search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 districts"

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. #GajaCyclone
    சென்னை:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முடிவடையவில்லை. எனவே, புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    நாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு டிச.26 வரையும், தஞ்சை மாவட்டத்திற்கு டிச.31 வரையும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.



    திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருவாரூர் கோட்டங்களில் டிச.26 வரை மின்கட்டணம் செலுத்தலாம். தஞ்சை மாவட்டத்தில் புதுக்கோட்டை, ஒரத்தநாடு கோட்டங்களில் டிச.31வரை மின்கட்டணம் செலுத்தலாம்.

    நாகையில் 14 பிரிவுகளில் உள்ள நுகர்வோர் டிச.26 வரை அபராதமின்றி மின்கட்டணம் செலுத்தலாம். திருவாரூர் கோட்டங்களிலும், புதுக்கோட்டையின் அனைத்து கோட்டங்களிலும் டிச.26 வரை மின்கட்டணம் செலுத்தலாம்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நலன் கருதி 3வது முறையாக அவகாசத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் நீட்டித்துள்ளது.

    தாழ்வழுத்த மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு மட்டும் அவகாசம் பொருந்தும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. #GajaCyclone
    கேரளாவில் 4 மாவட்டங்களில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் இந்த மாவட்டங்களுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அறிவுரை வழங்கி உள்ளார். #nipahvirus
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது. கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.

    நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக பலர் உயிர் இழந்து உள்ளனர். ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 17 பேருக்கும் கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 பேருக்கும் நிபா வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது முதல் கட்ட பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இவர்களில் ஒருவர் நர்சு என்பது குறிப்பிடத்தக்கது.

    இதை தொடர்ந்து இந்த 19 பேரின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்காக புனேயில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    கேரளாவிற்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கேரளாவில் முக்கிய சுற்றுலா தலங்களில் குவிந்திருந்தனர்.

    கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் காய்ச்சலை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. இதற்கிடையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜீவ் சதானந்தன் கேரளாவிற்கு சுற்றுலா செல்பவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

    கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு, கண்ணூர் ஆகிய 4 மாவட்டங்களில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் இந்த மாவட்டங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தவிர்க்க வேண்டும். கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மத்திய, மாநில அரசுகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    வைரஸ் காய்ச்சலுக்கான மருந்து, மாத்திரைகள் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அதிகளவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று அவர், தெரிவித்துள்ளார்.



     நிபா வைரஸ் காய்ச்சலுக்கு பலியான நர்சு லினிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நர்சுகள் அஞ்சலி செலுத்திய காட்சி.

    நிபா வைரஸ் தாக்குதலுக்கு பலியான நர்சு லினிக்கு திருவனந்தபுரத்தில் நர்சுகள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான நர்சுகள் கலந்து கொண்டு கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, மவுன அஞ்சலி செலுத்தினார்கள். #nipahvirus




    ×