search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி ஜூலை மாதம் திறக்கப்படும்.
    X

    ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி ஜூலை மாதம் திறக்கப்படும்.

    • தமிழ்நாட்டை பொறுத்த வரை ஒரே நாளில் 11 மருத்துவக்கல்லூரிகள் திறந்துவைக்கப்பட்டது.
    • ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 600 படுக்கை வசதிகள் உள்ளன

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் முதலாம் ஆண்டு மாணவ- மாணவிகளுக்கான வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி மற்றும் தமிழ் மன்ற தொடக்க விழா நடந்தது. அமைச்சர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

    அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கி மாணவ- மாணவிகளுக்கு வெள்ளை அங்கி வழங்கினார். அதனை தொடர்ந்து மாணவ- மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசிய தாவது:-

    தமிழ்நாட்டை பொறுத்த வரை ஒரே நாளில் 11 மருத்துவக்கல்லூரிகள் திறந்துவைக்கப்பட்டது. இது தமிழ்நாட்டிற்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய பெருமைக்குரியதாகும். இந்தியாவில் 36 மாநிலங்கள் இருந்தபோதிலும் தமிழ்நாட்டில் ஒரே நாளில் 11 மருத்துவக்கல்லூரி திறந்து வைக்கப்பட்டது ஒரு வரலாற்று சிறப்பு என்றே கூறலாம்.இன்றைய தினம் இத்தலார் பகுதியில் 2 புதிய மருத்துவக்கல்லூரி கட்டமைப்புகள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள வளரினம் பெண்கள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள மக்கள் உயர் சிகிச்சைக்காக வெளி மாவட்டத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலையை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதின் அடிப்படையில் மருத்துவமனை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள மருத்துவக்கல்லூ ரியில் 150 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த ஆண்டும் சேர்ந்து மொத்தம் 300 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    இதில் கடந்த ஆண்டு முதலாம் ஆண்டு 99 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மடிக்க ணினி மற்றும் பாடப்புத்த கங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இன்றைய தினம் 13 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    சிறிய மாவட்டமான இந்த நீலகிரி மாவட்டத்தில் உள்ள 600 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனை வருகிற ஜூலை மாதம் திறக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து மா.சுப்பி ரமணியன் மாணவ- மாணவிக ளுக்கான தனி உடற்பயிற்சி கூடத்தினையும் திறந்து வைத்து பார் வையிட்டார்.

    Next Story
    ×