அரசுகள் விரைவில் தீர்வு காண வேண்டும் என்று கூறினார். 
    டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் நேற்று காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். ஆனாலும் நேற்று ஏராளமான லாரிகள் வழக்கம்போல ஓடின.
    சென்னை:

    தினசரி டீசல் விலை உயர்வு, 3-ம் நபர் காப்பீட்டு தொகை கட்டணம் 30 சதவீதம் அதிகரிப்பு, சுங்க கட்டணம் ஆண்டுதோறும் உயர்வு போன்றவற்றை வாபஸ் பெற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என பிரதமர் மற்றும் போக்குவரத்து-பெட்ரோலியத்துறை மத்திய மந்திரிகளுக்கு அகில இந்திய தரைவழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் கடந்த ஏப்ரல் 23-ந்தேதி ‘நோட்டீசு’ வழங்கியது.

    அதன்படி லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. இதையடுத்து நகரில் ஏராளமான லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. சென்னையில் கோயம்பேடு, மாதவரம், வானகரம், நெற்குன்றம் உள்ளிட்ட பல இடங்களில் லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. லாரிகள் இயங்காத காரணத்தால் டிரைவர்கள் மற்றும் பணியாளர்கள் லாரிகளிலேயே உணவு சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.

    லாரி உரிமையாளர்கள் போராட்டத்தால் தினசரி மத்திய அரசுக்கு ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அகில இந்திய தரைவழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.ராஜேந்தர் சிங், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.சுகுமார் ஆகியோர் கூறியதாவது:-

    லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகள் பங்கேற்க உள்ளன. தமிழகத்தில் முதற்கட்டமாக 2 லட்சம் லாரிகள் போராட்டத்தில் குதித்துள்ளன. இந்த எண்ணிக்கை ஓரிரு நாட்களில் 5 லட்சத்தை தாண்டிவிடும். இதுதவிர வெளிமாநில லாரிகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. இதனால் மத்திய அரசுக்கு ஒரு நாளைக்கு ரூ.5 ஆயிரம் கோடியும், தமிழகத்தில் ரூ.50 கோடியும் இழப்பு ஏற்படும். லாரி உரிமையாளர்களுக்கு ரூ.10 கோடி இழப்பு ஏற்படும்.

    இது முறையாக, முன்கூட்டியே நோட்டீசு வழங்கி நடத்தப்படும் போராட்டம் ஆகும். இந்த போராட்டத்தை திசை திருப்பும் முயற்சியாக வேறு போராட்ட தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது ஒட்டுமொத்த லாரி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் பிரச்சினை. எனவே இதில் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவேண்டும். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி செல்லும் சரக்கு லாரிகளும் எங்கள் போராட்டத்தில் கைகோர்க்க உள்ளன. எனவே மக்கள் பாதிப்பை கருத்தில்கொண்டு நியாயமான எங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கவேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற போராட்டம் நேற்று அறிவிக்கப்பட்டாலும், நேற்று ஏராளமான லாரிகள் வழக்கம்போல ஓடின. சென்னையில் நேற்று லாரிகள் செல்வதை பார்க்க முடிந்தது. இதுகுறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறியதாவது:-

    தமிழகத்தில் பெரும்பாலான லாரிகள் வழக்கம்போலவே இயக்கப்பட்டு வருகின்றன. போராட்டத்தை முதலில் அறிவித்ததே அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட்டு காங்கிரஸ் அமைப்பு தான். அதன் அங்கீகாரம் பெற்ற தலைவர்கள் தான் குமாரசாமி, சண்முகப்பா, கோபால் நாயுடு போன்றவர்கள். இந்த கூட்டமைப்பில் 129 சங்கங்களும், 6 மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் அங்கம் வகிக்கிறது. எனவே திட்டமிட்டப்படி ஜூலை 20-ந்தேதி போராட்டத்தில் களமிறங்குவோம். கோரிக்கைகளை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் அரசுக்கு உரிய கால அவகாசமும் அளித்திருக்கிறோம். போராட்டத்தை திசை திருப்புவது எங்கள் நோக்கமல்ல, சிக்கலான சூழ்நிலையை அரசுக்கு அளித்திட கூடாது என்பதுதான்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்குள் கொண்டு வந்தால் விலை குறையும் என்றும் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார். #Chidambaram #PetrolPriceHike
    புதுடெல்லி:

    முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும் பெட்ரோல், டீசல் விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எனவே, ஜிஎஸ்டி வரம்புக்குள் எரிபொருளைக் கொண்டு வந்தால் பெட்ரோல் டீசல் விலை குறையும்.  எரிபொருள் விலையை லிட்டருக்கு 5 முதல் 7 ரூபாய் வரை குறைக்க முடியும்.



    இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நடந்தாலும் ரொக்கப் பரிமாற்றத்தை தடுக்க முடியாது. இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப விவசாயிகளின் வருமானத்தில் ஏற்றம் இல்லை.
     
    இவ்வாறு அவர் கூறினார். #Chidambaram #PetrolPriceHike
    டீசல் விலை உயர்வால் போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை அரசு ஈடுசெய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வரலாறு காணாத டீசல் விலை உயர்வு காரணமாக அரசுப் போக்குவரத்துக்கழகங்கள் மிகக் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றன. அரசுப் போக்குவரத்துக்கழகங்களின் இழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதை ஈடுகட்ட அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

    கடந்த ஜனவரி மாதம் பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டபோது, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.65.83 ஆக இருந்தது. இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.72.97 ஆகும். கடந்த 4½ மாதங்களில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.7.14 உயர்ந்துள்ளது. இதனால், அரசுப் போக்குவரத்துக்கழக பஸ்களை இயக்குவதற்கான செலவு கிலோ மீட்டருக்கு 34 ரூபாயில் இருந்து 45 ரூபாயாக அதிகரித்து உள்ளது. இதில் டீசலுக்கான செலவு மட்டும் கிலோ மீட்டருக்கு 9 ரூபாயில் இருந்து 13 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

    டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் அரசுப் போக்குவரத்துக்கழகங்களின் இயக்கச் செலவு தினமும் ரூ.6 கோடி அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இதனால், அரசு போக்குவரத்துக்கழகங்களின் இழப்பு மேலும் அதிகரித்திருக்கிறது. இதை ஈடுசெய்வதாக கூறி ஊரகப் பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் உள்பட ஆயிரக்கணக்கான பஸ்களின் இயக்கம் நிறுத்தப்பட்டிருக்கிறது.

    இதன் மூலம் அரசு பஸ்கள் உள்பட ஆயிரக்கணக்கான பஸ்களின் இயக்கம் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அரசு பஸ்களின் இயக்க தூரம் தினமும் 15 லட்சம் கிலோ மீட்டர் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பஸ் வசதியில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    அரசுப் போக்குவரத்துக்கழகங்கள் எனப்படுபவை சேவை நோக்கத்துடன் நடத்தப்படுபவை ஆகும். தொலைதூரப் பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் மூலம் வருவாய் கிடைக்காது என்பதாலும், பல்வேறு பிரிவினருக்கு இலவச பஸ் பயண அட்டைகள் வழங்கப்பட்டிருப்பதாலும் போக்குவரத்துக்கழகங்களுக்கு இழப்பு ஏற்படும். இந்த இழப்பையும், டீசல் கட்டண உயர்வால் ஏற்படும் இழப்புகளையும் தமிழக அரசு தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அரசுப் போக்குவரத்துக்கழகங்கள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

    இதைத் தடுப்பதற்காக டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் போக்குவரத்துக்கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய அரசு முன்வர வேண்டும். போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கான நிலுவைத்தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ‘ஜெட்’ வேகத்தில் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு இந்த வாரம் நடவடிக்கை எடுக்கும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #Petrol #Diesel
    புதுடெல்லி:

    வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை ‘ஜெட்’ வேகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவரும் வேளையில், அதில் இருந்து சாமானிய மக்களை காக்க மத்திய, மாநில அரசுகள் எந்த வரி குறைப்பையும் இதுவரை செய்யவில்லை.

    சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.79.79 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.71.87 ஆகவும் இருந்தது.

    நாட்டிலே மிகக்குறைவான விலை என்றால் அது டெல்லி விலைதான். அங்கு நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.76.87, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.68.08 ஆகும்.

    மாநிலத்துக்கு மாநிலம் பெட்ரோல், டீசல் விலை மாறுபடும். இதற்கு மாநில அரசுகள் விதிக்கிற உள்ளூர் வரி அல்லது மதிப்பு கூட்டு வரிதான் காரணம் ஆகும். மத்திய அரசைப் பொறுத்தவரையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.19.48-ம், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.15.33-ம் உற்பத்தி வரியாக விதிக்கிறது.

    தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் என்ன செய்யப்போகின்றன என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்புகின்றனர்.

    இது பற்றி மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது அரசுக்கு நெருக்கடியான சூழல் ஆகும். இதற்கு கூட்டு நடவடிக்கை தேவைப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு பற்றி பெட்ரோலியம் அமைச்சகத்துடன் நிதி அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.

    உற்பத்தி வரி குறைப்புக்கான சாத்தியக்கூறுகளை நான் மறுப்பதற்கு இல்லை. இருந்தபோதும் அதை மட்டுமே சார்ந்து இருக்க முடியாது. உற்பத்தி குறையை குறைத்தால் ஏற்படுகிற நிதி பாதிப்புகளை மனதில் கொள்ள வேண்டியது இருக்கிறது. பெட்ரோல், டீசல் சில்லரை விலையில் 20 முதல் 35 சதவீதம் மத்திய, மாநில அரசுகளின் வரியாக உள்ளது. எனவே இதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை எழுந்து உள்ளது.

    பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு இந்த வாரம் சில நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.

    டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு ( ஒரு டாலரின் மதிப்பு ரூ.67.97 ஆகும்) வீழ்ச்சியை சந்தித்ததும் விலை உயர்வுக்கு காரணம் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×