என் மலர்
நீங்கள் தேடியது "மத்திய சுகாதாரத்துறை"
- இந்த மோசடியின் மையம் மத்திய சுகாதார அமைச்சகத்திலேயே இருந்திருக்கிறது
- லஞ்சப் பணத்தின் ஒரு பகுதி ராஜஸ்தானில் ரூ.75 லட்சம் மதிப்பில் அனுமான் கோயில் கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது .
இந்தியாவின் மிகப் பெரிய மருத்துவக் கல்வி ஊழல் ஒன்றை சிபிஐ வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
இந்த மோசடியில், புகழ்பெற்ற சாமியார் ரவி சங்கர் மகராஜ், முன்னாள் கல்வித் தலைவர் டி.பி. சிங் மற்றும் அரசு சுகாதாரத் துறை அதிகாரிகள் உட்பட 34 சக்திவாய்ந்த நபர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்க இவர்கள் பெரும் தொகை லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
சாமியார் ரவி சங்கர் அறக்கட்டளையால் நடத்தப்படும் ஒரு கல்லூரிக்கு சாதகமான ஆய்வு அறிக்கையை வழங்குவதற்காக ரூ.55 லட்சம் வாங்கிய மூன்று மருத்துவர்களை சிபிஐ கைது செய்ததில் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.
தகவல்களின்படி, இந்த மோசடியின் மையம் மத்திய சுகாதார அமைச்சகத்திலேயே இருந்திருக்கிறது. அங்கிருந்த எட்டு அதிகாரிகள் ரகசிய கோப்புகளைப் புகைப்படம் எடுத்து, ஆய்வு தேதிகள் மற்றும் அதிகாரிகள் பெயர்களை கல்லூரி நிர்வாகங்களுக்கு பெரும் லஞ்சம் பெற்று கசியவிட்டுள்ளனர்.
உதாரணத்திற்கு, ஒரு பல்கலைக்கழக பதிவாளர் மயூரி ராவல், ரகசிய ஆய்வு விவரங்களைப் பகிர்ந்து கொள்ள ரூ.25-30 லட்சம் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இதேபோன்று இந்த மோசடி சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ஆந்திரா போன்ற பல மாநிலங்களில் நடந்துள்ளது.
கல்லூரிகள், ஆய்வாளர்களை ஏமாற்ற போலி ஆசிரியர்களை நியமித்தல், போலி பயோமெட்ரிக் வருகைப் பதிவேடுகளை உருவாக்குதல், போலி நோயாளிகளைக் காட்டுதல் போன்ற தந்திரங்களைப் பயன்படுத்தியுள்ளன.
இந்தூரில் உள்ள இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரியில் போலி கைரேகை வருகைக்கு ரப்பர் விரல்கள் பயன்படுத்தப்பட்டது அம்பலமாகியுள்ளது.
லஞ்சப் பணம் ஹவாலா நெட்வொர்க்குகள் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு அதிகாரி பெற்ற லஞ்சப் பணத்தின் ஒரு பகுதி ராஜஸ்தானில் ரூ.75 லட்சம் மதிப்பில் அனுமான் கோயில் கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது .
இது இந்தியாவின் மிக மோசமான மருத்துவக் கல்வி ஊழல்களில் ஒன்று என்று சிபிஐ தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன.
இதுவரை 3 மருத்துவர்கள் மற்றும் ஒரு கல்லூரி இயக்குனர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக ஆர்.டி.-பிசிஆர் பரிசோதனை செய்திருக்க வேண்டும்
- இந்தியா வந்ததும் 2 சதவீத ரேண்டம் பரிசோதனை மேற்கொள்ளப்படும்
புதுடெல்லி:
சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் தொற்று பரவலை தடுப்பதற்காக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய சுகாதாரத்துறை விதித்துள்ளது.
சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இந்தியா வரும் சர்வதேச விமானங்களில் பயணிப்பவர்களுக்கு 100 சதவீதம் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்றும், புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக ஆர்.டி.-பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், அவர்கள் இந்தியா வந்ததும் 2 சதவீத ரேண்டம் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
- காய்ச்சல், சளி, தொண்டை வலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
- தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும்.
சென்னை:
கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகம், தெலுங்கானா, கேரளத்தை தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் ஜே.என்.1 வகை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கொரோனா பரவல் குறித்து மாநில அரசுகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை மத்திய சுகாதாரத்துறை வழங்கியுள்ளது.
குறிப்பாக, அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் அறிகுறிகள் உள்ளோருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்துமாறு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டார்.
அதன்படி, தினமும் 350-க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் யாருக்கு எல்லாம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தலை சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு செல்வவிநாயகம் வழங்கி உள்ளார். இதுதொடர்பாக அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காய்ச்சல், சளி, தொண்டை வலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோயாளிகள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தீவிர நுரையீரல் தொற்றுக்கு உள்ளானவர்கள், இன்புளூயன்சா போன்ற பாதிப்புக்குள்ளானவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
- புதிதாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 609 ஆக உள்ளது
- தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 92 சதவீதம் பேர் வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்று குணமாகி வருவதாக தகவல்
கொரோனாவின் புதிய வகையான 'ஜேஎன்.1' வகை தொற்று, பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. கடந்த சில வாரங்களாக ஜே.என்.1 வகை உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் புதிதாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலக்கங்களாக இருந்த நிலையில், தற்போது மூன்று இலக்கங்களாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 609 ஆக உள்ளது.
இதனை தொடர்ந்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,368 ஆக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், புதிய வகை கொரொனா தொற்றால் கேரளாவில் இரண்டு பேரும், கர்நாடகாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 92 சதவீதம் பேர் வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்று குணமாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணியவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4.4 கோடியாக அதிகரித்துள்ளது என்றும் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது எனவும் மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பும், தகவல் தொடர்பும் இல்லாததால், நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
- ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் பல்வேறு இணை நோய்களுடன் இருப்பதால், பல துறைகளின் கவனிப்பு அவசியம் ஆகிறது.
புதுடெல்லி:
ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு சிறப்பு மருத்துவ நிபுணரின் ஆலோசனை தேவைப்பட்டால், அவரிடம் சிகிச்சை பெற நோயாளிக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
அப்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை முதல்முறையாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நோயாளிகளுக்கு பரிந்துரை செய்வதில், முரண்பாடுகளும், பொறுப்பேற்கும் தன்மையும் இல்லாததால், இந்த நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன. தான் அனுமதிக்கப்படும் துறையை தவிர, நோயாளிக்கு சிறப்பு மருத்துவமோ, பகுப்பாய்வோ, மருத்துவ ஆலோசனையோ தேவைப்பட்டால், அவருக்கு உடனடியாக பரிந்துரை செய்யப்பட வேண்டும்.
அந்த பரிந்துரையை சம்பந்தப்பட்ட டாக்டர்களே எழுத வேண்டும். முதுநிலை பயிற்சி மருத்துவர்கள், தங்கள் டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தாமல் அந்த பரிந்துரையை முடித்துவிடக்கூடாது.
ஒவ்வொரு டாக்டரும் முந்தைய நாள் தங்களது குழுவினர் கவனித்த பரிந்துரை நோயாளிகளின் பட்டியலை ஆய்வு செய்ய வேண்டும். அப்போதுதான், நோயாளிகள் பராமரிப்பையும், பயிற்சி மருத்துவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கவும் முடியும்.
துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பும், தகவல் தொடர்பும் இல்லாததால், நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் பல்வேறு இணை நோய்களுடன் இருப்பதால், பல துறைகளின் கவனிப்பு அவசியம் ஆகிறது.
பயிற்சி மருத்துவர்களுக்கும் இது நல்ல பயிற்சி முறையாக அமைய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முடிந்தவரை இரைச்சல் இல்லாத ஹெட்போன்களை பயன்படுத்த வேண்டும்.
- சமூக ஊடகங்களின் பயன்பாட்டை குறைக்கவும் அறிவுறுத்த வேண்டும்.
புதுடெல்லி:
இயர்போன்கள் மற்றும் ஹெட்போன்களை அதிகமாக பயன்படுத்துவதால் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு காது கேளாமை பிரச்சனை ஏற்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இதுபற்றி மாநில அரசுகளும், மருத்துவ கல்லூரிகளும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து சுகாதார சேவைகள் இயக்குனர் ஜெனரல் பேராசிரியர் அதுல் கோயல் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
இயர்போன்கள் மற்றும் ஹெட்போன்களை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் காது கேளாமை என்பது ஒரு முக்கியமான உடல்நலம் சார்ந்த பிரச்சனையாகும். ஆனால் பெரும்பாலும் இந்த பிரச்சனை கவனிக்கப்படுவதில்லை. இது குறிப்பாக இளம் வயதினரை பாதிக்கிறது. ஆடியோ சாதனங்கள் மூலம் சத்தமான இசை மற்றும் பிற ஒலிகளை நீண்ட நேரம் மற்றும் அதிகமாக கேட்பது மீளமுடியாத காது கேளாமைக்கு வழிவகுக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி மாநில அரசுகளும், மருத்துவ கல்லூரிகளும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள் செல்போன் பார்க்கும் திரை நேரத்தை குறைக்க வேண்டும். குழந்தைகள் தொடர்ந்து செல்போன் பார்ப்பதால் அவர்களின் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தி அவர்களின் அறிவாற்றல் பாதிக்கப்படும். பொதுமக்கள் 50 டெசிபல்களுக்கு மிகாமல், ஆனால் 2 மணி நேரத்திற்கு மேல் ஒலி அளவு கொண்ட ஆடியோ சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆடியோ கேட்கும் போது அவ்வப்போது இடைவெளிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குறைந்த ஒலி அளவில் ஆடியோவை இயக்க வேண்டும். முடிந்தவரை இரைச்சல் இல்லாத ஹெட்போன்களை பயன்படுத்த வேண்டும்.
குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டுக்கு ஆளாகும்போது அதிகமான ஒலி எழுப்புவதை கட்டுப்படுத்த மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் சமூக ஊடகங்களின் பயன்பாட்டை குறைக்கவும் அறிவுறுத்த வேண்டும்.
பொது இடங்களில் அதிகபட்ச சராசரி ஒலி அளவு 100 டெசிபல்களுக்கு மிகாமல் இருப்பதையும், பொதுமக்கள் பாதிக்கப்படாமல் தடுப்பதையும் மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.