search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "instruction"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாதிப்புக்காக நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோா் மருத்துவமனைகளை நாடுவதாகக் கூறப்படுகிறது.
    • அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொண்டால் சிறுநீரகங்களை பாதுகாக்கலாம்.

    தமிழகத்தில் கோடை வெயில் உச்சத்தை எட்டி உள்ள நிலையில், பகல் நேரத்தில் வெளியில் செல்வதைத் தவிா்க்குமாறு சுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டு உள்ளன.

    இதனிடையே, சின்னம்மை, உயா் ரத்த அழுத்தம், நீா்ச்சத்து இழப்பு, சரும பாதிப்புகள் பரவலாக மக்களிடையே காணப்படுகின்றன. இந்நிலையில், நீா்க்கடுப்பு எனப்படும் சிறுநீா்ப் பாதை தொற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

    அத்தகைய பாதிப்புக்காக நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோா் மருத்துவமனைகளை நாடுவதாகக் கூறப்படுகிறது.


    இது குறித்து பொது நல மருத்துவ நிபுணா் டாக்டா் அ.ப.பரூக் அப்துல்லா கூறியதாவது:-

    உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து, அதில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன. ஒவ்வொரு சிறுநீரகத்திலும் தலா பத்து லட்சம் நெப்ரான்கள் (ரத்த நுண் சுத்திகரிப்பான்கள்) உள்ளன. அங்கிருந்து உருவாகும் கழிவுகள் யூரிடா் எனப்படும் குழாய் கள் மூலம் சிறுநீா்ப்பையில் சேகரிக்கப்படுகின்றன.

    பின்னர் அவை யூரித்ரா எனப்படும் குழாய் வழியே சிறு நீராக வெளியேறுகிறது. இந்த கட்டமைப்பைத்தான் சிறுநீா்ப்பாதை என அழைக்கிறோம். இதில் ஏதேனும் கிருமித் தொற்று ஏற்படும் போது சிறுநீா் கழிப்பதில் எரிச்சல், வலி, சிரமங்கள் காணப்படும். இதை அலட்சி யப்படுத்தினால், கிருமிகள் சிறுநீரகங்களைத் தாக்கி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

    கோடை காலத்தில் உடலில் போதிய நீா்ச்சத்து இல்லாவிடில் சிறுநீா்ப் பாதையில் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

    சமீபகாலமாக அத்தகைய பிரச்சினைகளுடன் பலா் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருகின்றனா். அதிலும், பெண்களில் பலா் புறச்சூழ்நிலை காரணமாக சிறுநீரை உரிய நேரத்தில் வெளியேற்ற இயலாமல் இருப்பதால் அவா்களில் பெரும்பாலானோருக்கு கிருமித் தொற்று ஏற்படுகிறது.

    இதைத் தவிா்க்க நாளொன்றுக்கு குறைந்தது மூன்று முதல் நான்கு லிட்டா் வரை தண்ணீா், இளநீா், மோா், எலுமிச்சை சாறை அருந்தலாம். தனி நபா் சுகாதாரம் பேணுவது அவசியம். அதேபோன்று, சிறுநீா் கழிக்கும் இடத்தையும், கைகளையும் சானிடைசா் கொண்டு சுத்தம் செய்தால் கிருமித் தொற்று வராமல் தடுக்கலாம்.

    அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொண்டால் சிறுநீரகங்களை பாதுகாக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்பு சர்க்கரை கரைசலை பருகுவது நலம்.
    • செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தலை தவிர்க்கவும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் கூடுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சில பகுதிகளில் வெப்ப அலையின் தாக்கம் ஏற்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதைத் தொடர்ந்து பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் பொதுமக்கள் இந்த பாதிப்புகளில் இருந்து காத்துக்கொள்ள என்னென்ன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். எவற்றையெல்லாம் செய்யக் கூடாது என தெளிவாக கூறியுள்ளார்.

    கோடை வெயில் சுட்டெரித்து வரும் இக்கால கட்டத்தில் பொது மக்கள் வெளியே செல்லும் போதும், வீட்டில் இருக்கும் போதும் தேவையான அளவிற்கு குடிநீரை பருக வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடிப்பதால் வியர்வை மூலம் நீர் இழப்பு ஏற்படுவதை தவிர்க்கப்படும் என்று இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் வழங்கியுள்ள ஆலோசனைகள், வழிமுறைகள் விவரம் வருமாறு:-

    சாலையோர வியாபாரிகள், கட்டிட தொழிலாளர்கள், 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்கள், சுரங்க தொழிலாளர்கள், பஸ் டிரைவர், கண்டக்டர், விவசாயிகள், பயணிகள், காவல் துறையினர், வீடுகளுக்கு உணவு வினியோகம் செய்யக் கூடியவர்கள், தீயணைப்பு பணியாளர்கள், போக்குவரத்து போலீசார் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

    குழந்தைகள், குறிப்பாக பச்சிளம் குழந்தைகள், நோய் வாய்ப்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், நோய்வாய் பட்டவர்கள் மிகுந்த கவனமுடன் வெயிலில் செல்லாமல் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    அடிக்கடி வேலை நிமித்தமாக வெயிலில் செல்பவர்கள், திறந்த வெளியில் வேலை செய்பவர்கள், போதிய அளவுக்கு குடிநீரை பருக வேண்டும். மேலும் ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்பு சர்க்கரை கரைசலை பருகுவது நலம்.

    பொதுமக்கள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள ஓ.ஆர்.எஸ். கார்னரில் வைக்கப்பட்டுள்ள உப்பு சர்க்கரை கரைசலை பருகி தங்களை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ளுமாறு பொது சுகாதாரத் துறையின் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


    மேலும் கோடை வெயில், வெப்ப அலை தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள பயணத்தின் போது குடிநீரை எடுத்து செல்லவும், ஓ.ஆர்.எஸ். எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்கலாம். பருவகால பழங்கள், காய்கறிகள், வீட்டில் சமைத்த உணவை உண்ண வேண்டும்.

    முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருங்கள், நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்கவும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும், வெளியில் செல்லும் போது காலணிகளை அணியவும், மதிய நேரத்தில் குடை பிடித்து செல்ல வேண்டும்.

    வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் குறிப்பாக மதியம் 11 மணி முதல் 3.30 மணி வரை தேவை இல்லாமல் வெளியே செல்லாதீர்கள். வெயில் காலங்களில் வெறுங்காலுடன் வெளியே செல்ல வேண்டாம்.

    சிறு குழந்தைகள் மதிய வேளையில் வீட்டின் வெளியே விளையாடுவதை தவிர்க்க வேண்டும். செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தலை தவிர்க்கவும்.

    வெயிலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்யுங்கள். வெப்பத்தால் மயக்கம் ஏற்பட்டவர்களுக்கு உதவுங்கள், குழப்பமான மன நிலையில் சோர்வாக உள்ளவர்களுக்கு உதவுங்கள். மருத்துவ உதவிக்காக காத்திருப்பவர் களுக்கு 108 மூலம் உதவி செய்யவும், வெயிலில் பாதிக்கப்பட்டவர்களின் ஆடைகள் மேல் குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும். மருத்துவ உதவி தேவைப்படுவோர் 104 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

    • அறிகுறிகள் ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்தாமல் அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தனியாா் மருத்துவமனைகளிலோ பரிசோதனை செய்ய வேண்டும்.
    • தீவிர பாதிப்புக்கு உள்ளானவா்களை அதீத கவனத்துடன் கையாள வேண்டும்.

    சென்னை:

    பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அண்மைக் காலமாக காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைகளை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    புளு வைரஸ்களால் பரவும் இன்புளுயன்சா காய்ச்சல் தற்போது பரவி வருகிறது. அவை நேரடியாக நுரையீரலைப் பாதிக்கக் கூடியது. இருமல், தொண்டை அலா்ஜி, காய்ச்சல், உடல் சோா்வு, உடல் வலி, தலைவலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்தாமல் அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தனியாா் மருத்துவமனைகளிலோ பரிசோ தனை செய்ய வேண்டும்.

    மற்றொருபுறம் மருத்துவா்கள் நோயின் தீவிரத்தைப் பொருத்து சிகிச்சைகளை வழங்குதல் அவசியம். மிதமான பாதிப்புகள் இருந்தால், ஆன்ட்டி வைரல் மருந்துகளோ அல்லது மருத்துவப் பரிசோதனைகளோ தேவையில்லை. ஒரு சில நாள்களுக்கு சம்பந்தப்பட்ட நோயாளிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அதேவேளையில், 65 வயதுக்கு மேற்பட்டவா்கள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகள், நாள் பட்ட நுரையீரல் மற்றும் நரம்பு சாா்ந்த பிரச்சினைகளை எதிர் கொள்பவா்கள், கா்ப்பிணிகள், புற்று நோயாளிகள், உடல் பருமன் உள்ளவா்களுக்கு 'ஓசல்டா மிவிா்' எனப்படும் ஆன்ட்டி வைரல் மருந்துகளை வழங்க வேண்டும்.

    அதேபோன்று தீவிர பாதிப்புக்கு உள்ளானவா்களை அதீத கவனத்துடன் கையாள வேண்டும். மூச்சுத் திணறல், ரத்த அழுத்தம் குறைதல், சீரற்ற இதயத் துடிப்பு, வலிப்பு, சிறுநீா் அளவு குறைதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளானோரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். 'ஓசல்டாமிவிா்' உள்ளிட்ட மருந்துகளுடன் மருத்துவமனையில் அனுமதித்து அவா்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். தேவைப்படுவோருக்கு தடுப்பூசிகள் வழங்கலாம்.

    மருத்துவத்துறையினா், சுகாதாரக் களப்பணியாளா்கள் முகக்கவசம் அணிதல் கட்டாயம். பொது இடங்களுக்குச் செல்லும் மக்கள் மூன்று அடுக்கு முகக்கவசங்களை அணிய வேண்டும்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • காலை 6 மணி முதல் 7 மணிவரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை 2 மணிநேரமும் பட்டாசுகள் வெடிக்க நடவடிக்கை
    • ஊட்டி தமிழ்நாடு ஓட்டலில் விழிப்புணர்வு பேரணி

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பொதுமக்கள் தீபாவளி யன்று பட்டாசுகளை வெடித்து பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட பகுதியில் ஒலி மாசு ஏற்படும். செவிதிறன் குறையும் வாய்ப்பு ஏற்படும்.

    தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் உயிர்க்கோளப்பகுதி என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனவே அங்கு வசிக்கும் பொதுமக்கள் தீபாவளி நேரத்தில் வனவிலங்குகள் மற்றும் அரியவகை தாவரங்கள் ஆகியவற்றை பாதுகாக்க முன்வர வேண்டும்.

    தீபாவளி அன்று பொதுமக்கள் காலை 6 மணி முதல் 7 மணிவரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசுகள் வெடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. எனவே நீலகிரி மாவட்ட த்தில் அரசு நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் பட்டாசு கள் வெடிக்க வேண்டும். மேலும் அதிகஓசை எழு ப்பும் தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்க கூடாது. அப்படி செய்தால் சம்பந்தப்பட்டவர்களின் விற்பனை உரிமை ரத்து செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    முன்னதாக வனத்துறை சார்பில் மாசற்ற தீபாவளி குறித்த விழிப்புணர்வு பேரணி ஊட்டி தமிழ்நாடு ஓட்டலில் நடந்து. இதில் கலெக்டர் அருணா கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.

    ஊட்டி தமிழ்நாடு ஓட்டலில் தொடங்கிய பேரணி, மத்திய பஸ் நிலையத்தில் முடிந்தது. அப்போது பேரணியில் நடங்கேற்ற வர்கள் பட்டாசு வெடிக்க மாட்டோம், காற்று மாசு இல்லாமல் கட்டுப்படுத்து வோம், ஒலிமாசுவை கட்டுப்படுத்துவோம் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    நிகழ்ச்சியில் மாவட்ட வன அதிகாரி (ஊட்டி) கவுதம், உதவி வனபாது காவலர் தேவராஜ், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் மகராஜ், ஊட்டி நகராட்சி பொறியாளர் ஜெகதீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டார்.

    • மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இருக்க வேண்டும்.
    • விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் அறிவுறுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் விதைப்பந்து தூவுதல் திட்ட தொடக்க விழா நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் திலீப் குமார் முன்னிலை வகித் தார். கலெக்டர் ஜெயசீலன் விதைப்பந்து தூவும் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ-மாணவி களுக்கு விதைப்பந்துகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக அரசின் சிறப்பு திட்டமான தமிழ்நாடு பசுமையாக்கள் திட்டம் மாநிலம் முழுவதும் பசுமை பரப்பை அதிகரிக்கும் நோக்கில் செயல்படுத் தப்பட்டு வருகிறது. மாவட் டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை இணைந்து விதைப்பந்து தூவுதல் எனும் சிறப்பு திட்டம் மூலம் தமிழ்நாடு பசுமையாக்கள் இயக்கத்தின் நோக்கத்தினை செயல் படுத்த திட்டமிடப்பட்டுள் ளது.

    மாவட்டத்தின் பசுமையை மேம்படுத்த வும், சுற்றுச்சூழலை பாது காப்பதன் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் பசுமையாக்கல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விதைப் பந்து தூவும் திட்டத்திற்காக சுமார் 3 லட்சம் விதைப் பந்துகள் பெறப்பட்டு, பெறப்பட்ட விதைப் பந்துகளை வனப்பகுதிகள், ஊராட்சி கண்மாய் கரை யோரங்கள் மற்றும் புறம் போக்கு நிலங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மூலம் விதைப்பந்தங்களை தூவ திட்டமிடப்பட்டுள்ளது.

    மாணவர்கள் எதிர் காலத்தில் எந்த ஒரு துறையில் பணியில் இருந்தா லும் சுற்றுச்சூழல் குறித்த புரிதலோடு மற்றவர்க ளுக்கு எடுத்து கூறி விழிப் புணர்வு ஏற்படுத்த வேண் டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அகவிலைப்படி உயர்வை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
    • ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் அறிவுறுத்தினர்.

    சிங்கம்புணரி

    தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நாட்டில் முக்கிய நகரங்க ளின் விலைவாசி புள்ளி உயர்வு அடிப்படையில் 6 மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வு அறிவிப்பது வழக்கம்.

    மத்திய அரசு ஊழியர்க ளுக்கு எப்பொழுதெல்லாம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறதோ, அதே தேதியில் மாநில அரசு ஊழி யர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரி வித்துள்ளார்.

    இந்நிலையில் தமிழ்நாடு அரசும் மத்திய அரசை பின்பற்றி அகவிலைப்படி உயர்வை அளிக்க வேண்டும் என ஆசிரியர், அரசு ஊழியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    தி.மு.க. அரசு பொறுப் பேற்று கடந்த இரண்டரை ஆண்டுகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி பல கட்ட போராட்டங் களை நடத்தி வந்திருக்கி றோம். ஒவ்வொரு முறையும் நிதி நிலையை காரணம் காட்டி எங்கள் கோரிக்கைகள் கிடப்பில் போடப்படு கிறது.

    ஊக்க ஊதியம், சரண் விடுப்பு ஒப்படைப்பு, பதவி உயர்வு போன்ற பலன்களை கடந்த சில ஆண்டுகளாகவே எங்களிடம் இருந்து பறிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் விலைவாசி புள்ளி உயர்வுக்கு ஏற்றால்போல் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு எப்பொழு தெல்லாம் அகவிலைப்படி உயர்வு அளிக்கிறதோ அதை யொட்டி தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் அக விலைப்படி உயர்வு வழங்கட்டு வந்தது.

    கொரோனா பெருந்தொற்றை காரணம் காட்டி அகவிலைப்படி காலம் தாழ்த்தி வழங்கப் பட்டது. இதனால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழி யர்களிடம் ஏற்பட்ட அதி ருப்திக்கு பின்னர் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு எப்பொழுதெல்லாம் அகவிலைப்படி உயர்வை அறிவிக்கிறதோ அதே தேதி யில் தமிழ்நாடு அரசில் பணி புரியும் ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என கடந்த மே 2023-ல் வெளியான அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே முதல்- அமைச்சர் தனது செய்தி குறிப்பில் அளித்த உறுதியின் அடிப்படையில் தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள 4 சதவீத அகவிலைப்படி உயர்வை ஜூலை 1 முதல் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு கிடைக்க அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணுசந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தொழிற்துறை ஆணையர் அர்ச்சனா பட்னாயக் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் அரசின் பல்வேறு திட்டபப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் கணிப்பாய்வு அலுவலர் அர்ச்சனா பட்னாயக் பேசுகையில், முதல்-அமைச்சர் பொதுமக்கள் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அத்தகைய திட்டங்களை பொதுமக்கள் சிரமமின்றி கிடைத்திடும் வகையில் அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தங்கள் துறைவாரியாக மேற்கொள்ளப்படும் திட்டங்களை செயல் படுத்திட வேண்டுமென அலுவலர்களிடம் கேட்டு கொண்டார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இலக்குகளை தெளிவாகவும் விழிப்புணர்வோடும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
    • விருதுநகர் கலெக்டர் மாணவ, மாணவிகளிடம் அறிவுறுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படை யில் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை கலெக்டர் நேரில் அழைத்து கலந்து ரையாடுகிறார்.அதன்படி 35-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளிடம் கலெக்டர் லட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து மாணவ, மாணவி களிடம் கேட்டறிந்தார். அப்போது அவர் பேசிய தாவது:-

    இலக்குகளை தேர்ந்தெடு ப்பதில் தெளி வாகவும், விழிப்புணர் வோடும் இருக்க வேண்டும். விருப்பம் சார்ந்து படிப்பிற்கான இலக்குகளை தேர்ந்தெடு ப்பதை விட, அடுத்த 30, 40 வருடங்கள் சமூகத்தில் எந்த படிப்புக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்பதை அறிந்து இலக்கு களை தெளிவாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

    12-ம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உரு வாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றா லும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு தேவையான விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடின மாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.மேலும், ஒவ்வொரு வருக் கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    • மனுக்கள் பெறப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட ரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இதில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.

    தையல் எந்திரம் வேண்டி மனு அளித்த மனுதாரர்களின் மனுவை உடனடியாக பரிசீலனை செய்து 2 பயனாளிகளுக்கு மாவட்ட சமூல நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் இலவச தையல் எந்திரங் களை கலெக்டர் வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை ஆட்சியர் அனிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக் கழுவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் வித்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பள்ளி வாகனங்களை பாதுகாப்பான முறையில் இயக்க வேண்டும் என டிரைவர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    • சிறப்பு விதி 2012-யை கடைபிடித்து இயக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2023-24 பள்ளி வாகனங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசு பள்ளி வாகனங்கள் சிறப்பு விதி 2012-யை கடைபிடித்து இயக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இதன்படி பள்ளி வாகனங்களை தினந்தோறும் முழுமையாக பரிசோதித்து குறைகளை அறிந்து முறையாக பராமரித்து சீரிய முறையில் பள்ளி வாகனத்தினை இயக்க இம்மாவட்ட தனியார் பள்ளி வாகன உரிமையாளர்கள், பள்ளி பேருந்தின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    பள்ளி பேருந்தின் நடத்துனர்கள் பள்ளி குழந்தைகளை பாதுகாப்பான முறையில் ஏற்றி இறக்கிச்செல்ல கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். மேலும், பள்ளி வாகனங்கள் நகர எல்லையில் 40 கி.மீ வேகத்தில் மிகாலும், பிற அனுமதிக்கப்பட்ட சாலைகளில் 50கி.மீ என்ற வேகத்தில் மிகாமலும் இயக்கப்பட வேண்டும். 2023-2024 கல்வி ஆண்டில் இம்மாவட்டத்தில் கூட்டாய்வு செய்து சரியாக உள்ள பள்ளி வாகனங்கள் கீழ்கண்ட ஸ்டிக்கர் மூலமாக வாகனத்தினுடைய காற்றுத்தடை கண்ணாடியில் ஒட்டப்பட அறிவுறுத்தி அதன்படி ஒட்டி இயக்கப்படுகிறது. சாலை விதிகளை முழுமையாக கடைபிடித்து விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க உறுதி ஏற்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பின்தங்கிய கிராமங்கள் மற்றும் குழந்தைகளை தொழிற்சாலைகள் தத்தெடுக்க வேண்டும்
    • குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு வார விழிப்புணர்வு கருத்தரங்கம்

    புதுச்சேரி:

    புதுவை அரசு தொழிலாளர் துறை சார்பில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு வார விழிப்புணர்வு கருத்தரங்கம் தொழிலாளர் துறை கருத்தரங்கு கூடத்தில் நடந்தது.

    தொழிலாளர் துறை அமைச்சர் சந்திர–பிரியங்கா தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-

    ஆண்டுதோறும் ஜூன் 12-ந்தேதி குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கிறோம். எதிர்ப்பு தினமாக மட்டும் கடை பிடிக்காமல் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்.

    புதுவையில் குழந்தை தொழிலாளர்கள் மிகவும் குறைவு. உலகம் முழு–வதும் எடுக்கப்பட்ட ஆய்வில் கொரோனா காலத்தில் மீண்டும் குழந்தை தொழிலாளர்கள் அதிக–ரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    புதுவையை பிற மாநிலங்களோடு ஒப்பிட முடியாது. ஏனெனில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி திட்டத்தை அமல்படுத்தியுள்ளார். அதேபோல தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். எத்தனை பள்ளிகள் இடஒதுக்கீடு அளிக்கிறது என்பது கேள்விக்குறிதான்.

    அனைத்து சமுதாயத்தி–லும் ஏழைகள் உள்ளனர். இதில் ஜாதி, மத வித்தியாசம் இல்லை. என்னை பொறுத்தவரை வசதியானவர்கள், வசதியற்றவர்கள் என 2 பேர் தான் உள்ளனர்.

    தொழிற்சாலைகள் சமூகபங்களிப்பு திட்டத்தின் கீழ் குழந்தை–களை தத்தெடுக்க வேண்டும். பின்தங்கிய கிராமங்களையும் தத்தெ–டுக்க வேண்டும். சிறுவர்கள் வேலைக்கு வர அவர்களின் குடும்ப சூழலும், ஏழ்மையும்–தான் காரணம். இந்த சூழலை நாம் மாற்ற வேண்டும்.

    இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். அடுத்த ஆண்டு எவ்வளவு குழந்தை தொழிலாளர்களை மீட்டுள்ளோம், தடுத்து உள்ளோம் என்ற புள்ளி விபரங்களோடு தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொழிலாளர் துறை செயலாளர் சுந்தரேசன் வரவேற்றார். அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் சிறப்புரையாற்றினார். புதுவை சட்டப்பணிகள் ஆணைய மாவட்ட நீதிபதி செந்தில்குமார் கருத்துரை வழங்கினார்.

    சமூகநலத்துறை இயக்குனர் ஸ்ரீமதிபத்மாவதி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் முத்துமீனா, குழந்தைகள் நல குழும தலைவர் சிவசாமி ஆகி–யோர் வாழ்த்தி பேசினர். தொழிலாளர் அதிகாரி மரிஜோஸ்பின் சித்ரா நன்றி கூறினார்.

    தொடர்ந்து எஸ்.ஆர்.எம். சட்டப்பள்ளி பேராசிரியர் வின்சென்ட்கொம்புராஜ், அரசு சட்டக்கல்லூரி துணை பேராசிரியர் அனிதா ஆகியோர் குழந்தை தொழிலாளர் முறையின் சமூக தீமையும், சட்ட ஒழுங்குமுறையும் என்ற தலைப்பில் விழிப்புணர்வு உரையாற்றினார்.

    பிரதம மந்திரி கவுரவ நிதித் திட்டத்தில் பி.எம்.கிசான் திட்ட பயனாளிகள் கே.ஒய்.சி. பதிவேற்ற செய்வது அவசியமாகிறது.
    மேட்டூர்:

    பிரதம மந்திரி கவுரவ நிதித் திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு 11-வது தவணைத் தொகை ெபறுவதற்கு விவசாயிகள் தங்களது ஆதார் விபரங்களை பதிவேற்றம் செய்வது அவசியமாகிறது.

     ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பி.எம்.கிசான் வலைதளத்தில் கைரேகையினை பதிவு செய்து வரும் ஓ.டி.பி. எண்ணை வலைதளத்தில் உள்ளீடு செய்து பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். 

    தொலைபேசி எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்காத விவசாயிகள் அருகிலுள்ள இ-சேவை மையத்தின் மூலம் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும் என்று மேச்சேரி வேளாண்மை உதவி இயக்குநர் சுஜாதா தெரிவித்துள்ளார்.
    ×