என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகையிலை"

    • இந்தியாவில் புகைபிடிப்பதை கைவிடுபவர்களின் விகிதம் குறைவாகவே உள்ளது.
    • உலகளவில், சிகரெட்டுகளுக்கு விவேகமான மாற்றாக நிகோட்டின் பைகள் பிரபலமடைந்து வருகின்றன.

    புதுடெல்லி:

    இந்தியாவில் புகைப்பழக்கம் பற்றிய பரபரப்பான புள்ளி விவரம் வெளியாகி உள்ளது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (சி.டி.சி.) தரவுகளின்படி, புகையிலை பழக்கத்தால் ஆண்டுதோறும் இந்தியாவில் 13 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. இந்தியாவில் புகையிலையின் சுமை மிகப்பெரியது, 10 இந்தியர்களில் ஒருவர் புகையிலை தொடர்பான நோய்களால் முன்கூட்டியே இறக்கிறார் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

    இந்தியாவில் புகைபிடிப்பதை கைவிடுபவர்களின் விகிதம் குறைவாகவே உள்ளது. சுமார் 7 சதவீதம் பேர் மட்டுமே எந்த உதவியுமின்றி வெற்றிகரமாக புகைபிடிப்பதை விட்டுவிடுகிறார்கள். புகையிலை தொடர்பான நோய்களுக்கு இந்தியா ஆண்டு தோறும் ரூ.1.77 லட்சம் கோடிக்கு மேல் செலவிடுகிறது.

    உலகளவில், சிகரெட்டுகளுக்கு விவேகமான மாற்றாக நிகோட்டின் பைகள் பிரபலமடைந்து வருகின்றன. இந்த தயாரிப்புகள் இப்போது சுவீடன், நார்வே, அமெரிக்கா மற்றும் டென்மார்க் உள்பட 34 நாடுகளில் கிடைக்கின்றன. புகையற்ற நிகோட்டின் மாற்றுகள், புகையிலையில் உள்ள தார் மற்றும் எரிப்பை தடை செய்வதால், புகைபிடிப்பதைவிட 95 சதவீதம் வரை தீமை குறைந்ததாக உள்ளதாக இங்கிலாந்து ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இது புகைபிடிப்பவர்கள் சிகரெட்டுகளை விட்டு விலகுவதை அதிகரிக்கும் என்று இந்திய டாக்டர்களும் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டலில், இந்த ஆண்டுக்குள் புகையிலை பயன்பாட்டை 30 சதவீதம் குறைக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த இலக்கை, நிகோட்டின் மாற்று மூலம் வேகமாக எட்ட முடியும் என்று கூறப்படுகிறது.

    • 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டது
    • 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அமலுக்கு வருகிறது.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டு 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.

    அதே போல் சில பொருட்களுக்கு 40% ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    அவ்வகையில் பான் மசாலா, புகையிலைப் பொருட்கள் மற்றும் கார்பனேற்ற குளிர்பானங்களுக்கு 28 சதவீதமாக இருந்த வரி, 40% ஆக உயர்த்தப்பட்டு சிறப்பு வரி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

    மேலும், 1,500 சிசி திறனுக்கு மேல் உள்ள சொகுசு பைக்குகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல்களுக்கு 40% வரி விதிக்கபட்டுள்ளது. 

    • குறைந்தபட்சம் 100 சிகரெட் பிடித்த இளைஞர்கள் புகைப்பழக்கத்தை நிறுத்த விரும்புவதாகவும், ஆனால் விட முடியாமல் தவிப்பதாகவும் கூறியுள்ளனர்.
    • புகையிலை பழக்கம் கொண்டவர்களுக்கு சுவாச பிரச்சனைகள் மற்றும் புற்றுநோய் பாதிப்புகள் அதிகம் ஏற்படுகிறது.

    இளைஞர்கள் மற்றும் சிறுவர்களிடையே அதிகரித்து வரும் புகைப்பழக்கம் தொடர்பாகவும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாகவும் ஆய்வு நடந்தப்பட்டது. அதன் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

    பள்ளிகள் இருக்கும் இடங்களில் 100 மீட்டர் தொலைவுக்குள் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்கு தடை உள்ளது. மேலும் தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யவும் தடை உள்ளது.

    ஆனால் பல இடங்களில் பள்ளிகளின் அருகில் உள்ள கடைகளில் சிகரெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் குட்கா உள்ளிட்ட பொருட்களும் தடையின்றி கிடைக்கிறது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் 7 வயதிலேயே புகைப்பழக்கத்துக்கு அடிமையாவதாக ஆய்வுகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளன.

    இந்தியாவில் 11.4 சதவீத சிறுவர்கள் தங்களின் 7 வயதிலேயே சிகரெட் பிடிக்க தொடங்குகிறார்கள். 17.2 சதவீதம் சிறுவர்கள் பீடி புகைக்கிறார்கள். 24 சதவீத சிறுவர்கள் 7 வயதிலேயே குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை உட்கொள்கிறார்கள்.

    இந்தியாவில் 13 முதல் 15 வயதுக்கு உள்பட்ட 3.7 கோடி சிறுவர்கள் புகையிலை பயன்படுத்துகிறார்கள். தினமும் புகைபிடிக்கும் பெரியவர்களில் 87 சதவீதம் பேர் தங்களின் 18 வயதில் முதல் முறையாக புகைப்பழக்கத்தை தொடங்கியதாக தெரிவித்து உள்ளனர். 95 சதவீதம் பேர் தங்களின் 21 வயதில் புகைப்பழக்கத்தை தொடங்கியுள்ளனர். குறைந்தபட்சம் 100 சிகரெட் பிடித்த இளைஞர்கள் புகைப்பழக்கத்தை நிறுத்த விரும்புவதாகவும், ஆனால் விட முடியாமல் தவிப்பதாகவும் கூறியுள்ளனர்.

    சென்னையிலும் பள்ளிகளின் அருகில் பெரும்பாலான கடைகளில் சிகரெட் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் பள்ளிகளில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் உள்ள 392 கடைகளில் தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சென்னையில் 86 தொடக்கப்பள்ளிகளின் அருகில் 176 கடைகளிலும், 129 மேல்நிலைப்பள்ளிகளின் அருகில் 193 இடங்களிலும், 32 கல்லூரிகளின் அருகில் 67 கடைகளிலும் புகையிலை பொருட்கள் விற்கப்படுகின்றன.

    புகையிலை பழக்கம் கொண்டவர்களுக்கு சுவாச பிரச்சனைகள் மற்றும் புற்றுநோய் பாதிப்புகள் அதிகம் ஏற்படுகிறது. குறிப்பாக வாய் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. சென்னையில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை, 20 முதல் 39 வயதுக்குட்பட்ட ஆண்களில் 1 லட்சம் பேரில் 3.5 பேர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதுவே 2014 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் 1 லட்சம் பேரில் 9.7 பேர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே வயதுடைய பெண்களில், அதே காலகட்டத்தில் ஒரு லட்சத்திற்கு 0.8 ஆக இருந்த வாய் புற்றுநோய் பாதிப்பு 1.1 ஆக அதிகரித்துள்ளது.

    சென்னையில் பள்ளிகளின் அருகில் உள்ள மளிகை கடைகள், பெட்டிக்கடைகள், பல்பொருள் அங்காடிகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சில இடங்களில் எழுது பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளிலும் சிகரெட் விற்பனை செய்வது கண்டறியப்பட்டுள்ளது.

    இதையடுத்து மாணவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள், அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கர்நாடக மாநில அரசு சட்டமன்றத்தில் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியது.
    • இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு கடந்த 23ஆம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

    புகையிலை பொருட்களை வாங்குவதற்கும், பொது இடங்களில் உபயோகிக்கவும் வயது வரம்பு 18 ஆக இருந்தது. இந்த வயது வரம்பை 21ஆக உயர்த்தும் வகையில் கர்நாடக மாநில அரசு சட்டமன்றத்தில் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியது.

    இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு கடந்த 23ஆம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தெடர்ந்து சட்டம் அமலுக்கு வருவதாக கர்நாடக மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    இந்த சட்டத்தின்படி 21 வயதிற்கு உட்பட்டோர் எந்தவொரு பொது இடத்திலும் புகையிலை தயாரிப்பு பொருட்களை பயன்படுத்தப்பட்டது. அதாவது புகைப்பிடித்தல், புகையிலை எச்சில் துப்புவது சட்டத்தை மீறுவதாகவும்.

    எனினும், 30 அறைகளை கொண்ட ஓட்டல் அல்லது 30 பேர் அமரும் வகையிலான ரெஸ்டாரன்ட் அல்லது விமான நிலைங்களில் புகைப்பிடிப்பதற்கான தனி இடங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேவேளையில் ஹூக்கா பார்கள் திறக்கவும், செயல்படவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடைக்காரர்கள் 21 வயதிற்கு உட்பட்டோருக்கு புகையிலை விற்பனை செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    • பசுவந்தனை போலீசார் ராஜீவ் நகர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • 3 பேரையும் போலீசார் கைது செய்து, 36 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்

    புதியம்புத்தூர்:

    பசுவந்தனை இன்ஸ்பெக்டர் சுதேசன் மற்றும் போலீசார் பசுவந்தனை -கோவில்பட்டி ரோட்டில் ராஜீவ் நகர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் சென்னை தியாகராய நகர் பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது29), மேல முடிமன் வடக்கு தெருவை சேர்ந்த லட்சுமண பெருமாள் (42), துரைசாமி புரம் தெற்கு தெருவை சேர்ந்த அழகுராஜ் (35) ஆகியோர் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகை யிலையை கடத்திச் சென்றது தெரியவந்தது.

    இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.13,200 மதிப்புள்ள 36 கிலோ புகையிலை பொருட்களையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.

    • செங்கிப்பட்டி அருகில் உள்ள முத்தாண்டிப்பட்டி பிரிவு சாலை அருகே கார் ஒன்று நின்று கொண்டிருப்பதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
    • இதன் மதிப்பு சுமார் 1,80,000 ருபாய் ஆகும். இது குறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வல்லம்:

    தஞ்சை -திருச்சி சாலையில் திருச்சியில் இருந்து தஞ்சைக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் கடத்தி கொண்டு வந்து கொண்டிருப்பதாக செங்கிப்பட்டி போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமோகன் மேற்பார்வையில், செங்கிப்பட்டி இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்இன்ஸ்பெக்டர் ரெத்தினசாமி மற்றும் போலீசார் தஞ்சை -திருச்சி சாலையில் கண்காணிப்பு பணிகளை தீவிர படுத்தினர்.

    இந்நிலையில் செங்கிப்பட்டி அருகில் உள்ள முத்தாண்டிப்பட்டி பிரிவு சாலை அருகே கார் ஒன்று நின்று கொண்டிருப்பதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    இதைத்தொடர்ந்து போலீஸாரை பார்த்ததும் காரில் இருந்த இரண்டு பேர் காரை அங்கேயே விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதனையடுத்து காரை போலீஸார் சோதனை மேற்கொண்ட போது அதில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.

    கார் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 170 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதன் மதிப்பு சுமார் 1,80,000 ருபாய் ஆகும். இது குறித்து செங்கிப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் தப்பி ஓடிய இருவரையும் போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • போலீசார் உப்பளிப்பாளையத்தில் உள்ள மளிகை கடைக்கு சென்று சோதனையில் ஈடுப்பட்டனர்.
    • குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் குவியல் குவியலாக 500 கிலோ சிக்கின.

    அவினாசி :

    அவினாசி அருகேயுள்ள உப்பளிப்பாளையத்தில் மதியழகன் (வயது38) என்பவர் மளிகை கடத்தி வருகிறார். இவர் கடையில் வைத்து குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக புகையிலை தடுப்பு தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தனிப்பிரிவு டி.எஸ்.பி நரசிம்மன் தலைமையிலான போலீசார் உப்பளிப்பாளையத்தில் உள்ள மளிகை கடைக்கு சென்று சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் குவியல் குவியலாக 500 கிலோ சிக்கின. அதனை பறிமுதல் செய்த போலீசார் மதியழகனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மேச்சேரியில் இருந்து சாத்தப்பாடி செல்லும் வழியில், சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த மினி லாரியை சோதனை செய்தார்.
    • ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பவன் தேவ் (வயசு 24) என்பவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகிறார். அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி இன்ஸ்பெக்டர் சண்முகம் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது மேச்சேரியில் இருந்து சாத்தப்பாடி செல்லும் வழியில், சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த மினி லாரியை சோதனை செய்தார்.

    அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு டன் புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டறிந்தார். இதையடுத்து அந்த வண்டியின் ஓட்டுநர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பவன் தேவ் (வயசு 24) என்பவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகிறார். அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 

    • ராமநாதபுரம் பஸ் நிலையம் அருகே குடோனில் பதுக்கிய ரூ.3.84 லட்சம் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.
    • இந்த சம்பவம் குறித்து கேணிக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் புலிக்காரத் தெருவை சேர்ந்தவர் சண்முகம்(வயது 57). இவர் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு புகையிலை போடும் பழக்கம் இருந்துள்ளது.

    இதையடுத்து தினமும் பாரிவள்ளல் பள்ளி அருகே பான் மசாலா விற்பனை செய்வரிடம் வாங்கி உபயோகித்து வந்துள்ளார். நேற்று காலை வழக்கம் போல் புகையிலை போட்டதும் திடீரென சண்முகத்திற்கு மயக்கம் ஏற்பட்டு வயிறு வலி ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் போலீசார் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று புகையிலை விற்பனை செய்தவரிடம் விசாரணை நடத்தினர்.

    அவரது தகவலின் பேரில் ராமநாதபுரம் பஸ் நிலையம் அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த கணேஷ் புகையிலை 396 கிலோ, கூல் லிப் புகையிலை 35 கிலோ, விமல் புகையிலை 61 கிலோ ஆகியவைகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3,84,004. இது தொடர்பாக ராமநாதபுரம் பாசிப்பட்டரை தெருவை சேர்ந்த ஆதில் அமீன் (40), வைகை நகரைச் சேர்ந்த பாசித் ராஜா, தெற்கு தெரு நிஷார் அகமத் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து, ஆதில் அமீனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மற்ற இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • லீஸ் சப்-இன்ஸ்பெ க்டர்கள் கண்ணன், விஜயகுமார் ஆகியோர் ரெயில்களில் சோதனை மேற்கொண்டனர்.
    • பையை போலீசார் பிரித்து பார்த்ததில் அதில் 10 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

    திருப்பூர் : 

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர்கள் கண்ணன், விஜயகுமார் மற்றும் போலீசார் சவுந்தராஜன், சையது முகமது ஆகியோர் ரெயில்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 1-வது பிளாட்பா ரத்தில் வந்து நின்ற ரெயிலின் பொதுப்பெட்டியில் கேட்பாரற்று பை ஒன்று கிடந்தது. அந்த பையை போலீசார் பிரித்து பார்த்ததில் அதில் 10 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. ஆனால் புகையிலை பொருளை யார் கடத்தி வந்தனர்? என்பது தெரியவில்லை. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் கடத்தியவர் கைது
    • தமிழகத்தில் போதை பொருட்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று அரசு நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    தமிழகத்தில் போதை பொருட்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று பல்வேறு துறைகள் மூலம் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    குமரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் அதிரடி நட வடிக்கை எடுத்து போதைப் பொருள் விற்பவர்களை கைது செய்து வருகிறார். அவரது நடவடிக்கையின் மூலம் பல பகுதிகளில் இருந்தும் கடத்தி வரப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

    மேலும் அவரது உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். தினமும் வாகன சோதனை, கடைகளில் அதிரடி சோதனை என தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்து போதைப் பொருட்களை கைப்பற்றி வருகின்றனர். இந்த நிலையில் குட்டக் குழி பகுதியில் புகையிலை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக திரு வட்டார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ரமேஷ் தலைமை யிலான போலீசார் அங்கு சென்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனை செய்தனர். இதில் அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்துவது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வாலிபர் கொடுத்த தகவ லின் பேரில், குட்டக்குழி பகுதியில் மறைத்து வைத்து இருந்த புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 3 லட்சம் ஆகும். இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் வட்டவிளை பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 43) என தெரியவந்தது.

    • மதுரையில் காரில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் சிக்கினர்.
    • புகை யிலை பொருட்களை வாக னத்தில் கடத்தி வந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை மாநகரில் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன் அடிப்படையில் போலீ சார் சுப்பிரமணியபுரம் ரவுண்டானா பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அங்கு டாட்டா சுமோ வாகனம் வந்தது. அதில் 2 பேர் இருந்தனர்.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகத்தின் பேரில், அந்த வாகனத்தை சோதனை செய்தபோது, 240 கிராம் மதிப்புடைய 70 புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.

    போலீசார் 2 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் மதுரையை சேர்ந்த ராஜேஷ் (32), காசி விஸ்வநாதன் (31) என்பது தெரியவந்தது. காசிநாதன் மீது புகையிலை பொருட்கள் கடத்தியதாக வழக்கு நிலுவையில் உள்ளது. இதனைத்தொடர்ந்து தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்களை வாக னத்தில் கடத்தி வந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

    ×