search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "illicit liquor"

    • அச்சரப்பாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மே மாதம் விஷ சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்தனர்.
    • விசாரணை அதிகாரியாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரி நியமிக்கப்பட்டார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர், அச்சரப்பாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மே மாதம் விஷ சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணை அதிகாரியாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரி நியமிக்கப்பட்டார். தொடர்ந்து கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்ட நிலையில் மொத்தம் 6 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் விஷ சாராயம் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருக்கந்தாங்கல் பகுதியை சேர்ந்த அமாவாசை (வயது 40) மற்றும் பனையூரை சேர்ந்த ராஜேஷ் (27) ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு வினோத் சாந்தாராம் பரிந்துரையின்படி இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.

    • தனிப்படையினர் சம்பவத்தன்று இரவு சென்னாகுளம் நடையிடத்து பாபு என்பவரின் வீட்டில் சோதனை நடத்தினர்.
    • வேட்டைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, கயிறு மற்றும் பிற உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கம்பம்:

    தமிழக-கேரள எல்லைப்பகுதியான கம்பம் மெட்டுப்பகுதியில் மான் இறைச்சி பதுக்கி வைத்திருப்பதாக குமுளி வனச்சரக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்படி தனிப்படையினர் சம்பவத்தன்று இரவு சென்னாகுளம் நடையிடத்து பாபு என்பவரின் வீட்டில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் சமைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ மான் கறி மற்றும் குளிர்சாத பெட்டியில் பதுக்கி வைத்திருந்த 3 கிலோ மான் கறியையும் வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.

    மேலும் வேட்டைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, கயிறு மற்றும் பிற உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பாபுவின் தோட்டத்தில் சோதனை நடத்தியபோது கள்ளச்சாராயம் காய்ச்சியதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்து கலால்துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பாபு மீது குமுளி வனத்துறையினர் மற்றும் கலால்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • தமிழ்நாடு முழுவதும் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள்.
    • ஆயிரக்கணக்கான கழக நிர்வாகிகள் பங்கேற்று தி.மு.க. ஆட்சியை கண்டித்து கண்டன முழக்கமிட்டனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதிகளில் விஷச்சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்துக்கு தி.மு.க. அரசின் அலட்சிய போக்குதான் காரணம் என்று அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்து இருந்தது. அதுமட்டுமின்றி, கவர்னர் மாளிகைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேரணியாக சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து தி.மு.க. அரசு மீது புகார் மனு கொடுத்தார்.

    தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப் பொருட்கள் புழக்கம் உள்ளிட்டவைகளை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறி விட்டது என்றும் குற்றம்சாட்டி கவர்னரிடம் வழங்கிய மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

    இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். சென்னையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அன்றைய தினம் ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    இதைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கலெக்டர் அலுவலகங்கள் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    அதன்படி தமிழ்நாடு முழுவதும் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள்.

    செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகம் சார்பில் தாம்பரம் சண்முகா சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, மாவட்டக்கழக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா ஆகியோர் பங்கேற்று தி.மு.க. ஆட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    இதில் சென்னை பிரிவு தகவல் தொழில்நுட்ப நிர்வாகி சத்யன், மாவட்ட பொருளாளர் பரசுராமன், பகுதி செயலாளர்கள் கோபிநாதன், கூத்தன், எல்லார் செழியன், ஜெயபிரகாஷ், ஜெகன், அப்பு என்கிற வெங்கடேசன், வக்கீல் சதீஷ், அருணாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் ஆயிரக்கணக்கான கழக நிர்வாகிகள் பங்கேற்று தி.மு.க. ஆட்சியை கண்டித்து கண்டன முழக்கமிட்டனர்.

    திருவொற்றியூர், பெரியார் நகரில் மாவட்ட செயலாளர் மாதவரம் வி.மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ.கே. குப்பன் அவைத்த லைவர் பி.ராஜேந்திரன், பகுதி செயலாளர் அஜாக்ஸ் எஸ்.பரமசிவம், கண்ணதாசன், வேலாயுதம், மாமன்ற உறுப்பினர்கள் டாக்டர் கே. கார்த்திக், முல்லை ராஜேஷ், ஸ்ரீதரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மதுரவாயல் மின்சார வாரியம் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா. பென்ஜமின் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் தீபா கண்ணன், ஜாவித் அகமது, முன்னாள் எம்.எல்.ஏ. இரா. மணிமாறன், கா.சு. ஜனார்த்தனன், கிழக்கு பகுதி செயலாளர் ஏ.தேவதாஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் விஷ சாராயம், கள்ளச்சாராயம் விற்பனையை தடுத்து நிறுத்து, மின் கட்டணம், பால் விலை உயர்வை ரத்து செய், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டு போன்ற கோஷங்கள் எழுப்பபட்டன.

    ஆர்ப்பாட்டத்தில் பகுதி செயலாளர்கள் என்.எம். இம்மானுவேல், கே.தாமோதரன், இ. கந்தன், சென்னை மாநகராட்சி அ.தி.மு.க. எதிர்க்கட்சி துணைத்தலைவர் டி. சத்தியநாதன் மற்றும் காட்டுப்பாக்கம் ராஜகோபால், சதீஷ்குமார், திருநின்றவூர் கிஷோர், பூந்தமல்லி நகர செயலாளர் கே.எஸ்.ரவிசந்திரன், திருமழிசை நகர செயலாளர் டி.எம்.ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் கே.ஜி.டி.கவுதமன், ராஜா என்கிற பேரழகன், மகேந்திரன், என்ஜினியர் ஜெ.துரைராஜ், புட்ளூர் சந்திரசேகரன், வட்டச் செயலாளர்கள் எம்.பி.தென்றல் குமார், பரத், ராமாபுரம், ராஜ்குமார் பச்சையப்பன், கே.பி.வேணுகோபால், அகிம்சை வி.குமரேசன், முகப்பேர் இளஞ்செழியன், வட்டச்செயலாளர் பாரத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போன்று திருவள்ளூர் தெற்கு மாவட்டம் அம்பத்தூரில் மாவட்ட செயலாளர் வி. அலெக்சாண்டர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம், மாவட்ட அவை தலைவர் திண்டு உத்தமராஜ்,வி.கே,ரவி, பகுதிச் செயலாளர்கள் கே.பி.முகுந்தன், ஜெ. ஜான், சி.வி.மணி, ஆவடி சங்கர், ஆர்.சி.டி.ஹே மேந்திரன், பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுச்சேரியை சேர்ந்த பர்கத்துல்லா, ஏழுமலை, சென்னை இளைய நம்பி உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • 6 பேரல்களில், 2 பேரல் விற்பனை செய்யப்பட்ட நிலையில் 4 பேரல் மெத்தனாலை மீண்டும் சென்னைக்கு அனுப்பி உள்ளதும் தெரியவந்துள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 13 பேர் உயிர் இழந்தனர்.

    இது தொடர்பாக சாராய வியாபாரிகள் அமரன், முத்து, புதுச்சேரியை சேர்ந்த பர்கத்துல்லா, ஏழுமலை, சென்னை இளைய நம்பி உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    விசாரணையில் சென்னையை சேர்ந்த கெமிக்கல் தொழிற்சாலை அதிபரான இளைய நம்பி, தொழிற்சாலை மூடப்பட்டதால் அவரிடம் தேங்கி இருந்த மெத்தனால் என்ற விஷத் தன்மை வாய்ந்த வேதிப் பொருளை புதுச்சேரியை சேர்ந்த சாராய வியாபாரியான ஏழுமலையிடம் விற்பனைக்கு அனுப்பி உள்ளார்.

    6 பேரல் மெத்தனாலை வாங்கிய ஏழுமலை புதுச்சேரியை சேர்ந்த பர்கத்துல்லா மூலம் மரக்காணம் சாராய வியாபாரிகளான அமரன், முத்து உள்ளிட்டோருக்கு குறைந்த விலைக்கு 200 லிட்டர் விற்றுள்ளார். வழக்கமாக புதுச்சேரி சாராயத்தை வாங்கி பாக்கெட் செய்து விற்று வரும் மரக்காணம் சாராய வியாபாரிகள் போட்டி காரணமாக அதிக போதை தரும் என்பதால், சாராயத்துடன் மெத்தனால் சேர்த்து, கடந்த 13-ந் தேதி மாலை விற்பனை செய்துள்ளனர். இதனால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

    6 பேரல்களில், 2 பேரல் விற்பனை செய்யப்பட்ட நிலையில் 4 பேரல் மெத்தனாலை மீண்டும் சென்னைக்கு அனுப்பி உள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 12-வது நபரான மதனை போலீசார் தேடி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை முடிந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • விஷ சாராய வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்பட்டது.
    • விஷ சாராயம் குடித்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அஞ்சலையிடம் இன்று காலை ஏ.டி.எஸ்.பி. மகேஸ்வரி விசாரித்தார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷ சாராயம் குடித்ததில் பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி, அவரது மாமியார் வசந்தா உள்பட 8 பேர் பலியானார்கள். மேலும் சின்னதம்பியின் மனைவி அஞ்சலை உள்ளிட்ட பலர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    இந்த விஷ சாராய வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்பட்டது. நேற்று இது கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த நிலையில விஷ சாராயம் தொடர்பாக விசாரணையை சி.பி.சி.ஐ.டி போலீசார் தொடங்கி உள்ளனர். முதல் கட்டமாக விஷ சாராயம் குடித்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அஞ்சலையிடம் இன்று காலை ஏ.டி.எஸ்.பி. மகேஸ்வரி விசாரித்தார். இதைத்தொடர்ந்து பெருங்கரணை கிராமத்தில் விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீனவ கிராம மக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
    • 11 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விழுப்புரம் கா.குப்பத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்திற்கு அழைத்து சென்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் மீனவ கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த 13 பேர் உயிர் இழந்தனர்.

    இது தொடர்பாக சாராய வியாபாரிகளான மரக்காணத்தை சேர்ந்த அமரன், ஆறுமுகம், முத்து, ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன் மற்றும் மெத்தனால் கொடுத்த புதுச்சேரி ராஜா என்கிற பர்கத்துல்லா, தட்டாஞ்சாவடி ஏழுமலை, சென்னை திருவேற்காடு இளைய நம்பி, சென்னையில் இருந்து மெத்தனாலைகடத்தி வந்த வேலுர் குடியாத்தம் பகுதியை சேர்ந்த ராபர்ட், வானூர் பெரம்பை பகுதியை சேர்ந்த பிரபு ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீனவ கிராம மக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

    கைது செய்யப்பட்ட 11 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க 3 நாட்கள் அவகாசம் வழங்க கோரி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனு விசாரணைக்கு வந்தபோது கைது செய்யப்பட்ட 11 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி வரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டாார்.

    இதனை தொடர்ந்து 11 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விழுப்புரம் கா.குப்பத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்திற்கு அழைத்து சென்றனர்.

    அங்கு 11 பேரையும் தனித்தனி அறையில்அடைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று 2-வது நாளாக விசாரணை நடைபெற்றது.

    விஷச்சாராயம் கடத்தலுக்கு பின்னணியில் யார் உள்ளனர். இதற்கு உடந்தையாக இருந்த காவல் துறையினர், வருவாய்துறையினர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    அவர்கள் அளிக்கும் தகவல்கள் அடிப்படையில் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என் தகவல் வெளியாகி உள்ளது.

    • அணைக்கரைப்பட்டி-அகமலை செல்லும் சாலையில் வள்ளுவன்தொழு பகுதியில் தோட்டத்தில் கருப்பையா என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சி வந்தார்.
    • கள்ளச்சாராயம் காய்ச்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே அணைக்கரைப்பட்டி-அகமலை செல்லும் சாலையில் வள்ளுவன்தொழு பகுதியில் தோட்டத்தில் கருப்பையா என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சி வந்தார். இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ் டோங்கரே உத்தரவின்படி போதை ஒழிப்பு மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு சிறப்புபடையினர் விரைந்து சென்று 20 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதுதொடர்பாக கருப்பையாவை கைது செய்தனர். போடி மற்றும் மலையடிவார பகுதிகளில் அதிகளவில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில் போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாராய வியாபாரிகள், கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள் 12 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
    • கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள், முக்கிய சாராய வியாபாரிகளை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 13 பேர் பலியானார்கள். செங்கல்பட்டில் 8 பேர் உயிர் இழந்தனர். மொத்தம் 21 பேர் உயிர் இழந்து உள்ளனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

    அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு படிப்படியாக வீடு திரும்பி வருகின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மரக்காணத்தில் 13 பேர் உயிர் இழந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும். டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டடர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    மரக்காணம் போலீசார் நடத்திய விசாரணையில் புதுவை மற்றும் சென்னையில் இருந்து வந்த மெத்தனால் என்ற விஷசாராயத்தை குடித்து 13 பேர் உயிர் இழந்தது தெரிய வந்தது.

    இது தொடர்பாக சாராய வியாபாரிகள் அமரன், முத்து, ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன், கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள் புதுச்சேரி முத்தியால்பேட்டை ராஜா என்கிற பர்கத்துல்லா, வில்லியனூர் ஏழுமலை, சென்னை திருவேற்காடு இளைய நம்பி உள்ளிட்ட 11 பேர் மீது மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மரக்காணம் போலீஸ் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு ஆவணங்களை கோட்டக்குப்பம் டி.எஸ்..பி. சுனில், சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியான கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதியிடம் ஒப்படைத்தார்.

    இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாராய வியாபாரிகள், கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள் 12 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் மரக்காணம் போலீஸ் நிலையத்தில் இருந்து வழங்கப்பட்ட ஆவணங்களில் சில ஆவணங்கள் இல்லை என்றும் அவற்றை ஒப்படைக்குமாறும் மரக்காணம் போலீசாருக்கு சி.பி.சிஐ.டி. போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

    மேலும் கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள், முக்கிய சாராய வியாபாரிகளை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டனர். இதற்காக நேற்று விழுப்புரம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, சாராய வியாபாரிகள் 11 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

    சாராய வியாபாரிகளை காவலில் எடுத்து விசாரிக்கும்போது மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மரக்காணத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
    • வழக்கில் தலைமறைவாக உள்ள மரக்காணம் கரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மதனை போலீசார் தேடி வருகின்றனர்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் மீனவ கிராமத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 13 பேர் உயிர் இழந்தனர்.

    மேலும் சிலர் முண்டியம்பாக்கம், புதுவை ஜிப்மர் மருத்துவமனைகளில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர். மெத்தனால் கலந்த எரிசாராயத்தை குடித்து உயிரிழந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திய மரக்காணம் போலீசார் மரக்காணம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த 6 பேர், புதுவை மாநிலத்தை சேர்ந்த பிரபல மொத்த கள்ளச்சாராய வியாபாரிகள் 2 பேர், மெத்தனாலை விற்பனை செய்த சென்னையை சேர்ந்த தொழில் அதிபர்கள் 2பேர் மற்றும் கள்ளச்சாராயத்தை வாகனத்தில் கடத்தி வந்த டிரைவர் புதுவை மாநிலம் வில்லியனூர் அருகிலுள்ள பெரம்பை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

    இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மரக்காணம் கரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மதனை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இதனால் ஆவணங்களை மரக்காணம் போலீசார் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி தலைமையிலான குழுவினர் மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.

    அங்கிருந்த போலீசாரிடம் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து 13 பேர் உயிரிழந்த எக்கியார்குப்பம் மீனவ கிராமத்திற்கு சென்றனர். அங்கு சாராயத்தை குடித்துவிட்டு பலியான மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் பார்வையிட்டு ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாராய வியாபாரிகள், கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள் 12 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
    • கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள், முக்கிய சாராய வியாபாரிகளை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 13 பேர் பலியானார்கள். செங்கல்பட்டில் 8 பேர் உயிர் இழந்தனர். மொத்தம் 21 பேர் உயிரிழந்து உள்ளனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

    அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு படிப்படியாக வீடு திரும்பி வருகின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மரக்காணத்தில் 13 பேர் உயிர் இழந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும். டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டடர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    மரக்காணம் போலீசார் நடத்திய விசாரணையில் புதுவை மற்றும் சென்னையில் இருந்து வந்த மெத்தனால் என்ற விஷசாராயத்தை குடித்து 13 பேர் உயிர் இழந்தது தெரிய வந்தது.

    இது தொடர்பாக சாராய வியாபாரிகள் அமரன், முத்து, ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன், கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள் புதுச்சேரி முத்தியால் பேட்டை ராஜா என்கிற பர்கத்துல்லா, வில்லியனூர் ஏழுமலை, சென்னை திருவேற்காடு இளைய நம்பி உள்ளிட்ட 12 பேர் மீது மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மரக்காணம் போலீஸ் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு ஆவணங்களை கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. சுனில், சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியான கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதியிடம் ஒப்படைத்தார்.

    இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாராய வியாபாரிகள், கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள் 12 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் மரக்காணம் போலீஸ் நிலையத்தில் இருந்து வழங்கப்பட்ட ஆவணங்களில் சில ஆவணங்கள் இல்லை என்றும் அவற்றை ஒப்படைக்கும் மாறும் மரக்காணம் போலீசாருக்கு சி.பி.சிஐ.டி. போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

    மேலும் கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள், முக்கிய சாராய வியாபாரிகளை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டனர். 12 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க இன்று விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

    சாராய வியாபாரிகளை காவலில் எடுத்து விசாரிக்கும்போது மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கடந்த 13-ந் தேதி மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 60 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
    • நேற்று முன்தினம் வரை 22 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    விக்கிரவாண்டி:

    கள்ளச்சாராயம் குடித்த மேலும் 9 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் கிராமத்தில் கடந்த 13-ந் தேதி மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 60 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    இதில்ஒரு பெண் உள்பட 14 பேர் பலியானார்கள். 12 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும், 34 பேர் பொது வார்டுகளிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இவர்களில் நேற்று முன்தினம் வரை 22 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்நிலையில் எக்கியார் குப்பம் பாலு, மரியதாஸ், விநாயகம், ராமு, மணிமாறன், தேசிங்கு, ராஜ துரை, சிவா, ஆறுமுகம் ஆகிய 9 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    இவர்களை தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன், தனி தாசில்தார் இளங்கோவன், மருத்துவக் கல்லூரி டீன் கீதாஞ்சலி, கண்காணிப்பாளர் அறிவழகன், உண்டு உறைவிட டாக்டர் ரவிக்குமார், துணை முதல்வர் யோகாம்பாள், துணை உண்டு உறைவிட டாக்டர் வெங்கடேசன் மற்றும் டாக்டர்கள் மருத்துவ ஆலோசனை வழங்கினார்கள்.

    தற்போது முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 2 பேரும், பொது வார்டில் 13 பேர் என 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை சுட்டிக்காட்டி முதலமைச்சருக்கு அறிவுறுத்த கவர்னருக்கு அதிகாரம் உண்டு.
    • தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு காவல் துறையை மட்டுமல்ல அரசு வழக்கறிஞர்களையும் தவறாக வழி நடத்தியுள்ளனர்.

    சென்னை:

    பாரதிய ஜனதா கட்சியினர் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தனர். பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், தமிழக சட்டமன்ற பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில மகளிர் அணி தலைவி உமாரதி, முன்னாள் எம்.எல்.ஏ. காயத்ரிதேவி, மாநில செயலாளர் பிரமிளா சம்பத் மற்றும் அக்கட்சியின் மகளிர் அணி நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் கவர்னரிடம் மனு அளித்தனர்.

    கவர்னரை சந்தித்த பிறகு அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கள்ளச்சாராய உயிரிழப்பு உள்ளிட்டவை குறித்து கவர்னரிடம் 2 மனுக்களை அளித்துள்ளோம். கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக விசாரிக்க கோரிக்கை வைத்துள்ளோம்.

    தமிழகத்தில் டாஸ்மாக்கின் ஆதிக்கம் எப்படி இருக்கிறது என்பதை கவர்னரிடம் எடுத்து கூறி உள்ளோம். அதே நேரத்தில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக இன்னும் 15 நாட்களுக்குள் டாஸ்மாக்கை குறைத்து அதே வருமானத்தை கொண்டு வர முடியும் என்கிற வெள்ளை அறிக்கையையும் முதலமைச்சரிடம் கொடுப்பதாக நாங்கள் கவர்னரிடம் கூறியுள்ளோம்.

    காவல் துறைக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று மகளிர் அணியுடன் வந்து கவர்னரிடம் மனு கொடுத்துள்ளோம்.

    இதற்கான அதிகாரம் கவர்னருக்கு இருக்கிறது என்று நம்புகிறோம். அரசியலமைப்பு சட்டத்தை அமைச்சர் மீறும்போது அதை காக்கும் பொறுப்பு கவர்னருக்கு உண்டு.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை சுட்டிக்காட்டி முதலமைச்சருக்கு அறிவுறுத்த கவர்னருக்கு அதிகாரம் உண்டு.

    தமிழகத்தில் காவல் துறைக்கு சுதந்திரம் இல்லை. தி.மு.க. ஒன்றிய செயலாளர் அனுமதி இல்லாமல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க முடியுமா? கடந்த 2 வருடங்களாகவே நாங்கள் வைக்கும் குற்றச்சாட்டு காவல் துறைக்கு சுதந்திரம் இல்லை என்பது தான். காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு காவல் துறையை மட்டுமல்ல அரசு வழக்கறிஞர்களையும் தவறாக வழி நடத்தியுள்ளனர்.

    இதே போல் அமைச்சர் செஞ்சி மஸ்தானையும் நீக்க கவர்னர் முதலமைச்சருக்கு அறிவுரை சொல்ல வேண்டும்.

    பனை தொழிலாளர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் மீண்டும் கள்ளை கொண்டு வருவதற்கு தமிழக பா.ஜனதா கட்சி உறுதுணையாக நிற்கும். 15 நாளில் வெள்ளை அறிக்கை வெளியிட உள்ளோம். அடுத்த 5 நாளில் விழுப்புரத்தில் மாநாடு நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×