search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலக்குகளை தெளிவாகவும் விழிப்புணர்வோடும் தேர்ந்தெடுக்க வேண்டும்
    X

    கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுடன் கலெக்டர் ெஜயசீலன்

    இலக்குகளை தெளிவாகவும் விழிப்புணர்வோடும் தேர்ந்தெடுக்க வேண்டும்

    • இலக்குகளை தெளிவாகவும் விழிப்புணர்வோடும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
    • விருதுநகர் கலெக்டர் மாணவ, மாணவிகளிடம் அறிவுறுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படை யில் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை கலெக்டர் நேரில் அழைத்து கலந்து ரையாடுகிறார்.அதன்படி 35-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளிடம் கலெக்டர் லட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து மாணவ, மாணவி களிடம் கேட்டறிந்தார். அப்போது அவர் பேசிய தாவது:-

    இலக்குகளை தேர்ந்தெடு ப்பதில் தெளி வாகவும், விழிப்புணர் வோடும் இருக்க வேண்டும். விருப்பம் சார்ந்து படிப்பிற்கான இலக்குகளை தேர்ந்தெடு ப்பதை விட, அடுத்த 30, 40 வருடங்கள் சமூகத்தில் எந்த படிப்புக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்பதை அறிந்து இலக்கு களை தெளிவாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

    12-ம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உரு வாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றா லும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு தேவையான விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடின மாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.மேலும், ஒவ்வொரு வருக் கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×