search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medical College"

    • தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் மட்டும் தான் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
    • வெற்று வசனம் பேசியே 3 ஆண்டுகளை தமிழக அரசு வீணடித்துவிட்டது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் 2024-25-ம் ஆண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவோ, புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவோ தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

    தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் மட்டும் தான் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன. மாவட்டத்திற்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி என்ற கொள்கையின் அடிப்படையில் 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இதுவரை புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கோ, ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் 32 மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை ஏற்படுத்துவதற்கோ எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. வெற்று வசனம் பேசியே 3 ஆண்டுகளை தமிழக அரசு வீணடித்துவிட்டது. எனவே, தேசிய மருத்துவ ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று, மருத்துவக் கல்லூரி இல்லாத 6 மாவட்டங்களிலும் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே தரமான கல்வி கிடைக்கும் நிலை உள்ளது.
    • மோடி ஆட்சிக்கு வந்த பின் புதிதாக 15 மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.

    சங்கராபுரம்:

    என் மண் என் மக்கள் யாத்திரையை மேற்கொண்டு வரும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்திற்கு பாத யாத்திரையாக வந்தார்.

    சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    சங்கராபுரம் தொகுதி வளர்ச்சி அடையாமல் பின் தங்கிய நிலையில் உள்ளது. தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு தரமான கல்வி கிடையாது. பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே தரமான கல்வி கிடைக்கும் நிலை உள்ளது. கல்வராயன் மலை, வெள்ளிமலையில் உள்ள மலைவாழ் மக்கள் மட்டும் படிக்கும் பள்ளியில் படித்த 15 பேர் இந்த ஆண்டு ஐ.ஐ.டி.யில் சேர்ந்துள்ளனர்.

    சங்கராபுரம் நகரில் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் வழியில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதனால் பெண் பிள்ளைகள் பள்ளிக்கு எப்படி பாதுகாப்பாக சென்றுவர முடியும். கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் பா.ஜ.க.ஆட்சிக்கு வந்த பின் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வீடுகள், ஒரு லட்சத்து 75 ஆயிரம் கழிவறைகள், ஒரு லட்சத்து 24 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 2013-ம் ஆண்டுக்கு முன் 5 மருத்துவ கல்லூரிகள் மட்டுமே இருந்தது. மோடி ஆட்சிக்கு வந்த பின் புதிதாக 15 மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி புஸ்வானமாக ஆகியுள்ளது. மீண்டும் ஊழலற்ற ஆட்சி அமைய நீங்கள் 3-வது முறையாக மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அண்ணாமலை பேசினார். 

    • வாடகை கட்டடத்திற்கான டெண்டரை எய்ம்ஸ் நிர்வாகம் கோரியுள்ளது.
    • 100 மாணவர்கள் பயிலும் வகுப்பறை, விடுதிகள், மைதானம் உள்ளடக்கிய கட்டடம்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியை தற்காலிக கட்டடத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மேலும், வாடகை கட்டடத்திற்கான டெண்டரை எய்ம்ஸ் நிர்வாகம் கோரியுள்ளது.

    ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை மதுரையில் தற்காலிக கட்டடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    100 மாணவர்கள் பயிலும் வகுப்பறை, விடுதிகள், மைதானம் உள்ளடக்கிய தற்காலிக வாடகை கட்டடத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஓராண்டுக்கு தற்காலிகமாக மதுரையில் வாடகை கட்டடத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், மதுரை தோப்பூரில் இருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 253 பேருக்கு ஒரு மருத்துவர் இருப்பதைக் காரணம் காட்டி மருத்துவக் கல்லூரிகளுக்கு தடை விதிப்பது அநீதி.
    • மருத்துவக் கல்லூரிகளை திறக்க அனுமதிக்கலாமா, வேண்டாமா? என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு தான் உண்டு.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் 253 பேருக்கு ஒரு மருத்துவர் இருப்பதைக் காரணம் காட்டி மருத்துவக் கல்லூரிகளுக்கு தடை விதிப்பது அநீதி. இவை அனைத்திற்கும் மேலாக ஒரு மாநிலத்தில் மருத்துவக் கல்லூரிகளை திறக்க அனுமதிக்கலாமா, வேண்டாமா? என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு தான் உண்டு.

    தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அந்த அதிகாரம் கிடையாது. இந்த விவகாரத்தில் தேசிய மருத்துவ ஆணையம் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான கட்டுப்பாடுகளை விதிப்பதும், அதற்கு மத்திய அரசு உடந்தையாக இருப்பதும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானவை. இதை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கேப்லான் இயக்குநர் டென்சின் ஜெம்யங் ஆகியோர் கையெ ழுத்திட்டு ஆவணங்களை பரிமாறிக்கொண்டனர்.
    • பயிற்சியை அளிக்கும். மேலும் சர்வதேச பணி வாய்ப்புகளில் தகுதி பெறுவதற்கும் திறன் பயிற்சி அளிக்க உள்ளது.

    புதுச்சேரி:

    மணக்குள விநாய கர் மருத்துவ கல்லுாரி யு.எஸ்.ஏ., கேப்லான் நிறுவன த்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

    இதற்கான ஒப்பந்தத்தில் மணக்குள விநாயகர் கல்விக் குழும மேலாண் இயக்குநர் தனசேகரன், கேப்லான் இயக்குநர் டென்சின் ஜெம்யங் ஆகியோர் கையெ ழுத்திட்டு ஆவணங்களை பரிமாறிக்கொண்டனர்.

    கேப்லானின் இந்திய தலைமை அதிகாரி அபிஷேக் பவாதங்கர், மணக்குள விநாயகர் கல்விக் குழும தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் தனசேகரன் செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், மருத்துவ கல்லுாரி இயக்குநர் ராஜகோ விந்தன், துணை இயக்குநர் காக்னே, அகாடமிக் டீன் கார்த்திகேயன், ரிசர்ச் டீன் கலைச்செல்வன், மருத்துவ கண்காணிப்பாளர் பிரகாஷ், துணை கண் காணிப்பாளர்கள் கிரிஜா, ஜெயஸ்ரீ, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கேப்லான் கற்றல் கற்பித்தலில் ஈடு பட்டுள்ள உலகப் புகழ் பெற்ற நிறுவனமாகும். இந்த நிறுவனம் மணக்குள விநாயகர் மருத்துவமனை கல்லுாரியில் தன்னுடைய கற்றல் செயல்பாடுகளை விரிவாக்கம் செய்து, மாண வர்களுக்கு பயிற்சியை அளிக்கும்.

    நெக்ஸ்ட் தேர்வு மருத்துவ மாணவர்களுக்கு தற்போது கட்டாயமாக் கப்பட்டுள்ளது. எனவே நெக்ஸ்ட் தேர்வில் மணக்குள விநாயகர் மருத்துவ மாணவர்கள் தேர்ச்சி பெற சிறந்த பயிற்சி அளிக்க உள்ளது.

    இது தவிர யு.எஸ். எம்.எல்.இ., உள்ளிட்ட சர்வதேச அளவிலான தேர்வுகளுக்கு பயிற்சியை அளிக்கும். மேலும் சர்வதேச பணி வாய்ப்புகளில் தகுதி பெறுவதற்கும் திறன் பயிற்சி அளிக்க உள்ளது.

    • தகவல் தெரிவித்து அதற்குண்டான ஆவணங்களில் கையெழுத்திட்டனர்.
    • சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சி சின்ன காஞ்சிபுரம் திருச்சோலை தெரு பகுதியைச் சேர்ந்தவர் திருவேங்கடம் (வயது 75). இவருக்கு முரளிதரன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சமுதாய கரையோடு வாழ்ந்தவரான திருவேங்கடம், தான் இறந்து போனால் தனது உடலை மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சிக்கு தானமாக வழங்கிட வேண்டும் என தனது மகன் முரளிதரன் மற்றும் குடும்பத்தாரிடம், நண்பர்களிடமும் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திருவேங்கடம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவேங்கடத்தின் கடைசி ஆசையை நிறை வேற்றிடும் வகையில் உறவினர்களுடனும், நண்பர்களுடனும், கலந்து ஆலோசனை செய்த குடும்பத்தினர் முதியவர் திருவேங்கடத்தின் உடலை வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரிக்கு தானம் வழங்க முடிவு செய்து, தகவல் தெரிவித்து அதற்குண்டான ஆவணங்களில் கையெழுத்திட்டனர்.

    அதன்படி திருவேங்க டத்தின் உடலுக்கு உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் குடும்பத்தினர் சம்பிரதாயம் முறைப்படி இறுதி சடங்குகளை செய்த பின்னர் சிறிது தூரம் முதியவர் திருவேங்கடத்தின் உடலை எடுத்துச் சென்று தயாராக இருந்த வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ஆம்பு லன்சில் ஒப்படைத்தனர். சமூக அக்கறையோடு வாழ்ந்த முதியவரின் கடைசி ஆசைப்படி, மருத்துவக் கல்லூரிக்கு முதியவரின் உடலை குடும்பத்தினர் தானமாக வழங்கிய சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • திருமுல்லைவாசல் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மருத்துவக்கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாண வர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி தலைமை வகித்தார்.

    எம்.எல்.ஏ.க்கள் எம்.பன்னீர்செல்வம் (சீர்காழி), நிவேதா.எம்.முருகன் (பூம்புகார்), கோட்டாட்சியர் உ.அர்ச்சனா, ஒன்றியக்குழுத்தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா வரவேற்றார்.

    விழாவில் அமைச்சர் சிவ.வீ.மெய்யனாதன் மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி பேசுகையில், தமிழக முதல்வர் பள்ளி கல்வித்துறைக்கு 40 ஆயிரத்து 299 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் 2022 -23 கல்வி ஆண்டில் 52 அரசு மற்றும் உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் கல்விப்பயிலும் மொத்தம் 6536 மாணவ மாணவிகளுக்கு ரூ.3 கோடியே 14 லட்சத்து 81 ஆயிரத்து 100 மதிப்பில் மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளது.

    தமிழ்நாட்டில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

    மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டுமென பூம்புகார், சீர்காழி சட்டபேரவை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    அதன் அடிப்படையில் விரைவில் மயிலாடுதுறை மாவட்ட த்திற்கு மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதே போல் திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் துறைமுகம் அமைக்க வேண்டும் என சட்டபேரவை உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    விழாவில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார், சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் கலந்து கொண்டனர்.

    தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    • மாவட்டத்தில் 437 பேர் நீட் தேர்வு எழுதினார்கள்.
    • 28 பேருக்கு எம்.பி.பி.எஸ். மருத்துவப்படிப்பு மற்றும் பி.டி.எஸ்.பல் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைத்துள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் 437 பேர் நீட் தேர்வு எழுதினார்கள். இவர்களில் 217 பேர் தேர்ச்சி பெற்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத சிறப்பு உள் இட ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர விரும்புவோருக்கான கலந்தாய்வு சென்னையில் நடைபெற்று வருகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீத சிறப்பு இடஒதுக்கீட்டின்படி 73 மாணவ-மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்றனர்.

    கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் 28 பேருக்கு எம்.பி.பி.எஸ். மருத்துவப்படிப்பு மற்றும் பி.டி.எஸ்.பல் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைத்துள்ளது.

    • 2017 பேட்ச் மருத்துவ மாணவர்கள் பிரிவுபசார விழாவை முன்னிட்டு கல்லூரி நிர்வாகம் சார்பில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
    • அரசின் அறிவிப்பை மருத்துவக் கல்லூரி போன்ற அரசு நிறுவனமே மீறி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி புற்றுநோய் பாதிப்புக்கு பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 18-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் பெங்களூருவில் இருந்து ஏர் ஆம்புலன்சு விமானம் மூம் திருவனந்தபுரத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு இடங்களில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. பின்பு இறுதிச்சடங்குக்காக திருவனந்தபுரத்தில் இருந்து அவரது செந்த ஊரான கோட்டயம் புதுப்பள்ளிக்கு அரசு போக்குவரத்து கழக பேரூந்தில் எடுத்துச் செல்லப்பட்டது.

    திருவனந்தபுரத்தில் இருந்து கோட்டயம் வரை நடந்த அவரது இறுதி ஊர்வலத்தில் சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டுநின்று உம்மன் சாண்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

    உம்மன்சர்ண்டியின் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் கடந்த 18 மற்றும் 19-ந்தேதி ஆகிய 2 நாட்கள் துக்க நாளாக கேரள அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து அந்த இருநாட்களிலும் நடக்க இருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

    இந்நிலையில் உம்மன்சாண்டி மறைந்த 18-ந்தேதியன்று திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் கலைநிகழச்சி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2017 பேட்ச் மருத்துவ மாணவர்கள் பிரிவுபசார விழாவை முன்னிட்டு கல்லூரி நிர்வாகம் சார்பில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனிடம், முன்னாள் கவுன்சிலர் ஸ்ரீகுமார் என்பவர் புகார் மனு அளித்துள்ளார். அவர் தனது புகார் மனுவில், உம்மன் சாண்டி மறைவையடுத்து அரசு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்த துக்க நாளில் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்டு கலை நிகழ்ச்சி நடத்தி உள்ளனர்.

    மது விருந்தும் நடந்துள்ளது. இது குறித்து காவல் மற்றும் கலால் துறைக்கு தகவல் தெரிவித்தேன். அரசின் அறிவிப்பை மருத்து வக்கல்லூரி போன்ற அரசு நிறுவனமே மீறி உள்ளது. இதனால் அதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2014-ம் ஆண்டுக்கு முன்பு மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை 387 ஆக இருந்தது.
    • மருத்துவ படிப்புக்கான எம்பிபிஎஸ் சீட்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 348-இல் இருந்து 99 ஆயிரத்து 763 ஆக அதிகரிப்பு.

    இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 40 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தேசிய மருத்துவ கவுன்சில் விதிகளை பின்பற்றாத காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுதவிர தமிழ் நாடு, குஜராத், அசாம், பஞ்சாப், ஆந்திர பிரதேசம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் செயல்பட்டு வரும் சுமார் 100-க்கும் அதிக மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரமும் ரத்து செய்யப்படலாம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவில் மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருக்கிறது.

    2014-ம் ஆண்டுக்கு முன்பு மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை 387 ஆக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 654 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய மந்திரி பாரதி பிரவீன் பவர் மாநிலங்களவையில் தெரிவித்தார். இதே போன்று 2014-ம் ஆண்டு மருத்துவ படிப்புக்கான எம்பிபிஎஸ் சீட்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 348-இல் இருந்து தற்போது 99 ஆயிரத்து 763 ஆக அதிகரித்து இருக்கிறது.

    மருத்துவ மேற்படிப்புக்கான சீட்களின் எண்ணிக்கை 2014-இல் 31 ஆயிரத்து 185-இல் இருந்து தற்போது ரூ. 64 ஆயிரத்து 559 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் மருத்துவ கல்லூரிகள் மற்றும் எம்பிபிஎஸ் சீட்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரித்து இருக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது குறித்து மருத்துவ துறையை சேர்ந்த வல்லுனர்கள் கூறும் போது,

    'தேசிய மருத்துவ கவுன்சில் ஆதார் சார்ந்த பயோமெட்ரிக் முறையிலான வருகை பதிவேட்டை சார்ந்து இருக்கிறது. ஆனால் மருத்துவர்களின் பணி நேரம் நிர்ணயிக்கப்படாத சூழலே நிலவுகிறது. அவர்கள் இரவு நேரம் மற்றும் அவசர காலங்களிலும் பணியாற்ற வேண்டும். இதனால் தேசிய மருத்துவ கவுன்சில், பணி நேரத்தை நிர்ணயிக்க வலியுறுத்தி வருகிறது. மருத்துவ கல்லூரிகளின் நிர்வாகம் நடைமுறைக்கு உகந்ததாக இல்லை, இதனால் தேசிய மருத்துவ கவுன்சில் இதனை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது,' என்று தெரிவித்தார்.

    இதுகுறித்து மற்றொரு வல்லுனர் கூறும் போது, 'மருத்துவ கல்லூரிகளில் போதுமான வசதிகள் இல்லாத காரணத்தாலேயே தேசிய மருத்துவ கவுன்சில் அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்து வருகிறது. இதுதவிர இதுபோன்ற கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இது முற்றிலும் முரணாக இருக்கிறது. இது உலகளவில் நாட்டின் நற்பெயரை பாதித்து விடும். உலகளவில் அதிக மருத்துவர்களை உருவாக்கும் நாடு இந்தியா. இது போன்ற சம்பவங்கள் வெளியுலகிற்கு வரும் போது, இந்திய மருத்துவர்கள் மீதான நம்பிக்கை உலகளவில் பாதிக்கப்பட்டு விடும்,' என்றார்.

    • மருத்துவக்கல்லூரிக்கு சகோதரரின் உடலை தானமாக பெண் வழங்கினார்.
    • பேராசிரியர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.

    மதுரை

    மதுரை அண்ணாநகர் பெரியார் வீதியில் வசித்து வரும் லட்சுமணன் என்பவரின் மனைவி சுசீலா தேவி. இவரின் தம்பி பிருதிவிராஜ் (வயது67). இவர் உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலேயே இறந்து விட்டார். அவரது உடலை மருத்துவக்கல்லூரிக்கு தானமாக வழங்க சுசீலா தேவி முடிவு செய்தார்.

    இதுகுறித்த தகவலை நேதாஜி ஆம்புலன்ஸ் மற்றும் நேதாஜி அறக்கட்டளை நிர்வாகி ஹரி கிருஷ்ணனிடம் தெரிவித்து ள்ளார். அவரின் ஏற்பாட்டில் மரணம் அடைந்த பிருதிவி ராஜ் உடல் மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு சுசீலா தேவி தானமாக வழங்கினார். அவரின் இந்த சேவையை மருத்துவ கல்லூரி இயக்குனர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.

    கொரோனா தடுப்பு பிரசாரங்களில் மருத்துவ மாணவர்களின் ஈடுபாடு பாராட்டுக்குரியது என தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலெக்டர் செந்தில்ராஜ் பேசினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதா வது:-

    தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இப்போது 1552 படுக்கை களுடன் தேவையான மருத்துவப் பொருட்கள் மற்றும் தேவையான ஒவ்வொரு திறமையையும் கற்று பயிற்சி செய்வதற்கான வழிகள் இருப்பதால், நிஜ உலகத்தை எதிர்கொள்ளும் போதுமான அறிவும், அனுபவமும் உங்கள் அனைவருக்கும் இருப்பதாக நான் நம்புகிறேன்.

    கொரோனா தடுப்பு பிரசாரங்களில் மருத்துவ மாணவர்களின் ஈடுபாடு பாராட்டுக்குரியது. மருத்துவ மாணவர் என்ற நிலையில் இருந்து மருத்துவராக இன்று மாறியுள்ளீர்கள். பெற்றோரின் கனவை நிறைவேற்றியுள்ளீர்கள். என்னுடைய பட்டமளிப்பு விழாவில் பேசியது எனக்கு நினைவில்லை.

    மருத்துவக்கல்லூரி முதல்வர் மிகச் சிறந்த பேச்சாளர் அவருடைய பேச்சை நான் ரசிப்பேன். நீங்கள் எங்கு உட்காருகிறீர்கள் என்பது முக்கியமல்ல. எதனை அடைகிறீர்கள் என்பது தான் முக்கியம்.  கொரோனா வால் 3 ஆண்டுகள் கழித்து  இந்த விழா சிறப்பாக நடைபெறுகிறது. நீங்கள் கஷ்டமான காலத்தில் படித்துள்ளீர்கள்.

    உங்கள் வாழ்க்கை, எதிர்காலம் சிறந்ததாக அமையும். கொரோனா காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது. அதற்கு முக்கிய காரணம் மாணவர்கள்தான். டாக்டர் ஆவது மிகப்பெரிய கனவாக உள்ளது. நிறைய பள்ளிகளில் குழந்தைகளை கேட்டால் டாக்டர் ஆக வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள்.

    சிறு, சிறு தவறுகள் நடந்தா லும் கல்லூரி முதல்வர் மன்னித்து விடுவார். அனைவரும் வெவ்வேறு இடத்திற்கு போகப் போகிறீர்கள். போட்டி நிறைந்த உலகமாக உள்ளது. உங்களுடைய கைகள் ஆண்டவனால் ஆசீர்வதிக்கப்பட்ட கைகள் என்று முதல்வர் கூறினார். அது உண்மையும் கூட.

    உலகம் முழுவதும் மருத்துவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். உங்களுக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களே உங்களது பெற்றோருக்கு இணையாக வைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

    நீங்கள் இங்கிருந்து சென்று பெரிய மருத்துவர்களாகி மீண்டும் இந்த கல்லூரிக்கு வந்து பெருமைகள் சேர்க்க வேண்டும். உங்களுக்கும், உங்களுடைய பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நேரு, துணை முதல்வர் கலைவாணி, கண்காணிப்பாளர் சைலேஸ், மருத்துவ அலுவலர் குமரன், குமாரசாமி, பேராசிரியர்கள், மருத்துவர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
    ×