என் மலர்
நீங்கள் தேடியது "Medical student"
- நான்கு குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்கு உதவிய ஒருவரை ஏற்கனவே கைது செய்தனர்.
- என் சகோதரன் மிகப் பெரிய தவறு செய்துள்ளான்.
மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒடிசாவை சேர்ந்த 23 வயது பெண் எம்பிபிஎஸ் பயின்று வந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஆண் நண்பருடன் இரவு உணவருந்த வெளியே செல்ல முற்படும்போது வழிமறித்த கும்பல் ஒன்று மருத்துவமனை வளாகத்தின் அருகே உள்ள காட்டுகப்பகுதியில் மாணவியை இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது.
மாணவியின் புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார், நான்கு குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்கு உதவிய ஒருவரை ஏற்கனவே கைது செய்தனர்.
தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான சஃபீக் என்பவரைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் சஃபீக்கின் மூத்த சகோதரி ரோசீனா, தனது சகோதரன் துர்காபூரில் உள்ள அன்டால் வாண்டேன் பகுதியில் பதுங்கியுள்ளதாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். அந்தத் தகவலின் பேரில் போலீஸார் சஃபீக்கை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
ஊடகங்களிடம் பேசிய ரோசீனா, "என் சகோதரன் மிகப் பெரிய தவறு செய்துள்ளான். அதனால் அவனுக்குக் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே போலீஸுக்குத் தகவல் கொடுத்தேன்" என்று தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட ஐந்து குற்றவாளிகளையும் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்கள் மாணவர்களைக் கவனித்துக் கொள்ளவேண்டும்.
- மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பா.ஜ.க. விமர்சித்துள்ளது.
கொல்கத்தா:
கடந்த வெள்ளிக்கிழமை இரவு துர்காபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பின்புறம் உள்ள பகுதியில் 23 வயது எம்பிபிஎஸ் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் ஒடிசாவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மாணவி எப்படி இரவு 12.30 மணிக்கு வெளியே வந்தாள்? தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்கள் மாணவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும். பெண்கள் இரவில் கல்லூரிக்கு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது என தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசை பா.ஜ.க. விமர்சித்து வருகிறது
இந்நிலையில், மம்தா பானர்ஜியின் கருத்துக்கு பா.ஜ.க. முன்னாள் எம்.பி. லாக்கெட் சாட்டர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
இங்கு மம்தா பானர்ஜியின் ஆட்சி நடைபெறுகிறதா அல்லது தலிபான், பாகிஸ்தான் ஆட்சி நடைபெறுகிறதா?
இரவு நேரங்களில் பெண்கள் வெளியே வர வேண்டாம் என கூறியுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூரின் போது சோபியா குரேசி மற்றும் வியோமிகா சிங் ஆகியோர் இரவில் சென்றுதான் தாக்குதல் நடத்தினர்.
மேற்கு வங்க பெண் முதல்வரே, பெண்களை இரவில் வெளியில் வரவேண்டாம் என்பதுதான் இன்றைய மேற்கு வங்கத்தின் நிலை.
இதற்கு மேற்கு வங்க பெண்கள் தக்க பதிலளிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
- குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் தேடப்பட்டு வருகின்றனர்.
- மாணவி எப்படி இரவு 12.30 மணிக்கு வெளியே வந்தாள்? என்று நான் கேட்கிறேன்.
மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒடிசாவை சேர்ந்த 23 வயது பெண் எம்பிபிஎஸ் பயின்று வந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஆண் நண்பருடன் இரவு உணவருந்த வெளியே செல்ல முற்படும்போது வழிமறித்த கும்பல் ஒன்று மருத்துவமனை வளாகத்தில் ஒதுக்குபுறமான இடத்திற்கு மாணவியை இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது.
தற்போது மாணவி சிகிச்சை பெற்று வரும் நிலையில் குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் தேடப்பட்டு வருகின்றனர்.
கடந்த வருடம் இதேபோல் கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரியில் பயிற்சி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். அந்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் மருத்து மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசை பாஜக விமர்சித்து வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "இது ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியின் அதிகார வரம்பிற்குள் நடக்கும் சம்பவம்.
மாணவி எப்படி இரவு 12.30 மணிக்கு வெளியே வந்தாள்? என்று நான் கேட்கிறேன். தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்கள் மாணவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும்
பெண்கள் இரவில் கல்லூரிக்கு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது. அவர்களும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
அதேவேளை இதுபோன்ற குற்றங்களை நாங்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம். மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. யாரும் தப்பவிடப்பட மாட்டார்கள்.
ஒவ்வொரு முறையும் அரசாங்கத்தை குறிவைப்பது சரியல்ல. மணிப்பூர், உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் ஒடிசாவில் எவ்வளவு சம்பவங்களை நாம் பார்த்துள்ளோம். ஒடிசாவில், கடற்கரைகளில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். ஒடிசா அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?.
நாங்கள் 1-2 மாதங்களுக்குள் குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தோம். மேலும் உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை தூக்கிலிட உத்தரவு பிறப்பித்தது"" என முந்தைய வழக்குகளை குறிப்பிட்டு மம்தா பேசினார்.
- மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் மற்றும் மாணவியுடன் சென்ற ஆண் நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2026 இல் மம்தா பானர்ஜி வெளியேற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஆண்டு ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மாணவி கற்பழித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் போலவே தற்போது மீண்டும் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்குவங்க மாநிலத்தின் துர்காபூரில் உள்ள ஷோபாபூர் அருகே தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. தலைநகர் கொல்கத்தாவில் இருந்து 170 கிலோ மீட்டர் தொலைவில் இந்த மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது.
ஒடிசா மாநிலம் ஜலேஸ் வரை சேர்ந்த மாணவி அங்கு 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவில் 8.30 மாணவி கல்லூரி வளாகத்தை விட்டு ஆண் நண்பருடன் இரவு உணவருந்த வெளியே சென்றுள்ளார். அப்போது ஒரு கும்பல் மாணவியின் நண்பரை தாக்கியுள்ளது.
அந்த இளைஞனை அங்கிருந்து துரத்திவிட்டு, மாணவியை தரதரவென இழுத்துச் சென்று மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒதுக்குபுறமாக பகுதியில் வைத்து அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. அந்த சமயத்தில் வளாகத்தில் காவலர்கள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது.
அந்த மாணவி தற்போது படுகாயங்களுடன் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் இதுவரை 3 பேரை கைது செய்துள்ளதாகவும், மேலும் இருவரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் மற்றும் மாணவியுடன் சென்ற ஆண் நபரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஞ்சி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "மேற்கு வங்க அரசாங்கத்தைத் தொடர்புகொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மூத்த அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். ஒடிசா அரசாங்கத்தின் சார்பாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விமர்சித்துள்ள பாஜக ஐடி விங் தலைவர் அமித் மாளவியா, "மேற்கு வங்கம் பெண்களுக்கு பாதுகாப்பானது அல்ல. திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் இருக்கும்வரை, மாநிலம் முழுவதும் பெண்கள் அச்சத்தில் வாழ்வார்கள். 2026 இல் மம்தா பானர்ஜி வெளியேற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள மம்தாவின் திரிணாமுல் கட்சி முக்கிய தலைவரும் மேற்கு வங்க அமைச்சருமான சசி பஞ்சா, "இங்கே அரசியலுக்கு இடமுண்டா? ஒடிசாவில் தீக்குளித்த பெண்களுக்கு கிடைத்த நியாயம் என்ன? மணிப்பூர் எரிந்தபோது அல்லது டெல்லி ஜந்தர் மந்தரில் பாஜக தலைவரின் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக தங்கப் பதக்கம் வென்ற பெண் மல்யுத்த போராட்டம் நடத்தியபோது இந்தக் குரல்கள் எங்கே இருந்தன? வங்காளத்தில் பாஜகவின் கடையை மூடச் சொல்லுங்கள். காவல்துறை ஏற்கனவே விசாரணையைத் தொடங்கிவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆர்ஜி கர் மருத்துவ மாணவி கொலை மற்றும் தற்போதைய விவகாரத்தை பாஜக கையில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மாணவி அங்கு 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
- இந்த சம்பவம் போலவே தற்போது மீண்டும் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்குவங்க மாநிலத்தின் துர்காபூரில் உள்ள ஷோபாபூர் அருகே தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. தலைநகர் கொல்கத்தாவில் இருந்து 170 கிலோ மீட்டர் தொலைவில் இந்த மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது.
ஒடிசா மாநிலம் ஜலேஸ் வரை சேர்ந்த மாணவி அங்கு 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவில் 8.30 மாணவி கல்லூரி வளாகத்தை விட்டு ஆண் நண்பருடன் இரவு உணவருந்த வெளியே சென்றுள்ளார். அப்போது ஒரு கும்பல் மாணவியின் நண்பரை தாக்கியுள்ளது.
அந்த இளைஞனை அங்கிருந்து துரத்திவிட்டு, மாணவியை தரதரவென இழுத்துச் சென்று மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒதுக்குபுறமாக பகுதியில் வைத்து அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. அந்த சமயத்தில் வளாகத்தில் காவலர்கள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது.
அந்த மாணவி தற்போது படுகாயங்களுடன் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொல்கத்தாவில் கடந்த ஆண்டு ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மாணவி கற்பழித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர் பாக கைது செய்யப்பட்ட சஞ்சய்ராய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் போலவே தற்போது மீண்டும் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- திருவள்ளூரை சேர்ந்த திவ்யா என்ற மாணவி, 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார்.
- டிபி சத்திரம் பகுதியில் அறை எடுத்து தங்கி திவ்யா படித்து வந்தார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவி திவ்யா தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூரை சேர்ந்த திவ்யா என்ற மாணவி, 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். டிபி சத்திரம் பகுதியில் அறை எடுத்து தங்கி படித்து வந்த நிலையில் அவர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
பணிச்சுமை காரணமாகவே தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை குற்றம்சாட்டி உள்ளார்.
இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காவல்துறையினர் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
- கொலை, தற்கொலை உள்ளிட்ட கோணங்களிலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் முதலாமாண்டு எம்பிபிஎஸ் மாணவர் தனது விடுதி அறையில் நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
ஒடிசாவை சேர்ந்த யாதவேந்திர ஷாகு என்ற அந்த மாணவரின் அறை நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த சக மாணவர்கள், நிர்வாகத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
காவல்துறையினர் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது, யாதவேந்திர ஷாகு படுக்கையில் சடலமாகக் கிடந்துள்ளார்.
தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கொலை, தற்கொலை உள்ளிட்ட கோணங்களிலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்.
- 2021-22-ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
- மாணவ-மாணவிகளுக்கு இதயதுடிப்பு மாணி மற்றும் மருத்துவர் வெள்ளை அங்கியை கலெக்டர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் 2021-22-ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார்.
விழாவில் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 7 மாணவிகள், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 மாணவ-மாணவிகள், உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 3 மாணவிகள், கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 மாணவ-மாணவிகள், அய்யங்காளிபாளையம் வி.கே.அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 மாணவ-மாணவிகள், கே.எஸ்.சி. மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 2 பேர்.
பெருமாநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 மாணவ-மாணவிகள், பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 மாணவிகள், உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவர், அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவி, பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவரும், மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவரும், தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவரும், எலையமுத்தூர் எஸ்.என்.வி.அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவரும் என மொத்தம் 14 அரசு பள்ளிகளில் படித்த 29 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
விழாவில் மாணவ-மாணவிகளுக்கு இதயதுடிப்பு மாணி மற்றும் மருத்துவர் வெள்ளை அங்கியை கலெக்டர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருவளர்ச்செல்வி, மாவட்ட கல்வி அதிகாரி பழனிச்சாமி (உடுமலை), முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர், நீட் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், கூடுதல் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- மாணவர், பெற்றோர் சங்கம் வலியுறுத்தல்
- புதுவை மாணவர்களுக்கான இடங்கள் பறிபோகிவிடுமோ என்ற அச்சத்திலும், குழப்பத்திலும் உள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய, மாநில அரசு கட்டுபாட்டில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை மருத்துவ கல்லூரிகளின் 100-சதவீத இடங்களையும் இந்த ஆண்டு தேசிய மருத்துவ ஆணையம் மூலம் தான் கலந்தாய்வு நடத்தப்படும். அனைத்து மாநில அரசுகளுக்கும் அரசு ஒதுக்கீடு மற்றும் இடஒது க்கீடு குறித்த விபர ங்களை அனுப்பி வைக்க வேண்டும். இதற்கான மாநில அரசின் பெறுப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் பரவியுள்ளது.
அதற்கான கலந்தாய்வு கூட்டம் நடத்தி இந்த மாதத்திலேயே முடிவு செய்து மருத்துவ கலந்தாய்வு நடத்த உள்ளதாக தெரிய வருகின்றது.
இதனால் புதுவை மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களின் மாநில அரசின் சாதி அடிப்ப டையிலான இடஒதுக்கீடும், பிற இடஒதுக்கீடுகளும் ஜிப்மர் மருத்துவ கல்லூரியின் புதுவை மாணவர்களுக்கான இடங்கள் பறிபோகிவிடுமோ என்ற அச்சத்திலும், குழப்பத்திலும் உள்ளனர்.
ஆகவே புதுவை அரசு 2023-24-ம் ஆண்டுக்கான மருத்துவ மாணவர்கள் கலந்தாய்வை சென்டாக் மூலம் நடத்துமா? தேசிய மருத்துவ ஆணையம் நடத்துமா? என்ற விவரங்களை உடனடியாக வெளியிட வேண்டும் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்த பெண்ணின் கணவர் பேனா கேமராவை ஆய்வு செய்தார்.
- வாடகைக்கு குடியிருந்த பெண்ணின் வீட்டில் படுக்கை அறைக்குள் யாருக்கும் தெரியாமல் புகுந்து பேனா கேமராவை பொருத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
ராயபுரம்:
சென்னை ராயபுரம் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வாடகை வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார். 2-வது தளத்தில் 9 வயது மகனுடன் குடியிருந்த இவரது கணவர் கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்.
நேற்று காலையில் இவர்கள் வசித்து வந்த வீட்டின் படுக்கை அறையில் புதிதாக பேனா ஒன்று இருந்ததை பெண் பார்த்துள்ளார். அதில் கேமரா இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி தனது கணவரிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.
இதையடுத்து வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்த பெண்ணின் கணவர் பேனா கேமராவை ஆய்வு செய்தார்.
அப்போது அதில் தனது மனைவியின் ஆபாச வீடியோக்கள் இருந்தன. உடை மாற்றும் காட்சிகளும், மேலும் பல வீடியோக்களும் பதிவாகி இருந்தன.
இதையடுத்து ராயபுரம் போலீஸ் நிலையத்துக்கு சென்று கணவர் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ரஜினிஸ் இதுதொடர்பாக விசாரணை நடத்தினார்.
அப்போது வீட்டின் உரிமையாளரின் மகனான இப்ராகிம் படுக்கை அறையில் பேனா கேமராவை பொருத்தி இளம்பெண்ணை ஆபாசமாக வீடியோ பதிவு செய்திருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இப்ராகிம் மருத்துவ மாணவர் என்பது தெரிய வந்தது. சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் எம்.டி.எஸ். இறுதியாண்டு படித்து வரும் இவர், வாடகைக்கு குடியிருந்த பெண்ணின் வீட்டில் படுக்கை அறைக்குள் யாருக்கும் தெரியாமல் புகுந்து பேனா கேமராவை பொருத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் மீது 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
- போலீஸ் நிலையத்தில் பிரிஜில் சரண் அடைந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் சாருவிளாகம் வெள்ளரடை பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் (வயது 70). இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.
இவரது மகன் பிரிஜில் (29) சீனாவில் மருத்துவம் படித்து வந்தார். அதற்கான தேர்வு எழுதிய போதும் அதில் தேர்ச்சி பெறவில்லை. இதனை தொடர்ந்து அவர் சொந்த ஊருக்கு திரும்பினார்.
வீட்டில் அவர் பெற்றோருடன் தங்கியிருந்தார். நேற்று இரவு இவர்களது வீட்டில் இருந்து ஜோசின் மனைவி சுஷாமா திடீரென பயங்கரமாக அலறினார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அப்போது வீட்டின் சமையல் அறையில் ஜோஸ் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.
சுஷாமா மயங்கிய நிலையில் இருந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் மகன் பிரிஜில் தான் தந்தையை வெட்டிக் கொலை செய்திருப்பது தெரியவந்தது.
அவரை தேடிய நிலையில், போலீஸ் நிலையத்தில் பிரிஜில் சரண் அடைந்தார். அவர் போலீசாரிடம் அளித்த வாக்கு மூலத்தில், தன்னை சுதந்திரமாக வாழ தந்தை அனுமதிக்கவில்லை. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதனால் தான் அவரை கொலை செய்தேன் என தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உலக பொதுமறையான திருக்குறள் மற்றும் கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற காப்பிய நூல்களை கற்க இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் ஆர்வம் குறைந்துள்ளது.
- நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு மாணவியை சால்வை அணிவித்து வாழ்த்தி பாராட்டினார்.
புதுச்சேரி:
உலக பொதுமறையான திருக்குறள் மற்றும் கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற காப்பிய நூல்களை கற்க இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் ஆர்வம் குறைந்துள்ளது.
அனைவரும் தமிழ் காப்பியங்களையும், அற நூல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மருத்துவ கல்லூரி மாணவி ஸ்ரீ கஜலட்சுமி சிறிய துண்டு பேப்பரில் 1330 திருக்குறளை எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
புதுவையில் உள்ள ரெசிடென்சி பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 15 X 42 செ.மீ. அளவில் உள்ள சிறிய காகிதத்தில் 12 மணி நேரத்தில் 1330 திருக்குறளையும் எழுதி உலக சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை கலாம் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து உலக சாதனை சான்றிதழை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு மாணவியை சால்வை அணிவித்து வாழ்த்தி பாராட்டினார். மேலும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார், எம்.எல்.ஏ.க்கள் சிவசங்கர், லட்சுமிகாந்தன், பள்ளி தாளாளர் கிரிஸ்டிராஜ் ஆகியோர் உலக சாதனை படைத்த மாணவியை பாராட்டினார்கள்.
நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை விழிகள் அறக்கட்டளையின் நிர்வாகி பிரேம்குமார், செயலாளர் கீர்த்தனா தலைமையில் தன்னார்வலர்கள் செய்திருத்தனர்.






