என் மலர்
நீங்கள் தேடியது "Intensive Care Unit"
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது மனைவியை தொடர்புக்கு கொண்டு பேசி ஆறுதல் தெரிவித்தார்.
- தேவையான அனைத்து உதவிகளும் தமிழக அரசு வழங்கும் எனவும் முதலமைச்சர் உறுதி அளித்தார்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு எய்ம்ஸ் உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, பஹல்காம் தாக்குதலில் காயமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் பரமேஸ்வரன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவர் பரமேஸ்வரனின் உடல்நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது மனைவியை தொடர்புக்கு கொண்டு பேசி ஆறுதல் தெரிவித்தார்.
மேலும் அவர், "தேவையான அனைத்து உதவிகளும் தமிழக அரசு வழங்கும்" எனவும் உறுதி அளித்தார்.
இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர் பரமேஸ்வரனுக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவர் பரமேஸ்வரன் வெண்டிலேட்டர் உதவியுடன் ஐசியூவில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- கடந்த 13-ந் தேதி மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 60 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
- நேற்று முன்தினம் வரை 22 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
விக்கிரவாண்டி:
கள்ளச்சாராயம் குடித்த மேலும் 9 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் கிராமத்தில் கடந்த 13-ந் தேதி மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 60 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இதில்ஒரு பெண் உள்பட 14 பேர் பலியானார்கள். 12 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும், 34 பேர் பொது வார்டுகளிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்களில் நேற்று முன்தினம் வரை 22 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்நிலையில் எக்கியார் குப்பம் பாலு, மரியதாஸ், விநாயகம், ராமு, மணிமாறன், தேசிங்கு, ராஜ துரை, சிவா, ஆறுமுகம் ஆகிய 9 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இவர்களை தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன், தனி தாசில்தார் இளங்கோவன், மருத்துவக் கல்லூரி டீன் கீதாஞ்சலி, கண்காணிப்பாளர் அறிவழகன், உண்டு உறைவிட டாக்டர் ரவிக்குமார், துணை முதல்வர் யோகாம்பாள், துணை உண்டு உறைவிட டாக்டர் வெங்கடேசன் மற்றும் டாக்டர்கள் மருத்துவ ஆலோசனை வழங்கினார்கள்.
தற்போது முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 2 பேரும், பொது வார்டில் 13 பேர் என 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்க வேண்டிய இந்த சிகிச்சை மையம் ஊழியர்கள் பற்றாக்குறையால் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.
- முதல் கட்ட சிகிச்சைக்கு பிறகு செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அல்லது தாம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்படுவார்கள்.
சென்னை:
தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் உயிர் இழப்பை குறைப்பதற்காக மத்திய அரசு அவசர சிகிச்சை பிரிவு மையங்களை அமைக்க திட்டமிட்டது. அதிவேகமாக செல்லும் வாகனங்கள் எதிர்பாராமல் ஒன்றுக்கு பின் ஒன்றாகவும் நிற்கும் வாகனங்கள் மீது மோதியும் விபத்து ஏற்பட்டு பலர் உயிர் இழக்கின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடுபவர்களை மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்குள் இறந்து விடுகின்றனர். இதுபோன்ற உயிர் இழப்பை குறைப்பதற்காக முதன் முதலாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிங்கபெருமாள் கோவிலில் விபத்து கால அவசர சிகிச்சை பிரிவு தொடங்க முடிவு செய்யப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்க வேண்டிய இந்த சிகிச்சை மையம் ஊழியர் கள் பற்றாக்குறையால் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.
தற்போது தமிழக அரசு இதற்காக பணியாளர்களை நியமித்து இருப்பதால் அடுத்த மாதம் தீவிர சிகிச்சை மையம் திறக்கப்படுகிறது.
இந்த மையம் 24 மணி நேரமும் செயல்படும். 3 ஷிப்டு அடிப்படையில் 12 மருத்துவ நிபுணர்கள் செயல்படுவார்கள். விபத்தில் சிக்கும் நோயாளிகளுக்கு முதல் கட்ட சிகிச்சைக்கு பிறகு செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அல்லது தாம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்படுவார்கள்.
இங்குள்ள மருத்துவ குழுவினர் ரத்த போக்கை கட்டுப்படுத்துதல், எலும்பு முறிவுகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவார்கள். இங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 30 முதல் 60 நிமிடங்களுக்குள் நோயாளிகளை மாற்ற முடியும்.
மகேந்திரா சிட்டி மற்றும் சிங்கப் பெருமாள் கோவில் இடையிலான 4 கி.மீ. தூரத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 விபத்துகள் நடப்பதாகவும், 6 வழிச் சாலையாக விரிவுப்படுத்தப்பட்டதில் இருந்து விபத்து விகிதம் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மணிக்கு 100 கி.மீ. முதல் 120 கி.மீ. வேகத்தில் செல்லும் வாகனங்கள் நடைபாதையில் செல்பவர்களுக்கும் நெடுஞ்சாலையை கடப்பவர்களுக்கும் ஆபத்துகளை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.






