என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "highway"

    • மக்களவையில் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் நிதின் கட்கரியிடம் கேள்வி எழுப்பினார்.
    • அதனால்தான் எங்களால் மணிக்கு 100 முதல் 130 கி.மீ வேகத்தில் ஓட்ட முடியவில்லை

    டெல்லி-மும்பை விரைவுச் சாலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் கார் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் பயணிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த வீடியோவைக் குறிப்பிட்டு, மக்களவையில் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் நிதின் கட்கரியிடம் கேள்வி எழுப்பினார்.

    அதாவது, நிதின் கட்கரியின் கார் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் பயணிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, ஆனால் அசாமில் அத்தகைய சாலைகள் இல்லாதது வருத்தமளிக்கிறது. சுங்க வரி செலுத்தினாலும் அசாம் மக்களுக்கு தரமான சாலைகள் கிடைக்கவில்லை. அதனால்தான் எங்களால் மணிக்கு 100 முதல் 130 கி.மீ வேகத்தில் ஓட்ட முடியவில்லை என்று கோகாய் கூறினார்.

    இதற்கு பதிலளித்த நிதின் கட்கரி, கனமழை காரணமாக தேசிய நெடுஞ்சாலைகள் சேதமடைந்ததை ஒப்புக்கொண்டார். அதாவது, கௌரவ் கோகோய் கூறியது உண்மை என்றும், விசாரணை நடத்தப்பட்டு சாலைகளை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இப்போது நிலைமை சிறப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

    • சில நேரங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெறுகின்றன.
    • சாலையில் தடுப்பு கட்டைகள் இருப்பது போன்று ‘3 டி’ வடிவில் இந்த எச்சரிக்கை குறியீடு வரையப்பட்டு உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் உள்ள பல்வேறு சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகின்றன. அதிலும், குறிப்பாக பாதசாரிகள் சாலைகளை கடந்து செல்லும் போது வாகனங்கள் வேகமாக வருவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றன. இதனால் சில நேரங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெறுகின்றன.

    இதனை தவிர்க்கும் வகையில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவின் பேரில், தஞ்சாவூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் செந்தில்குமார் மேற்பார்வையில் உதவி கோட்ட பொறியாளர் கீதா, உதவி பொறியாளர்கள் லட்சுமிபிரியா, வீரமுத்து ஆகியோர் தஞ்சாவூர் உட்கோட்ட பகுதிகளில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளில் விபத்துகளை தவிர்க்க பல்வேறு குறியீடுகளை வரைந்து வருகின்றனர்.

    அதன்படி, தஞ்சாவூர் மேம்பாலத்தில் மண்டைஓடு சின்னம் வரையப்பட்டது. இந்நிலையில், மாநில நெடுஞ்சாலையான நம்பர் 1 வல்லம் சாலை எலிசா நகர் பகுதியில் பாதசாரிகள் சாலையை கடக்கும் இடத்தில் விபத்தை தவிர்க்கும் வகையில் பாதசாரிகள், வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் '3 டி' வடிவ (முப்பரிமாண) எச்சரிக்கை குறியீடு வரையப்பட்டு உள்ளது.

    சாலையில் தடுப்பு கட்டைகள் இருப்பது போன்று '3 டி' வடிவில் இந்த எச்சரிக்கை குறியீடு வரையப்பட்டு உள்ளது. இந்த சாலையில் 2 இடங்களில் பரீட் சார்த்த முறையில் இக்குறியீடு வரையப்பட்டு உள்ளது. மேலும், 2 இடங்களில் மண்டை ஓடு சின்னமும் வரையப்பட்டு உள்ளது.

    இந்த குறியீடு பலன்தரும் பட்சத்தில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மாநில நெடுஞ்சாலைகளில் விபத்து நடைபெறும் இடங்களில் இக்குறியீடுகளை வரைய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கட்டமைப்புகள் மக்களின் சொத்துகளாகவே நீடிக்க வேண்டும்.
    • ரூ.45 ஆயிரம் கோடி முக்கியத்துவம் வாய்ந்த சாலையை வெறும் ரூ.2000 கோடிக்கு தனியாருக்கு தாரை வார்ப்பது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.

    அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னையை அடுத்த வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரையிலான 60 கி.மீ நீள சென்னை வெளிவட்டச் சாலையை தனியாருக்கு விற்பனை செய்ய திமுக அரசு முடிவு செய்திருக்கிறது. மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட நெடுஞ்சாலையை தனியாருக்கும் விற்பனை செய்து, அதன் மூலம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு தனியார் நிறுவனங்கள் மக்களிடம் சுங்கக்கட்டணம் வசூலித்து சுரண்ட அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது.

    சென்னையைக் கடந்து மற்ற நகரங்களுக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் சென்னை மாநகருக்குள் வருவதைத் தவிர்க்கும் வகையில் சென்னை வண்டலூரில் தொடங்கி நெமிலிச்சேரி வழியாக மீஞ்சூர் வரை மொத்தம் 60.15 கிமீ தொலைவுக்கான வெளிவட்டப்பாதை கடந்த ஆட்சியில் ரூ.2156.40 கோடி செலவில் இரு கட்டங்களாக அமைக்கப்பட்டது.

    சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கும் இந்த சாலையை தனியாருக்கு விற்பனை செய்ய திமுக அரசு முடிவு செய்திருக்கிறது. அதன்படி இந்தச் சாலையை ஒப்பந்தப்புள்ளிகள் வாயிலாக ஏலத்தில் எடுக்கும் தனியார் நிறுவனங்களுக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்க உரிமம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    வண்டலூர் - மீஞ்சூர் இடையிலான சென்னை வெளிவட்டச் சாலை முழுவதும் மக்கள் வரிப்பணத்தைக் கொண்டு அமைக்கப்பட்டது. அந்த அடிப்படையில் அது மக்களின் சொத்து. அதைப் பயன்படுத்திக் கொள்ள மக்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு. அச்சாலையில் மாநில அரசின் நிறுவனமான தமிழ்நாடு மாநில சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் வாயிலாக சுங்கக்கட்டணம் வசூலிப்பதற்கே கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. இத்தகைய சூழலில் இந்தச் சாலையை தனியாருக்கு விற்பனை செய்ய துடிப்பது நியாயமற்றது.

    மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துகளை தனியாருக்கு விற்பனை செய்து ரூ.6 லட்சம் கோடி நிதி திரட்டும் திட்டத்தை 2021-ஆம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 03.09.2021-ஆம் நாள் சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நம் நாட்டினுடைய பொதுத்துறை நிறுவனங்கள் நம் அனைவரின் பொதுச் சொத்தாகும். இலாப நோக்கம் மட்டுமே குறிக்கோளாக இல்லாமல், மக்கள் நலன் கருதி இயங்கக் கூடிய பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதோ, குத்தகைக்கு விடுவதோ தேச நலனுக்கு உகந்தது அல்ல என்பது நம்முடையக் கருத்து. பொதுச்சொத்துகளை தனியார் மயமாக்குவதற்கு நம்முடையை எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் பிரதமருக்கு கடிதம் எழுதவிருக்கிறேன் என்பதை அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

    ஆனால், இப்போது அதற்கு முற்றிலும் மாறாக தமிழ்நாட்டு மக்களுக்கு சொந்தமான சொத்துகளைத் தனியாருக்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறார். மத்திய அரசின் சொத்துகளை விற்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மு.க.ஸ்டாலின், மாநில சொத்துகளை மட்டும் தனியாருக்கு மலிவு விலையில் விற்பனை செய்வது எந்த வகையில் நியாயம்? சமூகநீதி, மக்கள் நலன் உள்ளிட்ட எந்த சிக்கலாக இருந்தாலும் திமுக சொல்வதும்,, செய்வதும் வெவ்வேறானவை தான்; எந்த சிக்கலாக இருந்தாலும் இரட்டை வேடம் போடுவது தான் திமுகவின் இயல்பு என்பதற்கு இதை விட சிறந்த எடுத்துக்காட்டு எதுவும் இருக்க முடியாது.

    வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் இன்றைய நிலையில் சராசரியாக தினமும் 31 ஆயிரம் வாகனங்கள் பயணிக்கின்றன.

    குறைந்தபட்சமாக மகிழுந்துகளுக்கு ரூ.140 முதல் அதிகபட்சமாக 7 அச்சு சரக்கு வாகனங்களுக்கு ரூ.895 வரை சுங்க்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சராசரியாக ஓரு வாகனத்திற்கு ரூ.300 என வைத்துக் கொண்டாலும் கூட ஆண்டுக்கு சுமார் ரூ.350 கோடி சுங்கக்கட்டணம் வசூலாகும். 25 ஆண்டுகளின் முடிவில் இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை 70 ஆயிரங்களை கடந்து விடும் என்பதால் சுங்கக்கட்டண வசூலும் ஆண்டுக்கு ரூ.3500 என்ற அளவைத் தாண்டி விடும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்த சாலையிலிருந்து 25 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ரூ.45 ஆயிரம் கோடி வரை சுங்கக்கட்டணம் வசூலிக்க முடியும்.

    அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சாலையை வெறும் ரூ.2000 கோடிக்கு தனியாருக்கு தாரை வார்ப்பது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். இதன் பின்னணியில் என்ன பேரம் நடந்திருக்கும்? என்பதைப் புரிந்து கொண்டாலே, மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட வெளிவட்டச் சாலையை தனியாருக்கு தாரை வார்க்க திமுக துடிப்பது ஏன்? என்பதை புரிந்து கொள்ளலாம்.

    மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கட்டமைப்புகள் மக்களின் சொத்துகளாகவே நீடிக்க வேண்டும். எனவே, வண்டலூர் & மீஞ்சூர் இடையிலான வெளிவட்டச் சாலையை தனியாருக்கு விற்பனை செய்யும் திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும். இந்த சாலையில் கட்டணம் வசூலிப்பதையும் நிறுத்த வேண்டும்.

    • ராஜஸ்தான் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.
    • கட்டிமுடிக்கப்பட்ட சாலையில் 30 அடியில் பள்ளம் உருவாகியுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் திறப்பு விழாவிற்கு தயாராக இருந்த நெடுஞ்சாலை மழை வெள்ளத்தில் அடித்துசெல்லட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஜுன்ஜுனு மாவட்டத்தின் பாக்வாலி பகுதியில், கடந்தவாரம் பெய்த கனமழை காரணமாக பாக்வாலி - ஜஹாஜை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை கட்லி நதிப் பகுதியில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.

    கட்டிமுடிக்கப்பட்ட சாலையில் 30 அடியில் பள்ளம் உருவாகி நதி நீர் பாய்ந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

    • 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.
    • சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடையும்.

    பல்லடம் :

    பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை,அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால் பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.

    திருமணம் போன்ற சுபநாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும்.இதனால் பல்லடம் நகரத்தில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வந்தது. இதனால் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும், புறவழிச்சாலை வேண்டும், மேம்பாலம் கட்ட வேண்டும் என கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பல்லடம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்தநிலையில் பல்லடம் அருகே காரணம்பேட்டை முதல் பல்லடம் அண்ணாநகர் வரை உள்ள சுமார் 9 கி.மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பல்லடம் நகர பகுதியிலும் ரோடு விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதையடுத்து பல்லடத்தில் செட்டிபாளையம் ரோடு பிரிவு முதல் பனப்பாளையத்தில் உள்ள தாராபுரம் ரோடு பிரிவு வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் மாத இறுதிக்குள் விரிவாக்கப் பணிகள் முடிவடைந்து, சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடையும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பாபநாசம் உட்கோட்டத்தில் 2 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது.
    • மணலூர், வீரமாங்குடி, சோமேஸ்வ ரபுரம் சாலையில் 250 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    கபிஸ்தலம்:

    முன்னாள்முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் பாபநாசம் நெடுஞ்சாலை துறை உட்கோட்டத்தில் உயர் அதிகாரிகளின் உத்தரவுபடி பாபநாசம் உட்கோட்டத்தில் 2 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, முதல் கட்டமாக பாபநாசம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட மணலூர், வீரமாங்குடி, சோமேஸ்வ ரபுரம் சாலையில் 250 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    விழாவிற்கு ஊராட்சி தலைவர் சாந்தி கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

    முன்னதாக நெடுஞ்சா லைத்துறை இளநிலை பொறி யாளர் ரவி அனைவரும் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக பாபநாசம் ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    இதில் சாலை ஆய்வாளர்கள், நெடுஞ்சாலை துறை பணியாளர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பொத்தனூர் பேரூராட்சிக்கு ட்பட்ட பகுதியில் பரமத்திவே லூர்- ஜேடர்பா ளையம் செல்லும் நெடுஞ்சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது.
    • பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் பொருட்டு சாலையில் நடுப்பகுதியில் சிமெண்ட் மைய தடுப்பான் அமைக்க பேரூராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சி மன்ற தலைவர் கருணாநிதியின் முயற்சியின் காரணமாக பொத்தனூர் பேரூராட்சிக்கு ட்பட்ட பகுதியில் பரமத்திவே லூர்- ஜேடர்பா ளையம் செல்லும் நெடுஞ்சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது பொது மக்களின் நலன் கருதியும் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் பொருட்டு சாலையில் நடுப்பகுதியில் சிமெண்ட் மைய தடுப்பான் அமைக்க பேரூராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதையடுத்து உடனடியாக ந வடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை த்துறை உதவி கோட்டப் பொறியாளர் பொத்தனூர் பேரூராட்சி மன்றத்தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

    தார் சாலை யின் நடுவில் தடுப்புகள் அமைத்து விபத்து களை தடுக்க நட வடிக்கை எடுத்த பொத்தனூர் பேரூராட்சி தலைவர் கருணாநிதிக்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நன்றியினை தெரிவித்தனர்.

    • இவர் கடந்த 2-ந்தேதி மாலை அரசூருக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • கண்ணனை முண்டியம்பாக்கம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள பாரதிநகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 56), விவசாயி. இவர் கடந்த 2-ந்தேதி மாலை அரசூருக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் சென்ற போது பின்னால் வந்த கார்மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த கண்ணனை முண்டியம்பாக்கம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்து போனார். இது குறித்து திருவெண்ணை நல்லூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கப்பலூர் நான்கு வழிச்சாலையில் வழிப்பறியில் ஈடுபடும் கும்பலை தடுக்க ரோந்து போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
    • டிரைவர் இல்லாத லாரிகளில் பேட்டரி உள்ளிட்ட பொருட்களை திருடி செல்வது அதிகரித்துள்ளது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் சிப்காட் தொழிற்சாலை உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட ஆலைகள் செயல்பட்டு வருகின்றனர். வெளி மாநில மற்றும் வெளியூர்களில் இருந்து நாள்தோறும் லாரிகள் மூலம் சரக்குகள் வந்த வண்ணம் இருக்கும்.

    சரக்குகளை கொண்டு வரும் லாரி டிரைவர்கள் வாகனத்தை கப்பலூர் நான்கு வழிச்சாலை ஓரத்தில் நிறுத்தி ஓய்வு எடுப்பது வழக்கம். இரவு நேரங்களில் இந்த பகுதிகளில் ஆள் நடமாட்டம் குறைந்து இருக்கும்.

    இதை பயன்படுத்தி மோட்டார் சைக்கிள்களில் வரும் வழிப்பறி கும்பல்கள் லாரி டிரைவர்களை மிரட்டி பணம் பறிப்பது தொடர் கதையாக நடந்து வருகிறது. டிரைவர் இல்லாத லாரிகளில் பேட்டரி உள்ளிட்ட பொருட்களை திருடி செல்வது அதிகரித்துள்ளது.

    இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் டிரைவர்கள் வாகனங்களை நிறுத்த அச்சமடைந் துள்ளனர். நெடுஞ்சாலை களில் குற்றங்களை தடுக்கவும், விபத்தின் போது துரிதமாக செயல்ப டவும் ரோந்து போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கப்பலூர் நான்கு வழிச்சாலை பகுதியில் போலீசாரின் மெத்தனம் காரணமாக சமூக விரோத கும்பல்கள் லாரி டிரைவர், தனியாக செல்லும் நபர்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூடுதல் கவனம் செலுத்தி நான்கு வழிச்சாலைகளில் கைவரிசை காட்டும் கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்தது.

    லாரி டிரைவர் உள்பட 2 பேரிடம் பணம் பறிப்பு

    நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது21). லாரி டிரைவரான இவர் சென்னையில் இருந்து நெல்லைக்கு லாரியை ஓட்டி வந்தார். மதுரை மாவட்டம் கப்பலூர் அருகே உள்ள கருவேலம்பட்டி பிரிவு பகுதிக்கு சென்ற போது அங்கு 2 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகி இருந்தது. இதை பார்த்த ராஜேஷ் உடனே லாரியை நிறுத்தி காயமடைந்தவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இரவு நேரம் என்பதால் ஆள் நடமாட்டம் இல்லை. அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ராஜேசை மிரட்டி செல்போன், ரூ.3 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்து சென்றனர். இதே போல் கவாஸ்கர் என்பவரிடம் வழிப்பறி கும்பல் பணத்தை பறித்துக் கொண்டு சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்க வேண்டிய இந்த சிகிச்சை மையம் ஊழியர்கள் பற்றாக்குறையால் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.
    • முதல் கட்ட சிகிச்சைக்கு பிறகு செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அல்லது தாம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்படுவார்கள்.

    சென்னை:

    தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் உயிர் இழப்பை குறைப்பதற்காக மத்திய அரசு அவசர சிகிச்சை பிரிவு மையங்களை அமைக்க திட்டமிட்டது. அதிவேகமாக செல்லும் வாகனங்கள் எதிர்பாராமல் ஒன்றுக்கு பின் ஒன்றாகவும் நிற்கும் வாகனங்கள் மீது மோதியும் விபத்து ஏற்பட்டு பலர் உயிர் இழக்கின்றனர்.

    தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடுபவர்களை மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்குள் இறந்து விடுகின்றனர். இதுபோன்ற உயிர் இழப்பை குறைப்பதற்காக முதன் முதலாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிங்கபெருமாள் கோவிலில் விபத்து கால அவசர சிகிச்சை பிரிவு தொடங்க முடிவு செய்யப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்க வேண்டிய இந்த சிகிச்சை மையம் ஊழியர் கள் பற்றாக்குறையால் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.

    தற்போது தமிழக அரசு இதற்காக பணியாளர்களை நியமித்து இருப்பதால் அடுத்த மாதம் தீவிர சிகிச்சை மையம் திறக்கப்படுகிறது.

    இந்த மையம் 24 மணி நேரமும் செயல்படும். 3 ஷிப்டு அடிப்படையில் 12 மருத்துவ நிபுணர்கள் செயல்படுவார்கள். விபத்தில் சிக்கும் நோயாளிகளுக்கு முதல் கட்ட சிகிச்சைக்கு பிறகு செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அல்லது தாம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்படுவார்கள்.

    இங்குள்ள மருத்துவ குழுவினர் ரத்த போக்கை கட்டுப்படுத்துதல், எலும்பு முறிவுகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவார்கள். இங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 30 முதல் 60 நிமிடங்களுக்குள் நோயாளிகளை மாற்ற முடியும்.

    மகேந்திரா சிட்டி மற்றும் சிங்கப் பெருமாள் கோவில் இடையிலான 4 கி.மீ. தூரத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 விபத்துகள் நடப்பதாகவும், 6 வழிச் சாலையாக விரிவுப்படுத்தப்பட்டதில் இருந்து விபத்து விகிதம் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    மணிக்கு 100 கி.மீ. முதல் 120 கி.மீ. வேகத்தில் செல்லும் வாகனங்கள் நடைபாதையில் செல்பவர்களுக்கும் நெடுஞ்சாலையை கடப்பவர்களுக்கும் ஆபத்துகளை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    • கர்நாடக மாநிலம் உடுப்பியில் இரு குழுக்களிடையே நடந்த மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    • வீடியோவைப் பார்த்த நெட்டிஸங்கள் சினிமாவை விஞ்சும் வகையில் இந்த மோதல் உள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    கர்நாடக மாநிலம் உடுப்பியில் இரு குழுக்களிடையே நடந்த மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பணத் தகராறு காரணமாக உடுப்பி-மணிப்பால் நெடுஞ்சாலையில் 2 குழுக்களைச் சேர்ந்த 6 பேர் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கியும், குழுக்கள் ஆளுக்கொரு மாருதி ஸ்விஃப்ட் கார்களைக் கொண்டு ஒன்றை ஒன்று மோதியும் சண்டையிட்டுக் கொண்டது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

    கடந்த மே 18 ஆம் தேதி நடந்த இந்த மோதலை சாலையின் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் வசிப்பவர் மாடியில் இருந்து எடுத்த மொபைல் இந்த வீடியோவை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

     

    இந்நிலையில் மோதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிந்து தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவரக்ளின் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிஸங்கள் சினிமாவை விஞ்சும் வகையில் இந்த மோதல் உள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். 

     

    • 30 அடி உயரத்தில் உள்ள நெடுஞ்சாலை பெயர்ப்பலகையின் மீது ஏறி உடற்பயிற்சி செய்யும் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரல்
    • இந்த வைரல் வீடியோ தொடர்பாக போலீசார் விசாரணை

    உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் 30 அடி உயரத்தில் உள்ள நெடுஞ்சாலை பெயர்ப்பலகையின் மீது சட்டை இல்லாமல் ஒருவர் ஏறி உடற்பயிற்சி செய்யும் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த ரீல்ஸ் வீடியோவின் பின்னணியில் மறைந்த பாடகர் சித்து மூஸ்வாலாவின் பாடல் ஒன்று ஒலிக்கிறது.

    இந்த வைரல் வீடியோ தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமேதி போலீசார் தெரிவித்தனர்.

    ×