search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "JN 1"

    • இதுவரை 26 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு 23 ஜே.என்.1.1 வகை கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
    • வடகிழக்கு பருவமழையையொட்டி 26 ஆயிரத்து 837 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 12.28 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் நேற்று ரூ.27.96 கோடி மதிப்பீட்டில் காசநோயைக் கண்டறிய அதிநவீன விரைவு மூலக்கூறு கண்டறியும் கருவிகள், இந்தியன் ஆயில் கார்பரேஷன் (ஐ.ஓ.சி.எல்.) நிறுவனத்தின் பெரு நிறுவன கூட்டு சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து (சி.எஸ்.ஆர்.) வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி வருமாறு:-

    2025-ம் ஆண்டிற்குள் காசநோய் இல்லா தமிழ்நாடு என்ற இலக்கை அடையும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஓராண்டு முழுவதும் 20 லட்சம் சளி பரிசோதனைகள் செய்யப்பட்டு இதுவரை தமிழ்நாட்டில் 97 ஆயிரம் காசநோயாளிகள் கண்டறியப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதோடு, 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உதவியுடன் ஊட்டச்சத்து மருந்துகள் தரப்படுகிறது.

    தற்போது ஐ.ஓ.சி.எல். நிறுவனத்துடன் செய்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, காசநோய் மூலக்கூறு கண்டறியும் கருவிகளை வாங்கும்போது 272 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காசநோய் கண்டறியும் செயல்பாடுகள் அதிகரிக்கும்.

    கொரோனா பாதிப்பு 20 என்ற எண்ணிக்கையில் மட்டும்தான் இருக்கிறது. நேற்று 25 என்றளவில் இருந்தது. அதில் சென்னையில் 15 பாதிப்பு காணப்பட்டது. உருமாறிய ஜே.என்.1 கொரோனா வைரசஸ் உலகளவில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சிங்கப்பூரில் ஆயிரம் என்றளவில் கொரோனா பரவியிருந்தது. 5-வது டோஸ் தடுப்பூசி வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இதுபற்றி சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவர்களுடன் தொடர்ந்து பேசுகிறோம். இந்தியாவில் அதற்கான அவசியம் தற்போது எழவில்லை என்று மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை கூறியுள்ளது.

    வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிகள், சிறு குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், இணை நோய் உள்ளவர்கள் பொதுவான இடங்களுக்கு செல்லும்போது முககவசம் அணிவது, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும் என்று மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறையும், உலக சுகாதார நிறுவனமும் அறிவுறுத்தியுள்ளன.

    இதுவரை 26 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு 23 ஜே.என்.1.1 வகை கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குழு பாதிப்பு எங்கும் ஏற்படவில்லை.

    வலிநிவாரண மருந்து பயன்பாட்டை தடுக்க முடியாது. மருந்தகங்கள் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை வழங்கினால், 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மூலம் குட்கா, பான்மசாலா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் கண்டறியப்பட்டு 1000-க்கும் மேற்பட்ட கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

    வடகிழக்கு பருவமழையையொட்டி 26 ஆயிரத்து 837 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 12.28 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். மிச்சாங் புயலினால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் 13ஆயிரத்து482 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 7.95 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

    தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழையினால் 7,892 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 48 ஆயிரத்து 604 பேர் பயனடைந்துள்ளனர். ஆக மொத்தம் கடந்த 2 மாதங்களாக 24.13 லட்சம் பேர் மருத்துவ முகாம்களின் மூலம் பயனடைந்துள்ளனர். இதன் மூலம் மழைக்கால நோய்களின் தாக்கம் குறைக்கப்பட்டுள்ளது. 40 லட்சம் குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. மிச்சாங் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும், மருத்துவ கட்டமைப்புகளை சரிசெய்வதற்கு ரூ.49 கோடி தொகை மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் உள்ள 3 பல் மருத்துவக்கல்லூரிகள் மூலம் ஏழை எளிய மக்கள் மிகவும் பயன் அடைந்து வருகிறார்கள்.
    • இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முககவசம் அணிந்து செல்ல வேண்டும்.

    சென்னை:

    சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று ரூ.25 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பீட்டில் சிறப்பு பல் ஆஸ்பத்திரி, கலையரங்கம், பாதுகாவலர் அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆகியவற்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் ஜெ.சங்குமணி மற்றும் டாக்டர்கள், அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

    பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள 3 பல் மருத்துவக்கல்லூரிகள் மூலம் ஏழை எளிய மக்கள் மிகவும் பயன் அடைந்து வருகிறார்கள். இதேபோல, ரூ.64 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் 620 மாணவர்கள் தங்கும் வகையில் விடுதி கட்டிடம் கட்டும் பணி இந்த மாத இறுதியில் தொடங்கி வைக்கப்படவுள்ளது.

    மேலும், ரூ.135 கோடி மதிப்பீட்டில், ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியின் 750 முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்கும் வகையில் விடுதி கட்டிடம் கட்டப்பட உள்ளது. மொத்தம் ரூ.200 கோடி செலவில் ஆயிரத்து 400 மாணவர்கள் தங்கும் வகையில் 2 விடுதி கட்டிடம் இந்த மாத இறுதியில் முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கி வைக்கப்பட உள்ளது. விடுதிகள் கட்டும் பணி 1½ ஆண்டுகளில் முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்படும்.

    ஜே.என்.1 உருமாறிய கொரோனா தொற்று தற்போது பரவி வருகிறது. கேரளாவில் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் குழு பாதிப்பு ஏற்படவில்லை. மிதமான பாதிப்புகள் ஏற்பட்டு 4 நாட்களிலேயே சரியாகிவிடுகிறது.

    எனவே பொதுமக்கள் அச்சம்கொள்ள தேவையில்லை. இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முககவசம் அணிந்து செல்ல வேண்டும். கொரோனாவிற்கு தனி வார்டு அமைக்கப்படுமா என சமூக வலைதளங்களில் சிலர் கேட்கிறார்கள். தேவையற்ற பீதியை கிளப்புகிறார்கள். தனி வார்டு அமைத்து சிகிச்சை அளிக்கும் வகையில் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. யாரும் பதற்றம் அடைய வேண்டாம்.

    மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 1 கோடியே 67 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். நிதிநிலை அறிக்கையில் தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களும் பயனடையும் வகையில் இந்த திட்டத்தை விரிவுபடுத்த அறிவுறுத்தப்பட்டது.

    அந்த வகையில், மிக விரைவில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும். இதேபோல 2 ஆயிரத்து 242 கிராம சுகாதார நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆயிரத்து 21 டாக்டர்கள் தேர்வு செய்வதில் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் முடிவுக்கு வரப்பட்டு தற்போது கொரோனா மதிப்பெண் வழங்கும் பணி நடந்து வருகிறது. ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் தேர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காய்ச்சல், சளி, தொண்டை வலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
    • தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும்.

    சென்னை:

    கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகம், தெலுங்கானா, கேரளத்தை தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் ஜே.என்.1 வகை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

    கொரோனா பரவல் குறித்து மாநில அரசுகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை மத்திய சுகாதாரத்துறை வழங்கியுள்ளது.

    குறிப்பாக, அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் அறிகுறிகள் உள்ளோருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்துமாறு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டார்.

    அதன்படி, தினமும் 350-க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் யாருக்கு எல்லாம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தலை சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு செல்வவிநாயகம் வழங்கி உள்ளார். இதுதொடர்பாக அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காய்ச்சல், சளி, தொண்டை வலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோயாளிகள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

    தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தீவிர நுரையீரல் தொற்றுக்கு உள்ளானவர்கள், இன்புளூயன்சா போன்ற பாதிப்புக்குள்ளானவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    • தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பின் வேகம் அதிகரித்து வருகிறது.
    • கொரோனா பாதிப்பில் இருந்து 24 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    சென்னை:

    கொரோனா தொற்று கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் உகான் மாநிலத்தில் பரவி உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த தொற்று தமிழ்நாட்டில் 2020-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் ஊடுருவியது. இதனால், தமிழ்நாட்டில் பாதிப்பு அதிகரித்து வந்தது. அதன்பின், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்தது. தொடர்ந்து, கொரோனாவிற்கு தடுப்பூசிகளும் கண்டுபிடிக்கப்பட்டு படிப்படியாக கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தது.

    இதையடுத்து, மீண்டும் உருமாறிய புதிய வகை கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. கேரளாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு வேகமாக பரவ தொடங்கியது.

    அதனை தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பின் வேகம் அதிகரித்து வருகிறது. ஒற்றை இலக்கத்தில் இருந்த பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. நீண்ட நாட்களாக கொரோனா பாதிப்பில் தமிழ்நாட்டில் எந்த உயிரிழப்பும் ஏற்படாமல் இருந்தது. இந்தநிலையில், நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி (வயது 55) என்பவர் உயிரிழந்தார்.

    தமிழ்நாட்டில் நேற்று 158 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சென்னையில் 16 பேர், கோவையில் 3 பேர், நீலகிரி, ராணிப்பேட்டை, சேலம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து 24 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துள்ளது.

    மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த சில வாரங்களாக ஜே.என்.1 வகை உருமாறிய கொரோனா தொற்று பல நாடுகளில் பரவி வருகிறது.
    • புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் ரத்த மாதிரியையும் சேகரித்து ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை:

    கொரோனா தொற்று பாதிப்பு சில மாதங்களாக குறைந்திருந்தாலும், கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி கொண்டே வருகிறது.

    உலகின் பல நாடுகளில் 50-க்கும் மேற்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுகள் காணப்படுவதாக உலக சுகாதார நிறுவனமும் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஜே.என்.1 வகை உருமாறிய கொரோனா தொற்று பல நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் கடந்த 26-ந் தேதி வரை 69 பேர் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கோவை புலியகுளத்தை சேர்ந்த 34 வயது பெண்ணுக்கு புதிய வகை ஜே.என்.1 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தகவல் அறிந்ததும் சுகாதாரத்துறையினர் அங்கு விரைந்து சென்று இளம்பெண்ணை தனிமைப்படுத்தினர். மேலும் அவரது பெற்றோருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    அந்த பகுதி முழுவதும் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் கிருமி நாசினி தெளித்து சுகாதார பணியும் மேற்கொள்ளப்பட்டது. அவரது பெற்றோரையும் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தினர்.

    அதனை தொடர்ந்து, புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் ரத்த மாதிரியையும் சேகரித்து ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவரை சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறுகையில், புலியகுளத்தை சேர்ந்த 34 வயது பெண்ணுக்கு ஜே.என்.1 வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். அண்மையில் அவர் எந்த பயணத்தையும் மேற்கொள்ளவில்லை என்றார்.

    கோவையில் ஜே.என்.1 வகை கொரோனா ஒருவருக்கு உறுதியானதை அடுத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் இணைந்து வீடு வீடாக சென்று காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என கேட்பதுடன், பரிசோதனையும் மேற்கொள்கின்றனர்.

    காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அருகில் உள்ள சுகாதார மையம், ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற அறிவுறுத்தி அனுப்பி வைத்து வருகின்றனர்.

    இதுதவிர மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் கிருமி நாசினி தெளிப்பது, கொசு மருந்து அடிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    குறிப்பாக 100 வார்டிலும் எந்தெந்த பகுதியில் கொரோனா உள்ளதோ அங்கு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தும் வருகின்றனர்.

    கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும், அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    புதிய வகை கொரோனா பரவுவதை அடுத்து கோவையில் பொது இடங்களில் மக்கள் கூடும்போது முக கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அத்துடன் மாவட்டம் முழுவதும் 4 நடமாடும் காய்ச்சல் கண்டறியும் குழு, 36 மருத்துவ குழுக்களும் அமைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.

    மாவட்டத்தின் எல்லைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் தீவிர பரிசோதனைக்கு பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    • 2020-ல் கொரோனா வைரஸ் பரவும்போது ஆல்பா வைரசாக பரவியது.
    • கொரோனாவின் உருமாறிய ஒமைக்ரான் வகை வைரஸ் வெளிநாட்டில் உருவானது.

    சென்னை:

    கொரோனா தொற்றுக்கு பிறகு உருமாறி உருமாறி பல வைரஸ்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அந்த வகையில் ஒமைக்ரானில் இருந்து உருமாறிய ஜே.என்-1 என்ற வைரஸ் பரவி வருவது பற்றி உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளை உஷார்படுத்தி உள்ளது.

    இந்த வைரஸ் தாக்கம் எப்படி இருக்கும் என்பது பற்றி தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது:-

    ஒரு காலத்தில் இன்புளுயன்சா பரவியது. அதன் பிறகு அது மறைந்து விட்டதா? இல்லை. சீசன் காய்ச்சலாக குளிர்காலத்தில் பரவுகிறது. அப்படியே கட்டுப்பட்டும் விடுகிறது.

    அது மட்டுமல்ல இன்புளுயன்சாவில் இருந்து ஏ மற்றும் பி என்ற இரு உருமாறிய வைரஸ்களும் வந்தன.

    இதன் மூலம் சாதாரண வைரஸ் காய்ச்சல், பன்றி காய்ச்சல் ஆகியவையும் வருகின்றன. ஆனால் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

    அதே போல்தான் கொரோனா வைரசும். அது முற்றிலுமாக ஒழிந்து விடாது. இருந்துகொண்டேதான் இருக்கும்.

    2020-ல் கொரோனா வைரஸ் பரவும்போது ஆல்பா வைரசாக பரவியது. அந்த ஆண்டு இறுதியில் 'டெல்டா' வகை வைரசாக உருமாறி பரவியபோதுதான் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. நேரடியாக நுரையீரலை தாக்கி உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.

    அப்போது நம்மிடம் தடுப்பு மருந்துகளும் இல்லை. அதன் பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அனைவருக்கும் செலுத்தப்பட்டது. பெரும்பாலும் எல்லோரும் 3 டோஸ் தடுப்பூசி போட்டுள்ளார்கள்.

    இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவானது. அதேபோல் கொரோனா தாக்கியதாலும் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது. இதனால் படிப்படியாக பாதிப்பு குறைந்தது.

    கொரோனாவின் உருமாறிய ஒமைக்ரான் வகை வைரஸ் வெளிநாட்டில் உருவானது. நம் நாட்டில் நைஜீரியாவில் இருந்து வந்தவரிடம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு எக்ஸ்.பி.பி. என்ற வகை உருமாறி வந்தது. அதுவும் மறைந்து இப்போது உருமாறிய ஜே.என்-1 என்ற வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இது 26 பேரிடம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் யாருக்கும் பரவவில்லை. பரிசோதனையை அதிகரிக்க அதிகரிக்க கூடுதலாக கண்டுபிடிக்க முடியும்.

    இதில் நாம் பார்க்க வேண்டியது பாதிக்கப்பட்டவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதுதான். யாரும் படுத்த படுக்கையாகவில்லை. எனவே இதன் தாக்கம் ஆபத்தை ஏற்படுத்தாது.

    மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இது புதுவகை வைரஸ் இல்லை. மிக தீவிரமாகி நுரையீரலை பாதிப்பது இல்லை. மேலும் ஏற்கனவே தடுப்பூசி எடுத்து கொண்டிருப்பதால் உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியால் வைரசின் வீரியம் குறைக்கப்படும். எனவே கொரோனாவை நினைத்து பீதி அடைய வேண்டியது இல்லை.

    ×