என் மலர்
நீங்கள் தேடியது "Health Ministry"
இந்தியாவில் 110 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மான்டவியா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவில் கடந்த 266 நாட்களில் இல்லாத அளவிற்கு நேற்று கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
இந்நிலையில், தமிழகம் உட்பட பல்வேறு மாநில சுகாதார மந்திரிகளுடன் மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் உட்பட பல்வேறு மாநில சுகாதார மந்திரிகள், மாநில சுகாதாரத் துறை செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். காணொலி வாயிலாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது:
பஸ் ஸ்டாண்ட், ரெயில் நிலையங்களில் தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும். நடமாடும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட வேண்டும். நாட்டில் 12 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த தயாராக உள்ளனர்.
தற்போது வரை 79 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 38 சதவீதம் பேர் இரண்டாம் தவணை செலுத்தி உள்ளனர்.
நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கண்டிப்பாக முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அதனை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்த பின்னர் 45 மாதங்களில் மருத்துவமனை செயல்படத் தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. #MaduraiAIIMS #MaduraiHC
மதுரை:
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து, அதற்கான பணிகளை தொடங்கி உள்ளது. இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், எய்ம்ஸ் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், எய்ம்ஸ் அமைவதற்கான அனுமதியை அரசிதழில் வெளியிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்கும்படி கூறியிருந்தது.

நிதிக்குழு ஒப்புதல் அளித்ததும் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கோரப்படும் என்றும், அமைச்சரவை ஒப்புதல் அளித்தபின்னர் 45 மாதங்களில் எய்ம்ஸ் செயல்படத் தொடங்கும் என்றும் மத்திய சுகாதாரத்துறை கூறியது. இதையடுத்து கே.கே.ரமேஷ் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. #MaduraiAIIMS #MaduraiHC
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து, அதற்கான பணிகளை தொடங்கி உள்ளது. இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், எய்ம்ஸ் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், எய்ம்ஸ் அமைவதற்கான அனுமதியை அரசிதழில் வெளியிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்கும்படி கூறியிருந்தது.
இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய சுகாதாரத்துறை சார்பில் எய்ம்ஸ் பணிகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நிதிக்குழுவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
