என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Central Health Department"

    • இந்த மோசடியின் மையம் மத்திய சுகாதார அமைச்சகத்திலேயே இருந்திருக்கிறது
    • லஞ்சப் பணத்தின் ஒரு பகுதி ராஜஸ்தானில் ரூ.75 லட்சம் மதிப்பில் அனுமான் கோயில் கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது .

    இந்தியாவின் மிகப் பெரிய மருத்துவக் கல்வி ஊழல் ஒன்றை சிபிஐ வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

    இந்த மோசடியில், புகழ்பெற்ற சாமியார் ரவி சங்கர் மகராஜ், முன்னாள் கல்வித் தலைவர் டி.பி. சிங் மற்றும் அரசு சுகாதாரத் துறை அதிகாரிகள் உட்பட 34 சக்திவாய்ந்த நபர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

    தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்க இவர்கள் பெரும் தொகை லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

    சாமியார் ரவி சங்கர் அறக்கட்டளையால் நடத்தப்படும் ஒரு கல்லூரிக்கு சாதகமான ஆய்வு அறிக்கையை வழங்குவதற்காக ரூ.55 லட்சம் வாங்கிய மூன்று மருத்துவர்களை சிபிஐ கைது செய்ததில் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.

    தகவல்களின்படி, இந்த மோசடியின் மையம் மத்திய சுகாதார அமைச்சகத்திலேயே இருந்திருக்கிறது. அங்கிருந்த எட்டு அதிகாரிகள் ரகசிய கோப்புகளைப் புகைப்படம் எடுத்து, ஆய்வு தேதிகள் மற்றும் அதிகாரிகள் பெயர்களை கல்லூரி நிர்வாகங்களுக்கு பெரும் லஞ்சம் பெற்று கசியவிட்டுள்ளனர்.

    உதாரணத்திற்கு, ஒரு பல்கலைக்கழக பதிவாளர் மயூரி ராவல், ரகசிய ஆய்வு விவரங்களைப் பகிர்ந்து கொள்ள ரூ.25-30 லட்சம் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

    இதேபோன்று இந்த மோசடி சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ஆந்திரா போன்ற பல மாநிலங்களில் நடந்துள்ளது.

    கல்லூரிகள், ஆய்வாளர்களை ஏமாற்ற போலி ஆசிரியர்களை நியமித்தல், போலி பயோமெட்ரிக் வருகைப் பதிவேடுகளை உருவாக்குதல், போலி நோயாளிகளைக் காட்டுதல் போன்ற தந்திரங்களைப் பயன்படுத்தியுள்ளன.

    இந்தூரில் உள்ள இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரியில் போலி கைரேகை வருகைக்கு ரப்பர் விரல்கள் பயன்படுத்தப்பட்டது அம்பலமாகியுள்ளது.

    லஞ்சப் பணம் ஹவாலா நெட்வொர்க்குகள் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு அதிகாரி பெற்ற லஞ்சப் பணத்தின் ஒரு பகுதி ராஜஸ்தானில் ரூ.75 லட்சம் மதிப்பில் அனுமான் கோயில் கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது .

    இது இந்தியாவின் மிக மோசமான மருத்துவக் கல்வி ஊழல்களில் ஒன்று என்று சிபிஐ தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன.

    இதுவரை 3 மருத்துவர்கள் மற்றும் ஒரு கல்லூரி இயக்குனர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மேலும் இந்த வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

    தமிழகத்தில் ‘ட்ரை வேலண்ட்’ சொட்டு மருந்து பயன்படுத்தப்படவில்லை. அதனால் போலியோ சொட்டு மருந்து குறித்த எந்த பாதிப்பும் தமிழகத்தில் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. #PolioDrops
    சென்னை:

    குழந்தைகளை தாக்கும் போலியோ வைரஸ் 3 வகையானது. முதல் வகை, 2-வது வகை, 3-வது வகை என பிரிக்கப்பட்டுள்ளது.

    இந்த 3 வகை வைரஸ்களும் குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வந்ததால் உலகம் முழுவதும் ‘ட்ரைவேலண்ட்’ என்ற சொட்டு மருந்து மற்றும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது.

    இதன் மூலம் 2 வகையான போலியோ வைரஸ் பாதிப்புகளில் இருந்து குழந்தைகள் பாதுகாக்கப்பட்டு வந்தன.

    நாடு முழுவதும் இந்த ‘ட்ரைவேலண்ட்’ சொட்டு மருந்து 2016 வரை வழங்கப்பட்டு வந்த நிலையில் 2-வது வகை போலியோ வைரஸ் முற்றிலும் ஒழிக்கப்பட்டதால் 2016-க்கு பிறகு பை-வேலண்ட் சொட்டு மருந்து மற்றும் தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    உலகம் முழுவதும் ‘ட்ரை வேலண்ட்’ சொட்டு மருந்து நிறுத்தப்பட்டு தற்போது பை-வேலண்ட் சொட்டு மருந்து வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    பிறந்த குழந்தைகளுக்கு இவ்வகை சொட்டு மருந்து அளிக்கப்படுகிறது. 1½ மாதம், 2½ மாதம், 3½ மாதம் மற்றும் 1½ வயது போன்ற காலங்களில் இந்த சொட்டு மருந்து மற்றும் தடுப்பூசி போடப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒழிக்கப்பட்ட ‘ட்ரை வேலண்ட்’ சொட்டு மருந்தை மீண்டும் மருந்து கம்பெனி மத்திய அரசுக்கு வினியோகம் செய்துள்ளது.

    மத்திய சுகாதாரத்துறை அதனை உத்தரபிரதேசம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் சப்ளை செய்துள்ளது. குழந்தைகளுக்கு சொட்டு மருந்து, தடுப்பூசியும் போடப் பட்டது.

    ஆனால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கிடையில் அந்த மருந்தை மத்திய சுகாதாரத்துறை கண்காணித்ததில் அவை ஏற்கனவே நிறுத்தப்பட்ட மருந்து என தெரியவந்தது.

    தொடர் கண்காணிப்பின் மூலம் நிறுத்தப்பட்ட மருந்து மீண்டும் வினியோகம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை வினியோகம் செய்த அந்த மாநிலங்களிலும் மருந்து சப்ளை நிறுத்தப்பட்டு திரும்ப பெறப்பட்டது.

    இது குறித்து மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. நிறுத்தப்பட்ட ‘ட்ரை வேலண்ட்’ போலியோ சொட்டு மருந்தை மீண்டும் மருந்து நிறுவனம் தவறுதலாக அனுப்பி இருந்ததை மத்திய சுகாதாரத்துறை கண்காணித்து கண்டு பிடித்ததையடுத்து அந்த மருந்து வினியோகம் செய்த 3 மாநிலங்களில் இருந்து திரும்ப பெறப்பட்டுள்ளது.

    இதனால் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சொட்டு மருந்தை உட்கொண்ட குழந்தைகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. வழக்கம் போல தற்போது ‘பை-வேலண்ட்’ சொட்டு மருந்து, தடுப்பூசி குழந்தைகளுக்கு போடப்படுகிறது. பெற்றோர்கள் பயப்பட தேவையில்லை.



    பொதுமக்கள் போலியோ சொட்டு மருந்து குறித்த வதந்தியை நம்ப வேண்டாம் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் ‘ட்ரை வேலண்ட்’ சொட்டு மருந்து வினியோகம் செய்யப்படவில்லை.

    இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி கூறியதாவது:-

    ட்ரை வேலண்ட் சொட்டு மருந்து தமிழகத்தில் பயன்படுத்தப்படவில்லை. எப்போதும் அனைத்து மருந்துகளும் 6 மாதம் இருப்பு வைக்கப்படும். அதனால் போலியோ சொட்டு மருந்து குறித்த எந்த பாதிப்பும் தமிழகத்தில் இல்லை.

    தொடர்ந்து சொட்டு மருந்து கொடுக்கலாம், ஊசியும் போட்டு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #PolioDrops

    கேரளாவில் 4 மாவட்டங்களில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் இந்த மாவட்டங்களுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அறிவுரை வழங்கி உள்ளார். #nipahvirus
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது. கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.

    நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக பலர் உயிர் இழந்து உள்ளனர். ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 17 பேருக்கும் கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 பேருக்கும் நிபா வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது முதல் கட்ட பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இவர்களில் ஒருவர் நர்சு என்பது குறிப்பிடத்தக்கது.

    இதை தொடர்ந்து இந்த 19 பேரின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்காக புனேயில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    கேரளாவிற்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கேரளாவில் முக்கிய சுற்றுலா தலங்களில் குவிந்திருந்தனர்.

    கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் காய்ச்சலை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. இதற்கிடையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜீவ் சதானந்தன் கேரளாவிற்கு சுற்றுலா செல்பவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

    கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு, கண்ணூர் ஆகிய 4 மாவட்டங்களில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் இந்த மாவட்டங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தவிர்க்க வேண்டும். கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மத்திய, மாநில அரசுகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    வைரஸ் காய்ச்சலுக்கான மருந்து, மாத்திரைகள் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அதிகளவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று அவர், தெரிவித்துள்ளார்.



     நிபா வைரஸ் காய்ச்சலுக்கு பலியான நர்சு லினிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நர்சுகள் அஞ்சலி செலுத்திய காட்சி.

    நிபா வைரஸ் தாக்குதலுக்கு பலியான நர்சு லினிக்கு திருவனந்தபுரத்தில் நர்சுகள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான நர்சுகள் கலந்து கொண்டு கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, மவுன அஞ்சலி செலுத்தினார்கள். #nipahvirus




    ×