என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை
- திருவள்ளூரை சேர்ந்த திவ்யா என்ற மாணவி, 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார்.
- டிபி சத்திரம் பகுதியில் அறை எடுத்து தங்கி திவ்யா படித்து வந்தார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவி திவ்யா தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூரை சேர்ந்த திவ்யா என்ற மாணவி, 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். டிபி சத்திரம் பகுதியில் அறை எடுத்து தங்கி படித்து வந்த நிலையில் அவர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
பணிச்சுமை காரணமாகவே தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை குற்றம்சாட்டி உள்ளார்.
இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






