search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவில் மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று
    X

    இந்தியாவில் மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று

    • புதிதாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 609 ஆக உள்ளது
    • தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 92 சதவீதம் பேர் வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்று குணமாகி வருவதாக தகவல்

    கொரோனாவின் புதிய வகையான 'ஜேஎன்.1' வகை தொற்று, பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. கடந்த சில வாரங்களாக ஜே.என்.1 வகை உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் புதிதாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலக்கங்களாக இருந்த நிலையில், தற்போது மூன்று இலக்கங்களாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 609 ஆக உள்ளது.

    இதனை தொடர்ந்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,368 ஆக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், புதிய வகை கொரொனா தொற்றால் கேரளாவில் இரண்டு பேரும், கர்நாடகாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 92 சதவீதம் பேர் வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்று குணமாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணியவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4.4 கோடியாக அதிகரித்துள்ளது என்றும் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது எனவும் மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×