search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Highway"

    • கப்பலூர் நான்கு வழிச்சாலையில் வழிப்பறியில் ஈடுபடும் கும்பலை தடுக்க ரோந்து போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
    • டிரைவர் இல்லாத லாரிகளில் பேட்டரி உள்ளிட்ட பொருட்களை திருடி செல்வது அதிகரித்துள்ளது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் சிப்காட் தொழிற்சாலை உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட ஆலைகள் செயல்பட்டு வருகின்றனர். வெளி மாநில மற்றும் வெளியூர்களில் இருந்து நாள்தோறும் லாரிகள் மூலம் சரக்குகள் வந்த வண்ணம் இருக்கும்.

    சரக்குகளை கொண்டு வரும் லாரி டிரைவர்கள் வாகனத்தை கப்பலூர் நான்கு வழிச்சாலை ஓரத்தில் நிறுத்தி ஓய்வு எடுப்பது வழக்கம். இரவு நேரங்களில் இந்த பகுதிகளில் ஆள் நடமாட்டம் குறைந்து இருக்கும்.

    இதை பயன்படுத்தி மோட்டார் சைக்கிள்களில் வரும் வழிப்பறி கும்பல்கள் லாரி டிரைவர்களை மிரட்டி பணம் பறிப்பது தொடர் கதையாக நடந்து வருகிறது. டிரைவர் இல்லாத லாரிகளில் பேட்டரி உள்ளிட்ட பொருட்களை திருடி செல்வது அதிகரித்துள்ளது.

    இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் டிரைவர்கள் வாகனங்களை நிறுத்த அச்சமடைந் துள்ளனர். நெடுஞ்சாலை களில் குற்றங்களை தடுக்கவும், விபத்தின் போது துரிதமாக செயல்ப டவும் ரோந்து போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கப்பலூர் நான்கு வழிச்சாலை பகுதியில் போலீசாரின் மெத்தனம் காரணமாக சமூக விரோத கும்பல்கள் லாரி டிரைவர், தனியாக செல்லும் நபர்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூடுதல் கவனம் செலுத்தி நான்கு வழிச்சாலைகளில் கைவரிசை காட்டும் கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்தது.

    லாரி டிரைவர் உள்பட 2 பேரிடம் பணம் பறிப்பு

    நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது21). லாரி டிரைவரான இவர் சென்னையில் இருந்து நெல்லைக்கு லாரியை ஓட்டி வந்தார். மதுரை மாவட்டம் கப்பலூர் அருகே உள்ள கருவேலம்பட்டி பிரிவு பகுதிக்கு சென்ற போது அங்கு 2 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகி இருந்தது. இதை பார்த்த ராஜேஷ் உடனே லாரியை நிறுத்தி காயமடைந்தவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இரவு நேரம் என்பதால் ஆள் நடமாட்டம் இல்லை. அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ராஜேசை மிரட்டி செல்போன், ரூ.3 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்து சென்றனர். இதே போல் கவாஸ்கர் என்பவரிடம் வழிப்பறி கும்பல் பணத்தை பறித்துக் கொண்டு சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இவர் கடந்த 2-ந்தேதி மாலை அரசூருக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • கண்ணனை முண்டியம்பாக்கம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள பாரதிநகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 56), விவசாயி. இவர் கடந்த 2-ந்தேதி மாலை அரசூருக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் சென்ற போது பின்னால் வந்த கார்மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த கண்ணனை முண்டியம்பாக்கம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்து போனார். இது குறித்து திருவெண்ணை நல்லூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொத்தனூர் பேரூராட்சிக்கு ட்பட்ட பகுதியில் பரமத்திவே லூர்- ஜேடர்பா ளையம் செல்லும் நெடுஞ்சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது.
    • பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் பொருட்டு சாலையில் நடுப்பகுதியில் சிமெண்ட் மைய தடுப்பான் அமைக்க பேரூராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சி மன்ற தலைவர் கருணாநிதியின் முயற்சியின் காரணமாக பொத்தனூர் பேரூராட்சிக்கு ட்பட்ட பகுதியில் பரமத்திவே லூர்- ஜேடர்பா ளையம் செல்லும் நெடுஞ்சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது பொது மக்களின் நலன் கருதியும் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் பொருட்டு சாலையில் நடுப்பகுதியில் சிமெண்ட் மைய தடுப்பான் அமைக்க பேரூராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதையடுத்து உடனடியாக ந வடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை த்துறை உதவி கோட்டப் பொறியாளர் பொத்தனூர் பேரூராட்சி மன்றத்தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

    தார் சாலை யின் நடுவில் தடுப்புகள் அமைத்து விபத்து களை தடுக்க நட வடிக்கை எடுத்த பொத்தனூர் பேரூராட்சி தலைவர் கருணாநிதிக்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நன்றியினை தெரிவித்தனர்.

    • பாபநாசம் உட்கோட்டத்தில் 2 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது.
    • மணலூர், வீரமாங்குடி, சோமேஸ்வ ரபுரம் சாலையில் 250 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    கபிஸ்தலம்:

    முன்னாள்முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் பாபநாசம் நெடுஞ்சாலை துறை உட்கோட்டத்தில் உயர் அதிகாரிகளின் உத்தரவுபடி பாபநாசம் உட்கோட்டத்தில் 2 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, முதல் கட்டமாக பாபநாசம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட மணலூர், வீரமாங்குடி, சோமேஸ்வ ரபுரம் சாலையில் 250 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    விழாவிற்கு ஊராட்சி தலைவர் சாந்தி கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

    முன்னதாக நெடுஞ்சா லைத்துறை இளநிலை பொறி யாளர் ரவி அனைவரும் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக பாபநாசம் ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    இதில் சாலை ஆய்வாளர்கள், நெடுஞ்சாலை துறை பணியாளர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.
    • சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடையும்.

    பல்லடம் :

    பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை,அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால் பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.

    திருமணம் போன்ற சுபநாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும்.இதனால் பல்லடம் நகரத்தில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வந்தது. இதனால் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும், புறவழிச்சாலை வேண்டும், மேம்பாலம் கட்ட வேண்டும் என கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பல்லடம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்தநிலையில் பல்லடம் அருகே காரணம்பேட்டை முதல் பல்லடம் அண்ணாநகர் வரை உள்ள சுமார் 9 கி.மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பல்லடம் நகர பகுதியிலும் ரோடு விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதையடுத்து பல்லடத்தில் செட்டிபாளையம் ரோடு பிரிவு முதல் பனப்பாளையத்தில் உள்ள தாராபுரம் ரோடு பிரிவு வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் மாத இறுதிக்குள் விரிவாக்கப் பணிகள் முடிவடைந்து, சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடையும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நெல்லை - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றது.
    • இந்த சாலையில் புதிய பஸ் நிலையம் அருகில் இருந்து அரசு பொறியியல் கல்லூரி வரை சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ள கான்கிரீட் பேரிக்கார்டர்கள் அருகே கடந்த 2 நாட்களாக 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் குவியல்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றது.

    இந்த நெடுஞ்சாலையில் நாகர்கோவில் செல்லும் வாகனங்கள் மட்டுமல்லாது, அண்டை மாநிலமான கேரளாவிற்கும் இந்த வழியாகத்தான் வாகனங்கள் சென்று வருகிறது.

    மண் குவியல்

    இந்த நெடுஞ்சாலையில் உள்ள சுற்றுவட்டாரத்தில் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கும், இந்த வழியாகத்தான் வாகனங்கள் சென்று வருகின்றன.

    தற்போது இந்த சாலையில் புதிய பஸ் நிலையம் அருகில் இருந்து அரசு பொறியியல் கல்லூரி வரை சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ள கான்கிரீட் பேரிக்கார்டர்கள் அருகே கடந்த 2 நாட்களாக 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் குவியல்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    மண் குவியல்கள் சாலையை ஆக்கிரமித்து குவித்து வைக்கப்பட்டுள்ளதால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் அவ்வப்போது மண் குவியல் மீது மோதி சிறு விபத்துக்களும் ஏற்பட்டுள்ளது.

    மேலும் பெரும் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • நெல்லை மாநகரப் பகுதி முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பிரதான சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
    • இந்த சாலையில் பாதாள சாக்கடை மற்றும் அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டங்கள் நடந்ததின் காரணமாக கடந்த 2 வருடங்களாக சாலை உருக்குலைந்து கிடக்கிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகரப் பகுதி முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பிரதான சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு குலவணிகர்புரம் ெரயில்வே கேட் பகுதியில் இருந்து திருவனந்தபுரம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. தினமும் ரெயில்கள் செல்லும் நேரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததால் இந்த சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.

    அதனை தொடர்ந்து தச்சநல்லூரில் இருந்து தாழையூத்து நான்கு வழி சாலை வரையிலும் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.

    எனினும் மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த முக்கியமான சாலைகளில் ஒன்றான எஸ்.என். ஹைரோடு சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறது.

    இந்த சாலையில் பாதாள சாக்கடை மற்றும் அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டங்கள் நடந்ததின் காரணமாக கடந்த 2 வருடங்களாக சாலை உருக்குலைந்து கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

    மழை பெய்தால் வாகன ஓட்டிகள் சாலையில் வழுக்கி விழும் நிலையும், வெயில் அடித்தால் புழுதி பறப்பதுமாக இருந்து வருகிறது. இது தொடர்பாக ஏராளமான புகார் மற்றும் கோரிக்கை மனுக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் அளிக்கப்பட்டு வந்தது.

    இதன் பயனாக நெடுஞ்சாலை துறை சார்பில் இந்த சாலை அகலப்படுத்தப்பட உள்ளது. சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் முதல் டவுன் ஆர்ச் வரையிலும் இந்த சாலையானது 12 மீட்டர் அகலத்தில் இருந்து 16 மீட்டர் அகலம் கொண்டதாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு இன்று முதல் அந்த பணிகள் தொடங்கியது.

    மேலும் சாலையின் நடுவில் தடுப்பு கட்டப்பட்டு அதில் செடிகள் வைத்து பராமரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்த பணிகளை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் சேகர், உதவி பொறியாளர் சண்முகநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    சுமார் 2 ஆண்டுகளாக வாகன ஓட்டிகளும், வியாபாரிகளும் கடும் அவதிக்குள்ளாகி வந்த நிலையில், தற்போது சாலை சீரமைப்பு பணி தொடங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திருவையாறு அருகே நெடுஞ்சாலையின் குறுக்கே அபாயகரமாக விடப்பட்டுள்ள பாலக் கேணியை மூட வேண்டும் என குடிதாங்கி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருவையாறு:

    திருவையாறிலிருந்து மேற்கே 2 கிலோ மீட்டர் தொலைவில் கடுவெளி குடிதாங்கி கிராமத்தில் கல்லணை நெடுஞ்சாலையின் குறுக்கே கூத்தாடி மதகு பாலம் உள்ளது. காவிரி ஆற்றிலிருந்து வடபுறமாகப் பிரிந்து செல்லும் பாசன வாய்க்கால், இந்த ஒற்றைச் சாலையின் குறுக்கே செல்லுமிடத்தில் பழங்காலத்திலேயே மதகுகளுடன் கூடிய பாலமாகக் கட்டப்பட்டது.

    இந்தப் பாலத்தை அகலப்படுத்துவதற்காக, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் பாலத்தின் நடுவிலிருந்து வடபகுதியை முற்றிலும் இடித்துவிட்டு, அப்பகுதியில் புதிதாக பாலம் கட்டப்பட்டது. ஆனால், இடிக்கப்படாத பழைய பாலத்தின் தென்பகுதியுடன் புதியதாகக் கட்டப்பட்ட வடபகுதிப் பாலத்தை முழுவதும் இணைக்காமல், தொழில் நுட்பம் தெரியாததாலோ, போக்குவரத்தின் கவனத்தை ஈர்க்கும் நவீன கட்டுமானமாகவோ, சாலைப் பாலத்தின் நடுவில் வலுவில்லாத சுற்றுச் சுவருடன் திறந்த நிலை கிணறு வடிவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

    கட்டுமானத்தின்போதே, மேற்கிலிருந்து வந்த இருசக்கர வாகனம் அந்தக் கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் நடந்தது. இதைப் போலவே, மேற்கிலிருந்து வரும் வாகனங்கள் சாலை நடுவே உள்ள இந்தக் கிணற்றின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துள்ளாவது வழக்கமாக உள்ளது.

    எனவே, மாநில நெடுஞ்சாலையின் குறுக்கே அபாயகரமாக விடப்பட்டுள்ள பாலக் கேணியை இடைவெளியில்லாமல் இணைத்து விபத்து இல்லாத போக்குவரத்துக்கு ஆவன செய்து உதவுமாறு சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித்துறையினரிடம் கடுவெளி குடிதாங்கி கிராமவாசிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நெடுஞ்சாலைக்காக சுங்க கட்டணம் வசூலிப்பது புதிய முறை கொள்ளை என வெள்ளையன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #vellaiyan

    ஈரோடு:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் ஈரோட்டில் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    வணிகர்கள் மிகுந்த வலிமையோடு செயல்பட வேண்டிய காலம் இது அந்நிய முதலீடு ஆன்லைன் வர்த்தகம் போன்றவை சில்லரை வணிகர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது சில்லறை வணிகர்கள் கடைப் பிடிக்க முடியாத பல்வேறு சட்டங்கள் தற்போது நடைமுறையில் உள்ளது சில்லறை வணிகர்கள் அன்னிய முதலீட்டாளர்கள் உடன் போட்டி போடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    முன்பு ஆங்கிலேயர்கள் எவ்வாறு நமது நாட்டிற்குள் நுழைந்தார்களோ அதேபோன்று அந்நிய முதலீடு ஆன்லைன் வர்த்தகம் வந்துள்ளது.

    பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி ஸ்டிரைக் நடந்து வருகிறது இதை ஆட்சியாளர்களுக்கு இடித்துரைக்கும் வகையில் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் இப்போதாவது பெட்ரோல் டீசல் விலையை மத்திய மாநில அரசுகள் குறைக்க முன்வர வேண்டும்.

    நெடுஞ்சாலைக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது கொடுமையானது இது புதிய முறை கொள்ளை ஆகும் எனவே மத்திய அரசு இதை கைவிட வேண்டும் லாரி உரிமையாளர் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும் லாரி உரிமையாளர்கள் போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

    இவ்வாறு வெள்ளையன் கூறினார்.  #vellaiyan

    ×