என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதல் ஜோடி தற்கொலை"

    • இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர்.
    • ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவரது மகன் கோகுல் என்கிற நித்தின் ராகுல் (வயது 20). இவர் கர்நாடகாவில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார்.

    ஜோலார்பேட்டை அருகே உள்ள காவேரி பட்டு பகுதியை சேர்ந்தவர் அணுமுத்து. இவரது மகள் தரணி (வயது 20 ). இவரும் நித்தின் ராகுலும் நர்சிங் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்தனர்.

    அப்போது பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இதில் தரணி 9 மாத கர்ப்பம் ஆனார்.

    இந்த நிலையில் நித்தின் ராகுல் இவர்களது காதல் விவகாரத்தை பெற்றோரிடம் தெரிவித்தார். ஆனால் அவர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால் மன வேதனை அடைந்த நித்தின் ராகுல் நேற்று இரவு பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார். அவர் மீது ரெயில் மோதியதில் இறந்தார்.

    இதை அறிந்த தரணி, இன்று காலை வாணியம்பாடி ரெயில் நிலையத்திற்கு சென்றார். திருவனந்தபுரம் சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதில், தரணியின் வயிற்றில் இருந்த குழந்தை சிதறி கீழே விழுந்தது. இந்த சம்பவத்தை அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • படிக்கும் வயதில் காதல் தேவை இல்லை என பெற்றோர் அறிவுரை வழங்கினர்.
    • பகீரத் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரை பார்க்க அவரது காதலி தோட்லானே வீட்டிற்கு வந்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், துபாக்கா மண்டலம் லச்சப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பகீரத் (வயது 17). இவர் டுப்பாக்காவில் உள்ள ஒரு கல்லூரியில் இன்டர்மீடியட் படித்து வந்தார்.

    இவருக்கும், அதே கல்லூரியில் படிக்கும் தோட்லானே (16) என்ற மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியது.

    இருவரும் பல மாதங்களாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு அவரது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    படிக்கும் வயதில் காதல் தேவை இல்லை என பெற்றோர் அறிவுரை வழங்கினர். இதனால் மனமுடைந்த காதல் ஜோடி விரக்தியில் இருந்தனர்.

    நேற்று பகீரத்தின் பெற்றோர் வெளியூருக்கு சென்றுவிட்டனர்.

    பகீரத் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரை பார்க்க அவரது காதலி தோட்லானே, வீட்டிற்கு வந்தார்.

    அங்கு காதலர்கள் 2 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

    ஊருக்கு சென்ற பெற்றோர் திரும்பி வந்து பார்த்தபோது, 2 பேரும் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து கதறி அழுதனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடலையும் மீட்டு, அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • பாலாசா ரெயில் நிலையத்தின் 3-வது பிளாட்பாரத்தில் காதல் ஜோடி இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.
    • ரெயில்வே போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பதி:

    மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கை சேர்ந்தவர் ஷேரிங் தாஹி செப்ரா. இவரும் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சனா ராய் என்பவரும் காதலித்து வந்தனர்.

    இவர்களது காதல் விவகாரம் அவர்களின் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. இரு வீட்டாரின் பெற்றோரும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் விரக்தி அடைந்த காதலர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறினர்.

    நேற்று முன்தினம் இரவு ஆந்திர மாநிலம், பாலாசா ரெயில் நிலையத்திற்கு வந்தனர். அங்குள்ள 3-வது பிளாட்பாரத்தில் காதல் ஜோடி இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.

    அப்போது விசாகப்பட்டினத்தில் இருந்து பாலாசா நோக்கி சரக்கு ரெயில் வந்து கொண்டு இருந்தது. காதலர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தபடி ரெயில் முன்பாக திடீரென பாய்ந்தனர். ரெயில் அவர்களது உடல் மீது ஏறி இறங்கியதில் உடல்கள் சிதறி சம்பவ இடத்திலேயே கண்ணிமைக்கும் நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ரெயில்வே போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர்கள் வைத்திருந்த ஆதார் அட்டை மூலம் காதல் ஜோடி யார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளிக்கு சென்றுவரும் மகளின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை கண்டு பெற்றோர் சந்தேகம் அடைந்தனர்.
    • தங்களது உறவினர்கள் மூலம் அவரை கண்காணித்தபோது, மகள் காதல் வலையில் சிக்கி இருப்பதை அறிந்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள காடை இடையாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் என்பவரது மகன் அருண் (வயது 23). பள்ளி படிப்பை முடித்துவிட்டு கட்டிட கான்கிரீட் வேலை பார்த்து வந்தார்.

    அதே பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவியும், அருணும், கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். அடிக்கடி பள்ளிக்கு செல்லாமல் காதலனுடன் ஊர் சுற்றியும் வந்துள்ளார்.

    பள்ளிக்கு சென்றுவரும் மகளின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை கண்டு அவரது பெற்றோர் சந்தேகம் அடைந்தனர். அத்துடன் தங்களது உறவினர்கள் மூலம் அவரை கண்காணித்தபோது, மகள் காதல் வலையில் சிக்கி இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

    முதலில் மகளிடம் பெற்றோர் படிப்பு தான் நமக்கு முக்கியம், காதல் எல்லாம் வேண்டாம் என்று பக்குவமாக எடுத்துக்கூறினர். ஆனால் அதனை மாணவி கண்டுகொள்ளவில்லை. வழக்கம்போல் தனக்கான பாதையில் சென்றார். கடந்த 1-ந்தேதி மகளை அவரது பெற்றோர் கடுமையாக கண்டித்தனர்.

    இந்த நிலையில் நேற்று ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறி வெளியே சென்ற மாணவி இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பல்வேறு இடங்களில் தேடினர்.

    இதற்கிடையே அங்கு இருள்சூழ்ந்த பகுதியில் கோவில் அருகே உள்ள புளியமரத்தில் அருண், மாணவி இருவரும் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தனர். இதைப் பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் நாகுடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தற்கொலை செய்துகொண்ட காதல் ஜோடியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம்காதல் ஜோடி தற்கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×