search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வீட்டை விட்டு ஓடி வந்த காதல் ஜோடி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
    X

    வீட்டை விட்டு ஓடி வந்த காதல் ஜோடி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

    • பாலாசா ரெயில் நிலையத்தின் 3-வது பிளாட்பாரத்தில் காதல் ஜோடி இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.
    • ரெயில்வே போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பதி:

    மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கை சேர்ந்தவர் ஷேரிங் தாஹி செப்ரா. இவரும் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சனா ராய் என்பவரும் காதலித்து வந்தனர்.

    இவர்களது காதல் விவகாரம் அவர்களின் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. இரு வீட்டாரின் பெற்றோரும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் விரக்தி அடைந்த காதலர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறினர்.

    நேற்று முன்தினம் இரவு ஆந்திர மாநிலம், பாலாசா ரெயில் நிலையத்திற்கு வந்தனர். அங்குள்ள 3-வது பிளாட்பாரத்தில் காதல் ஜோடி இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.

    அப்போது விசாகப்பட்டினத்தில் இருந்து பாலாசா நோக்கி சரக்கு ரெயில் வந்து கொண்டு இருந்தது. காதலர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தபடி ரெயில் முன்பாக திடீரென பாய்ந்தனர். ரெயில் அவர்களது உடல் மீது ஏறி இறங்கியதில் உடல்கள் சிதறி சம்பவ இடத்திலேயே கண்ணிமைக்கும் நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ரெயில்வே போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர்கள் வைத்திருந்த ஆதார் அட்டை மூலம் காதல் ஜோடி யார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×