search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரக்கன்று நடும் விழா
    X

    கபிஸ்தலம் அருகே சாலையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    மரக்கன்று நடும் விழா

    • பாபநாசம் உட்கோட்டத்தில் 2 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது.
    • மணலூர், வீரமாங்குடி, சோமேஸ்வ ரபுரம் சாலையில் 250 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    கபிஸ்தலம்:

    முன்னாள்முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் பாபநாசம் நெடுஞ்சாலை துறை உட்கோட்டத்தில் உயர் அதிகாரிகளின் உத்தரவுபடி பாபநாசம் உட்கோட்டத்தில் 2 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, முதல் கட்டமாக பாபநாசம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட மணலூர், வீரமாங்குடி, சோமேஸ்வ ரபுரம் சாலையில் 250 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    விழாவிற்கு ஊராட்சி தலைவர் சாந்தி கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

    முன்னதாக நெடுஞ்சா லைத்துறை இளநிலை பொறி யாளர் ரவி அனைவரும் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக பாபநாசம் ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    இதில் சாலை ஆய்வாளர்கள், நெடுஞ்சாலை துறை பணியாளர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×