search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இருக்க வேண்டும்
    X

    மாணவ-மாணவிகளுக்கு விதைப்பந்துகளை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.

    மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இருக்க வேண்டும்

    • மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இருக்க வேண்டும்.
    • விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் அறிவுறுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் விதைப்பந்து தூவுதல் திட்ட தொடக்க விழா நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் திலீப் குமார் முன்னிலை வகித் தார். கலெக்டர் ஜெயசீலன் விதைப்பந்து தூவும் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ-மாணவி களுக்கு விதைப்பந்துகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக அரசின் சிறப்பு திட்டமான தமிழ்நாடு பசுமையாக்கள் திட்டம் மாநிலம் முழுவதும் பசுமை பரப்பை அதிகரிக்கும் நோக்கில் செயல்படுத் தப்பட்டு வருகிறது. மாவட் டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை இணைந்து விதைப்பந்து தூவுதல் எனும் சிறப்பு திட்டம் மூலம் தமிழ்நாடு பசுமையாக்கள் இயக்கத்தின் நோக்கத்தினை செயல் படுத்த திட்டமிடப்பட்டுள் ளது.

    மாவட்டத்தின் பசுமையை மேம்படுத்த வும், சுற்றுச்சூழலை பாது காப்பதன் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் பசுமையாக்கல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விதைப் பந்து தூவும் திட்டத்திற்காக சுமார் 3 லட்சம் விதைப் பந்துகள் பெறப்பட்டு, பெறப்பட்ட விதைப் பந்துகளை வனப்பகுதிகள், ஊராட்சி கண்மாய் கரை யோரங்கள் மற்றும் புறம் போக்கு நிலங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மூலம் விதைப்பந்தங்களை தூவ திட்டமிடப்பட்டுள்ளது.

    மாணவர்கள் எதிர் காலத்தில் எந்த ஒரு துறையில் பணியில் இருந்தா லும் சுற்றுச்சூழல் குறித்த புரிதலோடு மற்றவர்க ளுக்கு எடுத்து கூறி விழிப் புணர்வு ஏற்படுத்த வேண் டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×