என் மலர்
நீங்கள் தேடியது "Commits Suicide"
- மகாலிங்கம் அதிகாலை 3 மணியளவில் நீதிமன்ற வாசலில் தற்கொலை செய்துள்ளார்.
- காவலர் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐகோர்ட் மதுரை கிளை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல்படை காவலர் மகாலிங்கம் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் அதிகாலை 3 மணியளவில் நீதிமன்ற வாசலில் தற்கொலை செய்துள்ளார்.
மதுரை மாவட்டம் எழுமலை கோட்டைப்பட்டியை சேர்ந்த மகாலிங்கம் தனது தற்கொலைக்கு காரணம் யாரும் இல்லை என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார்.
பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் மகாலிங்கம் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாநகர போக்குவரத்து கழகத்தின் தாம்பரம் பணிமனை ஜே.இ. ஆக யுவராஜ் பணிபுரிந்து வந்தார்
- கழுத்து வலி காரணமாக யுவராஜ் கடந்த 12.8.2025 முதல் பணிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி ஆதனூரைச் சேர்ந்த போக்குவரத்து அதிகாரி யுவராஜ் மறைமலைநகர் அருகே ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலைக்கு செய்வதற்கு முன்பு டி.ஜி.பி.க்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ள யுவராஜ், அதில் என் தற்கொலைக்கு உயரதிகாரிகளே காரணம் என்று தெரிவித்துள்ளார்.
மாநகர போக்குவரத்து கழகத்தின் தாம்பரம் பணிமனை ஜே.இ. ஆக யுவராஜ் பணிபுரிந்து வந்தார். கழுத்து வலி காரணமாக யுவராஜ் கடந்த 12.8.2025 முதல் பணிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
அவருக்கு 3 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. மேலும் வேலைக்கு வரக்கூடாது என அதிகாரிகள் நிர்பந்தித்ததாகவும் விடுப்பு கேட்டு விண்ணப்பித்தும் ஏ.இ. கோவிந்தராஜ் நிராகரித்ததாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.
ஏ.இ. கோவிந்தராஜ், மற்றொரு அதிகாரி சொர்ணலதா இருவரும் தான் என் தற்கொலைக்கு காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
- மூத்த மகள் சஞ்சி ஸ்ரீ டாக்டருக்கு படித்து வருகிறார்.
- கடந்த 2 மாதங்களாக மிகுந்த மனஉளைச்சலில் இருந்த மதன ஸ்ரீ சோகத்துடனேயே காணப்பட்டார்.
பெரம்பூர்:
சென்னை கொடுங்கையூர் நாராயணசாமி கார்டன் தெருவில் வசித்து வருபவர் ஹரிஷ் குமார். இவர் தி.நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சஞ்சி ஸ்ரீ டாக்டருக்கு படித்து வருகிறார். அக்காவை பார்த்து 2-வது மகள் மதன ஸ்ரீயும் டாக்டருக்கு படிக்க விரும்பினார்.
இதற்காக அவர் நீட் தேர்வு எழுதி இருந்தார். கடந்த ஜூன் மாதம் தேர்வு முடிவுகள் வெளியானபோது குறைந்த மதிப்பெண் பெற்று தேர்வில் தோல்வி அடைந்திருந்தார். இதனால் கடந்த 2 மாதங்களாக மிகுந்த மனஉளைச்சலில் இருந்த மதன ஸ்ரீ சோகத்துடனேயே காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு 11 .30 மணி அளவில் வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்று மதன ஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் கொடுங்கையூர் போலீ சார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
நீட் தேர்வால் மாணவிகள் பலர் தொடர்ச்சியாக தற்கொலை செய்து கொண்டு உள்ள நிலையில் சென்னை கொடுங்கையூரிலும் நேற்று மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- திருவள்ளூரை சேர்ந்த திவ்யா என்ற மாணவி, 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார்.
- டிபி சத்திரம் பகுதியில் அறை எடுத்து தங்கி திவ்யா படித்து வந்தார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவி திவ்யா தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூரை சேர்ந்த திவ்யா என்ற மாணவி, 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். டிபி சத்திரம் பகுதியில் அறை எடுத்து தங்கி படித்து வந்த நிலையில் அவர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
பணிச்சுமை காரணமாகவே தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை குற்றம்சாட்டி உள்ளார்.
இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தினகரன் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
- சித்தேரி பகுதியில் ரெயில் முன் பாய்ந்து தினகரன் தற்கொலை செய்து கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த கல்லூரி பேராசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரக்கோணம் அருகே கல்லூரி பேராசிரியர் தினகரன் (42) ஆன்லைன் ரம்மியில் ரூ.25 லட்சத்தை இழந்துள்ளார். ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தினகரன் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் சித்தேரி பகுதியில் ரெயில் முன் பாய்ந்து தினகரன் தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தினகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர்.
- ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவரது மகன் கோகுல் என்கிற நித்தின் ராகுல் (வயது 20). இவர் கர்நாடகாவில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார்.
ஜோலார்பேட்டை அருகே உள்ள காவேரி பட்டு பகுதியை சேர்ந்தவர் அணுமுத்து. இவரது மகள் தரணி (வயது 20 ). இவரும் நித்தின் ராகுலும் நர்சிங் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்தனர்.
அப்போது பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இதில் தரணி 9 மாத கர்ப்பம் ஆனார்.
இந்த நிலையில் நித்தின் ராகுல் இவர்களது காதல் விவகாரத்தை பெற்றோரிடம் தெரிவித்தார். ஆனால் அவர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால் மன வேதனை அடைந்த நித்தின் ராகுல் நேற்று இரவு பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார். அவர் மீது ரெயில் மோதியதில் இறந்தார்.
இதை அறிந்த தரணி, இன்று காலை வாணியம்பாடி ரெயில் நிலையத்திற்கு சென்றார். திருவனந்தபுரம் சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதில், தரணியின் வயிற்றில் இருந்த குழந்தை சிதறி கீழே விழுந்தது. இந்த சம்பவத்தை அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ரபிகா உடலை கைப்பற்றி செண்பகராமன் புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- ரபிகா தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரல்வாய்மொழி:
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள செண்பகராமன் புதூர் பகுதியை சேர்ந்தவர் சந்துரு. இவரது மகள் ரபிகா (வயது 18), நர்சிங் கல்லூரி மாணவி.
இவருக்கும் பூதப்பாண்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்த ஒரு மாணவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை இரு வீட்டாரும் கண்டித்து உள்ளனர். இந்த நிலையில் இன்று காலை ரபிகா நீண்ட நேரமாக செல்போனில் பேசிக் கொண்டிருந்தாராம்.
இதனை தாயார் பானுமதி கண்டித்து உள்ளார். அதன் பிறகு ரபிகா குளிக்கச் செல்வதாக கூறிவிட்டு குளியல் அறைக்குச் சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் குளியல் அறையில் இருந்து வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், குளியல் அறை கதவை தட்டிப்பார்த்தனர்.
அப்போது ரபிகாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனை தொடர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு ரபிகா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து ரபிகா உடலை கைப்பற்றி செண்பகராமன் புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போனில் பேசியதை கண்டித்ததால் அவர் தற்கொலை முடிவை எடுத்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரணை நடைபெற்று வருகிறது. கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ராணி சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொடுமுடி:
கொடுமுடி அடுத்துள்ள ஏமகண்டனூர் பகுதியை சேர்ந்தவர் ராணி (வயது 46). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இவரது தங்கை கல்யாணி யுடன் தங்கி வசித்து வந்தார். திருமணம் ஆகாமல் உடல் நிலை சரியில்லாமல் அவதி பட்டு வருகிறோம் என ராணி வேதனை அடைந்து வந்தார்.
இந்நிலையில் கல்யாணி வேலைக்கு சென்று விட்டார். ராணி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ராணி சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து ெகாண்டார்.
கல்யாணியின் மகன் மணிகண்டன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு மூடப்பட்டு இருந்தது. சந்தேகமடைந்த அவர் மேலே ஏறி பார்த்தார். அப்போது ராணி தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இத குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராணியின் உடலை கைப்பற்றி கொடு முடி அரசு மருத்துவமனைக்கு பிரேதசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- துவை பிள்ளைச்சாவடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகலிங்கம்.
- ராகினி தனது மகன் மற்றும் மகளை மாமியாரிடம் ஒப்படைத்து விட்டு தனது பெற்றோர் வீட்டில் இருந்து வந்தார்.
புதுச்சேரி:
புதுவை பிள்ளைச்சாவடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகலிங்கம். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ராகினி (வயது40). இவருக்கும் வில்லியனூரை சேர்ந்த பெக்கோலன் என்பவருக்கும் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பெக்கோலன் இறந்து விட்டார். இதையடுத்து ராகினி தனது மகன் மற்றும் மகளை மாமியாரிடம் ஒப்படைத்து விட்டு தனது பெற்றோர் வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் ராகினி காக்கையன்தோப்பை சேர்ந்த ராஜசேகர் என்பவரிடம் பணம் கடன் கொடுத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை ராகினி திருப்பி கேட்ட போது ராஜசேகர் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனஉளைச்சல் அடைந்த ராகினி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து சம்பவத்தன்று எலி மருந்தை எடுத்து தின்று விட்டார். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட ராகினியை அவரது பெற்றோர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை ராகினி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது தந்தை நாகலிங்கம் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- சண்முகம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
- இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
சேலம் மாவட்டம் சாம்பள்ளி மாசிலா பாளையம், அரசன்காடு பகுதியை சேர்ந்தவர் மலர்கொடி (36). இவரது கணவர் சண்முகம் (40). இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
சண்முகம் கடந்த ஒரு வருடமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சீனாபுரத்தில் தங்கியிருந்து இருசக்கர வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில் சண்முகம் வசித்து வந்த வீட்டின் உரிமையாளர் சம்பவத்தன்று போன் மூலமாக மலர் கொடியை தொடர்பு கொண்டு சண்முகம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாகவும், அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
மலர்கொடி மருத்துவமனைக்கு வந்து மருத்துவரிடம் விசாரித்த போது சண்முகம் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து மலர்கொடி பெருந்துறை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- யாகோபு குடும்பத்தை கவனிக்காமல் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியையும், மகனையும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
- விமலா தனது மகனுடன் கடந்த 15 வருடங்களாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பாலாஜி கார்டன் பகுதியை சேர்ந்தவர் விமலா (49). இவரது கணவர் யாகோபு (54).
இந்நிலையில் யாகோபு குடும்பத்தை கவனிக்காமல் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியையும், மகனையும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் விமலா தனது மகனுடன் கடந்த 15 வருடங்களாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
யாகோபு தங்களது பழைய வீடு இருக்கும் வெள்ளோடு சி.எஸ்.ஐ. காலனியில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் விமலாவை போன் மூலமாக தொடர்பு கொண்ட யாகோபுவின் சகோதரர் சி.எஸ்.ஐ. காலனியில் உள்ள அவர்களது பழைய வீட்டில் யாகோபு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மனைவி விமலா அளித்த புகாரின் பேரில் வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- வீட்டில் தனியாக இருந்த வெங்கடாசலம் தற்கொலை செய்து கொள்வதற்காக தூக்குப்போட்டு கொண்டார்.
- இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டிவலசு சாஸ்திரி சாலையை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 43). பெயிண்டர். இவர் கடந்த 5 ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்தார்.
இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து அவர் காணப்பட்டார். சம்பவத்தன்று வெங்கடாசலத்தின் மனைவி வேலைக்கு சென்றிருந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த வெங்கடாசலம் தற்கொலை செய்து கொள்வதற்காக தூக்குப்போட்டு கொண்டார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திாிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வெங்கடாசலம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






